-
2nd December 2016, 11:26 PM
#1
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வெளிநாட்டை சேர்ந்த இருவர் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். திரையரங்கின் வாசலில் நடக்கும் இந்த கோலாகலங்களை பார்த்துவிட்டு அங்கேயே நின்ற அவர்கள் அதைப் பற்றி விசாரித்தனர். படத்தைப் பற்றியும் நடிகர் திலகம் பற்றியும் அவர்களிடம் விவரிக்கப்பட்டது. அவர்களை பற்றிய விவரம் கேட்க அவர்கள் இருவரும் ஸ்விசர்லாண்ட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர் முறையே ஸ்டார்க் மற்றும் ம்யுனிக் என்பதும் அவர்கள் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எனபதும் தெரியவந்தது.
வாசலில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை கேட்டவுடன் படம் பார்க்க ஆவல் மிகுந்த அவர்கள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். படம் பார்க்க பார்க்க அப்படியே பிரமித்து போய் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் பரிசு நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட அதுவும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷம் போட்டுக் கொண்டே வருகின்றனர். வெளிநாட்டினர் இருவரும் ரசிகர் எழுப்பும் வாழ்க என்ற கோஷத்தின் அர்த்தம் என கேட்டிருக்கிறார்கள்.அர்த்தம் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. நடிகர் திலகம் தற்போது எங்கே இருக்கின்றார் என்ற வினாவை அவர்கள் எழுப்ப 15 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட ஒன்றும் பேச முடியாமல் நின்று விட்டனராம். அப்போது ரசிகர்கள் மீண்டும் வாழ்க என்று கோஷம் எழுப்ப அவ்விருவரும் அதே உணர்ச்சியோடு ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்க என்று சொல்ல அந்த நேரத்தில் அங்கே இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். மேலும் சில நிமிடங்கள் அவர்கள் செலவிட்டபின் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியிருக்கின்றனர்.
இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd December 2016 11:26 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2016, 11:00 AM
#2
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Murali Srinivas
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். .
இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.
நன்றி முரளி சார்.
நடிகர்திலகம் காலம் கடந்த கலைஞர் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks