-
15th May 2018, 09:16 AM
#11
Senior Member
Devoted Hubber
'எதிர்பாராதது' படத்திற்குப் பின்பு பல படங்களுக்கு வசனம் எழுதி வந்த ஸ்ரீதர், சொந்தத்தில் படமெடுக்க விரும்பினார். அதற்காக திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. கோவிந்தராஜன் இருவருடன் சேர்ந்து நடிகர்திலகத்தை அணுகினார்.
நடிகர்திலகத்திடம், 'என்னிடம் ஒரு நயாபைசாவும் இல்லை. அமரதீபம் என்னும் பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதையில் தங்களை நாயகனாக வைத்து படமெடுக்க ஆசைப் படுகிறோம். உங்கள் பெயரைப் பயன்படுத்தி பத்திர...ிகைகளில் ஒரு முழுப்பக்க விளம்பம் தர அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்.
நடிகர்திலகமும் அதற்கு ஒப்புக் கொள்ள, வீனஸ் பிக்சர்ஸ் உதயமானது. அமரதீபம் தயாரானது.
சென்னை நகரத்தில் ஓடிய அய்யனின் சாதனைப்பட பட்டியலில் இன்று அமரதீபம்.
தமிழ்த்திரையில் நடிகர்திலகத்தின் ஜோடியாக சாவித்திரி நடித்த முதல்படம்.
நடிகர் திலகம் 'சிவாஜி பிலிம்ஸ் ' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, வெளியிட்ட முதல்படமும் இதுவே.
அமரஜீவி என்னும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி கண்ட படம்.
" நாணயம் மனுஷனுக்கு அவசியம் "என்னும் வாழ்க்கையின் தத்துவார்த்தங்களை அலசிய புகழ்ப் பெற்ற இப்படத்தின் பாடலை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னாளில், நடிகர்திலகத்தை இயக்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை காசினோவில் தொடர்ந்து நூறு காட்சிகளுக்கும் மேல் அரங்கு நிறைந்து ஓடிய வெற்றிப்படம் 'அமரதீபம்'.
courtesy vaannila f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th May 2018 09:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks