-
16th April 2018, 07:45 PM
#2191
Senior Member
Devoted Hubber
பாவ மன்னிப்பாச்சே, மிஸ் செய்துவிட்டால் பிறகு எங்கே பாவ மன்னிப்பைப் பெறுவது,
வேறு ஒரு சூழலில் சிக்கியதால் வந்த மன உளைச்சல்,
எப்படியும் மஹாலட்சுமியை சென்றடைய வேண்டும், என்ன தலைவரின் ஓப்பனிங் சீனை விட்டு விடுவோம் ஐயோ எல்லோரும் கொண்டாடுவாங்களே எப்படி விட்டுவிட முடியும்,
பாரத விலாஸ் சக்கப் போடு போடு ராஜா விதமாக எனக்குள்ளாகப் பேசிக் கொண்டே கைகளில் அகப்பட்ட டூ வீலரில் பறக்கிறேன்,
வேப்பேறியை நெருங்கும் போது போஸ்டர்களின் வரவேற்பு, போகப் போக பாதியளவு போஸ்டர்களை பா...விகள் எதை எதையோ ஒட்டி மறைத்து இருந்தனர், அந்தப் பாவிகளுக்கு பாவ மன்னிப்பு கிடையவே கிடையாது,
சரி ஒரு வழியாக தியேட்டரை சென்று அடைந்து அருகில் சென்றால் கேட் பூட்டப்பட்டு " ஹவுஸ்புல்" போர்டை தொங்க விட்டிருந்தார்கள், கேட் கிரில் கேட் என்பதால் உள்ளே அலசினேன் யாராவது நண்பர்கள் உதவுவார்கள் என்பதால், என்னை தியேட்டர் ஊழியர் கவனித்து சோகமாக பார்த்தார், " சார் ரொம்ப சிரமம் எடுத்து வந்திருக்கேன் எனக்கு உட்கார இருக்கையெல்லாம் வேண்டாம் டிக்கெட் மட்டும் கொடுத்து உள்ளே அனுமதியுங்கள் என்றேன்" அவரோ இல்லை சார் டிக்கெட் மொத்தம் தீர்ந்துப் போயிடிச்சி என்றார், " ஏதாவது ஒரு வழியை நீங்களே சொல்லுங்க சார் என்றேன்" கொஞ்சம் வெயிட் பன்னுங்க சார், யாராவது வெளியே போக வருவாரு அப்படி வந்தாரானால் அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுங்கள் என்றார்,
கொஞ்சம் பொறுத்த எனக்கு தியேட்டர் ஊழியர் எதிர்பார்த்தபடி ஒரு நண்பர் அவசர அவசரமா வெளியே போக வந்தாரு , அவர் டிக்கெட்டையும் எனக்குக் கொடுத்தாரு நானும் டிக்கெட் கட்டணத்தை அவருக்கு கொடுத்தேன் ஆனால் நம்மவராச்சே வாங்க மறுத்து " சார் நான் திண்டிவனம் போகனும் தலைவருடைய முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன், நேரமாகுது நீங்க பாருங்க என்று கிளம்பிவிட்டார், நானும் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை தியேட்டர் ஊழியரின் கையில் கொடுத்து விட்டு உள்ளே பாய்ந்தேன்,
அதற்கு மேல் சொல்ல எப்படி சொல்ல?
மஹாலட்சுமி தியேட்டர் 57 ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டது,
பாவ மன்னிப்பு வெளியான அன்றைய கொண்டாட்டத்தை நமக்கு உணர்த்தும் விதமாக நடிகர் திலகத்தின் பக்தர்களின் அமர்க்களம்,
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்,
மற்ற நடிகர்களுக்கு அமைந்த ரசிகர்கள் சண்டைக் காட்சிக்கும், பாடல் காட்சிக்கும் மட்டுமே விஷில் அடிப்பதும் கூச்சல் போடுவதும்
ஆனால் நடிகர் திலகம் ரசிகர்கள்
நடிகர் திலகம் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுத்தும் நடிப்பை கொண்டாடுகின்ற ரசிகர்கள் 57 ஆண்டுகள் கடந்தும் பாவ மன்னிப்பை ரசிக்கும் அழகு,
நடிகர் திலகம் ரசிகனாய் இருப்பதற்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
courtesy sekar f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th April 2018 07:45 PM
# ADS
Circuit advertisement
-
16th April 2018, 07:47 PM
#2192
Senior Member
Devoted Hubber
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.
courtesy senthilvel f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th April 2018, 07:49 PM
#2193
Senior Member
Devoted Hubber
vee yaar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th April 2018, 08:03 PM
#2194
Senior Member
Devoted Hubber
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன் பக்தவச்சலம், நடிகர் திலகம், கமலா அம்மாள், சாவித்திரி, தேவிகா, ஏ.எல்.எஸ், மாதவி, கோபாலகிருஷ்ணன், சந்தியா ,ஜெயலலிதா, ஜெமினி ராஜசுலோசனா, சுசீலா, ஏ.வி எம்.ராஜன், S. வரலட்சுமி,வி. கே.ராமசாமி , டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் பலர்.
courtesy Lakshmankumar f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018, 05:52 AM
#2195
Senior Member
Devoted Hubber
அங்கே நீதி நேர்மை என தம்பட்டம் அடித்தவர்களின் நேர்மை எங்கே போய்விட்டது?
Last edited by sivaa; 17th April 2018 at 05:55 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018, 06:44 AM
#2196
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2018, 07:54 PM
#2197
Senior Member
Devoted Hubber
திருச்சி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இன்று(16.04 2018) வந்துள்ளது உங்கள் பார்வைக்கு
courtesy s.annadurai s.annadurai f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018, 07:58 PM
#2198
Senior Member
Devoted Hubber
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.
courtesy senthilvel f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018, 08:01 PM
#2199
Senior Member
Devoted Hubber
யாரோ எழுதிய கவிதை..!?
என் அலைபேசியின் கஜானாவிலிருந்து....
courtesy vaannila.vijayakumaran f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th April 2018, 08:12 PM
#2200
Senior Member
Devoted Hubber
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பழனி என்னும் ரசிகர் நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பதில் தீவிர நாட்டம் உடையவர்.மதுரை திருச்சி சேலம் என்று எங்கு நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டாலும் படம் பார்பதற்கு முன்
ஒரு நாள் முன்பாகவே அந்த ஊருக்கு சென்று தங்கி விடுவார்.படம் பார்த்தபின்னர்தான் ஊருக்கு திரும்புவார்.அந்த வழக்கம் இன்று வரை மாறவில்லை.அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும்.நடிகர்திலகத்தின் நடிப்பு ஈர்ப்பு வாழ்நாள் முழுவதும் மயக்கிக் கொண்டேதான் இருக்கும்.
மஞ்சள் குறிக்குள் இ...ருப்பவர்தான் பழனி
இது போன்ற ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை எல்லாம் தெரியாது.அவர்களுக்கு நடிகர்திலகத்தின் திரைப்படங்களே உற்சாகம்.
அவர்களையெல்லாம் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் ஆலமர விழுதுகள் போன்றவர்கள்.
courtesy senthilvel f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks