மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் விஜய்
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான தலைவாசல் விஜய், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நீலாமாலா தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானர். அதன்பிறகு கோபிகா, கங்கா யமுனா சரஸ்வதி தொடர்களில் நடித்தார். தலைவாசல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், அன்று முதல் தலைவாசல் விஜய் ஆனார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்தார். யுகபுருஷன் என்ற மலையாளப் படத்தி ஸ்ரீ நாராயணகுருவாக நடித்து, சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார்.
தலைவாசல் விஜய் தற்போது அழகு சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இதில் அவர் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கிறார். அவரது மனைவியாக ரேவதி நடிக்கிறார். 5 குழந்தைகளை கணவன், மனைவி இருவரும் எப்படி வளர்த்து ஆளாக்கி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதான் கதை.
நன்றி: தினமலர்





Reply With Quote
Bookmarks