-
1st November 2016, 09:34 PM
#1531
Moderator
Diamond Hubber
பிரமாண்டமாய் தயாராகிறது ஜோடி சீசன்- 9
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜோடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு இருக்கிற நடன நிகழ்ச்சிகளுக்கு அதுதான் முன்னோடி. இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது.
விரைவில் ஜோடி சீசன் 9 தொடங்க இருக்கிறது. ரீல் வெசஸ் ரியல் என்பதுதான் இந்த சீசனின் தீம். சினிமா, சின்னத்திரையில் ஜோடியாக நடிப்பவர்களும், நிஜ வாழ்க்கையில் ஜோடியாக வாழ்கிறவர்களும் இணைந்து கலக்கப்போகிறார்கள். பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமையான, பிரமாண்ட அரங்கங்கள் இந்த சீசனில் ஸ்பெஷலாக இருக்கும் என்கிறார்கள். ரெயின் எபெக்ட்டைகூட அரங்கத்திற்குள் கொண்டு வருகிறார்களாம்.
நன்றி: தினமலர்
-
1st November 2016 09:34 PM
# ADS
Circuit advertisement
-
1st November 2016, 09:36 PM
#1532
Moderator
Diamond Hubber
நாளை முதல் விஜய் டி.வியில் சந்திர நந்தினி
ஏக்தா கபூர், ஷோபாக கபூர் தயாரிப்பில் உருவாகும் சந்திர நந்தினி தொடர் ஸ்டார் பிளசில் கடந்த மாதம் 10ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் தமிழ் பதிப்பு நாளை (31ந் தேதி) முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
இது சந்திரகுப்த மவுரியருக்கும், நந்தினிக்கும் இடையிலான காதல் கதை. ரஞ்சன் குமார் என்பவர் இயக்குகிறார். ரஜட் டோகாஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். நந்தினியாக நடிகை ஸ்வேதா பாசு நடிக்கிறார். இவர்கள் தவிர தனுகான், ஜினீத் ரத், ஏஞ்சல் ரூப் சந்தினி, பப்பியா சென்குப்தா. மான்சி சர்மா உள்பட இந்தியில் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பிரமாண்ட அரண்மணைகள், போர் காட்சிகள், கிளாமர் காட்சிகள், ரொமாண்டிங் காட்சிகள் என மிரட்டலாக இந்த சரித்திர தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த தொடர் தமிழ் தவிர விரையில் தெலுங்கிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த பிரமாண்ட பட்ஜெட் தொடரால் தற்போது கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தென்பாண்டி சிங்கம் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெறும் வசனத்தில் வண்டி ஓட்டினால் வேலைக்கு ஆகாது. சந்திர நந்தினிக்கு இணையான பிரமாண்டத்தை காட்டினால்தான் அந்த தொடர் நிலைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
நன்றி: தினமலர்
-
1st November 2016, 09:43 PM
#1533
Moderator
Diamond Hubber
சாப்பாட்டுக்கு ஊர் ஊராக சுற்றும் நகுல் மனைவி -
நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளினியாக இருந்தார். நகுலை பேட்டி எடுக்கக்போன இடத்தில் காதல் உருவாகி அது கசிந்துருகி கல்யாணத்திலும் முடிந்தது. திருமணம் முடிந்ததும் முழுநேர தொகுப்பாளினி ஆகிவிட்டார் ஸ்ருதி.
புதிய தலைமுறை டிவியில் இவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ஊரும் உணவும் நிகழ்ச்சி செம ஹிட். காரணம் விதவிதமான கிராமத்து உணவுகள் அதை தொகுத்து வழங்கும் ஸ்ருதியின் ஸ்டைல், ஆங்கில சேனல்களில் வரும் சமையல் நிகழ்ச்சி போன்று திடீரென்று ஒரு கிராமத்துக்குள் போகிறார். அங்குள்ளவர்களிடம் இந்த ஊரில் என்ன சாப்பாடு விசேஷம் என்று கேட்கிறார். அதை செய்வதில் யார் ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர்களை அதை செய்ய வைத்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்புகிறார்.
>ஸகூட்டியில், சைக்கிளில், மாட்டு வண்டியில் இப்படி கிடைத்த வாகனத்தில் ஏறி ஊர் ஊராக செல்கிறார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த பல திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ஸ்ருதி நகுல்.
நன்றி: தினமலர்
-
7th November 2016, 11:21 PM
#1534
Moderator
Diamond Hubber
அவுட்டோர்களில் நடக்கும் சீரியல் படப்பிடிப்புகள்!
சினிமா படப்பிடிப்புகளைதான் பெரும்பாலும் அவுட்டோர்களில் முகாமிட்டு நடத்துவார்கள். சீரியல்களைப்பொறுத்தவரை சென்னையை தாண்ட மாட்டார்கள். ஏதேனும் பங்களா டைப் வீட்டிற்குள்ளேயே சுற்றிசுற்றி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், சமீபகாலமாக சீரியல் படப்பிடிப்புகளையும் வெளியூர்களில் நடத்தி வித்தியாசம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், சி.ஜே.பாஸ்கர் இயக்கிய ஆதிரா சீரியலை கேரளாவில் முகாமிட்டு அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கினர்.
அதையடுத்து மேலும் சில சீரியல் படப்பிடிப்புகளும் அவுட்டோர்களில் நடந்து வந்த நிலையில், தற்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பும் அவுட்டோர்களில் நடக்கிறது. முருகன் கதை என்பதால் தமிழ கத்தில் உள்ள பிரதான முருகன் கோயில்களில் அதாவது அறுபடை வீடுகள்அனைத்திலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். தற்போது திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பு நடக்கிறது.
அதேபோல், கிருஷ்ணா, வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்து வரும் தெய்வமகள் சீரியலின் படப்பிடிப்பு யூனிட்டும் இம்மாதம் கேரளா செல்கிறது. அதையொட்டி கதையில் விறுவிறுப்பூட்டும் திருத்தங்களை செய்து வேறு சில நடிகர் நடிகைகளையும் கதையில் இணைத்து வருகிறார்கள்.
நன்றி: தினமலர்
-
18th November 2016, 12:55 AM
#1535
Moderator
Diamond Hubber
தொலைக்காட்சி சீரியல் என்றாலே மாமியார் மருமகள் சண்டை மட்டும் தான் என்ற காலம் மாறி விட்டது.
சினிமாவை பிடித்த பேய் தற்போது சீரியல்களை பிடிக்க தொடங்கிவிட்டது. தொடர்ந்து எந்த தொலைக்காட்சியை ஓபன் செய்தாலும் பாம்பு, பேய் என சீரியல்கள் வரத்தொடங்கிவிட்டது.
ஜீதமிழ் தொலைக்காட்சியில் நாகராணி என்ற ஹிந்தி சீரியலை டப் செய்ய அதே கதையம்சம் உள்ள நாகினி என்ற சீரியலை சன்டிவி ஒளிபரப்ப தொடங்கியது.
இதன் வரவேற்பை பார்த்த விஜய் டிவியும் தன் பங்குக்கு தற்போது மாய மோகினி என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்ப உள்ளனர்.
-
18th November 2016, 12:56 AM
#1536
Moderator
Diamond Hubber
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல் 400வது எபிசோடை எட்டியுள்ளது.
இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் ஏகோபித்த வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல், புதிய திருப்பங்களை நோக்கி பயணிக்க உள்ளதாக கூறுகின்றனர் சீரியல் குழுவினர். நாட்டாமை குடும்பத்து மருமகள்கள் லட்சுமியும். தேன்மொழியும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சுமிக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.
தேன்மொழியை சிசேரியன் அறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அனைவரும் தேன்மொழிக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிவேல் தனது மனைவி லட்சுமியின் முகத்தையோ குழந்தையின் முகத்தையோ பார்க்க வரவில்லை.
அதேபோல சக்திவேலும் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த இரண்டு பேருக்கும் என்னவாயிற்று? ஏன் குழந்தைகளை பார்ப்பதை தவிர்க்கின்றனர் என்ற கேள்வி சீரியலை பார்க்கும் நேயர்களுக்கு எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தருமாம் லட்சுமி வந்தாச்சு சீரியல்.
-
18th November 2016, 12:59 AM
#1537
Moderator
Diamond Hubber
’அட..அட…என்ன ஒரு தங்கமான பொண்ணு. இப்படி ஒரு மருமகள் கிடைக்காதா?’ என்று மகன்களைப் பெற்ற அம்மாக்களை ஆசையாய் பார்க்க வைத்திருக்கும் சின்னத்திரை மருமகள்தான் ‘பிரியமானவள்’ தொடரின் கவிதா…இல்லையில்லை நிரஞ்சனி. அவருடன் ஜாலியாக ஒரு காபி டைம் டாக் அடித்தோம்…
உங்களைப்பற்றி…
“என் சீரியல் பேர்தான் நிறைய பேருக்கு ஞாபகத்தில் இருக்கும். ஆனா, என்னோட பேர் நிரஞ்சனி அசோக். பெற்றோரோட சொந்த ஊர் திண்டுக்கல். அவங்க செட்டில் ஆனது சென்னை. அதனால, டிபிக்கல் சென்னை பொண்ணு நான்.”
ஸ்கூல், காலேஜ் படிப்பு…
புதுயுகம் தொலைக்காட்சியில் ‘கல்லூரி பறவைகள்’ என்ற புத்தம் புதிய இளமை தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான நட்பு, நேசம், கலகலப்பு, காதல், மோதல், பிரிவு, போராட்டங்களை இளமை துள்ளலுடன் விவரிக்கிறது புத்தம்புதிய மெகா தொடரான கல்லூரி பறவைகள்.
கல்லூரி என்பது பறவைகள் சங்கமிக்கும் சரணாலயம் போன்றது. எங்கோ பிறந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். வானத்தை தாண்டியும் பறக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி காலம்தான் வசந்தகாலம்.
பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவள் நந்தினி. அந்த விபத்தில் பேச்சை இழந்துவிட்ட தம்பியை குணப்படுத்துவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வருகிறாள்.
மும்பையில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில், ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் வாய்ப்பு நந்தினிக்கு தற்செயலாக கிடைக்கிறது. அந்தக் கல்லூரியின் நிர்வாகியின் மகனான மாணிக்கும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
யாராலும் தட்டிக்கேட்க முடியாத பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கண்டு அத்தனை மாணவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த அராஜக மாணவர் குழுவின் தலைவன் மாணிக்குடன் நந்தினிக்கு மோதல் உண்டாகிறது.
யாரும் எதிர்பாராதவகையில் மாணிக்கை அடித்துவிடுகிறாள் நந்தினி. அதனால் நந்தினியை பழிவாங்கவும், கல்லூரியில் இருந்து வெளியேற்றவும் மாணிக் துடிக்கிறான். அவன் கோபத்தை நந்தினி தாக்குப்பிடித்து கல்லூரியில் நீடிக்க முடியுமா என்பதை, கல்லூரி பறவைகள் தொடரில் கண்டுகளியுங்கள்.
இந்தத் தொடரின் நாயகி நந்தினியாக பிரபல நடிகை நிட்டி டெய்லர், நாயகனாக பார்த் சம்தானும் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர வீபா ஆனந்த், அஜஸ் அகமது, சார்லி சவுகான், கரன் ஜோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மற்றும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை மறுநாள் பகல் 1.30 மணிக்கும், வாராந்திர தொகுப்பை வாரத்தின் இறுதியிலும் ஒளிபரப்பாகிறது.
Last edited by aanaa; 30th November 2016 at 08:31 PM.
"அன்பே சிவம்.”
-
18th November 2016, 01:54 AM
#1538
Moderator
Diamond Hubber
சென்னை: ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான டிவி சீரியல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன. பொம்மலாட்டம், பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்கள் முடிந்து விட்டன. இப்போது சன்டிவியில் யமுனா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சன்டிவி சீரியலில் நடிக்கிறார் பானுப்பிரியா. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுரேஷ். இவர்கள் இருவருமே எண்பதுகளில் சினிமாவில் நாயகி, நாயகனாக கலக்கியவர்கள்.
இப்போது சுரேஷ் பானுப்பிரியா இருவரும் சன்டிவியில் ரசிகர்களை கண்ணீர் விட யமுனா சீரியல் மூலம் களமிறங்கியுள்ளனர்
ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த பானுப்பிரியா எண்பதுகளில் மெல்லப் பேசுங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் பிரபலமாக காரணம் இவரது நடிப்பும் நடனமும்தான். கண்களால் பேசிய பானுப்பிரியாவிற்கு ஐ டெக்ஸ் விளம்பர வாய்ப்பு வந்தது. சின்னத்திரையில் தூர்தர்சனில் விஸ்வாமித்ரா சீரியலில் நடித்தார். தொடர்ந்து பெண், சக்தி, வாழ்க்கை, பொறந்த வீடா புகுந்த வீடா, விஜய் டிவியில் ஆஹா என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பானுப்பிரியா. சென்னை திரும்பிய பானுப்பிரியா மீண்டும் பல சீரியல்களிலும், சினிமாவிலும் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ஐம்பது வயதாகும் பானுப்பிரியா, மீண்டும் சன் டிவியில் யமுனா சீரியல் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார். இவருக்கு ஜோடி சுரேஷ். விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ருசி பார்த்து மதிப்பெண் போட்டு வந்தார் சுரேஷ். மொட்டையடித்து வில்லனாக தோன்றிய சுரேஷ் இப்போது சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.
-
30th November 2016, 08:28 PM
#1539
Moderator
Diamond Hubber
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையட்டி அவரது வரலாற்று நிகழ்ச்சியை ராஜ் டி.வி. ஒளிபரப்புகிறது. ராஜ் டி.வியில் தினமும் காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியில் அந்த நாள் ஞாபகம் பகுதியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறார். திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன்.
எம்.ஜி.ஆரின் குழந்தை பருவம் முதல் அவர் முதல்வரானது வரையிலான தகவல்கள் இதில் இடம்பெறுகிறது. அவரது வரலாறு தொடர்பான புகைப்படங்கள், சினிமா காட்சிகள், அரசியல் மேடை பேச்சுகள் போன்றவையும் ஒளிபரப்பாகிறது. சினிமா, அரசியல் இரண்டிலும் அவர் சந்தித்த சோதனைகள் சாதித்த சாதனைகள் அனைத்தும் இடம் பெறுகிறது.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:30 PM
#1540
Moderator
Diamond Hubber
சீரியலில் இணைந்த சுரேஷ் - பானுப்ரியா
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இளம் ஹீரோவாக அறிமுகமானார் சுரேஷ். அன்றைக்கிருந்த அழகான இளம் ஹீரோக்களில் முக்கியமானவர். ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தார். 100 படங்களுக்குமேல் நடித்த சுரேஷ் ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அசல், வல்லக்கோட்டை, ஆடுபுலி, தலைவா என தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்தார். சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் அடுத்தகட்டமாக இப்போது சீரியில் நடிகராகிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் யமுனா என்ற சீரியலின் நாயகன் இவர்தான். இவருக்கு ஜோடியாக பானுப்பிரியா நடிக்கிறார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த பானுப்ரியாவும் மீண்டும் வருகிறார். இருவரும் 80களில் கலக்கிய ஹீரோ, ஹீரோயின்கள். 50 வயதை கடந்தவர்கள்.
நன்றி: தினமலர்
Last edited by aanaa; 30th November 2016 at 08:36 PM.
"அன்பே சிவம்.”
Bookmarks