-
29th October 2017, 09:19 AM
#1441
Senior Member
Devoted Hubber
vee yaar
Last edited by sivaa; 29th October 2017 at 10:48 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th October 2017 09:19 AM
# ADS
Circuit advertisement
-
29th October 2017, 07:54 PM
#1442
Senior Member
Devoted Hubber
என்றும் உங்களுடன் முருகன்
பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகள்.
மனோகரா, ராஜாராணி, இல்லறஜோதி, திரும்பிப்பார், அன்னையின் ஆணை படங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் வசன நடிப்பு.
உத்தமபுத்திரன் படத்தில் யாருமே செய்து காட்ட இயலாத ஸ்டைல் நடிப்பு.
பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பழனி படங்களில் அப்பாவி நடிப்பு.
பார் மகளே பார், உயர்ந்த மனிதன் படங்களில் செல்வந்தராக மிடுக்கான நடிப்பு.
தெய்வப்பிறவி, மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, நான் பெற்ற செல்வம் என்று மறக்க முடியாத பல குடும்பக் கதைகளில் காவியமான நடிப்பு.
அம்பிகாபதி தொடங்கி திருவிளையாடல், தவப்புதல்வன் என்று பல படங்களில் இடம்பெறும் கர்நாடக இசைப் பாடல்களுக்கேற்ப அசத்த வைக்கும் வாயசைப்பு.
நவராத்திரி, தெய்வமகன், உத்தமபுத்திரன், கட்டபொம்மன் படங்களில் இமாலயச்சாதனை.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, மணமகன் தேவை, சபாஷ்மீனா, பலேபாண்டியா கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, ராமன் எத்தனை ராமனடி, சுமதி என் சுந்தரி, பாரத விலாஸ், மனிதரில் மாணிக்கம், அன்பே ஆருயிரே படங்களில் நகைச்சுவை நடிப்பு.
கப்பலோட்டிய தமிழன், இரத்தத்திலகம், தாயே உனக்காக, நாம் பிறந்த மண் படங்களில் தேசபக்தியூட்டும் நடிப்பு. கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் பக்தி சிரத்தையான நடிப்பு.
உத்தமபுத்திரன், பெண்ணின் பெருமை, கூண்டுக்கிளி, திரும்பிபார் படங்களில் வில்லன் நடிப்பு.
சிவந்த மண்ணில் தீவிரவாதியாகவும்,
மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் பெரியார் தொண்டனாகவும்
வளர்பிறையில் ஊமையாகவும்,
பாகப்பிரிவினையில் உடல் ஊனமுற்றவராகவும்,
பாலும் பழமும் படத்தில் இடைவேளைக்கு பின் கண் தெரியாத நிலையிலும்
அதே போல் ஆலயமணியில் கால் செயல் இழந்தவராகவும்
படிக்காதமேதை, படித்தால் மட்டும் போதுமா படங்களில் படிப்பறிவு இல்லாவிடினும் பண்பாளராகவும்,
அன்னையின் ஆணையில் பழிக்குப்பழி வாங்கும் இளைஞனாகவும்
பராசக்தி, விடி வெள்ளி, பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள், தங்கை, தங்கைக்காக, என் தம்பி, அண்ணன் ஒரு கோவில் படங்களில் பாசம் மிக்க அண்ணனாகவும்
பார்த்தால் பசி தீரும் படத்தில் படை வீரனாகவும்,
அதே படத்திலும் கை கொடுத்த தெய்வம் படத்திலும் ஆலயமணியிலும் உற்ற நண்பனாகவும்
முரடன் முத்து, ஞானஒளி படங்களில் முரட்டுக்குண முள்ளவராகவும்
பாலும் பழமும் படத்தில் சிறந்த டாக்டராகவும்
அருமை மனைவியை எண்ணி வாடும் அன்புக் கணவராகவும்
கவுரவம் படத்தில் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும்
ராஜபார்ட் ரங்கதுரையில் சிறந்த நாடக நடிகராகவும்
சம்பூர்ண இராமாயணம் படத்தில் அன்புத் தம்பி பரதனாகவும்
திருவிளையாடல் படத்தில் சிவபெருமானின் அத்தனை கோலங்களிலும்
அமரதீபம், இரும்புத்திரை படங்களில் தொழிலாளர் தலைவனாகவும்
பதிபக்தி, நான் சொல்லும் ரகசியம், பாபு படங்களில் ரிக்ஷா தொழிலாளியாகவும்,
காவல்தெய்வம் படத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளியாகவும்
தில்லானா மோகனாம்பாள், மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் வித்வானாகவும்
தங்கப்பதக்கம் படத்தில் கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரியாகவும் அதே படத்திலும் கல்தூண் படத்திலும் மகனை திருத்தும் தந்தையாகவும்
எங்க மாமாவில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் அன்பு மாமாவாகவும்
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் மனநோயாளியாகவும்
இருவர் உள்ளம், வசந்த மாளிகை, தீபம் படங்களில் பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்து திருந்தியவராகவும்
பாவமன்னிப்பு, அறிவாளி, எல்லாம் உனக்காக, சவாலே சமாளி போன்ற படங்களில் பொதுநலத்தொண்டராகவும்
திருடன், புதிய பார்வை, நீதி, ஞானஒளி, ராஜா போன்ற படங்களில் குற்றவாளியாகவும்
பாவமன்னிப்பு, நான் வணங்கும் தெய்வம், நவராத்திரி, தெய்வமகன் படங்களில் அறுவெறுப்பான முகத்தோற்றத்திலும்
புனர்ஜென்மம் படத்தில் குடிகாரனாகவும்
நவராத்திரி, குங்குமம், எங்கமாமா, ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், திருவெருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களில், ஒரே படத்திலே பல வேடங்களிலும்
பாசமலர், ஆண்டவன் கட்டளை, என் தம்பி, ராமன் எத்தனை ராமனடி, ஞானஒளி, எங்கள் தங்கராஜா, மகாகவி காளிதாஸ், சரஸ்வதிசபதம் போன்ற படங்களில் ஒரே வேடத்தையே இருவேறு மாறுபட்ட பாத்திரங்களாக மாற்றியும்,
இரட்டை வேடங்கள்
வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் முறையே பிராமணத் தந்தையாகவும்
இரண்டு குடும்பத்திற்கு தலைவராகவும் அவன் ஒரு சரித்திரம் படத்தில் கொடுத்து அழிந்த சீமானாகவும்
இரு நாயகிகளுக்கிடையே தவிப்பவராக இரு மலர்கள், பாவைவிளக்கு, பாலாடை, செல்வம், தேனும்பாலும், குல மகள்ராதை, புதியபறவை படங்களில் அசத்தியவரும் அவரே.
பேராசிரியராக ஆண்டவன் கட்ளையில்,
உத்தமபுத்திரன், அன்;னையின் ஆணை, எங்க ஊர் ராஜா, என்மகன், என்னைப்போல் ஒருவன், கௌரவம், மனிதனும் தெய்வமாகலாம் படங்களில் இரட்டை வேடங்களிலும்
பலேபாண்டியா, தெய்வமகன், திரிசூலம் படங்களில் மூன்று வேடங்களிலும்,
நவராத்திரி படத்தில் நவரசம் கலந்த ஒன்பது மாறுபட்ட வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலக சாதனை படைத்தவர் நடிகர் திலகம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th October 2017, 07:57 PM
#1443
Senior Member
Devoted Hubber
Murali Srinivas
29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த நமது சொர்க்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காட்சியைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
ஒரு முத்தாரத்தில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்திருப்பார். பார்ட்டி இருக்கிறது. என்னை குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லி மனைவியை கூட்டி வந்திருப்பார். சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார். [அந்தப் போஸில்தான் மனிதன் என்ன handsome...?] முதல் சரணத்தில் (அந்த மாலை இந்தப் பெண்ணின்) விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகம் அமர்ந்திருக்கும் சோபாவிற்கு பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். அவர் கையில் மதுக் கோப்பை இருக்கும். விஜயா பக்கத்தில் வருவதைப் பார்த்தவுடன் பாலாஜி சற்றே சங்கடமாக உணர்ந்து மதுக் கோப்பையை கால்களுக்கிடையே மறைத்துக் கொள்ள முயற்சி செய்வார். நிஜ வாழ்வில் இப்படி ஒன்று நடந்தால் அதாவது கையில் கோப்பையுடன் இருக்கும்போது ஒரு குடும்ப பெண் நண்பனின் மனைவி வந்தால் எப்படி சங்கடப்படுவார்களோ அவ்வளவு இயல்பாக இருக்கும். ராமண்ணா அழகாக எடுத்திருப்பார்.
அந்த சரணம் முடியும். திரும்பி பார்க்கும் விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியின் கைகளில் இருக்கும் கோப்பையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் நடிகர் திலகம் காட்டும் reactions!
முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.
நான் இவ்வளவு விளக்கமாக சொன்னதை அந்த உணர்வுகளை மூன்று நான்கு ஷாட்ஸ் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விடுவார் நடிகர் திலகம். அதனால்தானே அவர் நடிகர் திலகம்.
1970 தீபாவளி அன்று, இன்றைக்கு சரியாக 47 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் மதுரை சென்ட்ரலில் ஆரவாரம் கோலாகல கொண்டாட்டம் அலப்பறையோடு மாலைக் காட்சி பார்த்தது இன்றைக்கும் பசுமையாக நெஞ்சில்.
அன்புடன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th October 2017, 07:59 PM
#1444
Senior Member
Devoted Hubber
Murali Srinivas
29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகளைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
எங்கிருந்தோ வந்தாள் மிகச் சிறந்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் குறிப்பாக நடிகர் திலகத்தின் Body Language. "ஒரே பாடல்". சாகுந்தலம்" பாடல் காட்சிகள் மற்றும் கடைசி 10 -15 நிமிடங்கள், இந்த இடங்களில் மட்டுமே அவர் நார்மலாக இருப்பார். மற்ற நேரங்களிலெல்லாம் மன நிலை பாதிக்கப்பட்டவராகத்தான் தோன்றுவார். பாதிக்கப்பட்டவராக வரும் போது அவர் நடையே வித்தியாசமாக இருக்கும். இடது தோளை சரித்து இடது கையால் வலது மார்பை தடவிக்கொண்டே நடப்பார். வில்லனோடு சண்டை போடும்போது கூட இது மாறாது. வில்லன் மாடியிலிருந்து விழுந்தவுடன் நடிகர் திலகத்தின் முகத்தை close upல் காட்டுவார்கள். பலதரப்பட்ட உணர்ச்சிகள் அதில் மின்னி மறையும். அந்த இடத்திலிருந்து திரும்பி நடப்பார், Oh! அவருக்கே உரித்தான அந்த ராஜ நடை வரும். அது மட்டுமல்ல தான் எங்கிருக்கிறோம் என்பதை போல சுற்றும் முற்றும் பார்ப்பார். அப்போது தான் போட்டிருக்கும் ஜிப்பா கிழிந்திருப்பதை (வில்லனோடு சண்டை போடும்போது கிழிந்திருக்கும்) கவனிப்பார். ஏன் கிழிந்த சட்டை அணிந்திருக்கிறோம் என்பது போல ஒரு முக பாவம் காட்டுவார், class. ஜெயலலிதா வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் கூட்டி சென்று அவருக்கு குணமாகி விட்டதை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட இறுதியில் தன் தாயிடம் யார் இந்த பொண்ணு என்பாரே! அரங்கத்தையே அதிர வைக்கும் வசனம். அது போல ஜெயலலிதா ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று நடந்த விஷயங்களை பற்றி சொல்லும் போது ஞாபகம் வருவது போல தெரியும் ஆனால் சிரித்து கொண்டே ஞாபகம் இல்லை என்று கை விரிப்பார். அதிலும் குறிப்பாக JJ, நடிகர் திலகம் எழுதிய கவிதையின் ஆரம்ப வரிகளான ,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று
என்னிடத்தில் வந்து நின்று
என்று சொல்ல, உடனே நடிகர் திலகம் அதை தொடர்ந்து
பார்த்து மகிழ்ந்ததென்னவோ; பின்
பாராமல் போனதென்னவோ
என்று சொல்லி முடிப்பார். "ஞாபகம் வருதிலே! ஞாபகம் வருதிலே" என்று JJ துள்ளி குதிக்க, "இது நான் காலேஜ் படிக்கும் போது எழுதின கவிதை, எப்பவும் ஞாபகம் இருக்கும்" என்று நடிகர் திலகம் கூலாக சொல்ல, JJ வெறுத்து போய் கத்துவார். அருமையாக இருக்கும். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் ஒரு க்ரீம் கலர் புஃல் ஸ்லீவ் ஷர்ட்டும் அதே கலரில் pantsம் போட்டிருப்பார். ரொம்ப handsome ஆக இருப்பார். அது போல் சிரிப்பில் உண்டாகும் ராகத்தில் பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் முடிவிலே தோள்களை முன்னாடி சாய்த்து இரண்டு கைகளையும் loose ஆக தொங்கவிட்டு அந்த பக்கமும் இந்த பக்கமுமாக ஆட்டியபடி ஒரு ஸ்டெப் போடுவார். காத்திருந்து கைதட்டுவார்கள்.
துஷ்யந்தன் ஸ்டைல் பற்றி குறிப்பிட வேண்டும். நடிகர் திலகத்தின் மற்ற படங்களை ஒப்பிடும் போது இதில் ஸ்டைல் குறைவுதான். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" காட்சியில் அவருக்கே உரித்தான அந்த போஸ் அதாவது இடது கால் மேல் படியிலும் வலது கால் கீழ் படியிலும் வைத்து நின்று பாடுவார். அதை விட்டால் துஷ்யந்தனாக வரும் போது காட்டும் ஸ்டைல். அதிலும் சகுந்தலையிடம் விடை பெற்று செல்லும் போது ஒரு கை தூக்கி போய் வருகிறேன் என்று முகபாவத்திலேயே காட்டுவது, தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கும். (இதே நாளில் வெளியான சொர்க்கம் படத்தில் ஸ்டைலோ ஸ்டைல் என்று சொல்லும் வண்ணம் அதகளம் பண்ணியிருப்பார்).
இந்த இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான நேரத்திலும் சரி அதன் பிறகு அவை ஓடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி மதுரையில் ஞாயிறு மாலையன்று எந்த படத்திற்கு போவது என்று ரசிகர்கள் கூடி நின்று விவாதித்து முடிவு எடுப்பார்கள் ஒரு ஞாயிறு ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் என்றால் அடுத்த ஞாயிறு சென்ட்ரலில் சொர்க்கம் என்று மாறி மாறி இந்த இரண்டு படங்களையும் பார்த்தது நினைவிற்கு வருகிறது.
அன்புடன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th October 2017, 08:59 PM
#1445
Senior Member
Devoted Hubber
Vasu Devan
'மூன்று தெய்வங்கள்'
'நடப்பது சுகமென நடத்து' பாடல் ஆய்வு.
ஜாஹிர் சார், ராமு சார் இவர்களின் விருப்பத்திற்காக
படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.
கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.
அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.
காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச் சான்றுகள்.
'ச்சும்மா' ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.
ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
Vasu DevanGroup admin https://www.youtube.com/watch?v=NJYmQ47Mg-o
TMS
youtube.com
Last edited by sivaa; 29th October 2017 at 09:01 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th October 2017, 09:06 AM
#1446
Senior Member
Devoted Hubber
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
57 வது வெற்றிச்சித்திரம்
அவள் யார்? வெளியான நாள் இன்று
அவள் யார்? 30 அக்டோபர் 1959
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th October 2017, 09:20 AM
#1447
Senior Member
Devoted Hubber
-
30th October 2017, 10:14 PM
#1448
Senior Member
Devoted Hubber
இன்று இரவு 10 மணிக்கு K டிவியில்
பசும் பொன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th October 2017, 10:21 PM
#1449
Senior Member
Devoted Hubber
சபா
1988 ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆலயத்திற்கு
பெரிய ஆலயமணி காணிக்கை
செலுத்தியது எத்தனை பேருக்கு
தெரியும்! ! இரவு வணக்கம்! !
............................................
Subramanian Natarajan செய்யும் உதவியை அடுத்தவருக்கு தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்பவர் நமது நடிகர் திலகம்.
................................
Saravanan Shanmugam VILAMBARAM PADUTHATHA KALIUGA KARAN,KALAI DEIVAM,KALAIMA MANNAN PALA KODIGALI VARI VALUNGAIYA ORA KODAI VALLAL EN THALAIVAN ,ANNAN SHIVAJIGANESAN THAAN.
.......................................
Hari Krishnan தலைவா் கா்ணன்.வலது கை கொடுப்பது இடது கைக்கு தொியாது
...............................
Natraj Chitty அவர் எல்லாருக்கும் உதவி செய்தார். ஆனால் விளம்பரப்படுத்த வில்லை.
Last edited by sivaa; 30th October 2017 at 10:23 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st October 2017, 12:08 AM
#1450
Senior Member
Devoted Hubber
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
58 வது வெற்றிச்சித்திரம்
பாகப் பிரிவினை வெளியான நாள் இன்று
பாகப் பிரிவினை 31 அக்டோபர் 1959
200 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்
Last edited by sivaa; 31st October 2017 at 04:39 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks