-
7th October 2017, 09:58 AM
#1
Senior Member
Devoted Hubber
Vee Yaar
இளைய தலைமுறையை ஈர்க்கும் நடிகர் திலகத்தின் மணி மண்டபம்.
கடந்த சில நாட்களில் தினமும் பகல் வேளையில் திரளான கல்லூரி மாணவர்களும் மாணவியரும் நடிகர் திலகத்தின் மணி மண்டபத்திற்கு வருகை புரிகின்றனர். அவருடைய சிலை, அவருடைய நிழற்படம் ஆகியவற்றோடு நின்று சுய நிழற்படம் எடுத்துக்கொள்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அரசாங்கம் நடிகர் திலகத்தை நடத்திய விதம் மனதைப் புண்படுத்தினாலும் அடுத்த தலைமுறையினர் அவர் மேல் காட்டும் அன்பு அந்த ரணத்தை ஆற வைக்கும்... வலிமை கொண்டுள்ளது. சோகத்திலும் ஒரு சுகம் உண்டு என்பது போல் இந்த மணிமண்டபத்தில் நமக்கு சில நன்மைகளும் செய்துள்ளார்கள். சிலையருகில் நின்று நிழற்படும் எடுக்கும் அளவிற்கு இட வசதி இருப்பது நமக்கு ஆறுதலாயுள்ளது. சற்றே தள்ளி நின்று எடுத்தாலும் தலைவரின் முழுசிலையும் அதனருகில் நம் முழு உருவமும் இடம் பெறும் வகையில் நல்ல தொலைவு கிடைக்கிறது.
தற்பொழுது அந்த மணிமண்டப வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தமே சிவாஜி மணிமண்டப நிறுத்தம் என்று மக்கள் டிக்கெட் கேட்கும் அளவிற்கு பிரபல்யமாகி விட்டது.
மாணிக்கத்தை குப்பையில் வைத்தாலும் ஒளி வீசும். உங்களால் எங்கள் தலைவரின் புகழை இம்மியளவு கூட குறைக்க் முடியாது. பெருந்தலைவர் காமராஜர், பாதையில் பயணித்த மக்கள் தலைவர் மற்றும் அவருடைய தொண்டர்களின் நேர்மை என்ற வலிமையான ஆயுதம் எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் துவம்சமாக்கும் பலம் கொண்டது.
See more
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2017 09:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks