-
30th August 2016, 07:52 PM
#2161
Junior Member
Platinum Hubber
திரு.சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
-
30th August 2016 07:52 PM
# ADS
Circuit advertisement
-
30th August 2016, 07:53 PM
#2162
Junior Member
Platinum Hubber
திரு.பூவை செங்குட்டுவன் பேசும்போது
-
30th August 2016, 07:55 PM
#2163
Junior Member
Platinum Hubber
திரு.ஆர்.கே.சண்முகத்துடன் , திரு சிரஞ்சீவி அனீஸ் .

முற்றும்
-
30th August 2016, 10:10 PM
#2164
Junior Member
Platinum Hubber
நாளை (31/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
-
30th August 2016, 10:12 PM
#2165
Junior Member
Platinum Hubber
நாளை இரவு 7 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
-
31st August 2016, 12:07 AM
#2166
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
திரு.பி.எஸ். ராஜு அனைவரையும் வரவேற்றி பேசியபோது .
மேடையில் திருமதி மேகலா சித்ரவேல் ,திரு. சிவகுமார், திரு.ஆர். கே. சண்முகம்,
திரு.பூவை செங்குட்டுவன், திரு.சிரஞ்சீவி அனீஸ்.

புரட்சித் தலைவரின் பக்தர்கள் நடத்திய விழா படங்களை பதிவிட்டதற்கு நன்றி.
-
31st August 2016, 12:12 AM
#2167
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.
பணம் படைத்தவன் (1965) படத்தில் வரும் கண் போன போக்கிலே பாடலில் மனிதன் போன பாதையை மறந்து போகலாமா என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.
இதே படத்தில் எனக்கொரு மகன் பிறப்பான்.. பாடலில்
சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
என்று ஆசைப்பட்டார்.
எங்க வீட்டுப் பிள்ளையில் (1965) நான் ஆணையிட்டால்
பாடலில்,
முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
என்று வருத்தப்பட்டார்.
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக
என்று சந்திரோதயம் (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க
அதே படத்தில் வாங்கையா வாத்தியாரய்யா
பாடலில்,
தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..
என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
Courtesy - thinnai
-
31st August 2016, 12:20 AM
#2168
Junior Member
Senior Hubber
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கத்தில் இருந்து...
=================================================
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "
உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....
"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்.....
என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!
-
31st August 2016, 06:49 AM
#2169
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 23.9.2016 அன்று திரைக்கு வரும் என்று தெரிகிறது .விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் ..
மக்கள்திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று , மறு தணிக்கை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் 2017ல் திரைக்கு வரும் என்று அப் படத்தின் தயாரிப்பாளர் திரு நாகராஜன் தெரிவித்தார் .
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை . மற்றும் இதயக்கனி இரண்டு படங்களின் சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டல் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று கொண்டு வருகிறது .
-
31st August 2016, 06:53 AM
#2170
Junior Member
Platinum Hubber
செப்டம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் .
1. ராஜாதேசிங்கு
2. காவல்காரன்
3. கன்னி தாய்
4. தொழிலாளி
5. ஒளிவிளக்கு
6. தாய்க்கு பின் தாரம்
7. அன்னமிட்ட கை
8. தனிப்பிறவி
Bookmarks