-
10th September 2016, 10:30 PM
#11
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கலைஞர்களை மேடையிலேயே கௌரவிப்பார், அதே போல் அவர்களிடம் அளவுகடந்த பாசமும் , அபரீதமான மரியாதையும் காட்டுவார்.ஒரு சில சமயங்களில் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பின்னால் தனியே அமர்ந்து ரசித்து விட்டு வருவதுமுண்டு. ஒரு முறை எழுத்தாளர் எல்லார்வின் வீட்டுக் கல்யாணத்திற்க்குப் போயிருந்தார்.அப்போது மணமேடையில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தலைவர் பந்தலில் நுழைந்ததும் ஏற்பட்ட களேபரத்தில் கச்சேரியை கேட்கலாம் என ஆர்வத்தோடு வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் எழுந்து சென்று விட்டார். ஆனால் கச்சேரி முடிவதற்குள் மேடையில் வயலின் வாசித்தவருக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்க வந்தேன். என்னால் கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் குறுக்கிட நேர்ந்ததற்க்கு மிகவும் மனம் வருந்துகிறேன் என்று கூறி எழுதி அனுப்பியிருந்தார். தலைவருடைய இத்தகைய பண்பு எத்தனை பேருக்கு உண்டு செய்த தவறை கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் இந்த காலத்தில் தான் செய்யவே செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றால் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் தானே. மனிதராய் வந்த தெய்வம் அவர்.
தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து.
-
10th September 2016 10:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks