Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு நூலான, 'கடல் தாமரை'யில், தி.முத்துகிருஷ்ணன் எழுதியது:


    'எனக்கு ஒரு ஆசை உண்டு. தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அவருக்கு, நான் மாலை அணிவித்து, மகிழ வேண்டும். அவர், என்னை, 'வாழ்க...' என்று, வாயார வாழ்த்த வேண்டும்...' என்று எம்.ஜி.ஆர்., போற்றி புகழ்ந்து பேசிய, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின், 32வது நினைவு தினம், வரும் ஜூலை, 21ம்தேதி வருகிறது.
    எம்.ஜி.ஆர்., எங்கே இப்படி பேசினார், இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்பதை அறிந்து கொண்டால், அவர், தினமலர் நாளிதழ் மீதும், ஆசிரியர் டி.வி.ஆர்., மீதும் வைத்திருந்த அன்பையும், மரியாதையையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.


    தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மார்ச், 13, 1984ல், தினமலர் நாளிதழின் ஈரோடு பதிப்பை, துவக்கி வைத்து பேசுகையில், 'திருநெல்வேலி பதிப்பு, தினமலர் நாளிதழை படித்த போது, சென்னையில், தினமலர் பதிப்பை கொண்டு வர வேண்டுமென்று, அதன் நிருபரிடம் கூறினேன். சென்னையில் இருந்து, தினமலர் நாளிதழ் வெளி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
    'சில நேரங்களில், மற்றவர்களிடம் இருந்து கிடைக்காத தகவல்களை, தினமலர் நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும் பத்திரிகை. அப்பணியை சிறப்பாக செய்கிறது தினமலர் நாளிதழ்.

    'நல்ல தமிழில், சீரிய கருத்துகளை கூறும் தினமலர் நாளிதழுக்கு, 'மலர்' என்று பெயர் வைத்தது, மிக பொருத்தமானது. தினமலர் இதழில், குழந்தைகள் பட கதை ஒன்று வெளி வருகிறது. அப்பட கதைகளை, என் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காட்டி, படிக்க வைக்கிறேன். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு மற்றும் பாசம் ஆகியவற்றை உணர்த்த வேண்டும்.

    'அந்த வேலையை, தினமலர் நாளிதழ் செவ்வனே செய்கிறது. 'இவ்வளவு படங்களுடன் பத்திரிகை வெளியிடுகின்றனரே...' என, தினமலர் நாளிதழ் மீது, பலருக்கு பொறாமையும், 'நம்மால் இது போல செய்ய முடியவில்லையே...' என்ற இயலாமையில் கோபமும், கவலையும் அடைகின்றனர். மேலும், ஞாயிற்றுகிழமை தோறும் வெளிவரும், வாரமலர் இதழ் பார்த்து, பலரும் அது போல தர ஆரம்பித்துள்ளனர். இப்படி பல சிறப்புகளுடன் வரும், தினமலர் நாளிதழ் எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,

  2. Thanks siqutacelufuw, orodizli thanked for this post
    Likes siqutacelufuw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •