Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Abdul Razack

    சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி, இந்த படத்தை தயாரித்தவர், வடஆற்காடு மாவட்டம் வேலூர் தோட்டபாளையத்தில் வசித்த P.A. பெருமாள் என்பவர், அவருக்கு சொந்தமாக நேஷ்னல் தியேட்டர் வேலூரில் இருந்தது... அதன் பெயரிலேதான்...
    நேஷ்னல் தியேட்டர்ஸின் பராசக்தி..
    இயக்குனர்கள்: கிருஷ்ணன்-பஞ்சு
    கதை-வசனம்- மு.கருணாநிதி ...
    ... இவர் தியேட்டரிலேயே வெள்ளிவிழா கொண்டாடியது...
    சில வருடங்கள் கழித்து………
    PA பெருமாள் தொழில் அபிவிருத்திக்காக சிவாஜியிடம் தனது திரையரங்க பத்திரங்களை வைத்து சில லகரங்களை கடனாக பெற்றார்.
    பல வருடங்கள் கழித்து
    சிவாஜியின் மறைவிற்கு பிறகு
    தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக திரும்ப செலுத்தாமல் இருந்த சில லகரம் கடன் பல ஆண்டுகள் ஆனதால் சில கோடியானது.
    PA பெருமாளின் பிள்ளைகள் தங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாது என்பதை உணர்ந்து சிவாஜியின் மகன் பிரபுவிடம் வந்து தங்கள் இயலாமையை சொல்லி சிவாஜியின் குடும்பத்திற்கு அவர்களது திரையரங்கை மாற்றி பத்திரபதிவு செய்துதருவதாக கூறினர்.
    பிரபு அவர்களை அவர்களது வீட்டில் உணவருந்த சொல்லிவிட்டு, சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி வெளியே சென்றுவிட்டார்.
    இரண்டு மணிநேரம் கழித்து ஒரு பெட்டியுடன் வந்த பிரபு, சாரி அமொண்ட் பெரிசு அதான் லேட்டாயிடுச்சி என்றவராய் தனது கையிலிருந்த பெட்டியை PA பெருமாள் அவர்களின் பிள்ளைகள் கையில் கொடுத்து
    "அண்ணே அன்று அப்பா (PA பெருமாள்) இல்லை என்றால் இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இல்ல.
    எங்களுக்கு வாழ்வுகொடுத்த தெய்வம் அவர். நீங்க போய் அந்த இடத்தை விற்க்கலாமா"? என்று கேட்டு திரையரங்க பத்திரத்தையும் , பணத்தையும் கையில் கொடுத்து அவர்களை வழியனுப்பினார்.
    தங்கள் வாழ்வில் விளக்கேறியவரின்
    வீட்டில் விளக்கேற்றியவர் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசு. இந்த பதிவின் நோக்கம் நேற்று திரு .ஜாஹிர் உசேன் அவர்கள் ரத்னவேலு சாரின் பதிவில் AVM குமரன் தினமலர் வாரமலர் இதழில் எழுதிய பதிவை பார்த்தேன் அண்ணன் பிரபு செய்த இந்த காரியமே போதும் யார் சிறந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள! இந்த அன்னை இல்லம் எல்லா செல்வமும் பெற்று இன்றும் வளமுடன் நடைபோட காரணம் நன்றி என்னும் செஞ்சோற்று கடன் தான்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •