-
6th February 2017, 04:30 PM
#7
Junior Member
Diamond Hubber
கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?
**கற்றாழையை துண்டாக வெட்டி அதன் மேற்புறத்* தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவில் தூங்கும் போது தலையில் தேய்த்து கொண்டு காலையில் குளிக்கலாம்.*உடல் சூடு குறைவதால் பொடுகு நீங்கும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் தவிர்க்கவும்.
* கற்றாழையின் ஜெல்லுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து குளித்தால் தலைமுடி பளபளப்பாவதுடன் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.
* எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்* கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* கற்றாழை ஜெல், செம்பருத்திப்பூ, எலுமிச்சைச்சாறு மூன்றையும் சேர்த்து அரைத்து ஊற வைத்துக் குளித்தால் பொடுகு காணாமல் போவதுடன் தலைமுடி கருகருவென வளரும்.
* இந்த மூலிகையை வீட்டில் வளர்க்க இயலாதவர்கள் கடைகளில் கிடைக்கும் ஜெல்லை வாங்கி தேய்த்து குளிக்கலாம்.
எனவே , தலைமுடியை பொடுகு*தொல்லையில் இருந்து பாதுகாக்க இயற்கையில் நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கற்றாழையைப் பயன்படுத்திப் பலன்பெறலாம்.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks