-
12th May 2019, 09:07 PM
#3501
Junior Member
Diamond Hubber
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்கள் -1976
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை எங்க வீட்டுபிள்ளை -1965
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் ! நம்நாடு -1969
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே நாளை நமதே -1975
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் - நினைத்ததை முடிப்பவன் -1975
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை நேற்று இன்று நாளை -1974
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே பணக்கார குடும்பம் -1964
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன் ரிக்ஷாக்காரன் -1971
நன்றி. சகோவிற்கு...
காலைவணக்கம்அனைவருக்கும்.......... Thanks wa.,
-
12th May 2019 09:07 PM
# ADS
Circuit advertisement
-
12th May 2019, 09:09 PM
#3502
Junior Member
Diamond Hubber
"எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது"
-ஆசை ஆசையாய் கேட்ட அன்புத்தலைவர் எம்ஜியார்..
பழனி ஜி.பெரியசாமி பெரிய தொழிலதிபர், சென்னை கிண்டியிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல் அதிபர்,
அவர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவருக்கு பல வகையிலும் உதவிகரமாக இருந்து எம்.ஜி.ஆரின்இதயத்தில் இடம் பெற்றவர்.
1984-சனவரி 1985 காலகட்டம்.எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உடல் நலம் தேறிவரும் சமயம். அவருடன் பழனி ஜி.பெரியசாமி, அவருடைய தனி மற்றும் அரசு செயலர்கள், அவருயை மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தலைவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் பழனி பெரியசாமியை பார்த்து,
"இப்போது எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது" என யாரும் எதிர்பார்க்காத ஆசையை வெளியிட்டார் தலைவர்.
அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சியாய் நின்றனர். காரணம் தலைவருக்கு நீரழிவு நோய் இருந்து சிகிச்சையில் இருக்கிறார். 'இப்போது போய் இப்படி கேட்கிறாரே!!' என ஆச்சரியம்.
ஆனால் கேட்பது எம்.ஜி.ஆர் ஆயிற்றே!! வேறுஎன்ன செய்வது? உடனே பழனி பெரியசாமி தன்னுடன் எம்.ஜி.ஆரின் தனி செயலர் பிச்சாண்டியை அழைத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் ஜாங்கிரி வேட்டைக்கு புறப்பட்டனர்.
ஆனால் அந்த சமயம் பார்த்து ஜாங்கிரி எங்குமே கிடைக்கவில்லை. விட முடியுமா? நியூயார்க் கடை த்தெரு இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் தேடுகின்றனர். ஜாங்கிரி லேசில் கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு வழியாக ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் கண்டு பிடித்தனர். ஆனால் பரிதாபம். நான்கே நான்குதான் இருந்தன. கிடைத்ததை வாங்கிக் கொண்டு வெற்றி வீரர்களாய் மருத்துவ மனைக்கு திரும்பினர்.
ஆனால் என்ன பத்து டாலர் ஜாங்கிரி வாங்கி வர அறுபது டாலர் செலவு!
எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து "என்ன? ஜாங்கிரி கிடைத்ததா?"
"ம்ம்.. கிடைத்தது.ஆனால் நான்குதான் கிடைத்தது." இவர்கள் பதில். இதன் பிறகுதான் ஒரு ஆச்சரியம்.
எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா??? மருத்துவமனையின் அந்த அறையில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். செவிலியர்களையும் சேர்த்து பதினொன்று வந்தது.
அதன் பிறகு தலைவர் அந்த நான்கு ஜாங்கிரிகளையம் பிட்டு பதினொரு துண்டுகளாக்கினார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஒவ்வொரு சிறு ஜாங்கிரித் துண்டையும் வழங்கினார்.
தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டு குழந்தை போல் சிரித்தார். அங்கிருப்பவர்களின் கண்களில் ஈரம் கசிந்தது.
அவர் நினைத்திருந்தால், ஜாங்கிரிகளை வைத்திருந்து பின்னர் சாப்பிட்டிருக்கலாம். அவர்தான் அன்னதான பிரபுவாயிற்றே! முடியுமா?
அவர் அன்னை ஊட்டி வளர்த்த அந்த பண்பு அவர் ரத்தத்தில் ஊறியதாயிற்றே!! எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரைப் போன்ற கொடைத்தன்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் இவ்வுலகில் உள்ளனரா?
தேடிக்கொண்டேயிருப்போம்!!!! அவர் இன்னொறு முறை பிறக்கும் வரை.............. Courtesy : fb.,
-
12th May 2019, 09:10 PM
#3503
Junior Member
Diamond Hubber
சென்னையில் தலைவரின் புகழ்பாடும் அண்ணன் மனிதநேயர், கல்வியாளர், உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர், வடவனுரில் புரட்சித்தலைருக்கு புனிதஇல்லம் கண்டவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தங்கத்தலைவரின் புனித பெயரை பதிக்க சொன்ன முதன்மையானவர், தலைவரின் உண்மை உள்ளங்களுடன் என்றும் உறவாடும் தூயவர்.,முன்னாள் சென்னை பெருநகர. மேயர், என்று அன்புடன் அழைக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் சைதை சா. துரைசாமி அவர்களுக்கு பாராட்டு விழா. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா , ஆந்திரா என அங்கு வாழும் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் யாவரும் பங்கு கொள்ளும் விழா. "தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் சைதையாருக்கு பாராட்டு விழா" என்ற தலைப்பில் இவ்விழா சென்னையில் (ஜுன் 2019) மிகப்பெரிய அரங்கில் லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியுடன் பல முக்கிய கலையுலகினர் தலைவருடன் அரசியலில் பங்கு கொண்ட சான்றோர்கள்,.பத்திரிக்கை,மீடியா என அமர்க்களமான விழாவில் உணவுடன் விழா நடைபெறுகிறது. இதில் அண்ணன் திரு. முருகபத்மனாபன் முன்னிலையில் மதிப்பிற்குரிய வேல்ஸ் பல்கலை வேந்தர் தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வருகையில்.... பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு தலைவரின் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் ஒத்துழைப்பு கொடுக்க இனிதே இவ்விழா மாபெரும் விழாவாக நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. விழா பற்றி தேதி இடம் இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்பதை தலைவரின் அன்புள்ளங்கள், உண்மை உள்ளங்களுக்கு தெரியபடுத்துகிறோம். நன்றி. உரிமைக்குரல் ராஜூ மற்றும் EB.மோகன்.......... Thanks wa., Friends...
-
12th May 2019, 09:12 PM
#3504
Junior Member
Diamond Hubber
ஒருவன் மனது ....
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
♥♥♥♥............. Thanks wa.,
-
12th May 2019, 09:25 PM
#3505
Junior Member
Diamond Hubber
நாளை முதல் (10-05-2019) ஏரல் சந்திராவில் (தூத்துக்குடி மாவட்டம் ,)
புரட்சிநடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை "தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது.....தகவல் உதவி.நெல்லை நண்பர் திரு.வி. ராஜா....... Thanks wa.,
-
14th May 2019, 07:24 PM
#3506
Junior Member
Diamond Hubber
தென்னிந்திய படவுலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான விஜயா வாஹினி யின் தயாரிப்பில் மக்கள்திலகத்தை வைத்து தயாரித்த மறைந்த தெய்வத்திரு. நாகிரெட்டி அவர்களின் மாபெரும் காவியங்களான எங்க வீட்டுப்பிள்ளை, நம்நாடு மற்றும் பல திரைப்படங்களை தந்த அண்ணாரின் அன்பு மகன் திருமிகு B.வெங்கடராமரெட்டி அவர்கள் 12.05.2019 (ஞாயிறு) அன்று காலமானார்கள். கடைசியாக நமது உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக 2015 ல் நடைபெற்ற பொன்விழாவிற்கு துணைவியாருடன் வருகை தந்து சிறப்பித்தார்கள். மகிழ்ச்சியுடன் தலைவர் பற்றி பேசினார்கள். விழாவிற்கு அழைத்த போது உங்களை போன்றவர்கள் மக்கள்திலகத்திற்கு விழா எடுப்பது அவர்களின் உண்மையான ஆசி கிடைக்கும் என்று சொன்ன வார்த்தை இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. அன்பு கொண்ட கணவரை இழந்து வாடும் திருமதி. பாரதி வெங்கடராம ரெட்டி அவர்களுக்கும் அவர்களின் மகன் மகள் வாரிசுகளுக்கும் குடும்பத்தினர்களுக்கும் புரட்சித்தலைவரின் பக்தர்கள் அமைப்புகள் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் ,.அபுதாபி திரு. சைலேஷ் சார் அவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளும் உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,
-
14th May 2019, 07:26 PM
#3507
Junior Member
Diamond Hubber
உலக சரித்திரத்தில் புகழின் உச்சியில் திகழும் தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியுடன்...... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் ஐம்பெரும் விழா! 1. கலைத்துறை வாழ்வில் காவிய நாயகனின் 85 வது ஆண்டின் விழா ! 2. மக்கள்திலகத்தின் நம்நாடு திரைப்பட பொன்விழா! 3. புரட்சித்தலைவருக்கு புகழ் சூட்டிய சான்றோர்களுக்கு பாராட்டு விழா! 4. காலத்தை வென்ற நாயகனின் திரைப் பாடல்களின் இசை விழா! 5. மனிதநேயர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சூட்டும் கவிதை விழா! மற்றும் பல்வேறு நிகழ்வுகளுடன் ஜுலை மாதம் விழா நடைபெறும். இவ்விழா ஒருங்கிணைப்பு : உலக எம்.ஜி.ஆர். பேரவை, வேல்ஸ் பல்கலை கழகம், ஒலிக்கிறது உரிமைக்குரல். விழா வருகை , ஒத்துழைப்பு தலைவரின் வழியில் (தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடகா கேரளா ஆந்திரா) வாழும் அன்பு உள்ளங்கள். இந்நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக்கூட்டம் 9.06.2019 ஞாயிறு அன்று நடைபெறும். முழுவிபரம் விரைவில்.... நன்றி! உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,
-
14th May 2019, 07:27 PM
#3508
Junior Member
Diamond Hubber
சென்னையில் தலைவரின் புகழ்பாடும் அண்ணன் மனிதநேயர், கல்வியாளர், உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர், வடவனுரில் புரட்சித்தலைருக்கு புனிதஇல்லம் கண்டவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தங்கத்தலைவரின் புனித பெயரை பதிக்க சொன்ன முதன்மையானவர், தலைவரின் உண்மை உள்ளங்களுடன் என்றும் உறவாடும் தூயவர்.,முன்னாள் சென்னை பெருநகர. மேயர், என்று அன்புடன் அழைக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் சைதை சா. துரைசாமி அவர்களுக்கு பாராட்டு விழா. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா , ஆந்திரா என அங்கு வாழும் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் யாவரும் பங்கு கொள்ளும் விழா. "தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் சைதையாருக்கு பாராட்டு விழா" என்ற தலைப்பில் இவ்விழா சென்னையில் (ஜுன் 2019) மிகப்பெரிய அரங்கில் லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியுடன் பல முக்கிய கலையுலகினர் தலைவருடன் அரசியலில் பங்கு கொண்ட சான்றோர்கள்,.பத்திரிக்கை,மீடியா என அமர்களமான விழாவில் சமபந்தி உணவுடன் விழா நடைபெறுகிறது. இதில் அண்ணன் திரு. முருகபத்மனாபன் முன்னிலையில் மதிப்பிற்குரிய வேல்ஸ் பல்கலை வேந்தர் தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வருகையில்.... பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு தலைவரின் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ஒத்துழைப்பு கொடுக்க இனிதே இவ்விழா மாபெரும் விழாவாக நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. விழா பற்றி தேதி இடம் இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்பதை தலைவரின் அன்புள்ளங்கள், உண்மை உள்ளங்களுக்கு தெரியபடுத்துகிறோம். நன்றி. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
-
14th May 2019, 07:32 PM
#3509
Junior Member
Diamond Hubber
சுய விளம்பர மோகத்தில் முதலிடம் வகித்தவர் கருணாநிதி . அவரை மிஞ்சி விட்டவர் ஜெயலலிதா இந்த இருவரும் இன்று இல்லை . மக்கள் மனதில் இந்த இருவருமே . மறக்கப்பட்டு விட்டார்கள் . புகழ் போதை எந்த அளவிற்கு கொடியது என்பதை இருவரும் உணர்த்தி விட்டார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு .
எம்ஜிஆர் மக்களை உண்மையான அன்புடன் நேசித்தார் . மக்களும் எம்ஜிஆரை உயிருக்கு உயிராக நேசித்தார்கள் .
எம்ஜிஆர் பக்தர்கள் லட்சக்கணக்கில் எம்ஜிஆரை நேசித்து கொண்டு வருகிறார்கள்
.
ஆனால் ஒரு சிலர் தங்களை முன்னிலைப்படுத்தி , எம்ஜிஆர் புகழை பரப்பாமல் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் . போட்டி போட்டு கொண்டு ஆலோசனை என்ற பெயரில் எம்ஜிஆரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கொண்டு வருகிறர்கள் .
உண்மையான எம்ஜிஆர் பக்தர்கள் செய்ய வேண்டிய ஆலோசனை
1. ஆளும் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு தரவேண்டும் .
2. அதிமுக தலைமை நிலையத்தில் எம்ஜிஆருக்கு உரிய மரியாதை தர கட்சி தலைமைக்கு உணர்த்த வேண்டும்
3. அரசு விளம்பரங்கள் மற்றும் கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் உருவம் கண்டிப்பாக பெரிய அளவில் இடம் பெற வேண்டும்
4. எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் காப்பாற்றிட முயற்சிக்க வேண்டும்
5. எம்ஜிஆர் படங்களை நல்ல திரை அரங்குகளில் தமிழமெங்கும் குறைந்த கட்டணத்தில் திரையிட கோரிக்கை வைக்கவேண்டும் .
6. 1977- 1987 மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் விடியோக்கள் படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்
7. எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்
இனிமேலாவது இந்த 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை செய்வார்களா ?.............. Thanks wa.,
-
15th May 2019, 03:12 PM
#3510
Junior Member
Diamond Hubber
புரட்தித்தலைவர் படங்களை முந்துவோம் அவர் ரசிகர்களை கதிகலங்க விடுவோம் என்ற சபதத்துடன் மதுரையில் சிவாஜி ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை சிவா மூவிஸ், இது சிவாஜி நடித்த யாரும் சீண்டாத சில படங்களை வாங்கி போஸ்ட்டர் மற்றும் பேனர்.தயாரிக்கும் ஆபிஸையும் (அலுவலகம்) தொடங்கி ,இவர்களே வசூல்சக்கரவர்த்தி மக்கள்தலைவர் என்று சிவாஜிக்கு பட்டபெயர் போட்டு போஸ்ட்டர் பேனர் வைத்து இவர்களே பணம்கட்டி இவர்களே படம்போட்டு இவர்களே டிக்கெட்களை வாங்கி மதுரை சென்ட்ரல் சினிமா பல படங்களைப்போட்டு இருபதாயிரம் சம்பாதிக்க பத்தாயிரம் ரூபாய் செலவுசெய்து வருகின்றனர். புரட்சித்தலைவரின் படங்களை திரையரங்கு நிர்வாகம் மற்றும் திரைப்படவிநியோகஸ்தர்கள் தானே முன்வந்து படம்போட்டு நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்து கொடுக்கும் புரட்சித்தலைவரின் படங்களை முந்திவிட்டாக இணையதளத்தில் பொய்யான தகவல் பரப்பும் வேலையை இதுவரை செய்துவந்தனர், வருகின்றனர். தற்போது வேறுநடிகர் நடித்த ஒற்றன் படத்தை வாங்கி செலவில்லாமல் பத்து பதினெய்தாய்ரம் சம்பாதித்து அதில் ஒன்றுக்கும் உதவாத வேறு சில சிவாஜி படங்களை வாங்கப் போகின்றார்களாம் அடுத்தபடம் புரட்சித்தலைவரின் படத்திற்கு அடுத்து சிவாஜி படம் போடாமல் இவர்கள் வாங்கிய ஒற்றன் படத்தைப் போடுகின்றார்கள் , புரட்சித்தலைவரின் சாதனையை முறியடிக்க எவ்வளவோ செய்கின்றார்கள் முடியுமா? அது இயலுமா?...... .... ......மதுரை எஸ் குமார்............ Thanks wa.,
Bookmarks