-
29th December 2016, 06:43 PM
#3561
Junior Member
Platinum Hubber
திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தரைமேல் பிறக்க வைத்தான்
எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்
என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
ஒன்றே எங்கள் குலமென்போம்
என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
திருடாதே பாப்பா திருடாதே..
வறுமை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
-என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.
courtesy - vallamai
-
29th December 2016 06:43 PM
# ADS
Circuit advertisement
-
29th December 2016, 06:45 PM
#3562
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.
1967 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் உழைப்பு திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் இரட்டை இலை சின்னம் மூலம் நான்கு முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 39 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.
courtesy - vallamai
-
29th December 2016, 06:48 PM
#3563
Junior Member
Platinum Hubber
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
சக்தி சக்திதாசன்
-
29th December 2016, 06:52 PM
#3564
Junior Member
Platinum Hubber
மக்களின் பாட்டாளி
மக்களின் கூட்டாளி
மகத்துவம் நிறைந்த சோக்காளி
மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
மாறாத மனம் கொண்ட அறிவாளி
கண்ணியம் தவறாத மாமனிதன் mgr
கடமையிலே மகாமனிதன்!
பூப் போன்ற மனசு
புதையல் போன்ற உள்ளம்
புன்னகை மாறாத முகம்
ஏழைகளின் குடிசைக்கு விளக்கு ஒளி
ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
கை விலங்கு!
ஆட்சியில் கிடைத்த காட்சி
அழிக்க முடியாத ராச்சியம்
கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
உடையாக உடுத்திய கொடை வள்ளல்
உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
மீட்டார்!
வறுமையின் பிடியில் வாடிய
மழலைகளுக்கு
மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
வெறுத்துத்
தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
அர்ப்பணித்தார்!
கொள்ளை அடித்தார் சொல்லாமலே
பலஉள்ளங்களின் அன்பை!
ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
அனைவரும் மனிதரே என உரைத்தார்!
இறந்தும் இறவா வரம் பெற்றார்
கோடான கோடி மக்கள் மனதிலே
ஒரு நிலையான இடம் பிடித்தார்!
கொடை வள்ளலாக
இதயக்கனியாக
மக்கள் நண்பனாகப்
புரட்சித் தலைவனாக
ஒளி விளக்காக
வாழ்ந்து மறைந்தார்!
மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
நூலகத்திலே முதல் இடத்தையே
அடைந்தார்!
கலை உலகில் பல சாதனை படைத்து
ஆட்சியில் அதையே நிஜமாக்கி விட்டார்
நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
வண்ணம்!
அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
மாறாமல்
பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
கோயிலாக
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
எங்கள்
இதயக் கனி மக்கள் திலகம்!
courtesy - vallamai
-
29th December 2016, 06:57 PM
#3565
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆரா ... அவருக்கு நடிப்பே வராது
எம்ஜிஆர் படமா ....நல்லா இருக்காது
என்று கிண்டல் கேலி செய்த புண்ணியவான்கள்
இன்று
எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம்
எம்ஜிஆர் படங்கள் - மிகவும் அருமை
பாராட்டை அள்ளி குவிக்கிறார்கள் . காலம் கடந்து உண்மையை உணர்ந்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி .
-
29th December 2016, 06:59 PM
#3566
Junior Member
Platinum Hubber
தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று கேள்வி கேட்க, சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.
மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா? என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.
courtesy - vallamai
-
29th December 2016, 07:29 PM
#3567
Junior Member
Platinum Hubber
அன்பார்ந்த நண்பர்களே,
வர்தா புயலின் சீற்றத்தின் காரணமாக, இணைய தள இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நமது திரியில் பதிவுகள் மேற்கொள்ள
இயலவில்லை. இடைவிடாத தொடர்பின் பலனாக , இன்று மாலைதான் இன்டர்நெட் சேவை இணைப்பு கிடைத்தது .
மீண்டும் திரியில் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தாமதமாக பதிவுகள் இடுவதில்
மிகுந்த வருத்தம். நண்பர்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
-
29th December 2016, 07:50 PM
#3568
Junior Member
Platinum Hubber
16/12/2016 முதல் சென்னை அகஸ்தியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் மற்றும் கலையுலகின் "ஒளி விளக்கு " இணைந்த 3 வது வாரமாக தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) வெற்றி நடை போட்டது .

18/12/2016 அன்று சென்னை காமராஜர் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் முன்னிட்டு , மெழுகு சிலை திறப்பு விழா
வெகு சிறப்பாக நடைபெற்றது . காமராஜர் அரங்கம் நிறைந்து வழியும் நிலையில்
சென்னை அகஸ்தியாவில் ஞாயிறு (18/12/2016) மாலை காட்சி கிட்டத்தட்ட
அரங்கு நிறைந்தது என்று திரைப்படம் பார்த்த நண்பர்கள் தெரிவித்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது .
-
29th December 2016, 07:51 PM
#3569
Junior Member
Platinum Hubber
-
29th December 2016, 07:52 PM
#3570
Junior Member
Platinum Hubber
Bookmarks