-
21st October 2016, 06:37 PM
#2391
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2016 06:37 PM
# ADS
Circuit advertisement
-
21st October 2016, 06:49 PM
#2392
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2016, 07:13 PM
#2393
Senior Member
Seasoned Hubber
-
25th October 2016, 08:19 AM
#2394
Junior Member
Newbie Hubber
நடிகர் திலகமும் விருதுகளும் .
நிறைய பேர் விருதுகளை பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். செய்து இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.
இந்திய அரசின் விருது.(சிறந்த நடிகர்)
இந்த விருது ஏற்படுத்த பட்டதே 1967 ஆம் ஆண்டில்தான். நடிகர்திலகம் நடிக்க வந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முடிவுற்ற நிலை. இந்த விருது 1952 முதலே இருந்திருக்குமானால் , அவருக்கு பராசக்தி,அந்த நாள்,உத்தமபுத்திரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன்,நவராத்திரி, என்ற 1967 க்கு முற்பட்ட படங்களிலும் ,தில்லானா மோகனாம்பாள்,தெய்வ மகன்,வியட்னாம் வீடு,ஞான ஒளி ,கெளரவம்,தங்க பதக்கம், முதல் மரியாதை போன்ற 1967 க்கு பிற்பட்ட படங்களுக்கும் சாத்தியம்.
மொழி மாற்ற படங்கள் இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,பாபு போன்ற படங்களுக்கு சாத்தியம் இல்லை.இது தேர்வு குழு தகுதி அடிப்படை. மொழி மாற்ற படங்கள்,இரவல் குரல் இவை தேர்வுக்கு பங்கு பெற முடியாது. 1971 இல் சவுந்தரா கைலாசம் சிவாஜிக்குத்தான் என்று சொல்லி, அங்கு சென்று வேறோர் பெயரை .சொல்லி ,தேர்வு பிரச்சினைக்கு உள்ளானதுடன் ,அகில இந்தியாவும் கை கொட்டி நகைத்தது. 1972 சட்ட சபையில் நெடுஞ்செழியன் உண்மையை போட்டு உடைக்க, சம்பந்த பட்ட நபர் நாணி ,அதனை திருப்பி விட்டார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை பற்றி முழு விவரம் வேண்டுவோர் 1972 துக்ளக் இதழ்களை துழாவினால் உண்மைகள் வெளிச்சமாகும்.
1985 இல் முதல் மரியாதைக்குத்தான் என்று முடிவான நிலையில் ,ஜெயா (இத்தனைக்கும் இவர் சிவாஜி ரசிகர்) எம் .பீ பிரச்சினையை மனதில் வைத்து கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்ததை ,சக தேர்வு குழு உறுப்பினர் கோமல் ,சுபமங்களா இதழில் விரிவாக எழுதியுள்ளார்.
அதனால் இந்த விருது ,நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பு பொற்காலத்தில் (1952 to 1966) ஆரம்பிக்க படவே இல்லை.பிறகு தி.மு.க ,அமிதாப் போன்ற காரணிகள் குறுக்கே வந்தன.
Film fare விருது (தமிழ் மொழி சிறந்த நடிகர்)
இந்த விருது தமிழுக்கு ஏற்படுத்த பட்டதே 1972 ல்தான் . இதுவும் பிராந்திய அளவு தேர்ந்தெடுப்பதே. ஆனாலும் ஓரளவு புகழ்பெற்ற விருது.கமல் கூட குழந்தை தனமாக உண்மை தெரியாமல் (அல்லது சாமர்த்தியமாக மறைத்து) இதை பற்றி அரைகுறையாய் கூறியுள்ளார். இது ஏற்படுத்த பட்ட முதலிரண்டு வருடங்கள் சிவாஜிக்கே சென்றது. (ஞான ஒளி ,கெளரவம்).1974 இல் நான் அவனில்லை,தங்க பதக்கம் போட்டியில் நான் அவனில்லை ஜெமினிக்கு சென்றது. (நிஜமாகவே நல்ல தேர்வு).பிறகு சிவாஜி ஸ்டார் மட்டுமே ஆகிவிட்ட 1975 முதல் 1984 வரை குறிப்பிடத்தக்க படங்களே இல்லை. 1985 இல் முதல் மரியாதைக்கு மரியாதை வழங்க பட்டது.
அவர் உன்னதம் தொட்ட காலங்களில் Film Fare விருதே கிடையாது.(தமிழுக்கு)
தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது.
இந்த விருது ஆரம்பிக்க பட்டதே 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு. இதன் லட்சணம் உங்களுக்கே தெரியும். அதிலும் ஏதோ காரணங்களுக்கு 1971 முதல் 1976 வரையும், 1983 முதல் 1987 வரை இந்த விருது வழங்க படாமல் நிறுத்து வைக்க பட்டுள்ளது. அதையும் மீறி தமிழக அரசு மனமேயில்லாமல் தெய்வ மகனுக்கு வழங்கியாக வேண்டிய கட்டாயம்.
இப்போது புரிந்திருக்குமே ,இந்த விருதுகள் அவர் உன்னதம் தொட்ட முதல் 15 வருடங்கள் ஏற்படுத்த படவே இல்லை.பிறகு மிக மோசமான அரசியல் மூன்று முறை விளையாடி உள்ளது.
இனியாவது நம் ரசிகர்கள் உண்மை புரிந்து புலம்புவதை நிறுத்தி கொள்ளவும். இந்த உண்மைகள் நிறைய திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கே தெரியாது.
அது சரி, அவர் கலைமாமணி பெற்றது 1962 இல். இது கூட விக்கி யில் தவறாக குறிக்க பட்டுள்ளது. ஆதாரத்துடன் திருத்தவும்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
26th October 2016, 08:30 PM
#2395
Junior Member
Diamond Hubber
Courtesy ..Facebook
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2016, 12:36 AM
#2396
Junior Member
Senior Hubber
இது-
அய்யன் நடிகர் திலகத்தின்
எண்பத்தெட்டாம் அவதாரத்
திருநாளில் நானெழுதிய
"எவரும் எட்டா எண்பத்தெட்டு"
எனும் கவிதையின் காணொளி
வடிவம்.
காணொளியை சிறப்புற வடிவமைத்துத் தந்த, எப்போதும் என் நன்றிகளுக்குரிய விக்னேஸ்வரனுக்கு இப்போதும் நன்றிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2016, 12:40 AM
#2397
Junior Member
Senior Hubber
கடந்த 23.10.2016
அன்று நடிகர் திலகம் திரைப்பட
திறனாய்வு அமைப்பின் சார்பாக சென்னையில் சமீபத்தில் 50 ஆண்டுகளை
நிறைவு செய்து பொன்விழாக் கண்ட "சரஸ்வதி சபதம்" திரைக் காவியம் திரையிடப்பட்டது.
நாரதரையும், வித்யாபதியையும் நல்லவர்களோடு சேர்ந்து தரிசிக்க ஆவலாயிருந்தேன்.
கலந்து கொள்ள இயலாதவனானேன்.
"சரஸ்வதி சபதம்" பார்க்க முடியாத ஏக்கத்தை இந்த
"சரஸ்வதி சபதம்-50" மூலம்
தீர்த்துக் கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2016, 12:42 AM
#2398
Junior Member
Senior Hubber
சரஸ்வதி சபதம்-50
---------------------
(1)
கல்வியா? செல்வமா? வீரமா?
எது முக்கியம் என்று ஆராயத்
துவங்கி, மூன்றுமேதான் என்று
தீர்ப்புச் சொல்கிற படம்- "சரஸ்வதி சபதம்".
நடிகர் திலகம் நமக்கு நடத்துகிற கலைப் பாடங்களின்
வழியே நாம் கற்றறிகிற ரசனை
எனும் "கல்வி", நம் இதயப் பெட்டகத்தில் நிரம்பி வழிகிற
அய்யனின் நடிப்பெனும் "செல்வம்", அய்யனின் ரசிகரென்கிற பலத்தில் நாம்
பெற்று விடுகிற "வீரம்"... மூன்றுமே முக்கியமென்ற
முடிவுக்கு நாமும் வருகிறோம்.
(2)
வேடங்கள் புனைந்து நடிப்பதென்பது வெறும் ஒப்பனைகளால் விளைவதல்ல...
உளப்பூர்வமான கலை ஈடுபாட்டால் விளைவது.
இதற்கு, அப்போதும்,இப்போதும், எப்போதும் உதாரணம்.. நம் நடிகர் திலகம் மட்டுமே.
ஓரிடம் நிலையாத நாரதராகவும், ஊமையாயிருந்து
புலவனான வித்யாபதியாகவும்
நடிப்பதல்ல.. மாறுவதே அந்த
உளப்பூர்வமான கலை ஈடுபாடாகும்.
(3)
சிறு வயதில் நான் வசித்த வீடு
இருந்த தெரு நாற்பது வருஷங்களில் அடியோடு மாறி
"பார்த்தாயா?..பார்த்தாயா?" என்று சிரிக்கிறது. என் காலத்தில் அது எனக்குத் தந்த
இனிமையை இன்று எனக்குத் தரவில்லை.
ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த "சரஸ்வதி சபதம்" அன்று
தந்தவற்றோடு, புதுசு புதுசாய்
இன்பங்கள் தருகின்றது.
(4)
சில தேதிகளைச் சிலர் மறக்க
முடியாதபடி பொன்னாளாக்குகிறார்கள்...
3.9.1966 எனும் தேதியை நடிகர்
திலகம் "சரஸ்வதி சபதம்" தந்து
பொன்னாளாக்கியது போல்.
(5)
துணிச்சலாய் சில பாத்திரங்களை சவாலாய் ஏற்று
ஜெயிப்பது நடிகர் திலகத்தாலேயே ஆகும்.
ஒரு ஊமையைப் பேச வைக்க
கலைவாணியைத் தூண்டி விடும் நாரதர் வேடம் ஏற்றவரே, அந்த ஊமை வேடமும் ஏற்கிற துணிச்சல்.
(6)
நாரதர் வேடம் ஒரு சுவாரஸ்யமான, கௌரவ வேடமாகவே அதற்கு முன்
இருந்தது.
நாரதரை முழுசாய் நமக்குக்
காட்டியது.. நடிகர் திலகமே.
(7)
கொண்டையில், புஜத்தில், கைகளில் சுற்றிய மலர் வட்டங்கள், அவைகளையொத்த மென் புன்னகை, கண்களிரண்டில் ஒளிரும் அருள் விளக்குகள்...
இத்தனை அழகான நாரதர்
மூவுலகும் பார்க்காதது. திரையுலகும் பார்க்காதது.
(8)
படத்தில் சத்யலோகம் காட்டப்படுகிறது. வைகுண்டம்
காட்டப்படுகிறது. கைலாயம் காட்டப்படுகிறது. மூன்று உலகங்களை விட நம்மைக் கவர்ந்ததென்னவோ... நடிகர்
திலகமெனும் நம் உலகமே.
(9)
புராணம் போற்றிக் கும்பிடும்
ஒரு கதாபாத்திரத்திற்கு, சராசரி
மனிதரின் உடல் மொழிகள், முக பாவங்களைப் பொருத்தும்
சாமர்த்தியம் நடிகர் திலகத்துக்கே உரியது.
(10)
திருவிளையாடலில் நாரதராக
நடித்தவரிடமோ, சரஸ்வதி சபதத்தில் சிவனாக நடித்தவரிடமோ நடிப்பில் எந்தக் குறையும் இருக்காதுதான். ஆனாலும்,
நடிகர் திலகத்தை சிவனாகவும்,
நாரதராகவும் பார்த்து விட்ட
கண்களுக்கு வேறு யாரையும்
அந்தத் திருவுருவங்களோடு
பொருத்த முடியவில்லையே..
என்ன செய்ய?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2016, 12:43 AM
#2399
Junior Member
Senior Hubber
(11)
நாரதர் குறித்துப் புழங்கும் கதைகளில் பெரும்பாலும் அவர் வம்புக்காரராக மட்டுமே சித்தரிக்கப்படுகிறார். அவ்வாறில்லை என்றே சான்றோர்கள் கூறுகிறார்கள்.
நாரதர், அறிவார்ந்தவர் என்பதை நடிப்பால் நிரூபித்தவர்... நடிகர் திலகம்.
(12)
நாரதருக்காக நடிகர் திலகம்
நடந்திருக்கும் அந்த சாந்தமான,
பவ்யமான நடை அற்புதமானது.
கத்தி வீச்சாய் முன்
செல்லும் அந்த கால்களில்தானா இந்த நடையும்?
(13)
நாரதர் கண்ணியமானவர், சாந்தம் மிகுந்தவர் என்பதை
மெய்ப்பிக்கும் அந்த உச்சரிப்பு...
வார்த்தைகளை அதிராமல் அதே சமயத்தில் கம்பீரமாக
வெளிப்படுத்தும் அழகே அழகு.
(14)
அன்னை சரஸ்வதி நடத்தும்
கோமாதா பூஜைக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும்
சத்யலோகத்தைப் பார்த்து அசந்து போவதற்கு வசனங்களும் இருக்கின்றன.
ஆனால் அவற்றை முந்திக் கொண்டு அவரது கண்களே
வசனம் பேசி விடுகின்றன.
(15)
தன்னை கோமாதா பூஜைக்கு
அழைக்காத அன்னையிடம்
அதை சூசகமாய் சுட்டிக் காட்டும் நடிப்பில்தான் எத்தனை அழகு?
(16)
சரஸ்வதியின் இடத்தை லட்சுமி கடாட்சமான இடம் என்று வம்பு பேசுவதற்கு முன்பான அந்த தொண்டைச்
செருமலும், குறும்பான கண்
உருட்டலும் ரசிகனுக்கு விருந்து.
(17)
மற்ற நடிகர்களென்றால்...
ஒரே சமயத்தில் இருவர் திரையில் தோன்றினால், ஒருவர் பேசும் போது மற்றவரின் பாவனை சுமாராகவே இருக்கும். இந்தக்
காட்சியில் சாவித்திரியம்மா
நீளமாய் வசனம் பேச, நடிகர்
திலகம் காட்டும் உயிர்ப்பான
பாவனைகள் பார்த்து நம் கண்கள் அவரிடமே லயிக்கும்.
(18 )
உலக நன்மைக்காக கலகங்களின் மூலமாகவும்
நல்லதை உண்டாக்க
முனையும் நாரதரை, வெறும்
கலகக்காரராகவே காட்டி விடக்
கூடாது என்பதில் நடிகர் திலகம்
கொண்டிருக்கும் கவனத்தைக்
காட்டுகிறது... இலக்கிய, உலக
விஷயங்களை உதாரணம் காட்டி அன்னையிடம் செய்யும்
விவாதத்தின் தீவிரம்.
(19)
கல்விக்குரியவளிடம், செல்வத்தைப் பெருமையாகப்
பேசும் போது கூறும் உதாரணங்களை குறும்பிலிருந்து விலகிக் கொண்டு பேசும் நேர்மையான
நடிப்பு.
(20)
சதா தான் உச்சரிக்கும் நாராயணனைத் தரிசித்துப்
பேசுகையில் எடுத்துக் கொள்கிற உரிமை, நிஜமான ஈடுபாட்டில் வருகிற பக்தி..
இவற்றையெல்லாம் அப்படியே
வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2016, 12:45 AM
#2400
Junior Member
Senior Hubber
(21)
"கல்விதான் பெரிது" என்று
லட்சுமியிடம் அறிவுறுத்தும்
போது உதாரணமாகச் சொல்லும் அந்த "செல்வம்..
செல்வம்.. செல்வோம்" என்பதை மிகச் சரியான உச்சரிப்போடு சொல்லும் அழகுக்கு நம் தலைமுறையே அடிமை.
(22)
நடிப்பில் ஒரு சிறிய திருப்பத்தை, மாற்றத்தைத் தந்து நம்மைப் பிரமிக்கச் செய்வது நடிகர் திலகத்திற்கு வாடிக்கை.
"செல்வம்தான் பெரிது" என்று
கலைவாணியைத் தூண்டி விட்டு, கல்விதான் பெரிது என்று லட்சுமியையும் தூண்டி விட வந்திருக்கும் நாரதரைப்
பார்த்து பரமாத்மா கிண்டலாக
"நாடகத்தைத் துவக்கி விட்டாய். நடத்து." என்று சிரிக்க...
சட்டென்று முகத்தில் சிரிப்பு
தொலைத்து, அதிர்ச்சி காட்டி
"நானா நடத்துகிறேன்..? பெருமானே.. நடத்துவதெல்லாம் நீங்களல்லவா? இன்று ஏதோ
எனக்குள் புகுந்து உத்தரவிட்டிருக்கிறீர்கள்.." என்று பேசுகிற போது நமக்குள்
ஏற்படுகிற நெகிழ்வான ரசனை
மாற்றம், தவிர்க்க முடியாதது.
தவிர்க்கக் கூடாதது.
(23)
லட்சுமியையும் கோபப்படுத்தி
அனுப்பி விட்டு "நாராயணா"
என்று நாரதர் சிரிக்க.. "என்னை
ஏனடா அழைக்கிறாய்..?" என்று
பெருமான் கேட்க, சிரித்துக்
கொண்டே அவர் பதில் சொல்லும் போது மீண்டும் தலைதூக்கும் அவரது குறும்பு
ரசிப்புக்குரியது.
(24)
"தெரிந்தோ..தெரியாமலோ..
உன் பெயரைச் சொல்லி பல
பாவங்களைச் செய்கிறேன். அதை உனக்கே அர்ப்பணித்து
விட்டால் நான் புனிதனாகி விடுவேனல்லவா?" என்பது
மனித குலத்தின் சார்பாக
நாரதர் கடவுளிடம் சொல்வது.
(25)
கைலாயத்தில் சக்தியின் அருகே நிற்கும் சிவபெருமான்
"நாரதா.." என்றழைத்ததும், அப்போதுதான் பார்ப்பது போல
"..ச்சட்.. தாங்களும் இங்கேதான்
இருக்கிறீர்களா?" என்பார் அய்யன். அந்த "..ச்சட்.." பார்வையாளனோடு கதையைக்
கட்டுகிற சுவாரஸ்யக் கயிறு.
(26)
ஒரு பாடலென்பது பொழுது
கடத்துகிற சமாச்சாரமல்ல..ஊன்றிக் கவனிக்க அதில் ஓராயிரம் விஷயங்கள் உண்டு
என்பதை நிரூபிக்கிறது.. "கல்வியா..செல்வமா..வீரமா"
பாடலினூடே "ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது" என்று
வரும் இடத்தில் அய்யன் காட்டும் உருக்கமான பாவங்கள்.
(27)
நமக்கு முதுகு காட்டி அய்யா நந்தவனத்தில் பூக்கள் பறிக்கிறார். காவலாளிகள் பார்த்து மிரட்ட, பயப்படுகிறார்.
அதிர்ச்சியாகிறார். பயத்தையும்,
அதிர்ச்சியையும் முதுகிலேயே
காட்டுகிறார். நடிகர் திலகத்திற்கு முதுகும் நடிக்கும்
என்று சும்மாவா சொல்கிறோம்?
(28)
காவலாளிகள் பேச முடியாதவரைப் பிடித்து அடித்து உதைக்கிறார்கள். ரத்தம் வழியக் கலங்கி நிற்பவரிடம் நாகேஷ் " அடிக்க
வர்றாங்களே.. பூஜைக்காகத்தான் புஷ்பங்களைப் பறிக்க வந்தேன்னு வாயைத் திறந்து
சொல்லக் கூடாது?" என்று வாய் தவறிச் சொல்லி விட,
தன்னுடைய ஊனம் சுட்டிக்காட்டப்பட்ட வேதனையில் வெடித்து அழுவாரே... அப்பப்பா!?
(29)
வீட்டில், ஊமைப் பிள்ளையைக்
காணாமல் தவிப்பு நடை நடந்து
கொண்டிருப்பார்..தந்தை நாகையா. ரத்தக் காயங்களோடு, ஒரு தத்துப்பித்து நடையோடு வீட்டுக்குள் வருவார் நடிகர் திலகம்.
தனது ஊனத்தால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தனக்கென்றிருக்கும் ஒரே உறவான தன் தந்தையிடம்
சொல்லியழ ஓடி வரும் ஒரு
குழந்தையை அந்த நடையில்
பார்க்கலாம்.
(30)
"வித்யாபதி.. என்ன நடந்தது..?"
என்று பதட்டமாய் வினவும்
தந்தைக்கு பதிலளிக்க வார்த்தையின்றி ஒரு அழுகையைப் பதிலாகத் தருவார்.
அழுகை, ஒரு மொழியானது நம்
நடிகர் திலகத்திடமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks