-
2nd October 2017, 09:10 AM
#1201
Senior Member
Devoted Hubber
Subramania Pillai
நடிகர் திலகத்திற்கு ஏன் இந்த நிலைமை?
1) தமிழனாய் பிறந்தது
2) கடவுள் நம்பிக்கை வைத்தது
3) திராவிடக்கும்பலில் மலையாளி யாகவோ, தெலுங்குகாரனாகவோ, கன்னடக்காரனாகவோ பிறக்காமல் தமிழனாக பிறந்தது பெறும் தவறு.
4) MGR விட நிறைய ரசிகர்கள் வைத்தது. இன்றும் 45 ஆண்டுகள் முடிந்தும் பெங்களூர் நடராஜா தியேட்டரில் வசந்தமாளிகைக்கு கூடிய கூட்டம் Link --- https://m.youtube.com/watch?v=yac3fJ9_iRI...
4) பொய், பித்தலாட்டம், அரசியல் சூட்சி அறியாதது. கடைசிவரை காமராசர் தொண்டனாக. இருந்தது.
5) கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் அவர்களைப் பகடைகாய்களாக ஆக்காமல் இருந்தது .
6) காமராசர் தொண்டனாக இருந்ததால் பல கோடி தேவர்கள்சமுகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஆகமுடியாமல் ஆனது.
7)தன் சொந்தகாசு பலருக்கு கொடுத்து விளம்பரம் தேடாதது. 1ரூபாய் கொடுத்து 1000 விளம்பரம் தேடியவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
8)இந்தியா & சீனா போர் சமயத்தில் தன் மனைவியின் நகை முழுவதும் கழற்றி கொடுத்தது தவறு. அடுத்தவன் காசு வாங்கி விளம்பரம் செய்யாதது அவர் தவறு.
9) அவர் கடவுள் நம்பிக்கை உள்ளதால் DMK. அவரைப் புறந்தள்ளி மலையாளி யைக் கொண்டாடியது.
10) அந்த மலையாளி ADMK. அவருக்கு நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.
11) இப்படி ஒரு மணிமண்டபம் சிவாஜி புகழுக்கு புகழ் சேர்க்குமா!
12) தன்மான தமிழன் சிவாஜி என்றுமே!
ஒரே ஒரு வருத்தம் தன்மான தமிழனின் புதல்வர்கள் தன்மானம் இல்லாமல் இருப்பது!
அதிக வாக்காளர் கொண்ட. சமூகத்தில் பிறந்தும் அதை பயன்படுத்தத் தெரியாத அப்பாவி!
'vasantha maligai' in natraj theater at bangalore celebrations part 1
The grear actor nadigar thilagam sivaji ganesan's vasantha…
youtube.com
Like
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017 09:10 AM
# ADS
Circuit advertisement
-
2nd October 2017, 09:32 AM
#1202
Senior Member
Devoted Hubber
Edwin Prabhakaran Eddie
சிவாஜி அவர்களை சீண்டுவதற்கு எவனுக்கும் துணிவு இருந்ததில்லை ....சர்வாதிகாரம் பெற்ற எம்ஜியாரோ...இல்லை வேறு தயாரிப்பாளர்களோ, எவரா இருந்தாலும் .நம் திலகத்திற்கு அடிபணிந்த காலம் அது .......அரசியலில் வென்றார்கள் மக்களை ஏமாற்றி ...சீ அதுவும் ஒரு பிழைப்பா ?.................இப்பவும் சொல்கிறேன் சிவாஜி ரசிகனாக வீதியில் தலை நிமிர்ந்து நடப்பேன் கம்பீரமாக....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 09:37 AM
#1203
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 09:41 AM
#1204
Senior Member
Devoted Hubber
புதிய கவர்னரிடமும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவோம் திருநாவுக்கரசர் பேட்டி
புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 07:16 PM
#1205
Junior Member
Devoted Hubber
NT birthday function video.
-
2nd October 2017, 07:18 PM
#1206
Junior Member
Devoted Hubber
NT manimandapam ceremony video.
-
2nd October 2017, 07:57 PM
#1207
Senior Member
Devoted Hubber
கலை மகன் சிவாஜி கணேசனுக்கு கெளரவம்
இன்று இரவு 8:00 மணிக்கு
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் #sivajimanimandapam #SivajiGanesan #statue
https://www.facebook.com/PutiyaTalai...7934076696834/
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 07:59 PM
#1208
Senior Member
Devoted Hubber
Aathavan Ravi
பெரு மூச்சோடு ஒரு பதிவு.
வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ. உ. சி யாக,
பாரதியாராக நடித்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை நியாயமாக குடியரசுத் தலைவர் திறந்து வைத்து பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
... ஆனால் இங்கே எல்லா நல்ல விஷயங்களுக்கும்
கெஞ்சிக் கூத்தாட வேண்டியுள்ளது.
( நன்றி: எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார்
அவர்களுக்கு )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 08:00 PM
#1209
Senior Member
Devoted Hubber
Nagarajan Velliangiri
அன்பு நெஞ்சங்களே ! வணக்கம்.
முதலில் டாக்டர்.அசோக் அவர்களுக்கு, உலகெங்கும் உள்ள, நடிகர்திலகத்தின் அன்பு ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவின் Radio Dehotties வானொலி நிலையத்தின் 'தமிழ் தர்பார்' நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி இன்று காலை 5.30 முதல் 6.30 வரை, ஒரு மணிநேரம் நடிகர்திலகம் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு ஒலிபரப்பு நடத்தி அசத்தி விட்டார் டாக்டர்.அசோக். அதற்குத்தான் இந்த நன்றி.
அந்த நிகழ்ச்சி, தமிழ் தர்பார் அல்ல. சிவாஜிதர்பார் (பெயர் உபயம் : ஜாஹிர் ஹுசேன் அவர்கள்) என்றுதான் சொல்ல வேண்டும். அவரது படங்களில் வந்த நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை, முழுமையாக ஒலிபரப்பி அசத்தி விட்டார்.இன்று அதிகாலை 4.30 மணிக்கே என்னைத் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அன்புடனும் அக்கரையுடனும் நினைவு படுத்தி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.
ஒலிபரப்பான பாடல்களை ஓரளவு வரிசையாக நினைவுபடுத்திச் சொல்ல முயல்கிறேன்.
1) கா கா கா (பராசக்தி)
2) நீ வருவாய் என்று காத்திருந்தேன்
(ராஜா)
3) பொன்மகள் வந்தாள்..(சொர்க்கம்)
4) இனியவளே என்று பாடி வந்தேன்..
(சிவகாமியின் செல்வன்)
5) ஏன் ஏன் ஏன்..ஒரு கிண்ணத்தை...
(வசந்தமாளிகை)
6) நீயும் நானும்..கண்ணா (கௌரவம்)
7) மதனமாளிகையில்..
(ராஜபார்ட் ரங்கதுரை)
8) போற்றிப் பாடடி பொண்ணே ...
(தேவர் மகன்)
9) எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்...
(பட்டாக்கத்தி பைரவன்)
10) பூங்காத்து திரும்புமா...
(முதல் மரியாதை..)
11) காதல் ராணி கட்டிக் கிடக்க..
(திரிசூலம்)
12) ஆடல் பாடலில் உலகமே
மயங்காதோ..
( வெற்றிக்கு ஒருவன்)
ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பாடல்களையும், அதுவும் முழுப்பாடல்களையும் ஒலிபரப்பியது மிகப் பெரிய விசயம்.காரணம் விளம்பரம் அதிகம் இல்லை..இரண்டு முறை மட்டும் சிறிய விளம்பரங்கள் இருந்தன...அவ்வளவுதான்.
நடிகர்திலகம், சிம்மக்குரலோன், செவாலியே, சிவாஜி, உலகமகா நடிகன்.......இவையெல்லாம் அவர் ஐயனைப்பற்றி அடிக்கடி கூறிய வார்த்தைகள்.மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சி முழுக்கப் பேசினார்.
(நீண்ட நாட்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலேயே குடியிருப்பதால் இடையிடையில் சில ஆங்கில வார்த்தைகள் வருவதை அவரால் தவிர்க்க இயலவில்லை போலும்....)
ஒவ்வொரு பாடலின் இடையிலும் ஐயனைப் பற்றிய சுவாரசியமான செய்திகளைச் சொல்லிச் சொல்லி நிகழ்ச்சியை இனிமையாக நடத்தினார்..
தயாரிப்பாளர் பாலாஜி ஐயனை வைத்துத் தயாரித்த படங்கள் அத்தனையிலும் ராஜா ராதா என்றே நாயகன் நாயகி பெயர்கள் இருந்தது....
TMS பாடுகிறாரா, இல்லை சிவாஜி பாடுகிறாரா என்றே தெரியாத வண்ணம் பாடலுக்கு ஐயன் வாயசைத்து நடித்தது....
இரண்டாவது ரிலீஸில், ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் ஓடியதை அறிந்து ஆச்சரியப்பட்டு அதனால் இன்ஸ்பையர் ஆகி இப்படி ஒரு நிகழ்ச்சி தயாரிக்க எண்ணம் கொண்டது...
ஐயனின் குரலும் கமலின் சிறுவயது மகள் ஸ்ருதியின் குரலும் இணந்து மனதை மயக்கியது....
MSV,மாமா போன்ற மிகப் பெரிய வல்லுனர்கள் ஐயனுக்கு நிறையப்படங்களில் இசையமைத்தது....
இளையராஜாவின் இசையில் அருமையான பல பாடல்கள் அமைந்தது....
பாரதிராஜா ஐயனுக்குச் செய்த முதல்மரியாதை...
ஐயன் மீன் சாப்பிடுவது...உனக்கு வயிறு வலிக்கக் கூடாதுன்னு ஒன்னே ஒன்னு...சாப்புடுதேன்..என்று சொல்லிச் சொல்லிச் சாப்பிட்டது...
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் அன்று நிகழ்ச்சி ஒலிபரப்பாவதும், ஐயனுக்குச் சென்னையில் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுவதும் பெருமகிழ்ச்சி...
இது முதல் முயற்சி என்பதாலும் நேரமின்மையாலும் இன்று பாடல்களுடன் மட்டும் ஒலிபரப்புவதாகவும் அவர் படத்தில் இடம் பெற்ற அருமையான வசனங்களை இனி வரும் நிகழ்ச்சிகளில் தொடரப் போவதாகவும்....
வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களைப் பற்றியும்...
ஐயனின் படங்களில் சிறந்த தத்துவ மற்றும் சோகப் பாடல்கள் நிறைய இருப்பினும், இன்று அவரது பிறந்த நாள் என்பதால் ஜாலியான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புவதாகவும்...
ஐயனின் ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் வாங்கச் சிரமப்பட்டதும் பின்னர் சைக்கிள் கொண்டு போய் சைக்கிள் டோக்கனுடன் எளிதாக டிக்கட் வாங்கியதும்....
இப்படி ஏராளமான விசயங்களை மிகச்சிறிய நேரத்தில் பகிர்ந்து கொண்டார்.
மிக மிக நன்றி அசோக்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், டாக்டர் அசோக் அவர்களை நான் தொடர்பு கொண்டு, ஐயனின் அனைத்து அன்பு உள்ளங்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.
அன்பு நண்பர்களே! இதை நான் டைப் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் டாக்டர்.அசோக் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு (Recorded broadcast) லிங்கை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். இன்று நேரலையில் கேட்டு மகிழ முடியாத நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியைக் கேட்டு ரசிக்கலாம் என்று. எனக்கு லிங்க் கிடைத்தவுடன் அதை அனைவரும் அறியும் வண்ணம் குழுவில் பகிர்கிறேன் நண்பர்களே!.
அன்புள்ளம் கொண்ட அருமை நண்பர் அசோக் அவர்களுக்கு மீண்டும் நன்றி.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2017, 08:01 PM
#1210
Senior Member
Devoted Hubber
Arumugam Balakrishnan
"பராசக்தி" பார்த்தேன் பேச கற்றுக் கொண்டேன்!
"பாசமலர்" பார்த்தேன் குடும்த்தை நேசிக்க கற்றுக் கொண்டேன்!!
"கை கொடுத்த தெய்வம"் பார்த்தேன் நட்பை அறிந்தேன்!!!
"வசந்த மாளிகை" பார்த்தேன் "குடி"யை மறந்தேன்
"படிக்காத மேதை" பார்த்தேன் நன்றியை கற்றேன்...
"கெளரவம்"பார்த்தேன் விடா முயற்சியை கற்றேன்
அய்யனே இப்படி உம்மால் நான் கற்ற நல்லவை ஏராளம்!!
அதனால் தான் நீர் என்றும் என்னுள் இருக்கின்றாய்!!!!
நின் புகழ் வாழ்க!!!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks