-
11th June 2017, 05:32 PM
#1
Junior Member
Devoted Hubber
எண்பதுகளில் பிரபு உட்பட பலரை தூக்கி நிறுத்திய படமான அறுவடை நாளின் ஒரு காவியம், நிச்சயம் ஒரு காவியமே.. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வகை தொகை இல்லாமல் வழங்கி இருப்பார் ராஜா சார். கணீரென்று அவர் ஹிந்துஸ்தானி சாயலில் ஒரு காவியம் பாடுவதை கேட்க மனசு வலிக்கும். அறுவடை நாள் படம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம், எனக்கு மிகவும் பிடித்த RP விஸ்வத்தை தமிழ் சினிமா இழந்துவிட்டதை நினைவு கொள்வேன். இருந்திருந்தால் விஸ்வத்துடன் GM குமாரும், லிவிங்ஸ்டனும் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்கள்.
இதே காலகட்டத்தில் வந்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் கூட இந்த ஹிந்துஸ்தானி வடிவில் கண்ணா வருவாயா பாடலை அமைத்திருப்பார். இரண்டும் ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்ததா என்று தெரியவில்லை, ஆனால் இதில் எதை நான் கேட்டாலும் மற்றொன்று நினைவில் வரும். ஒரு காவியம் பாடல் சோகம் என்றால், கண்ணா வருவாயா வேறு வகை. கதைப்படி நாயகியின் குடும்பம் தரித்திரம் நிரம்பியது. என்ன சொல்லி பாலச்சந்தர் ராஜா சாரிடம் பாடல் வாங்கினார் என்று தெரியவில்லை, கண்ணா வருவாயா அவ்வளவு ரிச். மீராவும் கண்ணனும் பாடுவது போல் அமைந்த இந்த பாடலில், உதய்பூரின் தாஜ் லேக் அரண்மனையில் பிரமாதமாக படமாக்கிருப்பார்கள். ராயல் ரகம். ஒவ்வொரு நொடியிலும் ராஜா சார் இந்த பாடலை படைக்கும் நேரத்தில் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்றே எனக்கு தோணும்.
வெங்கிராமுக்கு என் மரியாதையை தெரியபடுத்தவும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2017 05:32 PM
# ADS
Circuit advertisement
-
12th June 2017, 09:55 PM
#2
Junior Member
Devoted Hubber
தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து தனக்கு வேண்டுவதை ராஜா சாரிடம் கேட்டு வாங்கி கொள்ளும் வித்தை தெரிந்தவர் அவர்.
சரி, பாடலுக்கு வருவோம்.
தங்கச்சங்கிலி பாடல் ஒரு கம்பீரமான கீரவாணி டூயட். அசோக் குமார், ராஜா சார் , வைரமுத்து மூவரும் இனைந்து பாக்கியராஜ், சுலக்ஷனாவுக்கு இந்த பாடல் மூலம் சொர்கத்தை காட்டி இருக்கிறார்கள், நமக்கும் தான்.
வார்த்தை பிரயோகமும் , வாத்திய அணிவகுப்பும் நொடிக்கு நொடி அசர வைக்கும். பல்லவி சரணமெல்லாம் தெய்வீகம், அது பற்றி நான் பிதற்றுவதை விட. இந்த பாடலின் மூண்டு முக்கிய 30 நொடிகள் பற்றி பேசியே தீரணும்..
பயந்த சுபாவம் உள்ள அந்த பெண், மாப்பிள்ளையின் பொய்யான மிரட்டலுக்காக பயந்து, தயங்கி தயங்கி வருகிறாள். சின்ன வயசு வேறு..சில பல உரசலுக்கு பிறகு அட்ரீனலின் ரஷ் (adrenaline rush) விறு விறுவென எட்டி பார்க்கிறது..பாடலும் தொடங்குறது..
ஆரம்பமே ஜானகியின் குரல் ஏதோ பனிப்பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பூத்த ரோஜா போல் பிரெஷாக ஜொலிக்கிறது இல்லியா? அதை தொடர்ந்து வரும் அந்த மியூசிக்ல் ஸ்பிளாஷ் 30 நொடிகள் உயிரை கொள்ளை கொள்ளும் ... பிறகு முதல் மற்றும் இரண்டாம் இடை இசையும் அப்படியே.. முப்பது முப்பது நொடிகள் இரண்டும். அட்ரீனலின் ரஷ் பீச்சி அடிப்பதை இசையால் சொல்லி இருப்பார் ராஜா சார்.. இரண்டாவது இடை இசையில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும். நமக்கு நரம்புகள் புடைக்கும்.
ராஜா சார் 1982ல், தன்னுடைய 39ம் வயதில் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். தஞ்சாவூர் அருள் திரையரங்கில், 7ம் வகுப்பு மாணவனான நான் அன்றைய தேதியில் பார்த்த படம். என் மலைப்பு இன்னமும் அடங்கவே இல்லை. நன்றி MAPPI.
Bookmarks