-
30th November 2016, 08:41 PM
#1541
Moderator
Diamond Hubber
சிக்கனம் சேமிப்பு செல்வம்
பொதுவாக, வணிக நிகழ்ச்சி என்றாலே அவ்வளவாக ஆர்வம் இருக்காது. ஆனால், அந்த வணிக நிகழ்ச்சியைச் சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லோருக்கும் பிடிக்கும். சாமானியர்களுக்கு எட்டாததாக, விளங்காத பல விஷயங்களை அத்துறை சார்ந்த வல்லுனர்கள் மிக எளிமையாக சுவாரஸ்யமாக விவரித்தால் பிடிக்கும்தானே...?
அப்படியொரு நிகழ்ச்சிதான் புதிய தலைமுறை டிவியில் வரும் "சிக்கனம் சேமிப்பு செல்வம்'. சாதாரண மக்களின் குடும்ப நிதி நிர்வாகத்துக்கு, தேவைகளுக்கு வழிகாட்ட, வலுவூட்ட முயல்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களில் வருவாய் ஈட்டும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதையும், ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகள், அந்தத் தொழிலுக்குப் பயிற்சி கிடைக்கும் இடங்கள், கடன்பெறுவதற்குள்ள நடைமுறைகள் என பலவும் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது இந்நிகழ்ச்சி. டிவி சேனல் எப்படி ஆரம்பிக்கிலாம்னு சொல்லித்தருவாங்களா?
-
30th November 2016 08:41 PM
# ADS
Circuit advertisement
-
30th November 2016, 08:43 PM
#1542
Moderator
Diamond Hubber
தொடர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த திவ்யா!
"மரகத வீணை' என்ற தொடரின் முலம் காயத்ரியாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் திவ்யா. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கவந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்.
இவருக்கு, ராதிகாவின் ராடன் தொலைக்காட்சியின் லண்டன் பிரிவு நிறுவனமான ஐபிசி நிறுவனம் மூலம் லண்டன் சென்று நடிக்க வாய்ப்பு கிடைத்தது. "யாழினி' என்று பெயரிடப்பட்ட அத்தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். இத்தொடர் லண்டன் வாழ் தமிழர்கள் பற்றியதாகும். லண்டனில் ஒளிபரப்பாகும். இத்தொடரில் யாழினி என்ற யுவதியாக திவ்யா நடிக்கிறார்.
இதற்காக லண்டனுக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக்கிறா
-
30th November 2016, 08:46 PM
#1543
Moderator
Diamond Hubber
The fresh and colourful series ‘Sippikkul Muthu’ is airing on Puthuyugam Monday to Friday at 6.30 pm and 8.30 pm.
In this series, Sureka and her family move from her village to the city. Her teenage daughter Jessi who is shy and timid by nature is most anxious about moving to a different place.
Fortunately for Sureka, she meets her childhood friend Simran who is well settled and provides everything right for her daughter Diya. Sureka also wants her daughter to get all the opportunities and develop new talents.
So she gets Jessi admitted in the same school as Diya. In the new school, Jessi finds it hard to fit due to her introvert nature. She is teased and bullied, but learns how to tackle her new classmates including Diya.
When it is revealed that Jessi is an adopted child in the family and that the legal procedures have not been completed, tensions rise within the family.
The Child Welfare Board threatens to take legal action against Sureka and her family. They also say that Jessi will be taken away from them. How will Sureka and her husband handle this situation? Will Jessi come to know that Sureka is not her real mother ?
This very relatable series that portrays the troubles the modern day teenagers go through and how the parents manage in bringing up their children.
It ultimately brings out the love, caring and bond that every family has during times of happiness and sadness. It stars sandeep Baswana, Sangeeta Ghosh, Diana Khan, Bhavika Sharma and Anuj P Sharma among others.
‘Sippikkul Muthu’ will air on Puthuyugam Monday to Friday at 6.30 pm and 8.30 pm with repeat at 12.00 pm the next day.
புதுயுகம் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30மணி மற்றும் இரவு 8.30 மணிக்கும் “சிப்பிக்குள் முத்து” தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் தன் குழந்தைகளின் நலனுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்கின்றனர் சுரேகா குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக நகரத்தில் உள்ள தனது சிறுவயது தோழியான சிம்ரனை சந்திக்கிறாள் சுரேகா.
நகரத்தில் செல்வச்செழிப்போடு வாழும் சிம்ரன் தன் மகள் தியாவை நகரத்தின் பிரபலமான முன்னணி பள்ளியில் படிக்க வைக்கிறாள், சுரேகாவும் தன் மகள் ஜெஸ்ஸியை தியா படிக்கும் பள்ளியில் சேர்த்துவிடுகிறாள்.
ஆனால் கிராமத்திலிருந்து வந்த ஜெஸ்ஸியின் பயந்த சுபாவத்தால் நகரத்து மாணவர்களின் பழக்கவழக்கங்களுடன் ஒத்துபோகாமல் பள்ளியில் பல அவமானங்களை சந்திக்கிறாள் ஜெஸ்ஸி, இதற்கிடையில் ஜெஸ்ஸி சுரேகாவால் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என தெரிய வருகிறது.
சட்டரீதியாக ஜெஸ்ஸியை தத்தெடுக்கவில்லை என குழந்தைகள் நல வாரியத்திலிருந்து சுரேகா குடும்பத்தினர் மீது புகார் வருகிறது.
ஜெஸ்ஸியை தத்தெடுத்ததில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்தார்களா சுரேகா குடும்பத்தினர்?
தன்னை பெற்ற அம்மா சுரேகா இல்லை என்பதை ஜெஸ்ஸி தெரிந்துகொண்டாளா?
ஜெஸ்ஸியின் பயந்த சுபாவத்தை போக்கினாளா சுரேகா என சுவாரஷ்யமாக நகர்கிறது சிப்பிக்குள் முத்து தொடர்.
-
16th December 2016, 08:27 PM
#1544
Moderator
Diamond Hubber
ஜீ தமிழில் புதிய தொடர் டார்லிங் டார்லிங்: 12ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
ஜீ தமிழ் சேனலில் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. டப்பிங் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜீ தமிழ் ஒளிபரப்பும் நேரடி தமிழ் தொடர் இது. இதில் ராம்ஜி, வசந்த்கோபி, சித்ரா, நந்தினி என இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். இவர்களுடன் நளினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
திருமணமான இரு இளம் தம்பதிகளை பற்றிய கதை. ஒரு தம்பதியில் கணவன் வேலைக்குச் செல்வான் மனைவி வீட்டை கவனித்துக் கொள்வார். இன்னொரு தம்பதியில் மனைவி வேலைக்குச் செல்வார், கணவன் வீட்டை கவனித்துக் கொள்வார். இந்த இரு தம்பதிகளுக்குள்ளும் இருக்கும் முரண்பாடுகள், வாழ்க்கை சூழல்கள் ஆகியவற்றை காமெடியா சொல்லும் தொடர். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற திங்கட்கிழமை (12ந் தேதி) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நேயர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
-
16th December 2016, 08:27 PM
#1545
Moderator
Diamond Hubber
சினிமாவில் தொடர்ந்து நடிக்க மகேஸ்வரி விருப்பம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மகேஸ்வரி. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.
"மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சி என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்ட லட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. தொகுப்பாளினி வேலை என்பது கேமரா முன்னால் நின்று ஸ்கிரிப்டை படித்துவிட்டுப்போவது என்று எளிதாக நினைக்கிறார்கள். இப்போது அப்படியில்லை. தங்களிடம் உள்ள தனித் திறமையை வெளிப்படுத்தினால் தான் அந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடியும். ஸ்கிரிப்ட்டையும் தொகுப்பாளினிகள் தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெங்கட்பிரபு சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து ஓகே சார் என்றேன். அதை மனதில் வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். சினிமாவில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் மகேஸ்வரி.
நன்றி: தினமலர்
-
16th December 2016, 08:33 PM
#1546
Moderator
Diamond Hubber
4 மொழிகளில் சீரியல் தயாரிக்கும் குஷ்பு!
மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நந்தினி என்றொரு மெகா தொடரை தயாரித்து வருகிறார் குஷ்பு. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடரை, தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள்
அது மட்டுமின்றி சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. அதனால் குஷ்புவும் தனது நந்தினி தொடரை இந்தி தொடர்களுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்தி சீரியல்களுக்கு இணையாக தமிழ் சீரியல்களை பிரமாண்டமாக தயாரிக்க யாரும் முயற்சிக்காத நிலையில், முதன்முறையாக குஷ்பு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்
நன்றி: தினமலர்
-
16th December 2016, 08:35 PM
#1547
Moderator
Diamond Hubber
விஜய் டி.வியில் புதிய திகில் தொடர் நீலி
விஜய் தொலைக்காட்சியில் நீலி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்பான கணவன், அழகான மனைவி, ஆசைக்கு ஒரு மகள் என அழகாக செல்லும் ஒரு குடும்பம். ஒரு நாள், மனைவி ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அப்பா வேலையே பிசியாக இருக்கிறார். தனித்துவிடப்பட்ட மகளுக்கு துணையாக இருப்பது நீலி என்கிற பொம்மை. அந்த பொம்மைக்குள் புகுந்து கொள்கிறது குழந்தையின் அம்மா ஆவி. அந்த பொம்மைக்குள் இருந்து கொண்டே குழந்தையை கவனித்துக் கொள்வதோடு. தன் சாவில் உள்ள மர்மங்களையும் குழந்தையை கொண்டே வெளிப்படுத்துகிற மாதிரியான திகில் கதை.
தாய்க்கும் மகளுக்குமான ஆழமான அன்புதான் கதையின் பிரதானம். வருகிற டிசம்பர் 12ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
3rd January 2017, 02:27 AM
#1548
Moderator
Diamond Hubber
கங்கா -
SUN TV : 02-01-2017
Last edited by aanaa; 3rd January 2017 at 02:34 AM.
"அன்பே சிவம்.”
-
4th January 2017, 03:03 AM
#1549
Moderator
Diamond Hubber
நீலி சீரியலில் சாமியாக நடிக்கும் ஜீவிதா!
பாசமலர் உள்பட பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்யும் சாமி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் சாமியின் அருள் பெற்ற கதாபாத்திரம் இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். சாமி எனக்குள் வந்து நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் வேடம். இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக நடித்த எனக்கு இந்த நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது புதுமையாக உள்ளது. அதனால் இந்த வேடத்தை உணர்ந்து இயல்பாக நடித்து வருகிறேன் என்று கூறும் ஜீவிதா, பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து வரும் ஆருத்ரா என்ற படத்திலும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:11 AM
#1550
Moderator
Diamond Hubber
செட்டுக்கு வெளியே படமாகும் ராமானுஜர் தொடர்!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராமானுஜர். இதற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதுகிறார். பெரும்பாலும், சரித்திர தொடர்கள் என்றாலே செட்டுக்குள்தான் படமாக்குவார்கள். ஆனால் இந்த தொடரை செட்டுக்கு வெளியே படமாக்கி வருகிறார்கள். அதற்காக சென்னை மட்டுமின்றி பல வெளி யூர்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ராமானுஜர் தொடரின் படப்பிடிப்பை காரைக்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள பழைய காலத்து செட்டியார்களின் வீடு களில் நடத்தி வருகிறார்கள். 80 சதவிகிதம் வெளியூர்களில்தான் நடக்கிறது. அதுமட்டுமின்றி சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, படப்பை பாரஸ்ட் ஆகிய ஏரியாக்களிலும் அவ்வப்போது படப்பிடிப்பு நடக்கிறது. இந்த தொடரின் கதை வசனகர்த்தாவான கலைஞர் கருணாநிதி, செட்டுக்கு வெளியே இந்த மாதிரியான லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளாராம்.
நன்றி: தினமலர்
Bookmarks