Page 225 of 400 FirstFirst ... 125175215223224225226227235275325 ... LastLast
Results 2,241 to 2,250 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2241
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




    சென்ற ஞாயிறுக்கிழமை நான் போட்ட பதிவு மய்யம் நிர்வாகிகள் அறிவித்துள்ளபடி எதிர்பாராமல் அழிந்துவிட்டது. அதனால், அழிந்துபோன அந்தப் பதிவையும் இதயக்கனி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படத்தையும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.

    =============================================


    மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தோடு ஒதுங்கிவிடுவார்கள் என்று அந்தக் காலத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காரணம் உண்டு. மக்கள் திலகம் தனது படங்களில் நடிப்பவர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மற்ற படங்களை விட கூடுதல் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வார். பேசியபடி சம்பளம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டதா என்பதை உறுதியாக தெரிந்து கொண்டுதான் இறுதி கட்ட படப்பிடிப்பில் மக்கள் திலகம் கலந்து கொள்வார். அவருக்கு என்ன சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதே தரத்தில் சுவையான சாப்பாடு கடைசி தொழிலாளிக்கும் கிடைக்கச் செய்வார்.

    தன்னை வைத்து படம் எடுத்து லாபம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள், தானே லாபம் மொத்தத்தையும் அனுபவிக்காமல் எல்லா கலைஞர்களுக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைப்பார். இது சில தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காது.

    வி்க்கிரமாதித்தன் படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் நடிக்க வேண்டிய ஒரு காட்சி படமாக்க வேண்டும். ஒருவாரமாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. தயங்கியபடி தயாரிப்பாளர் மக்கள் திலகத்திடமே கேட்டார். நாளை அவசியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்த மக்கள் திலகம் அதுபோலவே படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அவர் ஒரு வாரம் படப்பிடிப்புக்கு வராத காரணம் என்ன தெரியுமா?


    படத்தில் துணை நடிகர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் திலகம் கூறியதை தயாரிப்பாளர் ஏற்கவில்லை.. அதனால்தான் மக்கள் திலகம் படப்பிடிப்புக்கு வரவில்லை. கோபத்தாலோ பழிவாங்குவதற்கோ இல்லை. அந்த ஒரு வாரமும் துணை நடிகர்கள் மேக்அப் போட்டுக் கொண்டு செட்டில் காத்திருந்தார்கள. மக்கள் திலகம் வராததால் படப்பிடிப்பு ரத்தானது. ஆனால், துணை நடிகர்கள் நடிக்காவிட்டாலும் அவர்களுக்கு தினப்படி சம்பளம் கொடுத்துவிட வேண்டும். அதன்படி, அந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் கோரிய அளவு தொகை அவர்களுக்கு கூடுதல் சம்பளமாக கிடைத்துவிட்டது. மக்கள் திலகம் ஒரு வாரம் வரமாட்டேன் என்று சொல்லியிருந்தால் படப்பிடிப்பு ஏற்பாடே நடந்திருக்காது. துணை நடிகர்களும் அழைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

    மற்றவர்கள் நலனுக்காக, தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று அதைப்பற்றி கவலைப்படாமல் துணை நடிகர்களுக்கு நியாயமான சம்பளத்தை மறைமுகமாக அவர்களுக்கு பொன்மனச் செம்மல் கிடைக்கச் செய்துவிட்டார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2242
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    உடலின் மேல் பகுதியை சற்றே பின்னோக்கி வளைத்து முகம் அண்ணாந்து பார்க்க மக்கள் திலகம் ஆர்ப்பாட்டமாக சிரிக்கிறார். பரிசுத்தமான கள்ளமில்லாத தூய உள்ளமும் சுதந்திர உணர்வும் இருந்தால்தான் இப்படி சிரிக்க முடியும்.

    இதயக்கனி படப்பிடிப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் அவருக்கு எவ்வளவு நெருக்கடிகள். சவால்கள். நினைத்துப் பாருங்கள். அதையெல்லாம் சமாளித்து வெற்றி காணும் நம்பிக்கை மிகுந்த சரவெடிச் சிரிப்பு.

    வேறு எந்தப் படத்திலும் இப்படி உடலின் மேல்பகுதியை கொஞ்சம் பின்னோக்கி வளைத்து முகம் வானத்தைப் பார்க்க பொன்மனச் செம்மல் இப்படி சிரித்ததாக நினைவு இல்லை. திரைப்படத்துக்காக இல்லாத கலப்படமில்லாத நிஜமான சிரிப்பு. இதைப் பார்க்கும்போது மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி நமக்கும் ஒட்டிக் கொள்ளும்.

  4. #2243
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    நான் போட்ட பதிவுகளும் அழிந்து இருக்கின்றன. காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.

  5. #2244
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like




    உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
    என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

    ….இந்தப் பாட்டு புரட்சித் தலைவருக்காகவே அவர் அழகை ரசித்து புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டு. நல்லதை நாடு கேட்கும் படத்துக்காக ஒலிப்பதிவானது. புரட்சித் தலைவர் முதல்வராகிவிட்டதால் படம் பாதியில் நின்றுபோனது. அவர் நடித்த சில நிமிடக் காட்சிகளோடு பிறகு ஜேப்பியார் நடித்து அதே பெயரில் படம் வெளியானது.

    பிறகு இந்தப் பாடலை புரட்சித் தலைவரின் அனுமதி பெற்று ‘நீயா’ படத்தில் புலமைப்பித்தன் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் புரட்சித் தலைவர் முகம்தான் நினைவில் வரும்.

  6. #2245
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like




    அரிமா சந்திரசேகரன் எம். அவர்களின் முகநூல் பதிவில் இருந்து…






    நிர்வாக திறமை::::

    எம்ஜிஆர் இருக்கிறார்(12):::

    இன்னமும் கூட படித்தவர்கள் மத்திலும், அறிவுஜீவிகள் மத்தியிலும் எம்ஜிஆர் இறுதி வரை மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தாரே ஒழிய பெரிய நிர்வாகத்திறமை இல்லாதவர் என்பதாக ஒரு முட்டாள்தனமான(சற்று கடுமையான வார்த்தைதான்) எண்ணம் இருக்கிறது.

    இவர்கள்தான் ராஜாஜி பதவி விலகி, காமராஜர் முதல்வரானபாேது கிண்டலடித்தவர்கள். நல்லவேளையாக பச்சை தமிழர் என்று பெரியார், அண்ணாவாேடு, பிரதமர் நேருவின் ஆதரவும் இருந்ததால் பெருந்தலைவர் காலம் பாெற்காலம் என்று இவர்களே புகழும்படி ஆயிற்று.

    தலைவருக்கு மக்களை தவிர வேறு எந்த பின்புல ஆதரவும் இல்லாததால், இவர்கள் கிண்டலடித்தாலும் காமராஜர் வழியொற்றி ஏழைகள் அரசாகவே பத்தாண்டுகள் நடத்திய எம்ஜிஆரும் நிர்வாகத்திறமையாளர்தான்.

    இது அண்ணாவின் அரசு என்று ஒன்றே முக்கால் ஆண்டுகளே ஆண்ட பேரறிஞரை பற்றி மேடைக்கு மேடை எம்ஜிஆர் சாென்னாலும், பத்தாண்டுகள் ஆண்ட காமராஜருக்கும் எம்ஜிஆருக்கும் அப்படி ஒற்றுமைகள்.

    தமிழக வரலாற்றில் மூன்று முறை தாெடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக்கப்பட்ட சாதணை எம்ஜிஆருடையது எனினும் காமராஜரும் மூன்று முறை முதல்வரானவர்.
    இருவருமே தலா பத்தாண்டுகள் தாெடர்ந்து முதல்வராக இருந்தவர்கள்.
    இருவருமே மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை காெண்டு வந்தவர்கள்.
    காமராஜராவது தனது கட்சி, பிரதமர் நேரு என்று முதல்வராக இருந்த பாேது இணக்கமாக இருந்து காரியம் சாதித்தவர்.
    எம்ஜிஆர் மாெரார்ஜி, சரண்சிங், இந்திரா, ராஜிவ்காந்தி என நான்கு பிரதமர்களிடமும் இணக்கமாக இருந்து நிதி, நீர் ஆதாரங்கள், ரேசன் உணவுபாெருட்கள், பெட்ராேலிய பாெருட்கள் தட்டுப்பாடில்லாமல் வரவழைத்தது, கனரக தாெழிற்சாலைகள் என்று அத்தணையும் சாதித்தவர்.

    தலைவரின் நிர்வாகத்திறமையை பற்றி ப.ஸ்ரீ.இராகவன் I.A.S__மத்திய அரசில் 1952 யிலிருந்து 1987வரை நேரு முதல் இராஜீவ் வரை செயலாளராக உயர் பாெறுப்பு வகித்து ஓய்வு பெற்றதும் பல்வேறு வெளிநாட்டு பொறுப்புகளை வகித்தவர்__தனது நேரு முதல் நேற்று வரை என்ற சுயசரிதை புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
    நாளை சாெல்லட்டுமா?





    என் குறிப்பு: இந்தக் கட்டுரையில் பெருந்தலைவர் காமராஜர் 3 முறை முதல்வராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் 3 முறை முதல்வராக இருந்தது உண்மைதான். ஆனால், முதல் முறை 1954-ல் சட்டசபைத் தேர்தல் மூலம் அவர் முதல்வராகவில்லை. குலக்கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு வந்ததால் முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலகினார். அவருக்குப் பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1957,1962 தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்று காமராஜர் முதல்வர் ஆனார்.

    ஆனால், 1977-ம் ஆண்டு

    1980-ம் ஆண்டு (ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் 3 ஆண்டுகளில் தேர்தல் வந்தது. இல்லாவிட்டால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்திருப்பார்),

    1984-ம் ஆண்டு (அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. புரட்சித் தலைவர் அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சட்டசபை பதவிக் காலம் 6 மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபைக்கும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது)

    ஆகிய 3 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி 3 முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வராக ஆட்சி அமைத்தவர் என்ற பெருமை தமிழக அரசியல் வரலாறில் புரட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

  7. #2246
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like




    அரிமா சந்திரசேகரன் எம். அவர்களின் முகநூல் பதிவில் இருந்து.. முந்தைய பதிவின் தொடர்ச்சி...


    எம்ஜிஆர் இருக்கிறார்(12யின்தொடர்ச்சி)::

    ப.ஸ்ரீ.இராகவன்I.A.S சதாரண ஆள் கிடையாது. முஸ்ஸிரியில் பயிற்சி பெற்று இந்திய ஆட்சிப்பணியில் இந்தியாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று 1952 லேயே இந்திய அரசில் செயலாளர் ஆனவர். 20 ஆண்டுகள் இந்திரா அம்மையாரிடம் உதவியாளர், உணவுத்துறை, நிதித்துறைகளின் முதன்மை செயலர், என பல பாெறுப்புகள் வகித்தவர்.

    அவர் எழுதுகிறார். "நான் பி.சி.ராய், ஜோதிபாசு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களை பார்த்திருக்கிறேன். டெல்லிக்கு வருபவர்கள் பிரதமர், மத்திய அமைச்சர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களிடம் தரும் கோரிக்கை மனுக்கள் என்னைப்பாேன்ற செயலர்கள் டேபுளுக்குத்தான் வந்து சேரும். நாங்கள் எழுதும் அறிக்கைக்குதக்கவாறே அமைச்சர்கள் முடிவு எடுப்பார்கள்.

    இந்த சூட்சுமம் எல்லாம் எம்ஜிஆருக்கு அத்துபடி. அவர் முதல்வரானதும்,பண்ருட்டி ராமச்சந்திரனுடன் டெல்லி வந்தவர் பிரதமர், அமைச்சர்களை சந்தித்து விட்டு, என்னை சந்திக்க வருவதாக சாென்னதும் ஆடிப்பாேய் விட்டேன். ஒரு மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வர் என்னத்தேடி வருவதா? அப்பாேது உணவுத்துறை செயலராக இருந்தேன். ரேசன் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணைக்கு மொரார்ஜிக்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசு தமிழ்நாடு காேட்டாவை பாதியாக குறைத்திருந்தது. அவர் சாென்ன நேரத்துக்கு அரை மணிக்கு முன்பாக தமிழ்நாடு ஹவுசில் அவரை சந்தித்தேன். அவர் சாென்னார் "உதவி கேட்கும் இடத்தில் நான், உதவி செய்யும் இடத்தில் நீங்கள், நான் வந்து உங்களை சந்திப்பதே முறை". கலங்கிப்போனேன். மத்திய உணவு அமைச்சர் ராவ் பீரேந்திர சிங்கை சந்திக்க சாெல்லி, அப்பாயிண்ட்மென்ட்டும் ஏற்பாடு செய்தேன், சந்தித்தார். முழு காேட்டாவிற்கான ஆணையை கையிலேயே வாங்கினார்.

    டெல்லி வந்தால் எந்த முன்அறிவிப்புமின்றி என் சேம்பருக்கே வந்து விடுவார். கையோடு காெண்டு வந்திருக்கும் கோதுமை, அரிசி சாம்பிள்களை காட்டி இதை மக்கள் எப்படி சாப்பிடுவார்கள், தரமானதாக அனுப்புங்கள் என்பார். அவரது அணுகுமுறைக்காகவே தரமானதாக பார்த்து அனுப்புவாேம். இப்படி நிதித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை என எல்லா செயலர்களிடமும் ஈகாே இல்லாமல் அவரே சென்று சந்தித்து விடுவார், சாதித்தும் விடுவார்.

    1982ல் நான் ராேம் நாட்டு தூதரானதும், தமிழகத்து காேட்டாவை குறைத்து விட்டார்கள். எம்ஜிஆர் சாதுர்யமாக சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் அமர்ந்து விட்டார். அவ்வளவுதான், மத்திய அரசு பணிந்தது. உடனடியாக உணவு அமைச்சரிடம் உயர்த்தப்பட்ட அரசாணையை வழங்கி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தது.

    மாநில முதல்வர்களுள் ஏழை எளியவர்களின் நலனே தன் மையக்கடமையாக காெண்டு,அதிகாரவர்க்கத்தின் ஒத்துழைப்பை பெறுவதில் சமர்த்தராகவும்,பழகுவதற்கு இனியவராகவும் இருந்தவர் எம்ஜிஆர் மட்டுமே"

    இதை சாென்னவர் மத்திய அரசில் பழம் தின்று காெட்டை பாேட்டவர்.

    இப்பாேது சாெல்லுங்கள் எம்ஜிஆர் நிர்வாகதிறமை இல்லாதவரா?

  8. #2247
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like





    அரிமா சந்திரசேகரன் எம். அவர்கள் முகநூல் பதிவில் இருந்து...



    டபுள்ஸ்" கதை:::

    எம்ஜிஆர் இருக்கிறார்(9):::

    எம்ஜிஆருக்கு தாெழிலாளர்கள் மாத்திரம் தனியே சைக்கிளில் ஸ்டுடியாே வருவதும், அவர்களது மணைவிமார்கள் டவுன்பஸ் பிடித்து, பல்வேறு சிரமங்களில் பணிக்கு வந்து சேர்வதும் உறுத்தலாகவே இருந்தது.

    இதற்காக அவர் சைக்கிளில் டபுள்ஸ் பாேகலாமென சட்டம் காெண்டுவரச்சொல்லி அமைச்சர்கள், அதிகாரிகள்என்று, தி.மு.கவில் இருக்கும்பாேது எல்லாரிடமும் பேசிப்பார்த்தார்.

    அவர்களுக்கு இது ஒரு பெரிய சங்கதியாகவே தோன்றவில்லை. ஏழை பங்காளன் எம்ஜிஆருக்குத்தான் இது உறுத்திக்காெண்டே இருந்தது. அவர் வலியுறுத்தும்போதெல்லாம் அதிகாரிகள் சாலைவசதி, பாதுகாப்பு காரணங்களை சாெல்லி மறுத்தனர்.

    ஒரு படபிடிப்புக்காக தஞ்சை வந்திருந்த எம்ஜிஆர் சைக்கிள் தள்ளிக்கொண்டு ஒரு இளைஞர் செல்வதையும், உடன் ஒரு மாணவி யூனிபார்ம் அணிந்து நடந்து செல்வதையும் பார்த்து காரை நிறுத்த சாென்னார்.

    அவர் விசாரிக்கும் போது கல்லூரி மாணவரான அந்த இளைஞர், தன் தங்கையை இரண்டு கிமீ தூரத்திலுள்ள பாட்டு வாத்தியார் ட்யூசனுக்கு விட்டு வர கல்லூரியிலிருந்து வருவதாக சாென்னார்.

    சங்கடமாகிப்போன தலைவர் அந்த மாணவியை காரில் ஏறச்சொல்லி, பாட்டு வாத்தியார் வீட்டில் இறக்கி விட்டு பாட்டு அரங்கேற்றம் தன் தலைமையில்தான் நடக்க வேண்டும் என சிரித்தவாறே சாெல்லி, மாணவி கையில் சில நூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு கிளம்புகிறார்.

    தலைவர் முதல்வரானதும் முதல் ஆலோசணை கூட்டத்தில் சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதிக்கும் சட்டமுன்வடிவை கொண்டு வருகிறார். வழக்கம்போல் முதன்மை செயலரும், பாேலிஸ் ஐ.ஜியும் ஆட்சேபிக்கிறார்கள்.

    தலைவர் சாெல்கிறார். "ஒரு பாமரனின் மகிழ்ச்சியே அவன் மணைவியோடு ஒன்றாக செல்வதுதான். சாலைகளையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவது அவன் வேலை அல்ல. அரசின் வேலை. நம்மை இங்கே உட்கார வைத்திருப்பதே அவனுக்கு நன்மை செய்யத்தான். நல்ல காரியங்களுக்கு முட்டுக்கட்டை போடஅல்ல. மக்களுக்காகத்தான் சட்டமே ஒழிய, சட்டத்திற்காக மக்களில்லை."

    சைக்கிளில் டபுள்ஸ் அனுமதிக்கும் சட்டம் வந்தது. ஒரு சின்ன சாமான்ய திட்டம்தான். தலைவர் ஏழைகள் மனதில் இமயமாய் உயர்ந்தார்.

  9. #2248
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    முகநூலில் பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய தகவல் முற்றிலும் தவறானது .


    கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ் 1970 முதல் தீவிர தமிழ் எதிர்ப்பாளராக இன்று வரை
    மொழியின் பெயரால் வன்முறை கையாண்டு தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறான்
    எந்த ஒரு கால கட்டத்திலும் மக்கள் திலகம் இந்த ரவுடியை சந்தித்தில்லை .எனவே நடக்காத ஒன்றை நடந்ததாக முகநூலில் இடம் பெற்றுள்ளது முழுவதும் தவறான தகவல் என்பதால் இந்த பதிவை அளிக்கிறேன் .

  10. #2249
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    முகநூலில் பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய தகவல் முற்றிலும் தவறானது .


    கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ் 1970 முதல் தீவிர தமிழ் எதிர்ப்பாளராக இன்று வரை
    மொழியின் பெயரால் வன்முறை கையாண்டு தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறான்
    எந்த ஒரு கால கட்டத்திலும் மக்கள் திலகம் இந்த ரவுடியை சந்தித்தில்லை .எனவே நடக்காத ஒன்றை நடந்ததாக முகநூலில் இடம் பெற்றுள்ளது முழுவதும் தவறான தகவல் என்பதால் இந்த பதிவை அளிக்கிறேன் .
    விளக்கம் அளித்ததற்கு நன்றி எஸ்வி சார் . வாட்டள் நாகராஜை புரட்சித் தலைவர் சந்தித்து பேசியதாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியாகியிருந்த கட்டுரையை இங்கே பதிவிட்டேன். நீங்கள் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை, அது தவறான தகவல் என்று சொல்கிறீர்கள். கர்நாடகாவிலேயே வாழும் மூத்த ரசிகரான நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புரட்சித் தலைவர் பற்றிய தவறான தகவல்கள் எதுவும் வரலாற்றில் இடம் பெற்றுவிடக் கூடாது. எனவே, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இருந்து நான் பதிவிட்ட அந்தப் பதிவை நீக்கி விட்டேன்.

  11. #2250
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •