-
1st May 2020, 05:22 PM
#121
Junior Member
Diamond Hubber
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."........... Thanks...
-
1st May 2020 05:22 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2020, 05:23 PM
#122
Junior Member
Diamond Hubber
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது
அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்
இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்
புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?
ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்
அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை
ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.
இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்
இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது
சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்............. Thanks...
-
1st May 2020, 05:24 PM
#123
Junior Member
Diamond Hubber
��☘��☘��☘��☘��☘��☘
*��மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*.......... Thanks...
-
1st May 2020, 05:25 PM
#124
Junior Member
Diamond Hubber
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#திருமணம்_அழைப்பு
எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.
நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்....... Thanks...
-
1st May 2020, 05:26 PM
#125
Junior Member
Diamond Hubber
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?
அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.
நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.
யார் அவர்..?
ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.
இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.
இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.
அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.
அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.
சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks...
-
1st May 2020, 05:28 PM
#126
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் பக்தர்களே
1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்
அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
A.L.நாராயணன்
இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்
உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்
A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட
அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்
இந்த செய்தி வந்துள்ளது
இந்த செய்தியை நம்பாதவர்கள்
இப்போது உயிரோடு உள்ள
A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்
/////////////////////////////////////////////$$$$/////
நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்
ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .
MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்
இதையறிந்த நான்
MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்
அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்
MGR அவர்களை சந்தித்தார்கள்
தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்
மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /
ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
என்று கூறினார்/
அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்
பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்
உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை
இண்டர்காம்போண் மூலம் அழைத்து
தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்
அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்
இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்
MGR அவர்கள்
ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்
அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்
அவர்களிடம் உங்கள் மகன்
டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று
MGR கூறினார்
இதைக்கேட்டவுடன் நான்
அசந்துவிட்டேன்
இதனால்தான் தமிழ்
நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து
முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்
இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்....... Thanks.........
-
1st May 2020, 05:47 PM
#127
Junior Member
Diamond Hubber
திரை உலகில் எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் படங்கள் என்றாலே முதலில் அவருடைய பாடல்கள் .
எம்ஜிஆரின் புதுமையான சண்டை காட்சிகள் .
எம்ஜிஆரின் இனிமையான காதல் காட்சிகள் .
எம்ஜிஆரின் மாறு பட்ட நடிப்பு.
எம்ஜிஆரின் அறிவுரை காட்சிகள்.
எம்ஜிஆர் படம் என்றால் பொழுது போக்கு படமாகவும் , மக்களின் மன மகிழ் படமாகவும் சமுதாய சீர்திருத்த படமாகவும் இருந்தது .
எம்ஜிஆரின் கொள்கை - பிரகடனங்கள் .
1947 முதல் 1978 வரை வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா கட்சியினரும் , பெண்களும் பார்த்து மகிழ்ந்தனர் .
எம்ஜிஆர் படங்களுக்கு repeated audience ஏராளம் . எனவேதான் அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியது .
எம்ஜிஆரின் சினிமா - அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ள முடியாதவர்களின் வாதங்கள் எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் முன் மங்கி விட்டது .
எம்ஜிஆரின் செல்வாக்கு - புகழ் இரண்டையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வெற்றி பெற்றவர்கள்காங்கிரஸ் முதலாளிகள் .அவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றர்கள்.கட்சியில் கூட்டு வைத்தும் வெற்றி பெற்றார்கள் .
தோல்விகளுக்கு ஆயிரம் கரணங்கள் கூறலாம் . வெற்றிக்கு ஒரே காரணம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் ...... Thanks...
-
1st May 2020, 05:48 PM
#128
Junior Member
Diamond Hubber
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்
எம்ஜிஆருடன் அறிமுகம்
நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.
ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.
வினோபா பாவேயின் சீடருக்காக
எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.
சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.
எம்ஜிஆர் தந்த வீடு
ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.
அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.
எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .
ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,
அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .
இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .
இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....
கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .
தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது ....... Thanks...
-
1st May 2020, 05:48 PM
#129
Junior Member
Diamond Hubber
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை
திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்
திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்
உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்
தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்
தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்
குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்
வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்
வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்
கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்
உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்
தரக்குறைவான வசனங்களை பேசாதவர்
எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்
இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்
இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....
நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து...... Thanks...
-
1st May 2020, 05:50 PM
#130
Junior Member
Diamond Hubber
திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.
இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.
கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.
எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்......... Thanks....
Bookmarks