-
3rd December 2019, 05:09 PM
#2131
Junior Member
Diamond Hubber
#நாட்டுநலனே #முக்கியம்
புரட்சித்தலைவர் முதன்முதலாக தமிழக முதல்வராக இருந்தபோது பாரதப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அவருக்கு ஆதரவாக எம்ஜிஆர் நடந்து கொண்டார். அதன் பின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவருக்கும் எம்ஜிஆரின் ஆதரவு தேவைப்பட்டது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவை அளித்து வந்தார். அதன் பின்னர் சரண்சிங் பிரதமரானார். அவருக்கும் ஆதரவு தேவைப்பட்டது...
இப்படி தொடர்ந்து மத்திய அரசில் யார் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.
இதுபற்றி எம்ஜிஆரிடம் நிருபர்கள் கேட்டபோது எம்ஜிஆர் கூறிய "ப்ராக்டிகலான" விளக்கம்...
"தனிப்பட்ட எம்ஜி இராமச்சந்திரன், மத்தியில் யார் ஆட்சி செய்கிறார் என்று பார்த்து ஆதரிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் நான் மத்திய அரசில் யாரிருந்தாலும் ஆதரிக்கிறேன். இதற்கு ஒரே காரணம்...
#தமிழக #மக்களின் #நலம் #தான்...
தேவையில்லாமல் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து அதனால் மக்களுக்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை, உதவிகளை ஏன் தடுக்கவேண்டும்...? அப்படி மத்திய அரசு தவறும் பட்சத்தில் நாம் நியாயமாக, பிரச்சனைகளை சரியான முறையில் அவர்களிடம் அணுகலாமே ?
"மாநில அரசு என்றால் மத்திய அரசை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதல்ல..."
மத்திய அரசுடன் நட்புடன் இருந்து கூடுமானவரை நலத்திட்டங்கள் பெற்று தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும்.
இது தான் எனது கொள்கை, மற்றவர்களின் விமர்சனம் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை...என்றார் எம்ஜிஆர்.
இந்த உயரிய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் மனிதநேயமும் இருந்ததால் தான் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியப் பெருந்தலைவர்களில் ஒருவராகி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார்.
அரவணைத்துப் போதல் கோழைத்தனமுமல்ல... விதண்டாவாதமும், பிடிவாத குணமும் வீரமுமல்ல...
ஒரு மன்னருக்குரிய குணங்களையும், தகுதிகளையும் பெற்றிருந்ததால் தான் வாத்தியார் "மன்னாதி மன்னனாக" என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ இயலாது........... Thanks.. ............
-
3rd December 2019 05:09 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2019, 11:33 PM
#2132
Junior Member
Diamond Hubber
-
3rd December 2019, 11:34 PM
#2133
Junior Member
Diamond Hubber
-
3rd December 2019, 11:35 PM
#2134
Junior Member
Diamond Hubber
-
3rd December 2019, 11:36 PM
#2135
Junior Member
Diamond Hubber
-
3rd December 2019, 11:36 PM
#2136
Junior Member
Diamond Hubber
-
4th December 2019, 03:33 PM
#2137
Junior Member
Diamond Hubber
........... Thanks.........
-
4th December 2019, 03:35 PM
#2138
Junior Member
Diamond Hubber
29/11/2019 முதல் ஈரோடு- சங்கீதா DTS.,வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய
டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை", தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...
த்கவல் உதவி .ஈரோடு திரு.எம்.கே.ராஜா....... Thanks.........
-
4th December 2019, 05:00 PM
#2139
Junior Member
Platinum Hubber
கல்கண்டு வார இதழ் -04/12/19
-----------------------------------------------
பொன்மனம்* எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். அ. தி.மு.க. கட்சியினை ஆரம்பித்து அதற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் .* தனக்கு மாலை அணிவிப்பவர்கள் தன்னோடு புகைப்படம் எடுத்து கொள்ள விரும்புபவர்கள் கட்சி நிதியாக பத்து*ருபாய் தர வேண்டும் என் நிபந்தனை விதித்தார் .**
ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொள்ளும்போது அவரின் தோளில்*கை போட்டு படம் எடுக்க போஸ் கொடுத்தார் .* *எம்.ஜி.ஆர். இதை எதிர்பார்க்கவில்லை . அவரின் பாதுகாவலர்கள் அந்த ரசிகரின் செயலை தடுக்க முயன்றனர் .
எம்.ஜி.ஆர். அவரை தடுக்காமல் , இவர் பணம் தந்து படம் எடுத்துக் கொள்கிறார் .* இந்த நேரத்தில் இவரை போன்றவர்கள்* நமக்கு எஜமானர்கள் போல. அவர் விருப்பப்படி படம் எடுத்துக் கொள்ளட்டும் .* தடுக்க வேண்டாம் .* என சிரித்தபடி*பாதுகாவலர்களிடம் கூறினார் .* மற்றவர்களும் அவரவர் விருப்பப்படி எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொண்டனர் .**
-
4th December 2019, 05:00 PM
#2140
Junior Member
Platinum Hubber
கஷ்டத்திலும் கர்ணன்*
----------------------------------
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உடல் நலம் குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .* அவரை காண எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்றார் .* கலைவாணரின் உடல் நலம் குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர். பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால் படுக்கைத் தலையணை அடியில் ருபாய் நோட்டு கட்டு ஒன்றினை கலைவாணருக்கு தெரியாமல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றார் .**
ருபாய் நோட்டு கட்டினை கண்ட கலைவாணர் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து*ஏம்பா ராமச்சந்திரா கொடுத்ததுதான் கொடுத்தாய் . சில்லறை நோட்டுகளாக*தரக் கூடாதா ?* என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய வசதியாக இருக்குமே என்றார் .
வறுமையிலும் கலைவாணரின் கொடைத்தன்மையை கண்ட எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின .**
Bookmarks