-
15th September 2019, 09:05 AM
#3801
Senior Member
Devoted Hubber
இன்று(13/09/2019) முதல் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்டம் ஆரம்பம்... #ரஜினிவெறியன் மகேந்திரன்.M.P. #நியூகிருஷ்ணா தளவாய்புரம்
நன்றி கா. செல்வபிரபு (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th September 2019 09:05 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2019, 12:43 PM
#3802
Senior Member
Devoted Hubber
செப்டம்பர் 15
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்
( இது ஒரு மீள்பதிவு)
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th September 2019, 01:01 PM
#3803
Senior Member
Devoted Hubber
நேற்று இந்து நாளிதழ் நடத்திய சிம்மகுரோலோன் சிவாஜி என்ற நிகழ்சியில் திரு. ராம்குமார் நன்றியுரை ஆற்றி சத்குரு எங்கள் வீட்டிற்கு வந்தது எங்கள் பாக்கியம். நீங்கள் சிவாஜி ரசிகர்கள் அனைவரும் மரம் நட்டு காவேரி கூக்குரலுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நன்றி Saravana Raja to நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் ( One and only Sivaji)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th September 2019, 09:18 PM
#3804
Senior Member
Devoted Hubber
○சிம்மக்குரலோன் 90 கட்டபொம்மன் 60. இந்து தமிழ் திசை நடத்திய அற்புத திருவிழாவில் பேசியவர்களில் எனது மனதை கவர்ந்தது. 2. சென்னையில் உள்ள ரஷ்யன் மையத்தின் நிர்வாக அதிகாரி திரு.தங்கப்பன் பேசும் போது திலகத்தின் இன்னுமொரு பரிமாணத்தை அற்புதமாக தெரிவித்தார்.ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்த போது திலகத்தை அழைத்து மரியாதை செய்ய நினைத்தாராம் அப்போதைய அதிபர் திரு.கோர்ப்பசேவ் அவர்கள். ஆனால் திலகத்தின் பல்வேறு பணிக...ளால் அது நிறைவேறவில்லை. தற்போது திரு.தங்கப்பன் திலகத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும் விரைவில் மூன்று மொழிகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் வெளியாகும் என்று ரசிகர்களின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் தெரிவித்தார். அந்த புத்தகத்தின் பெயர் SIVAJI THE COMRADE.இந்த புத்தகத்தின் மூலம் திலகத்தின் பெருமை உலகெங்கும் மீண்டும் பரவ போகின்றது.கம்யூனிச தலைவராம் திரு.ராமமூர்த்திக்கு திலகம் உதவியதையும் நினைவு கூர்ந்தார். அப்போதைய மேற்கு வங்க முதல்வர் திரு.ஜோதி பாசு திலகத்தின் இல்லத்திற்கே சென்று சந்தித்து தனது காரிலேயே திலகத்தை அமர வைத்து கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றதை பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். இது மட்டும் அல்ல சென்னையில் நடைபெற்ற விழாவில் Justice V R KRISHNAIYAR திலகத்தை வாசலில் வரவேற்ற போது திலகம் பதைபதைத்து என்னை வரவேற்க தங்கப்பன் இருக்கும் போது நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்ட போது நீங்கள் மகா கலைஞன் உங்களை நான் வரவேற்பதே முறையாக இருக்கும் என்று கூறியபோது அரங்கமே அதிர்ந்தது. தனது இறுதிநாள் வரை ரஷ்ய கலைஞர்களுக்கு தனது இல்லத்தில் மரியாதை செய்ததையும் நினைவு கூர்ந்து தனது உரையை நிறைவு செய்தார்.
நன்றி Vasudevan Srirangarajan (முகநூல்))
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 05:38 AM
#3805
Senior Member
Devoted Hubber
இன்று மாலை பாஞ்சாலங்குறிச்சி நாயகனுக்கு மதுரை அண்ணாமலை திரையரங்கம் சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பு செய்தது. இன்றைய மாலைக் காட்சி அரங்கு நிறைந்தது. அங்கே இன்றைய தினம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் (பல்வேறு படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன) இன்றைய மாலைக்காட்சியின் நிலவரம் என்ன என்று விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மாலைக்காட்சி ஹவுஸ்ஃபுல் ஆன ஓரே அரங்கம் அண்ணாமலைதான். அரங்கம் நிறைய வைத்தவர் நடிகர் திலகம் மட்டும்தான். இன்னும் சொல்லப் போனால் இந்தக்காட்சிக்கு வந்த நமது ரசிகர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. 98% பொது மக்களே.தகவல் திரு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள்
நன்றி Vasudevan Sri (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 10:13 AM
#3806
Senior Member
Devoted Hubber
நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருச்சியில் திறக்கப்படாத சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண் டானாவில் நிறுவப்பட்டு 8 ஆண்டு களுக்கு மேலாகியும் திறக்கப்படா மல் உள்ள திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் உருவச்சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர...்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் அறிமுகமாகி 300-க் கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார்.
குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சி ததும்பும் நடிப் பும், வசன உச்சரிப்புகளும் இவ ருக்கு லட்சக்கணக்கான ரசிகர் களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.
தமிழ் மற்றும் தெலுங்கு, மலை யாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். செவாலியே விருது, இந்திய அரசின் பத்ம, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி கால மானார்.
இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா வில் சிவாஜி கணேசனுக்கு 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், துணியைக் கொண்டு சிலை மூடப்பட்டது. சிலை திறப்பும் கிடப்பில் போடப்பட்டது.
மக்கள் மனதில்...
தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் நிறைந்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாட கங்களில் நடித்து வந்த சங்கிலி யாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர்.
இதுகுறித்து கவிஞர் நந்தலாலா கூறியதாவது:
சுதந்திரப் போராட்டம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆன்மிகவாதி கள் என பலரது வரலாற்றை சிவாஜி கணேசன் தனது நடிப் பாற்றலால் பாமர மக்களுக்கும் புரிய வைத்தவர் என்றால் அது மிகையல்ல.
மெருகேற்றிக் கொண்ட இடம்
சிவாஜி கணேசனுக்கு நடிப்பு, வசனம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை திருச்சி உறையூரைச் சேர்ந்தவர். திருச்சியில்தான் தனது நாடக நடிப்புக்கலையை சிவாஜி மெருகேற்றிக் கொண்டார்.
எனவே, திருச்சிக்கும் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், திருச்சி யில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவரது சிலையை திறக்க முடியவில்லை.
எனவேதான் திருச்சியில் உள்ள அனைத்து கலை இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து, ‘சிவாஜி கணேசன் சிலையை திற' என்ற ஓர் இயக் கத்தை முன்னெடுத்துள்ளோம். விரைவில் இதற்கான நடவடிக் கைகளும் தொடங்கவுள்ளன.
சிலையை இத்தனை ஆண்டு கள் திறக்காமல் இருப்பது மாபெரும் கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை என்றார். நன்றி. இந்து தமிழ் திசை.
நன்றி R Vijaya (to நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL.(முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 10:14 AM
#3807
Senior Member
Devoted Hubber
நன்றி Palaniappan Subbu (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 10:16 AM
#3808
Senior Member
Devoted Hubber
நன்றி The hindu Tamil
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 10:17 AM
#3809
Senior Member
Devoted Hubber
இணைந்த 85 வது நாள்
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
Last edited by sivaa; 16th September 2019 at 10:19 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019, 11:28 PM
#3810
Junior Member
Senior Hubber
Originally Posted by
sivaa
நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருச்சியில் திறக்கப்படாத சிவாஜி கணேசன் வெண்கலச் சிலைதிருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண் டானாவில் நிறுவப்பட்டு 8 ஆண்டு களுக்கு மேலாகியும் திறக்கப்படா மல் உள்ள திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் உருவச்சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி R Vijaya (to நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL.(முகநூல்)
கண்ட கண்ட சாக்கடைகளுக்கும் பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்த நாடோடிகளுக்கும் பெருமை சேர்த்த தமிழகத்தில் தன வாழ் நாள் முழுவதும் சமுதாய நலனுக்காக கலைப்பணி செய்த தமிழ் வாழ பிறந்த எங்கள் உயிர் உலகப்புகழ் சிவாஜி அவர்களின் சிலையை எந்த காரணமும் இன்றி திருச்சியில் மூடி வைத்து அழகு பார்க்கும் அடிமைகளின் முடிவு காலம் நெருங்கி விட்டது. சிலையை மூடி வைத்ததினால் எங்கள் சிவாஜியின் புகழ் மறைக்கபடும் என்ற கேவலமான நினைப்புடன் இருக்காதீர்கள் - புற்றீசல் போல் சிவாஜி ரசிகன் முளைத்து கொண்டே இருப்பான் அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் --தமிழையும் தமிழனையும் போற்றுவோம்
Bookmarks