-
31st August 2016, 12:12 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.
பணம் படைத்தவன் (1965) படத்தில் வரும் கண் போன போக்கிலே பாடலில் மனிதன் போன பாதையை மறந்து போகலாமா என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.
இதே படத்தில் எனக்கொரு மகன் பிறப்பான்.. பாடலில்
சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
என்று ஆசைப்பட்டார்.
எங்க வீட்டுப் பிள்ளையில் (1965) நான் ஆணையிட்டால்
பாடலில்,
முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
என்று வருத்தப்பட்டார்.
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக
என்று சந்திரோதயம் (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க
அதே படத்தில் வாங்கையா வாத்தியாரய்யா
பாடலில்,
தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..
என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
Courtesy - thinnai
-
31st August 2016 12:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks