-
5th June 2017, 05:25 PM
#31
Senior Member
Devoted Hubber
நேற்று விஜய் டிவியின் " நீயா நானா " நிகழ்ச்சியில் சிறந்த ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் செய்தனர்,
அதாவது ஒருவரின் பெயருக்கு பின்னாள் ஜாதியை சேர்த்துக் கொள்வது தேவையானது என்று ஒரு குழுவும் அப்படி தேவையில்லை என்று மற்றொரு குழுவும் சுவைபட விவாதித்தனர்,
அப்படி விவாதித்து கொண்டிருந்தவர்களில் மதுரை நண்பர் பேசியது,
" எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை ரொம்ப பிடிக்கும்,
கட்டபொம்மன் என்றால் வீரம், கம்பீரம்...
கட்டபொம்மன் என்றால் அது செவாலியே சிவாஜி கணேசன் என்று மட்டுமே நான் தெரிந்து வைத்து இருக்கிறேன் ஆனால். இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கட்டபொம்மனை அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற ரீதியில் விழா நடத்துவதும் உரிமை கொண்டாடுவதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என கருத்தை முன் வைத்தார்.
நடிகர் திலகம் ஜாதி மதங்களை கடந்து சரித்திரம் ஆனவர் என்பதை இந்த நிகழ்ச்சி இன்றைய சமுதாயத்தை சென்று அடையும் வகையில் நிகழ்ச்சி உணர்த்துகிறது.
இதே நாளில் சன் டிவியின் குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி அவர்கள் கட்டபொம்மன் வசனமான " கிஸ்தி,திரை,வட்டி" என்று ஒரு தம்பதியினருக்கு சொல்லிக் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தியது பார்க்க ரசிக்கும் படி இருந்தது,
அடுத்து ஹலோ எப் எம் வானொலி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிய தி.க வின் தலைவர் திரு கி.வீரமணி அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட ரஜினியின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்
"தமிழ்நாட்டில் திராவிட பின்புலம் இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது, ரஜினியின் பின்புலம் என்ன என்று அவராலே உறுதி படுத்த முடியவில்லை, இங்கு ஏற்கனவே சினிமாவில் இருந்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்று முதல்வராக வந்ததற்கு திராவிட பின்புலம் தான் காரணம்,
நான் பெரிதும் மதித்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் திராவிட பின் புலத்திலேயே இருந்து இருப்பாரானால் தொடர்ந்து அவர் மட்டுமே முதல்வராக இருந்து இருப்பார்"
பின்னூட்டங்கள் சில
.................................................. .................................................. ........................
prasnna venkat கடவுள் மறுப்புக்கொள்கையை எதிர்த்துத்தான் நடிகர்திலகம் திமுகவை விட்டு வெளியேறினார், அப்படியிருக்கும்போது நடிகர்திலகம் திராவிட பாரம்பரியத்தில் இருந்தால் என்ற வார்த்தையே எழவேண்டிய அவசியமேயில்லை, மேலும் திமுகவில் அப்போதிருந்த யாருமே நம் தலைவர் அங்கிருப்பதை விரும்பவில்லை, திருப்பதிக்கு பீம்சிங் அவர்களுடன் சென்றதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தினார்கள், நடிகர்திலகத்தை கட்சியைவிட்டு விலக்கமுடிவெடுத்தபோது அவர் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலிலேயே அவர் பெயரில்லையென்பது தெரியவந்தது, நம்தலைவர் அங்கே எந்த சுயநலமும் இல்லாமல்தான் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என தமிழ்வாணன் அவர்கள் எழுதிய " நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
sekar parasuram சார், அவருடைய கருத்து தொடர்ந்து நடிகர் திலகம் இருந்திருப்பாரெனில் சினிமாவில் இருந்து நடிகர் திலகம் மட்டுமே வந்திருப்பார், வேறு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார்
...............................
jahir hussain இனி இந்த தமிழ்நாடு சிவாஜி யுகம் சூழ இருக்கப் போகிறது,,,, ஒரு வாதத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் திராவிட பின்புலத்திலேயே சிவாஜியின் தாக்கம் இருந்திருந்தால்,,, ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருந்து இருக்காது,,, காமரஜர் ஆட்சியைப்போல் திராவிடர் ஆட்சியும் மெகா புகழ் பெற்றிருக்கும்,,, அதை அன்றே உணர்ந்தவர் ஆனார் அண்ணா,,, உண்மையில் அண்ணா அவர்கள் சிவாஜி தி மு க வில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை,,, ஒரு உரையில் சிவாஜி எம் ஜி ஆர் ஆகிய இரு குறு வாட்கள் இருப்பதும் ஆபத்து,,, ஆனாலும் எங்கிருந்தாலும் வாழ்க .... மாற்றான் தோட்டத்து மணக்கும் மல்லி என்றும் வாழ்த்தி அனுப்பினார்,,, வசைபாடவில்லை,,, சாமராஜருக்கு ஒரு மாணிக்கமாய் வந்து படிக்காத மேதை ரெங்கனாய் நிழலாய் இருந்தார்,,, தலைவனை இழந்தோம்,, தனிமையைில் உழன்றோம்,, இருப்பவற்றில் ஒன்றை செலக்ட் செய்யும் நிலை பெற்றோம்,,, இது வரலாறு,,,
sekar parasuram காமராஜருக்கு ஒரு மானிக்கமாய், ஒரு படிக்காத மேதை ரங்கனாய் நிழலாய் இருந்தார் அருமை சார்,
எதிர் முகாமில் MLC,MLA பதவிகள் வழங்கியதைப் பார்த்து இங்கும் வழங்கப் பட்டிருந்தால் எதிர்கால முடிவுகள் வேறு மாதிரி அமைந்து இருக்கும்,
இந்த விஷயத்தில் கர்மவீரர் மேல் எனக்கெல்லாம் வருத்தம் உண்டு
(From the facebook page of sekar parasuram)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017 05:25 PM
# ADS
Circuit advertisement
-
5th June 2017, 05:27 PM
#32
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 05:28 PM
#33
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 05:28 PM
#34
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 05:31 PM
#35
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2017, 05:35 PM
#36
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 07:31 PM
#37
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 09:28 PM
#38
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 09:36 PM
#39
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th June 2017, 09:36 PM
#40
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks