-
8th June 2017, 05:08 PM
#121
Senior Member
Devoted Hubber
இன்று (08/06/17)
சன் லைப் -- 7 pm-- "கீழ் வானம் சிவக்கும் "
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017 05:08 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2017, 05:11 PM
#122
Senior Member
Devoted Hubber
இன்று (08/06/17)
தொலைக்காட்சி சேனல்கள் தரும் நடிகர் திலகம் வெற்றித் திரைப்படங்கள்,
புதுயுகம் டிவி-- 1:30 pm " விடுதலை "
பாலிமர் டிவி --2 pm-- "ஆனந்தக் கண்ணீர்"
பொதிகை -- 8:30-- " பழனி"
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:14 PM
#123
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:17 PM
#124
Senior Member
Devoted Hubber
தமிழகமெங்கும் வெற்றி நடை போடும் ராஜபார்ட் ரங்கதுரை 25 வது நாள் சென்னை மகாலெட்சுமியில், மதுரை மீனாட்சி பாரடைஸ், தூத்துக்குடி KPS கலையரங்கம், பழனி சாமியில் A/C 4K,. திருவண்ணாமலை VNC , திருவொற்றியூர் ODN மணி A/c, ஆரணி வெற்றி, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியத்தில் வெற்றி நடை போடுகிறது. நாகர்கோவில் வசந்தம் பேலஸில் 50 வது நாளை நோக்கி. மற்றும் அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகளாக மாபெரும்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:21 PM
#125
Senior Member
Devoted Hubber
Trichy Srinivasan
· 5 hrs ·
13. கள்வனின் காதலி : (உலக மகா நாயகனின் 25வது படம், வெற்றிப்படம்)
உலக மகா நாயகன் சிவாஜியின் 25 வது வெற்றிப்படமாக இது 1955ல் வெளிவந்தது. படத்தை இயக்கியவர் நமது வி.எஸ்.ராகவன்.
பி. பானுமதி அவர்கள் கதாநாயகி, பானுமதி வயதில் சிவாஜியை விட மூத்தவர். ஆனால் சிவாஜியின் நல்ல ரசிகர். சிவாஜியுடன் இணைந்து நடிப்பதில் இவருக்கு கொல்லை பிரியம். பானுமதி. சிவாஜி மறைந்த அன்று அன்னை இல்லத்திற்கு வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பானுமதி ஒரு மிக சிறந்த நடிகை, சொந்தக் குரலில் நன்றாக பாடுவா...ர்.
கள்வனின் காதலியில் சிவாஜி மிக, மிக அழகாக இருப்பார். இடை, இடையே சிறிது காலங்களில் சிவாஜி சற்று சதை போட்டு இருந்தாரே தவிற மற்ற நாட்களில் அதாவது பராசக்தி முதல் கல்யாணியின் கணவன் படத்திற்கு முன்பாக வரை உடல் நார்மலாகத்தான் இருந்தார். அதன் பிறகு சில படங்கள் உடல் சற்று பருமானாக வந்தார். மீண்டும் கலாட்டா கல்யாணத்திலிருந்து மெலிந்து கிட்டத்தட்ட கீழ்வானம் சிவக்கும் படத்திற்கு முன்பு வரை உடலை சீராக வைத்திருந்தார். பிறகு சற்று சதை போட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு படத்திற்கு முன்பு வரை பருமனாக இருந்து மீண்டும் இளைத்தார். இதன்பிறகு அவர் இம் மண்ணை விட்டு மறையும் வரை அப்படியே சீராகவே இருந்தார்.
இந்த கள்வனின் காதலி படத்தில் கண்டசாலா பாடலுக்கு சிவாஜி வாய் அசைப்பதை பாருங்கள். சிவாஜி ஒரு மாபெறும் நடிகனாக ஜொலித்ததற்கு இதுவும் ஒரு காரணம், கண்டசாலா பாடுவதற்கு தக்க தனது முக பாவங்கள் , வாய் அசைப்பைக் கூட மாற்றுகிறார், இந்த உலக மகா நாயகன். ஆக, சிவாஜி ஏற்கனவே மாருதி ராவ் (கேமரா மென்) சொன்னதற்கு தக்க க்ளோசப் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் சிவாஜி வந்த பின் தான் வந்தன. காரணம் அவரது முகம் அப்படி நடிக்கும், கேமராவை அவர் முன் வைத்துவிட்டு அவர் நடிக்க ஆரம்பித்தவுடன் , அவர் நடிப்பில் மூழ்கி பலமுறை இயக்குனர் கட் சொல்லியும், நான் கவனிக்காமல் கேமராவை எடுக்காமல் சிவாஜியின் நடிப்பில் முழுகி போயிருக்கிறேன் என்று மெய்சிலிர்த்து கூறியிருக்கிறார் மாருதிராவ் . சூரக்கோட்டைக்கு சென்று நமது சிவாஜியுடன் நமது ரசிகர்கள் போட்டே◌ா எடுக்கும் போதும் பலமுறை நமது சிவாஜி போட்டோ கிராபரை அங்கே இருந்து எடுங்கள், இங்கே இருந்து எடுங்கள், சற்று தள்ளி நின்று எடுங்கள், இப்படி எடுங்கள்,அப்படி எடுங்கள் அப்போதான் போட்டோ நன்றாக வரும் என்பார் என்று என் நண்பர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட மாமேதை நடிப்புச் செல்வம் சிவாஜி அனைத்து விதங்களிலும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை மிஞ்ச ஆள் இல்லை என இன்றுவரை நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்தா மகானுக்கு இவ் உலகம் உள்ள வரை மரணம் என்பது இல்லலே இல்லை. நன்றி
நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:22 PM
#126
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:26 PM
#127
Senior Member
Devoted Hubber
S V Ramani
· 6 June at 09:31 ·
அவர் ஒரு சரித்திரம் - 002
வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்து வீரமரணத்தைப் புன்னகையுடன் தழுவிக் கொண்டவர். இறுதி வரை உறுதி குறையாமல் போரிட்டவர், நண்பர்கள் என்னும் நயவஞ்சகர்ளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மரணத்தை தழுவிய வீரர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் கண்ணால் கண்டதில்லை. அவரை நம் கண்முன்னே நிறுத்தி அவரது வீரத்தை நமக்கு எடுத்துரைத்தவர் நமது நடிகர் திலகம். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். முதல் முதலில் உலக அளவில் பரிசு பெற்ற இந்தியப் படம்.
... முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரையுடன் நடந்த போரில் வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.
அப்போது இருவரிடையே நடக்கும் காரசாரமான உரையாடல் மிகவும் சுவையாக இருக்கும். நடிகர் திலகம் வீரம் கொப்பளிக்க ஜாக்சன் துரையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் காட்சி மிகவும் அருமை. அதில் சிறிது எள்ளலும் இருக்கும்.
ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்படுமுன் அவர் பேசும் வீர வசனங்கள், தூக்குக் கயிற்றை சிறிதும் மனம் கலங்காமல் ஏற்றுக் கொள்ளும் வீரம், இறப்பதற்குமுன் கடைசியாக அளிக்கப் பட்ட வாய்ப்பை துச்சமாக உதறித் தள்ளும் வீரம், இவை அனைத்தையும் மிகவும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருப்பார். இவரது அந்த வசனங்களைக் கேட்கும் ஒவ்வொருக்கும் கண்டிப்பாக நாட்டுப் பற்று அதிகரிக்கும்.
இது போன்று ஒன்றல்ல, பல படங்களில் நாட்டுப் பற்றை வலியிறுத்தி, பல தேசியத் தலைவர்களை நமக்கு காட்டியவர். தேசபக்திக்கு இவரது நடிப்பு ஒரு பாட நூல் என்றால் அது மிகையாகாது.
என்றென்றும் நன்றியுடன் உங்கள் நண்பன், நடிகர் திலகத்தின் தீவிர பக்தன். ஜெய்ஹிந்த்!
(எனது கைவண்ணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நமது நடிகர்திலகம்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:28 PM
#128
Senior Member
Devoted Hubber
S V Ramani
· Yesterday at 08:54 ·
அவர் ஒரு சரித்திரம் 003
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன்... செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா" என்ற பாடல் உங்களுக்காக.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 05:29 PM
#129
Senior Member
Devoted Hubber
S V Ramani
· 3 hrs ·
அவர் ஒரு சரித்திரம் - 004
இன்றைய தொடரில் கௌரவத்தின் தொடர்ச்சி. எழுதுபவர் உங்களுக்காக நமது நடிகர்திலகமே! வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு!. ஆம் கௌரவம் படத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ.
"I AM BARRISTER RAJINIKANTH!...
... எடுத்த வழக்குகள் அத்தைனையுமே வெற்றி!. இறுமாந்தேன. நீதிதான் எனது உயிர். இப்படித்தான் கடமையாற்றினேன்.
விளைவு? ஏமாற்றம். எனக்கு கிடைக்க வேண்டியகௌரவமிக்க நீதிபதி பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் சக வக்கீல் சகோதரர்கள்.!
என்னுடைய வாதத் திறமையில் இருந்த நம்பிக்கையை வைத்து சதுரங்கமாடினேன். பல வழக்குகளில் நீதியை தூக்கி எறிந்து விட்டு வெற்றி ஒன்றியே லட்சியமாக கொண்டேன்.
என்னுடைய வாத திறமையினால் சட்டமே கதவுகளை திறந்து விட்டது.
வாத திறமையின் ஜ்வாலையை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே போன நீதி தேவதையை அழைத்து வந்தான் எனது அண்ணன் மகனான நான் வளர்த்த கண்ணன்.
"நீதிக்கே துணிந்து நின்றேன்
நினைத்த்தெல்லாம் ஜெயித்து வந்தேன் .
வேதனைக்கு ஒரு மகனை
வீட்டினிலே வளர்த்து வந்தேன் "
சமூகம் அதைத் தெரிந்து கொண்டபோது ரஜினிகாந்த் உயிரோடு இல்லை. இதுதான் கெளரவம். இதில் நான் தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்.
இதன் ஆசிரியரான வியட்நாம் வீடு சுந்தரம் ஆர்வத்தோடு பணியாற்றும் இளைஞர். அவரது வெற்றியை நான் பூரிப்போடு வரவேற்கிறேன். கெளரவம் படத்தில் என் உழைப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறேன். அதன் வெற்றியை காண ஆவலோடு காத்திருக்கிறேன்."
திரைவானம் : நவம்பர் 1973 இதழில் கெளரவம் படத்தின் வெளியீட்டைப் பற்றி சிவாஜி கணேசனின் பேட்டி. (EDITED)
ஜெய் ஹிந்த்!
நமது நடிகர் திலகம் பிரிட்டிஷ் அரசராகவும் இளவரசராகவும் தோன்றும் காட்சி.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th June 2017, 09:12 PM
#130
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks