-
15th June 2017, 04:32 PM
#1
Senior Member
Devoted Hubber
https://www.facebook.com/trichy.srin...6004453175513/
Trichy Srinivasan
· Yesterday at 02:13 ·
19. நான் வணங்கும் தெய்வம் :
நேற்று 20வது படமாக ரங்கோன் ராதா வெளியிட்டேன். நேற்றே கூறினேன் அதற்கு முன்பாக வந்த இந்த நான் வணங்கும் தெய்வம் படத்தை 19 வதாக இன்று போடுவதாக, இப்போது போட்டுவிட்டேன் நண்பர்களே.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். அதாவது, திரு. நாகையா அவர்கள் டாக்டராக வருவார், அவர் ஒரு விஷப்பரீட்சை நடத்துவதற்காக அதாவது ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு மருந்தை மனித உடம்பில் செலுத்திப்பார்க்க சிவாஜியை பயன்படுத்துவார், அந்த மருந்தை செலுத்தியவுடன் சிவாஜியின் குண...ம், தோற்றங்கள் மாறும் , மிகவும் விபரீதமாகி இறுதியில் அவருக்கு மாற்று மருந்து கொடுத்து, நிலைமையை சீராக்குவதாக கதை. இந்தக் கதை அந்த காலத்திலேயே படமாக்கப்பட்டது, மிகவும் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. சிவாஜி என்ற மகா கலைஞர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று, அனைத்தையும் விரைவிலேயே முடித்து சாதித்து விட்டார். இன்று கூட வரும் படங்கள் அனைத்தும் சிவாஜியின் பழைய படங்களின் கதைகளை தழுவாமல் வர சந்தப்பமே இல்லை. நீங்கள் எந்த படத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் சிவாஜியின் பழைய பட வாடை அடித்தே தீரும்.
இப்படத்தில் நாகையா கதாபாத்திரம் கௌரவம். சிவாஜி மிக பெரிய நடிகர் அதே சமயம் எனக்கு நாகையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ். வி. சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா , நாகேஷ், போன்ற மிக பெரிய ஜாம்பாவான்களையும் மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் நாகையா அவர்கள் சிவாஜியின் அதிக படங்களில் மிக, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரக் கூடியவர். இப்படம் மிகவும் ஒரு வித்தியாசமான படம் சிவாஜிக்கு. நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017 04:32 PM
# ADS
Circuit advertisement
-
15th June 2017, 04:53 PM
#2
Senior Member
Devoted Hubber
|
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சமீபகாலமாக மதுரையில் சினிமா சம்பந்தப்பட்ட விழா எதுவுமே நடைபெற்றதில்லை, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படவிழாவினைத் தவிர...
2013ல் கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றி விழா மதுரை மக்களே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா எந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமலே காலை நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது, திரையுலகினரை திரும்பி பாா்க்க செய்தது.
அதற்கு பிறகு, தற்போது மீண்டும் நமது கலை தெய்வத்தின் மற்றொரு வெற்றி விழா. நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் ராஜபார்ட் ரங்கதுரை தொடர்ந்து 25வது நாள் கண்டது.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் சார்பில் மதுரை மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றிவிழாவினை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மாபெரும் ஒத்துழைப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டல் தயாரிப்பாளர். தியேட்டர் நடத்துபவர், பட விநியோகஸ்தர் ஆகியோருக்கு நினைவுப்பரிசையும் வழங்கினார். ஜெயக்குமார் அவர்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
25வது நாள் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நான். பச்சைமணி, வெங்கடேஷ் போன்றோர் சில முன்னேற்பாடுகளை செய்ய தியேட்டரில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கூடி செய்து வந்தோம். விழாவினை முன்னிட்டு காலை முதல் ஒலிபெருக்கியில் நடிகர்திலகத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
மாலை 5 மணி முதல் ரசிகர்கள் தியேட்டரில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கதுரையை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் மதுரையை சேர்ந்த மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதியமே ராஜபாளையத்தை சேர்ந்த அருமை சகோதரர் திருப்பதி ராஜா அவர்களும், டிஜிட்டல் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகர்கோவிலை சார்ந்த த.ஜெகன் ஆகியோர் வந்து விட்டனர். அவர்களும் தங்களது விழாவிற்கு தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார். கார்த்திகேயன் அவர்களுக்கு ஜெயக்குமார், பச்சை மணி, அவனியாபுரம் குப்புசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தினர். பின்னர் படத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நினைவுப்பரிசினை கார்த்திகேயேன் அவர்கள் வழங்க பட தயாரிப்பாளர், தியேட்டர் நிர்வாகி மற்றும் விநியோகஸ்தருக்கு வழங்கினார்.
தியேட்டருக்கு அருகில் வசிக்கு பொதுமக்கள் அனைவரும் இப்படி ஒரு விழாவினை தாங்கள் இதுவரை இந்த தியேட்டரில் பார்த்ததில்லை எனக் கூறி அனைவரும் குழந்தைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் வந்து விழாவினை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரைச் சேர்ந்தவர்களோ வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவுக்கும் விழா மிகவும் சிறியதாக தான் நடைபெற்றது. இதற்கே இப்படி என்றால் மக்கள்தலைவரின் மற்ற படவிழாவினை இவர்கள் பார்த்திருந்தால்....
தியேட்டேருக்குள் நமது இதயங்கள் அனைவரும் இளைஞர்களாகவே மாறியிருந்தனர். மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கோயிலுக்கு சென்றால் மன அமைதி ஏற்படும் என்பார்கள். ஆனால் நமது நடிகர்திலகத்தின் இதயங்களுக்கோ அவர் படம் ஓடும் தியேட்டரே கோவில் அவரே தெய்வம். தன் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடித்து விட்டார் நம் கலைக் கடவுள்.
ரசிர்களின் பேப்பர் மழையில் தியேட்டர் முழுவது பேப்பரால் மூழ்கியது. இன்றை ரசிகர்களுக்கு இந்த பேப்பர் மேட்டர் அவ்வளவாக தெரியாது. அதிலும் ரோஸ் என்பவர் ஜிகினா பேப்பராக போட அந்த பேப்பா் தியேட்டருக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் கலகலத்து போய் விட்டனர். ஒருவர் நடிகர்திலகத்தை,எங்கள் தலைவரை மதித்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கோசம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சிவாஜி அவர்களை மறந்ததை நினைவுகூர்ந்தார்.
ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம் நிச்சயம் விண்ணிலிருக்கு நமது தலைவருக்கு கேட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. வெளியில் மக்கள் பேசிக்கொண்டது. சிவாஜி ரசிகர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் விழாவினை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் என் காதில் விழுந்தது.
அடுத்த விழாவிற்கு தயாராவோம் எனக் கூறி அனைவரும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம், நானும் தான்...
படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, சோமசுந்தரம் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் ஜோதிபாஸ்கரன், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சிவாஜி செல்வம், பழனிச்சாமி, பழனிக்குமார், சிவக்குமார், பத்மநாபன் கார்த்திகேயன், கே.கே.நகர் குமார், எம்.என்.குமார் மற்றும் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம். |
|
25வது நாள் வெற்றி விழாவின் புகைப்படங்கள் சில.....
|
|
ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியத்தை டிஜிட்டலில் தயாரித்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகயேன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிய போது....
உடன் இருப்பவர்கள் இடமிருந்து வலம் ரமேஷ்பாபு, திருப்பதி ராஜா, மீனாட்சி பாரடைஸ் தியேட்டர் மணிகண்டன், ஆர்.எம்.எஸ் மாணிக்கம், ஜெயக்குமார, பழனிச்சாமி, ஜோதிபாஸ்கரன், கார்த்திகேயன், குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், பச்சைமணி, சோமசுந்தரம் ஆகியோர்.
|
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:54 PM
#3
Senior Member
Devoted Hubber
வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:56 PM
#4
Senior Member
Devoted Hubber
மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய போது... உடன் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, தேனுார் சாமிக்காளை, தெப்பக்குளம் பால்பாண்டி, பச்சைமணி ஆகியோர்..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:57 PM
#5
Senior Member
Devoted Hubber
ஆட்டோ பழனிக்குமார், ஜெயக்குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், த.ஜெகன், திருப்பதிராஜா, பாரமவுண்ட் ஜோதி, பாலகிருஷ்ணன்,மாரியப்பன், ரோஸ், சமூகநல பேரவை தலைவர் சிவாஜி செல்வம் ஆகியோர் தியேட்டர் நுழைவு வாயிலில்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:58 PM
#6
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:58 PM
#7
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 04:59 PM
#8
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 05:00 PM
#9
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 05:01 PM
#10
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks