Page 331 of 400 FirstFirst ... 231281321329330331332333341381 ... LastLast
Results 3,301 to 3,310 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3301
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

    நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

    நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

    நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
    கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.


    அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.



    இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.


    முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

    அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.


    இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.



    கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.



    இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

    மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

    க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

    கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.


    நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.


    சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.


    படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

    முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

    நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.
    அருமை.நானும் நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசித்து பார்த்தேன்.கரிகாலன் இறப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ரசிகர்கள் நெஞ்சில் உள்ளதை கண்ணாடி போல காட்டியிருக்கீர்கள். படித்ததும் மனசு கனமாக இருந்தாலும் அதையும் மீறி அவரது நடிப்பு மற்றும் தொழில்நுட்ப திறமை பற்றி நீங்கள் பதிவிட்டது ரசிக்கும்படி மனசுக்கு நிறைவாய் இருந்து. எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் தம்பி. நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3302
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

    நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.

    நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.

    நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
    கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.


    அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.



    இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.


    முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

    அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.


    இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.



    கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.



    இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.

    மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!

    க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.

    கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.


    நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.


    சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.


    படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.

    முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.

    நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.
    அருமை - நன்றி திரு சுந்திரபாண்டியன்

  4. #3303
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படத்தில் அவருடைய இரட்டை வேட நடிப்பின் தாக்கத்தை பற்றி விரிவாக அலசி கட்டுரை வடித்த முகநூல் திரு வைத்தியநாதன் மற்றும் அதை திரியில் பதிவிட்ட நண்பர் திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  5. #3304
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் சில பட தலைப்புகளும் நிஜ வாழக்கையில் உண்மையான வரலாறும் ..

    மதுரை வீரன் - 1956

    மதுரை நகர் வரலாற்றில் இடம் பெற்ற இதிகாச காவியம் .எம்ஜிஆர் இந்த படத்தில் நடித்ததால் மதுரைவீரன் எம்ஜிஆர் என்ற புகழ் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் பாராட்டப்பட்டார் .குறிப்பாக மதுரை நகரம் மற்றும் அதன் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 1956ல் தோன்றினார்கள் . பின் நாளில் மதுரை மா நகரம் எம்ஜிஆர் சினிமா மற்றும் அரசியல் நிரந்தர கோட்டை யாக மாறி இன்னமும் 2016 லும் 60 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருப்பது மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் . பெருமை கொள்வோம் .

    நாடோடி மன்னன் - 1958

    மீண்டும் மதுரை மண்ணில் மக்கள் திலகத்தின் வெற்றி ஊர்வல பவனி .

    மன்னாதி மன்னன் -1960

    திரை உலகில் எம்ஜிஆரின் சாதனைகளை முன்னிட்டு தென்னிந்திய திரை உலகம் வாழ்த்திய தலைப்பு . மன்னாதி மன்னன் எம்ஜிஆர் .

    திருடாதே - 1961

    மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த இப் படத்தை பார்த்து விட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட பலரும் மனம் மாறி தங்களை மாற்றி கொண்டு திருட்டு தொழிலில் ஈடு பட மாட்டோம் என்று மாறியதன் மூலம் எம்ஜிஆர் படம் எத்தகைய உணர்வுகளை மக்களிடம் சென்று உள்ளது என்பதை அறிய முடிகிறது .

    பணத்தோட்டம் - 1963

    53 ஆண்டுகள் முன்னரே மக்கள் திலகத்தின் பணத்தோட்டம் படத்தில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு இரண்டையும் மையப்படுத்தி எடுத்த படம் இன்று 2016ல் நடக்கும் அரசியலில் பிரதி பலிக்கிறது .

    தொடரும் .....
    Last edited by esvee; 1st December 2016 at 09:15 PM.

  6. #3305
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை முதல்
    கோவை ராயல் திரையரங்கில்
    மக்கள் திலகத்தின்
    பல்லாண்டு வாழ்க
    திரைக்காவியம்.

  7. #3306
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்களின் ரசனையை உணர்ந்து அவர்களுக்கேற்ற படங்களை தந்து மக்கள் இதயங்களில் குடியேறியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    மக்களை கண்ணீரில் ஆழ்த்தவில்லை .
    கனத்த இதயத்துடன் வீட்டு க்கு அனுப்பவில்லை
    கவலையோடு அரங்கத்திற்கு உள்ளே சென்ற மக்கள் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்கள் .
    மூன்று மணி நேரம் மக்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் விருந்து
    எம்ஜிஆர் படத்தை பார்க்கும் மக்கள் அவரை மட்டும்தான் பார்த்து ரசித்தார்கள்

    எம்ஜிஆரின் கொள்ளை அழகு - புன்னகை -வீரம் -இதைத்தான் மக்கள் ரசித்தார்கள்
    அன்றும் ரசித்தார்கள் ...இன்றும் ரசிக்கிறார்கள் - நாளையும் ரசிப்பார்கள்
    பல தலை முறைகள் மாறினாலும் மக்கள் உள்ளங்களில் எம்ஜிஆர் என்றென்றும் வாழ்கிறார் .

  8. #3307
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே, நீரும் நெருப்பும் திரைப்படத்தில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் அபார நடிப்பை அற்புதமாக விமர்சித்து ,முகநூலில் பதிவிட்ட நண்பர் திரு.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் ,அதனை மக்கள் திலகம்
    திரியில் பதிவு செய்ததோடு , பல்வேறு கோணங்களிலும், உணர்ச்சி பொங்கும்
    தோற்றங்களிலும் புரட்சி தலைவரின் ஸ்டைல்களையும் பதிவிட்ட தங்களை
    மனதார பாராட்டுகிறேன் .நன்றி.


    ஆர். லோகநாதன்.
    இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

  9. #3308
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முகநூல் பக்கம். நன்றி.



    புரட்சித் தலைவருடன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்


    மக்கள் திலகமும் இயக்குனர் திலகமும் ஓரு விழாவில் சந்தித்தப் போது எடுத்த படம். மக்கள் திலகம் மறைந்து 27 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றளவும் அவர் மக்கள் மனதில் நிறைந்திருப்பதற்கு காரணம் அவர்தம் திரையுலக நட்சத்திர அந்தஸ்தோ, கட்சித் தலைவர் என்ற புகழோ,தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் என்ற தகுதியோ மட்டும் அல்ல இதையெல்லாம் தாண்டிய அவரின் அற்புதமான மனிதநேயம் என்ற பண்பு!

    அவரின் இந்த அரிய பண்பை என்னால் சமீபத்தில் உணர முடிந்தது....... சில வருடங்களுக்கு முன்பு என் மகள் தன் பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றாள். அந்த பரிசைப் பெறுவதற்காக முன்னாள் சத்யா ஸ்டுடியோவாக இருந்த இன்றைய ஜானகியம்மாள் மகளிர் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆரின் பல படங்கள் தயாரிக்கப் பட்டன. சுமார் 4 மணியளவில் நாங்கள் அங்கே சென்று அமர்ந்திருந்தோம். நான் பல வேலைகளுக்கு இடையே அங்கே வந்ததால் மதிய உணவு அருந்தவில்லை.

    அப்போது விழா நிர்வாகி பரிசு வாங்க வந்திருக்கும் குழந்தைகள் அனைவரையும் மாலை உணவு அருந்த அழைத்தார். நான் என் மகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சாப்பிடும் இடத்திற்கு சென்றேன். அந்த இடம் சத்யா ஸ்டுடியோ மேக்கப் ரூம்கள் இருந்த இடம். அந்த ரூம்கள் கல்லூரி ஆப்பீஸ்களாக பயன்படுத்தப் படுகின்றன். அங்கே எம்.ஜி.ஆரின் உருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடம். அவரைக் காண வரும் எவரையும் அவர் சாப்பிடாமல் அனுப்பியதில்லை. என் மகளை அந்த இடத்திற்கு சாப்பிட அனுப்பி வைத்து விட்டு வெளியேக் காத்திருந்தேன் நான் மதியம் சாப்பிடாததால் பசி வாட்டி எடுத்தது. என் மகள் சாப்பிட்டு வருவதற்குள் நான் வெளியே சென்று எதாவது சாப்பிட்டு வரலாம் என என் டிரைவரை அழைத்தேன்.

    டிரைவர் வந்தவுடன் கிளம்ப முற்பட்ட போது யாரோ என் தோளில் கை வைப்பதுப் போல் இருந்தது. திரும்பி பார்த்தால் விழா நிர்வாகி! எங்கே சார் போகிறீர்கள்? சாப்பிட வாங்க எல்லோரும் சாப்பிட தான் அழைத்தோம் குழந்தைகளை மட்டுமல்ல! என்று என் டிரைவரையும் கூட அழைத்து போனார். அருஞ்சுவை மாலைச் சிற்றுண்டி கடும் பசி தீர வயிராற சாப்பிட்டு கை கழுவிக் கொண்டே மேலே உற்று நோக்கினேன் அங்கே எம்.ஜி.ஆரின் உருவப் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்! நான் கண்கலங்கினேன்!


    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முகநூல் பக்கம்.

  10. #3309
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம்.

    இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.


    முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
    மிகவும் நல்ல பதிவு. நன்றி சகோதரா. இதில் சொல்லியிருப்பது போல வேறு எந்தப் படத்திலும் புரட்சித் தலைவரின் இப்படிப்பட்ட வெறியான ஆக்ரோசமான முக பாவனையை பார்த்தது இல்லை. அதிலும் இந்த பாவனையை புரட்சித் தலைவர் ஏன் காட்டியிருக்கிறார். யோசித்தால் புரியும்.

    வழக்கமாக எதிரிகளை சுலபமாக லேசான சிரிப்புடன் புரட்சித்தலைவர் சந்திப்பார். நல்லவன் பாத்திரமாக அது இருக்கும். எதிரிகளை நம்பிக்கையோடு சமாளிக்கலாமே தவிர வன்முறையோ அவங்களை அழிப்பதோ நோக்கம் இல்லை.

    ஆனால் கரிகாலன் பாத்திரம் வில்லன் பாத்திரம். கூடப் பிறந்தவனையே அழிக்க நினைக்கும் பாத்திரம். அந்த வெறியை அந்த வில்லன் பாத்திரத்துக்காக முகத்தில் காட்டியிருக்கிறார். கதாநாயகனாக நல்லவன் வேடத்தில் வரும்போது அழிக்கும் எண்ணம் இல்லாததால் அந்த வெறியை வேறு எந்தப் படத்திலும் புரட்சித் தலைவர் காட்டியது இல்லை. பாத்திரத்தை உணர்ந்து அதற்கு தகுந்தபடி முக பாவனை காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது ஆச்சரியம்தான் ஏற்படுகிறது.

    வில்லன் பாத்திரம் என்பதற்காக வெறியும் பழிவாங்கலுக்காக புரட்சித் தலைவர் காட்டிய முக பாவனையை இப்போது படங்களில் கதாநாயகனே இப்படி காட்டி நடிக்கிறான். ய்ய்ய்யாஆஆஆ...... என்று வெறியோடு கத்திக் கொண்டே எதிராளியை அரிவாளால் போடுகிறான்.

    ரெமோ என்று ஒரு படம். அடுத்தவனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை கதாநாயகன் மயக்கி தானே கல்யாணம் செய்கிறான். இவன் கதாநாயகனா வில்லனா?

    எல்லாம் தலைகீழ்.

    முன்பெல்லாம் போன் அடித்தால் வெளியே நிற்பவர்கள் வீட்டுக்குள் ஓடுவார்கள். இப்போது போன் அடித்தால் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வருகிறான். சிக்னல் இல்லை.

    முன்பு ஆட்டுரல் அப்பிடியே இருக்கும். குழவி சுத்தும். இப்போது ஆட்டுரல் சுற்றுகிறது. குழவி அப்படியே இருக்கிறது.

    எல்லாம் தலைகீழ்.

    முன்பு கெட்டவன் - வில்லன்
    இப்போது கெட்டவன் - கதாநாயகன்

    புரட்சித் தலைவர் படங்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கடா, படமாடா எடுக்கிறீங்க நா.....
    Last edited by MASTHAAN SAHEB; 3rd December 2016 at 12:38 AM.

  11. #3310
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (02/12/216) முதல் சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
    டிஜிட்டல் "ரிக்ஷாக் காரன் "தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •