-
18th October 2017, 07:45 AM
#1351
Senior Member
Devoted Hubber
தமிழ் திரை உலகில் எவரும் "பராசக்தி" வெளிவரும்வரை பல விஷயங்களை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ..அவை யாதெனில்...
1) இந்த நடிகர் இத்துனை நடிகர்கள் மத்தியில் வளருவார் என்று.
2) அவரது வளர்ச்சி தடுக்கமுடியாத, அடைக்கமுடியாத, கட்டுகடங்காத காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் என்று !
3) குறைந்த வருடங்களில் நிறைந்த திரைப்படங்கள் நடித்து திரை உலகில் உள்ள 90 சதவிகித தயாரிப்பாளர்கள் ஏக மனதாக மற்ற மொழி நடிகர்களை ஓரம்கட்டி மண்ணின் மைந்தன் சிவாஜியை வைத்து திரைப்படம் எடுக்கவே முடிவெடுப்பார்கள் என்று.
4) இந்த நடிகர்தான் திரை உலகிலயே வரும் காலங்களில் எந்த நடிகரை காட்டிலும், எவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் சர்வ சாதாரணமாக
a) அதிக 50 நாட்கள் படங்கள்
b) அதிக 75 நாட்கள் படங்கள்
c) அதிக 100 நாட்கள் படங்கள்,
d) அதிக 125 நாட்கள் படங்கள்,
e) அதிக 150 நாட்கள் படங்கள்,
f) அதிக 175 நாட்கள் படங்கள்,
g) ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து இரெண்டுமே 100 நாட்கள் ஓடும் படங்கள்,
h) வெளிநாடுகளில் அதிக விருதுகள்,
i) அண்டை நாடான இலங்கையில், மற்ற நாடுகளில் அதிக 100 மற்றும் 175 நாட்கள் படங்கள், 200 நாட்கள் படங்கள்,
250 நாட்கள் வெற்றிப்படங்கள், வசூல் படங்கள்
இப்படி பல முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் மட்டுமே என்றும் இருப்பார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !
(நண்பர் ரவிகிரண்சூரியா அவர்களின் முன்னைய பதிவு பராசக்தி 65 வருட நிறைவில் ஒரு நினைவலை)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th October 2017 07:45 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2017, 01:39 AM
#1352
-
19th October 2017, 01:52 AM
#1353
Senior Member
Devoted Hubber
கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
65 வது வெற்றிச்சித்திரம்
பெற்ற மனம் வெளியான நாள் இன்று
பெற்ற மனம் 19 ஒக்டோபர் 1960
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th October 2017, 02:01 AM
#1354
Senior Member
Devoted Hubber
-
19th October 2017, 08:14 AM
#1355
Senior Member
Devoted Hubber
மாற்றுத்திரியில் ஒருவருக்கு சிவபுராணம் தேவையாம்
மிகவிரைவில் ஆரம்பம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th October 2017, 02:19 PM
#1356
Senior Member
Devoted Hubber
Sekar Parasuram
வசந்த் தொலைக்காட்சி யில் 2pm க்கு
அந்தமான் காதலி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th October 2017, 02:24 PM
#1357
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th October 2017, 04:07 AM
#1358
Senior Member
Devoted Hubber
Sundar Rajan
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
ஆனால்,
அரசியலில் பாருங்கள்,
கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
ராஜா திரைப்படத்தில்
நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th October 2017, 04:08 AM
#1359
Senior Member
Devoted Hubber
Sundar Ra
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
கடந்த சில நாட்களாக நமது இதயங்கள் அனைவரும் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தவற்றைப் பற்றி எழுதி வருகின்றனர்.
நீயா நானாவு...க்கு இருந்த மரியாதை மக்களிடத்தில் போய் வெகுநாட்களாகி விட்டது. அந்த நிகழ்ச்சியின் முடிவை முன்னரே முடிவு செய்து கொண்டு, அதற்கேற்றார் போல் விவாதம் நடத்துவார் கோபிநாத் என்பது உலகறிந்த விசயம்.
இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், எந்த அணி வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த அணியில் நீயா நானா குழுவின் சாா்பில் சிலை அமரச் செய்து அவர்களை பேசவிடுவார்கள் என்ற செய்தி அதில் கலந்து கொண்டோர் பலருக்கு தெரியும்.
அவர்களிடத்தில் அடிக்கடி மைக்கை கொடுங்கள் என்று சொல்லி பேசவிடுவது, அவர்கள் நன்றாக பேசினார்கள் என்று பரிசு கொடுப்பது இது மாமுலான விசயம்.
இதனால் நீயா நானாவுக்குக்கு இருந்த டிஆர்பி ரேட்டே
குறைந்து வருடங்களாகி விட்டது.
சரி விசயத்திற்கு வருவோம், எனக்கு முதலில் அலைபேசியில் அழைத்து, நீயா நானாவில் நான் கலந்து கொள்கிறேன், தலைப்பு சிவாஜி பாடலா அல்லது எம்ஜிஆர் பாடலா என்று தகவல் கூறியவர் நமது அன்பு இதயம் அப்துல்ரசாக் அவர்கள்.
அவரிடம் சில தகவல்களை சொன்னேன், முடிந்தால் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் பாடல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினேன், ஆனால் என்னால் அனுப்ப முடியவில்லை்.
காலையில் அப்துல்ரசாக் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்தவாறு போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு சந்தோசம்.
ஏனென்றால், எதையும் தட்டிக்கேட்கும் சமூகநலபேரவை சந்திரசேகரன், பல விசயங்கள் தெரிந்த கான், தைரியமாக எடுத்துரைக்கும் சுப்பு, பல அரிய தகவல்களை தரும் சேகர் பரசுராம், இளைய ரத்தமாக அப்துல்ரசாக், உணர்ச்சிவசப்படும் ஜெயக்குமார், எதையும் ஆணித்தராமாக எடுத்துரைக்கும் ராமஜெயம் இவர்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு பேரின்பம், எதிரணியினர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள், விஜய் டிவி நீயா நானா குழுவிற்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், நீயா நானா குழுவோ நமக்கு சரியான வாய்ப்பு தராமல், எதிரணிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது அறிந்து மனம் நொந்தேன்.
ஜெயக்குமார் அவர்கள் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி ஒளிபரப்பாமல் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.
நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது, நமக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், அன்பிற்குரிய சந்திரசேகரன், கான், சுப்பு, ராமஜெயம் போன்றோர், நாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று அங்கேயே நமது கண்டணத்தை தெரிவித்து விட்டு வெளியில் வந்திருந்தால், நீயா நானா குழுவின் பித்தலாட்டத்தை உலகறிய செய்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
எத்தனையோ அரசுகள் நமது மக்கள்தலைவர் அவர்களின் புகழை மறைக்கப் பார்த்து, அதில் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த வீணாய் போன விஜய் டிவியால் என்ன செய்ய முடியும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th October 2017, 04:12 AM
#1360
Senior Member
Devoted Hubber
Abdul Razack
அன்பு இதயங்களே கடந்த 15/10/2017 அன்று விஜய் TV யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கு பெற்று அங்கு நடந்த நிகழ்வுகளை இதில் பதிவிடுகிறேன் இதில் எதுவும் தவறு இருந்து அதில் நியாயம் இருந்தால் சுற்றிகாட்டவும் முதலில் நாம் நிகழ்ச்சியின் உள்ளே செல்லும் முன் அதன் நடைமுறைகள் பலம்.பலவீனம் இதை நாம் தெரிந்து கொண்டால் அடுத்து வரும் விடயங்கள் எளிதாக புரியும் இதன் தலைப்பு சிவாஜி பாடல்களா? எம் ஜி ஆர் பாடல்களா? இந்த தலைப்பே நம்மில் பல பேருக்கு விருப்பம் இல்லை பாடல்கள் விவாதம் என்றால் பட்டுகோட்டையா? கண்ணதாசனா? வாலியா? வைரமுத்துவா?இப்படித்தான் இருக்கும் இவர்களின் இந்த தலைப்பு மக்கள் மனதில் யார் பாடல்கள் அதிகம் இடம் பிடித்துள்ளது என்ற நோக்கம் இதில் எம் ஜி ஆர் அணிக்கு சாதகம் அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பது அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிளும் அந்த கட்சி மீட்டிங் நடக்கிறது அதனால் மைக் செட்டில் அவரின் பாடல்களை நாள் முழுவதும் ஒளிபரப்பிகொண்டே இருக்கிறார்கள் இதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சிவாஜி பாடல்கள் என்றால் தொலைகாட்சிகளில் வருவது மட்டுமே நாம் விரும்பினால் கேட்கலாம் கட்டயாமாக அங்கு போல் நாம் தினிக்க முடியாது இரண்டாவது இது கோபிநாத் பற்றியது வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்த பாடத்தை முழுவதும் தெரிந்து இருக்கனும் அதைவிட்டு மாணவனிடம் விளக்கம் கேட்ககூடாது,,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தகுதி 30 வயது முதல் 45 வரை என்பது இரண்டு பக்கமும் 30 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்பது விதிமுறை நம் அணியில் ஒருவர் மட்டுமே 50 வயதை கடந்தவர் அவரும் வாய்திறக்கவே இல்லை அந்த அணியில் 14பேர்கள் 50 வயதை கடந்தவர்கள் மூன்று பேர் 30 வயதிற்கும் கிழ் உள்ளவர்கள் அதில் சிலர் ஏற்கனவே இது போன்று வேறு நிகழ்ச்சியில் கலந்து அனுபவம் பெற்று நெளிவு சுளிவு தெரிந்தவர்கள் அதனால் பாடல்கள் பாடுவதற்கு மேடையில் கச்சேரி பாடும் ஒரு ஆண் ஒரு பெண் என்று முன்னேற்பாடாக அழைத்து வந்து விட்டார்கள் நம் அணியில் அனைவரும் புதியவர்கள்நமக்குள்ளே அறிமுகம் இல்லாதவர்கள் இதை உங்கள் மனங்களில் பதிந்து மேலும் படியுங்கள் ஸ்டுடியோ உள்ளே சென்றோம் இரண்டு பிரிவாக பிரித்து அமரவைத்தார்கள் பிறகு நிகழ்ச்சி தொடங்கியது கோபிநாத் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்து நிகழ்ச்சியின் விதிகள் சொன்னார் நான் கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் பாடவேண்டும் பாடல் சிறப்புபற்றிதான் சொல்லனும் நடிகர்கள் சிறப்பு சொல்லக்கூடாது எதிர் பாட்டை மட்டம் தட்டகூடாது உங்கள் பாடல்களை உயர்வாக பேசலாம் தனிமனித புகழ் வேண்டாம் ஒரு முறை வந்த பாடல் அடுத்து வரவேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லி எம் ஜி ஆர் பாடல் ஒன்று பாடுங்கள் என்று கேட்டார் அங்கு ஒளித்த பாடல் நான் ஆணையிட்டால் பிறகு நம் பக்கம் திரும்பி ஒருவர் பாடலாம் என்றார் நான் பாடுகிறேன் நான் பாடுகிறேன் என்று அனைவரும் ஆர்வமாக கேட்டார்கள் ஒருவர் தான் பாடவேண்டும் என்று சொன்னபிறகு நண்பர் ராம் குமார் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்ற பாடல் பாடி பலத்த கைதட்டல் வாங்கினார் அதன்பிறகு முதல் கேள்வியாக எம் ஜி ஆர் ரசிகர்களிடம் முதன் முதலாக ஒரு எம்ஜிஆர் பாட்டு கேட்க்கிறீர்கள் அது உங்களுக்கு பிடித்து போய் இந்த பாடலை நாம் திரும்பி கேட்கமாட்டோமா என்று ஏங்கி தவித்த பாடல் அதன் காரணம் என்ன சொல்லுங்கள் என்றார் அந்த அணியினர் 3 நிமிட பாடலுக்கு ஒவ்வொருவரும் 5 நிமிடம் விளக்கம் கொடுத்து குறிப்பிட்ட பாடலில் வந்து நிறுத்துவார்கள் எங்கே அந்தபாடலை பாடுங்கள் என்று அவர் சொன்னால் அங்கு இருக்கும் மேடை பாடகரிடம் மைக்கை கொடுத்து அவர் அழகாக பாடி பாராட்டு வாங்கி விடுவார் மேலும் அங்கு இருந்த அவர்கள் 30 பேர்களில் எட்டு பேர் மட்டும் மைக் வாங்கி பேசி பாடவரும் சூழ்நிலையில் பாடகரிடம் கொடுத்து விடுவார்கள் ஒரு சில பாடல்களை அந்த எட்டு பேரும் பாடினார்கள் மற்ற இருபது பேரும் அமைதியாக இருப்பார்கள் அவர்களிடம் முடித்து நம்மிடம் திரும்பினார்..,,,...............தொடரும்,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks