-
15th November 2016, 07:29 PM
#1
Senior Member
Veteran Hubber
டியர் ஆதவன் ரவி,
'அன்பைத்தேடி' படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் காடசியிலும், இருமலர்கள் படத்தின் நான்கு நிமிடப்படலில் சில வினாடிகளே வந்து போகும் காடசி பற்றியும் உங்கள் ஆழ்ந்த விவரிப்பு கண்டு அசந்தேன். என்னவொரு தீர்க்கமான ஆய்வு மற்றும் விவரிப்பு. அந்த அற்புத கண்களின் அன்றைய நிலையையும், இன்றைய சூழலையும் புலப்படுத்துவதில் தான் என்னவொரு கவிதை நயம்.
முன்பு முரளியண்ணா இந்தக் காடசியை விவரித்த பாங்கு மீண்டும் மனதில் அலைகளாக மோதுகிறது. மரப்பிடியில் கையூன்றியபடி கண்களில் கோபம் கொப்பளிக்க, ஸாரி கோபமென்று சொல்ல முடியாது ஒருவித கடுப்புடன் நின்று பார்ப்பதும், பக்கத்தில் நின்ற மனைவி பாடத் தொடங்கியதும், அதை எதிர்பாராதவர் போல திடுக்கிட்டு திரும்புவதும் எத்தனை தத்ரூபம் இவர் நடிப்பில்.
இவர்களின் முன்கதை தெரியாத அப்பாவி மனைவி, ஆசிரியையின் சோகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பாடலில் பங்குபெறுவது எத்தனை இயல்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
இப்படங்களின் இருவேறு காடசிகளை உங்களுக்கே உரிய தனி நடையில் விவரித்து அழகு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
வாசுவின் நடையில் முரட்டுப்பயல் ஆண்டனியின் அட்டகாசங்களுக்கு காத்திருக்கிறோம்.
-
15th November 2016 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks