-
18th July 2020, 05:39 PM
#311
Junior Member
Diamond Hubber
வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள்.
’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள்....
‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன....
எம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும்! தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு
தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் மற்ற பாடல்களும் பெரிதாக ஹிட் ஆனவைதாம் என்றபோதிலும் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் எம்ஜிஆர் பிராண்ட் பாடலாக பெரிதும் விரும்பப்பட்டு ரசிக்கப்பட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதற்கு முன்னரேகூட எம்ஜிஆருக்காக அவருடைய பிராண்ட் பாடலை வாலி எழுதியிருந்தபோதும் மிக மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட பாடலாக இதைத்தான் சொல்லவேண்டும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் சாமான்ய மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல் பதில் சொன்னபோதும், கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான் எம்ஜிஆர் இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார் என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து எம்ஜிஆர் என்றனர். இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.
‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்....
ரசிகர்களின் மனதில் என்றென்றும் வாழ்பவர் எம்ஜிஆர்
அந்த மூன்றெழூத்து. அர்த்தம்புரிந்து
m.g.r. .மூன்றெழூத்து...✌
மூச்சி... மூன்றெழூத்து..
அண்ணா...மூன்றெழூத்து..
அர்த்தம் ....
கடமை..கண்ணியம்...கட்டுப்பாடு
இதுதான்..தலைவரின்.கொள்கை............
-
18th July 2020 05:39 PM
# ADS
Circuit advertisement
-
18th July 2020, 05:40 PM
#312
Junior Member
Diamond Hubber
சத்துணவு திட்டம் கவர்ச்சிகர திட்டம் அல்ல தமிழக குழந்தைகளின் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசத்தின் அடையாளம்.
#மதிய உணவு திட்டத்தில் போடப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் #குப்பையில் கொட்டுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் #அரங்கநாயகம் எம்ஜிஆரிடம் சொல்ல #அய்யய்யோ சாப்பாட நிருத்திடாதீங்க என பதட்டத்துடன். #சாப்பாட்டை பள்ளிகளிலேயே சுடச்சுட சமைத்துபோட்டால் என்ன என்று கேட்க்கிறார்.. #நம்மகிட்ட சமையல் தெரிந்த ஆட்கள் அதிகம் இல்லை,நிதியும் நம்மிடம் இல்லை திட்டம்
சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதிகாரிகள்..
#எம்ஜிஆர் விடுவதாக இல்லை. ஒருதிட்டத்தை தயார் பண்ணுங்க என்று #திரு.அரங்கநாயகத்திடம் உத்தரவிட ஏற்கனவே கோவையை சேர்ந்த #பேராசிரியை ஒருவர்கொடுத்த குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய நியூட்ரிஷியன் புஃட் என்கிற பைல் இருக்கு என்கிற செய்தி சொல்லப்பட, எம்ஜிஆர் அந்த பைலை கேட்டு அதை படித்தபிறகு
#அந்த அம்மாவை கூப்பிடுங்க என உத்தவிட
#கோவையை சேர்ந்த #ராஜம்மாள் தேவதாஸ் #மனையியல் கல்லாரியில் வேலை பார்த்தவங்களை அழைத்து நீங்க இருந்து திட்டத்தை நடைமுறை படுத்துங்க என்று அவரை திட்டத்தில் இணையச்செய்தார்கள்.
#அவங்க கொடுத்த ப்ராஜக்டின் தலைப்பான ""நியூட்ரிஷியன் புஃட் " ஐ #சத்துணவாக மொழிமாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.
தமிழக #குழந்தைகளின் மீது எம்ஜிஆருக்கு இருந்த #பாசத்தாலும், #பசியின் கொடுமையை அனுபவித்தவர் வேகமாக நடைமுறைப்படுத்தினார்.
#சத்துணவு திட்டத்திற்கு இந்திராகாந்தியின் #மத்தியஅரசு பணம் ஒதுக்க மறுத்தது. அத்துடன்
#ஆர்.பி.ஐ தமிழ்நாட்டு அரசு வங்கிகளில் வாங்கிய #ஓ.டி யின் தொகைக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை செய்தது #பிரனாப் முகர்ஜி.
#ஏழைக்குழந்தைகளின் வயிறு நிரம்பி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு போவதை கொச்சை படுத்தின
#தமிழகத்தின் எதிர்கட்சிகள் ..
யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியம் என தனது திரையுலக #நட்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பல இடங்களில் #நட்சத்திர இரவுகளை நடத்தி #சத்துணவிற்காக நிதி திரட்டி வெற்றிகரமாக குழந்தைகளின் நலன் முக்கியம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
#நடிகராக இருந்த காலங்களில் மற்றவர்களுக்கு #கொடுத்து பழக்கப்பட்ட அவர் தமிழக குழந்தைகளுக்காக தன்னை சந்தித்தவர்களிடமெல்லாம் சத்துணவு திட்டத்தை சிறப்பாக செய்ய உதவி செய்யுங்கள் என மகிழ்ச்சியாக
#கையேந்த தொடங்கினார் என்பதுதான் சத்துணவின் வரலாறு..
#சத்துணவு என்பது கவர்ச்சி திட்டமல்ல அது அவரது #ஆன்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்.
#சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சி இந்தியாவில் மற்ற மாநில #குழந்தைகளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருந்த தால் 3 வருடங்களுக்குப்பிறகு #சத்துணவு திட்டத்தை இந்திய அரசு ஒரு திட்டமாக ஒத்துக்கொண்டது.
#சத்துணவு திட்டத்தால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்பின் மூலம்...........
-
18th July 2020, 05:41 PM
#313
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் பேரின்பம் .
படத்தின் தலைப்பு -எளிமையாக , இனிமையாக இருக்கும் .
கதா பாத்திரங்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கும் .
மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் பெரும்பாலும் '' வெற்றி'' என்ற வார்த்தையுடன்
தோன்றுவார் .
படத்தில் மிகவும் கண்ணியமாக பேசி நடிப்பார் .
எதிரிகளிடமும் முதலில் மரியாதை தந்து திருந்த வாய்ப்பு தருவார் .
வன்முறை காட்சிகள் அறவே இருக்காது .
தத்துவ பாடல்கள்
கொள்கை பாடல்கள்
காதல் பாடல்கள்
ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்திருப்பார் .
சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .
காதல் - வீரம் - கொள்கை பிடிப்பு - சமுதாய சீர்திருத்தம் - என்றெல்லாம் சம விகித்ததில் கலந்து
ஒரு ரசிகனை சிந்திக்க வைத்து , சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
விதத்தில் படங்களை மக்களுக்கு தந்தவர் மக்கள் திலகம் .
மொத்தத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
நல்ல பொழுது போக்கு சித்திரம்
இனியமையான பாடல்கள்
சீர் திருத்த கருத்துக்கள்
புதுமையான காட்சிகள்
மக்களின் மனதில் நிரந்தர கதாநாயகனாக என்றென்றும் குடியிருக்கும்
''புரட்சி தலைவர் எம்ஜிஆர் ''.படங்கள் என்றால் அது மிகையல்ல...........
-
18th July 2020, 05:46 PM
#314
Junior Member
Diamond Hubber
#அதான் #எம்ஜிஆர்
பட்டுக்கோட்டை குமாரவேல் என்பவர் சென்னை வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வானொலிக்காக நாடகக் கதை வசனத்தை எழுதுபவர்...இவர் எழுதிய 1000 க்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
ஒரு முறை அவருக்கு போன் கால் வந்தது...அதில்...
"நான் எம்ஜிஆர் பேசறேன்" ன்னு சொல்ல, யாரோ தமாஷ் பண்றாங்கன்னு நினைத்து, 'சாரி, நான் இப்ப ரெகார்டிங்ல இருக்கேன், அப்புறமா பேசுங்கனன்னு" சொன்னதும், "சரி, நீங்க ஃப்ரீயானதும் என் செக்ரட்டரி கிட்டப் பேசுங்க" என்று சொல்லி போனை வைத்தார் முதல்வர் எம்ஜிஆர்...
உடனே குமாரவேலுவுக்கு டவுட். உடனே ராமாவரத்துக்கு போன் பண்ணினதும், நிஜமாகவே எம்ஜிஆர் தான் பேசியிருக்கார்னு தெரிஞ்சுது. மனுஷன் பதறிட்டார்.
அடுத்த நாள் நேரில் சென்றார் குமாரவேல்...
எம்ஜிஆர் அவரை வரவேற்று, "ஒண்ணுமில்லே...! நேத்து ரேடியோவுல உங்க நாடகம் கேட்டேன்...
"ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்கணுங்கிற கருத்துள்ள நாடகம் அது. என்னை க்ராஸ் செக் பண்ணிக்க ரொம்ப உபயோகமாக இருந்தது. அதான் உங்களைப் பாராட்டிடலாம்னு கூப்பிட்டேன்..." என்றாராம் எம்ஜிஆர்.
ஆச்சரியத்தில் வாயடைத்து சிலையா நின்னுட்டார் குமாரவேல்...
இந்த கண்ணியமும் பெருந்தன்மையும் வேறு யாருக்கு வரும்...???...
-
18th July 2020, 05:47 PM
#315
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தை கௌரவித்த உலகின் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம்!
https://www.thaaii.com/?p=43329
ரோட்டரி ஃபால் ஹாரிஸ் அங்கீகாரம் (PAUL HARRIS FELLOW)
உலகில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ரோட்டரி அமைப்பு.
1905 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பால் ஹாரிஸ் மற்றும் அவருடைய மூன்று நண்பர்களும் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.
கிராமச் சூழ்நிலையில் வளர்ந்த பால் அவர்களுக்கு சிக்காகோ நகரத்தின் நெரிசல், பரபரப்பான வாழ்க்கை சலிப்படைய செய்தது.
நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி நட்புறவாடலை பெருக்கிக்கொள்ள இவ்வமைப்பைத் தொடங்கினார்.
காலப்போக்கில் ரோட்டரி பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
இன்றைக்கு உலகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 34 ஆயிரம் ரோட்டரி சங்கங்கள், 12 இலட்சம் ரொட்டேரியன்கள் என ஒரு பெரிய குடும்பமாக தங்கள் பகுதியில் மற்றும் உலகின் பிற பகுதியில் உள்ள சமூகத்தினர் மேம்பாட்டிற்காக திட்ட பணிகளைச் செய்து வருகிறார்கள்.
உலக வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளாக பல வகையான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும் ரோட்டரி அமைப்பின் இரு மாபெரும் சாதனைகள் என்று சொன்னால் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அய்க்கிய நாட்டு சபை அமைப்பதற்கு தங்கள் பங்கினை அளித்தது மற்றும் உலகத்தில் போலியோ என்ற கொடிய நோயை அழிப்பதற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டதும் ஆகும்.
ரோட்டரி அமைப்பு தொடங்கி 12 ஆண்டுகள் கழித்துதான் ரோட்டரி அறக்கட்டளை நிறுவப்பட்டது.
இன்றைக்கு உலக அரங்கில் நம்பகத் தன்மையும் நலப்பணிகள் செயல்படுத்துவதில் முன்னணியிலும் உள்ள அறக்கட்டளைகளில்* ரோட்டரி பன்னாட்டு அறக்கட்டளை உன்னத இடத்தில் உள்ளது.
உலகிலுள்ள பல இலட்சக்கணக்கான ரோட்டரி உறுப்பினர்களும், சமூக நலப் பணிகளில் ரோட்டரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் பெரும் நிறுவனங்களும் இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்கி வருகின்றன.
எண்ணற்ற அத்தகைய நிறுவனங்களில் இரண்டு உதாரணங்கள், பில்கேட்ஸ் அவர்களின் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் பிர்லா நிறுவனம். (இதற்கு மிக முக்கிய காரணம் குழுமத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி பிர்லா ஆவார்கள்).
ரோட்டரி உறுப்பினர்கள் மட்டுமின்றி* இவ்வமைப்பபில் இல்லாதவர்களும், ஆயிரம் அமெரிக்க டாலர்களை அறக்கட்டளைக்கு அளிக்கும்போது அவர்களை “பால் ஹாரிஸ் தகையாளர்” என்று அங்கீகரித்து கௌரவிக்கிறது. சான்றிதழும், பதக்கமும் அளிக்கப்படுகிறது.
கொடையாளிகள் யார் பெயரை குறிப்பிடுகிறார்களோ அவர்கள் பெயரில் அங்கீகாரத்தை பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை அளிக்கிறது.
கொடையாளிகள் தனி நபராகவோ, ரோட்டரி சங்கமாகவோ அல்லது ரோட்டரி மாவட்டமாகவோ இருக்கலாம். அவர்கள் தக்கார் பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.
ரோட்டரியைச் சார்ந்த கொடையாளர்கள், பல நேரங்களில், அத்தகைய அங்கீகாரத்தை சமூகத்தில் பல அரும் பணிகளை செய்துவரும் மாமனிதர்கள், தங்கள் மனம் கவர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள் என அலங்கரித்து அழகுப் பார்த்துள்ளனர்.
உலக அளவில் ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ விருது வழங்கப்பட்ட சில முக்கிய நபர்கள் மேனாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி காட்டர், மேனாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அமெரிக்க விண்வெளி வீரர் ஜேம்ஸ் லோவல், பன்னாட்டு ஐக்கிய நாட்டுக் கூட்டுச் சபையின் மேனாள் பொதுச் செயலாளர் ஜாவீர் பெரேஸ் தே க்யூலர் மற்றும் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ஜோன்ஸ் ஸ்டாக் என பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எண்பதுகளின் தொடக்கத்தில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.
படிக்கும் மாணவர்கள் பசி காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வேளையாவது அவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கட்டும் என்கின்ற உன்னத எண்ணத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க ரோட்டரி சங்கம் அவருக்கு ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ என்கிற அங்கீகாரம் அளித்து கௌரவித்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட அதற்கான சான்றிதழை அவருடைய வாரிசுதாரரான பெயரன் குமார் ராஜேந்திரன் அவர்கள் அதனை பத்திரமாக வைத்துள்ளார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அருங்காட்சியகத்தில் இச்சான்றிதழ் பொது மக்கள் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.
குமார் அவர்கள் என் இனிய நண்பரும் அன்புத் தம்பியும் ஆவார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரை நன்கு அறிவேன். அவர்கள் குடும்பம் முழுவதுமே ரோட்டரி அமைப்பிலே தங்களை இணைத்துக் கொண்டுள்ளது.
குமாரும் அவரது அன்புச் சகோதரி செல்வியும் எங்கள் சென்னை வடக்கு ரோட்டரி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கோ.*ஒளிவண்ணன்
மேனாள்* ஆளுநர்
ரோட்டரி மாவட்டம் 3232...
-
19th July 2020, 07:05 AM
#316
Junior Member
Diamond Hubber
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
......... Thanks...
நன்றி : தினமலர்] .........
-
19th July 2020, 03:20 PM
#317
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
13/07/20 -தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - என் அண்ணன்*
* * * * * * * *எம்.எம்.டிவி* *-* பிற்பகல் 2 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * *சன் லைஃப் - மாலை 4 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * *ஜெயாமூவிஸ் - இரவு 10 மணி - குலேபகாவலி*
* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -விவசாயி*
14/07/20 - சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாயின் மடியில்*
* * * * * * * தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - அடிமைப்பெண்*
* * * * * * *கிங் டிவி* * * *-பிற்பகல் 2 மணி* - அடிமைப்பெண்*
* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*
15/07/20- மெகா 24 டிவி - காலை 9 மணி - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி - கன்னித்தாய்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -* பாசம்*
16/07/20* பூட்டோ டிவி - காலை 9 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * * * தமிழ் மீடியா டிவி - பிற்பகல் 2 மணி -* மகாதேவி*
* * * * * * * சித்திரம் டிவி* - பிற்பகல் 3 மணி - அபிமன்யு*
* * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - சிரித்து வாழ வேண்டும்*
* * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*
* * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*
17/07/20* *சன் லைஃப்* -காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்**
* * * * * * * * மெகா 24 டிவி* - பிற்பகல் 2.30 மணி - ராஜராஜன்*
-
19th July 2020, 10:59 PM
#318
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துர ை பாரதி*30/06/20 அன்று சொன்ன*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை அன்றைக்கு பார்த்திருந்த ரசிகர்களாக இருந்தவர்கள் சத்திய சாட்சியாக* இன்றைக்கும் பார்க்கும் ரசிகர்கள்** இந்த கொரோனா என்கிற கொடிய நோய் அச்சுறுத்தும் காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் படங்களில் 100க்கு 60% எம்.ஜி.ஆர். படங்களாகத்தான் இருக்கிறது .போட்டி போட்டுக் கொண்டு, ஒவ்வொரு சேனலும் தேடி தேடி கண்டுபிடித்து எம்.ஜி.ஆர். படங்களை* ஒளிபரப்பும் நிலைதான் இருக்கிறது . அத்தனை படங்களையும் அவரது ரசிகர்கள் /பக்தர்கள் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .என்பது அவரது கடின உழைப்பு, திறமை, மக்கள் அவர்மீது வைத்திருந்த அன்பு ஆகியவற்றிற்கு சாட்சியாக இருக்கிறது ..
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான் வாழும் காலத்தில் வள்ளலாக மட்டும் இருந்ததில்லை .ஈகை, பிறர் மீது உள்ள அக்கறை கொண்ட சமூக நல ஈடுபாடு*சமூக ஈடுபாடு என்பது என்ன பிறர் மீதுள்ள அக்கறைதான் . பிறர் மீது எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் என்பது மிக முக்கியத்துவம்* வாய்ந்த ஒரு குணம் .*அந்த குணம்தான் இவ்வளவு பேரை அவரது அன்பின்பால்** ஈர்க்க செய்தது .அந்த ஈர்ப்பு என்பது எல்லோரும் செய்யமுடியும் . எல்லோராலும் செய்து காட்ட முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தார் .
மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்கள்மீது பிறர் அக்கறை கொள்ள வேண்டும் என்பது .சக மனிதன் மீது அக்கறை இல்லாதவர்கள்தான் அலட்சியம் காட்டுவார்கள் ஆணவம், அகந்தை காட்டுவார்கள் . தங்களுடைய சாதாரண அந்த அதிகபட்ச ஆறடி உயரத்திற்கு விஸ்வரூபம் எடுத்து***வியப்பு காட்டுவார்கள்* இப்படிப்பட்ட மனிதர்கள் இடையே , ஒரு மகோன்னதமான மனிதராக எம்.ஜி.ஆர். திகழ காரணம் அவர் பிற உயிர்கள் மீதும், மனிதர்கள் மீதும் காட்டிய அளவில்லா அன்பு, அக்கறை ஆகியவைதான் .
வேட்டைக்காரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பள்ளத்தில் 10க்கு மேற்பட்ட பாம்புகள் நெளிய, மேலே உள்ள* ஒரு சிறிய குன்றின்மீது இருந்து வில்லனுக்கு டூப்பாக நடிக்கும் ஸ்டண்ட் நடிகர் குதிக்க வேண்டும் . கீழே பள்ளத்தில் வாய்கள் தைக்கப்பட்டு உள்ள நிலையில் பாம்புகள் நெளிய வேண்டும் .அதன்மீது குன்றில் இருந்து விழுந்து அவர் புரள வேண்டும். இதுதான் காட்சி .அந்த காட்சிக்கு தயாராகும்படி ஸ்டண்ட் நடிகரை தயாரிப்பாளர் தேவர் கேட்டுக் கொள்கிறார் . ஆனால் அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். அந்த ஸ்டண்ட் நடிகரை அழைத்து நீங்கள் குதிக்கும்போது* கவனமாக குதிக்க வேண்டும் . கால்கள் பிசகிவிடக் கூடாது* அதே சமயத்தில் நீங்கள் விழும்போது அந்த பாம்புகள் மீது தவறி விழுந்து அவை செத்துவிடக் கூடாது ஆகவே கவனமாக இருங்கள்.வேண்டுமானால் கீழே மெத்தை போட சொல்லட்டுமா என்று கேட்டார் .அதெல்லாம் வேண்டாம். படப்பிடிப்பு மிகவும் தாமதமாகிவிட்டது . சீக்கிரம் காட்சியை படமாக்க வேண்டும் என்று தேவர் அவசரப்படுத்துகிறார் .தேவரின் அவசரத்தை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தாமல் ,எந்த அசம்பாதவிதமும் நடைபெற்று விடக் கூடாது, அந்த வாயற்ற ஜீவன்களுக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்து ,கூடவே இருந்து அந்த காட்சியை மிக கவனமாக, பாதுகாப்பாக படமாக்கும் வரை கண்காணித்தார் .முதலில் காட்சியை படமாக்க* அவசரப்படுத்திய தேவர் , எம்.ஜி.ஆரின் பொறுமை,கவனிப்பு, பாம்புகள், ஸ்டண்ட் நடிகர் மீது செலுத்திய தனிப்பட்ட அக்கறை அவர்களின் பாதுகாப்பு ஆகியன குறித்து ,படமாக்கிய பின்பு*எம்.ஜி.ஆரை பெரிதும் பாராட்டினார் .
1980பொது தேர்தலில் பிரச்சாரம் செய்ய எம்.ஜி.ஆர். சுற்றுப்பயணம் செல்கிறார் .எப்போதும் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் பாதுகாவலர்கள், உதவியாளர்கள்*கூட செல்கிறார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் . எந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் . எம்.ஜி.ஆரின் திறந்த வெளி வேன் செல்லும்போது,தொப்பியை தட்டிவிடாமல், மேலே கட்டியுள்ள கட்சி தோரணங்களை தூக்கி விடவேண்டும்*எந்த இடத்தில மக்கள் கூட்டமாக வரும்போது அவர்களை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் . பிறகு அவர்களை விலக்க வேண்டும் யாரை தலைவரிடம் நெருங்க அனுமதிக்க வேண்டும் என்பதெல்லாம் போய் கொண்டிருக்கும்போது ,திருச்சியில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு விடுதியில் தங்குகிறார் . மறுநாள் காலையில் மதுரைக்கு புறப்பட வேண்டும் .அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக* இருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறை அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சியரோ, அரசு அதிகாரிகளும் ,அவரது பாதுகாவலர்கள், உதவியாளர்களை சட்டை செய்யவில்லை .அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வேறு சில நபர்களை தங்க வைத்து விட்டு , சற்று தூரத்தில் உள்ள வேறு விடுதியில் அவர்களை தங்க வைத்தனர் .மறுநாள் காலையில் எம்.ஜி.ஆர். எழுந்து குளித்துவிட்டு பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராகி விடுகிறார் .* வேன்* புறப்பட்டுவிட்டது . ஆனால் உதவியாளர்கள் வேறு காரில்*பயணிக்கிறார்கள் .அவர்கள் எம்.ஜி.ஆர். காரை நெருங்கமுடியவில்லை** வேன்* சுமார் 20கி.மீ. சென்றதும் உதவியாளர்கள் உடன் வரவில்லை என்று அறிந்ததும்*என்ன செய்வது என்று யோசித்தார் .காரணம் அதிகாரிகள் செய்த குளறுபடியால் ஏற்பட்ட குழப்பம் . எம்.ஜி.ஆர். அவர்களை தன் அருகிலேயே தங்க வைக்க வேண்டும் என்பது திட்டம். அதிகாரிகளின் குளறுபடியால் அவர்கள் பின்தங்கி விட்டு தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் .
*உதவியாளர்களை காணவில்லை .அவர்கள் எங்கே போனார்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் எம்.ஜி.ஆர். கேட்கிறார் .அவர்கள் சற்று அயர்ந்து தூங்கிவிட்டார்கள் . சற்று தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர் .அப்படி இருக்காது* சரி பரவாயில்லை ,* அவர்கள் வரட்டும் என்று சொல்லி ,வேனை சாலையில் ஒரு மரத்தடியில்* நிறுத்த வைத்து ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து இளைப்பாறினார் . அவர்கள் வந்தபிறகு நாம் பயணத்தை தொடரலாம் என்று அதிகாரிகளிடம் கூறுகிறார் எம்.ஜி.ஆர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்து விடுகிறார்கள் .உதவியாளர்கள் வந்ததும் வேனில் ஏற சொல்லி ,பயணித்து பிரச்சாரத்தை முடிக்கிறார் . பிரச்சாரத்தை முடித்தபிறகு தங்கும் விடுதிக்கு வந்த பிறகு ,அவர்களிடம் ஏன் காலையில் தாமதமாக புறப்பட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார் .* அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு பதிலாக வேறு சிலருக்கு கொடுத்துவிட்டு சற்று தொலைவில் உள்ள விடுதியில் எங்களை தங்க வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் .அதனால்தான் தாமதமாகிவிட்டது என்றனர்* விவரங்கள் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே,மாவட்ட ஆட்சியரை அழைத்து ,உதவியாளர்களை பற்றி உங்களுக்கு தெரியாது .இவர்கள் என்னுடைய நிழலாக எத்தனையோ ஆண்டுகள்*பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் .என் தேவை என்ன .எனக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க வேண்டும்* எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்குத்தான் தெரியும்.* இவையெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை . ஆகவே அவர்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பது போல கூடுதல் சலுகைகள் அளித்து உதவ வேண்டும்*இது எனது வேண்டுகோள் என்று சொன்னார் .பின்பு உதவியாளர்களிடம் தனியாக நீங்கள் எப்போதும் உங்களுடைய மிடுக்கையோ,கோபத்தையோ அதிகாரிகளிடம் காண்பிக்க கூடாது .நாம் இருக்க போவது இந்த ஆட்சியில் 5 ஆண்டுகள்தான் .ஆனால் அவர்களோ அரசு பணியில் 58 வயது வரை நீடிப்பார்கள் .அவர்களை நாம் மரியாதை குறைவாகவோ,கவன குறைவாகவோ நடத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை சொன்னார் .
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஒருபுறம், சிவாஜி கணேசன் ஒரு புறமாக*சென்று கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர் .வாடிப்பட்டி அருகில் ஒரு வளைவில் திரும்பும்போது பொதுமக்கள் எம்.ஜி.ஆரின் காரை வழி மறித்து , அழுது கொண்டு நிற்கிறார்கள் . எம்.ஜி.ஆர். என்ன விஷயம் .என்ன நடந்தது என்று விசாரிக்க, சற்று நேரத்திற்கு முன்பு ,நடிகர் சிவாஜி கணேசன் காரும்* அவருடன் சில கார்களும் சென்றன . அதில்* ஒரு கார் சிறுவன் ஒருவன் மீது மோதி அவன் இறந்துவிட்டான் .ஆனால் ஒருவரும் அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள் .எம்.ஜி.ஆர்.*காரில் இருந்து இறங்கி, அந்த சிறுவனின் பெற்றோர்களை அழைத்து, ஏதோ கவனக்குறைவாக விபத்து நடந்துள்ளது தயவுசெய்து இதை பெரிதுபடுத்தவேண்டாம்* அவர்களை தகுந்தவகையில் சந்தித்து எச்சரிக்கிறேன் என்று சமாதானம் சொல்லி தன்* கையில் இருந்து ரூ.25,000/- அந்த பெற்றோர்களுக்கு கொடுத்து உதவினார் .உங்கள் மகன் இழப்பிற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் .அதை ஈடு செய்ய முடியாது .அவர்களை சந்தித்து,இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருக்கும்படி* மிகவும் கவனமாக பயணிக்கும்படி எச்சரிக்கிறேன் என்று கூறி விடைபெற்றார்.
அன்று இரவு தங்கும் இடத்திற்கு சென்றபிறகு ,சிவாஜி கணேசன் தங்கும் விடுதிக்கு போன் செய்து நடந்த விவரங்களை எம்.ஜி.ஆர். சோகத்துடன் சொல்கிறார் .நான் எப்படியோ ஒருவழியாக அவர்களிடம் பேசி, சமாதானம் சொல்லி, நிதி அளித்து* சமாளித்துவிட்டேன் .ஆகவே நீங்களும் சரி, உங்களுடன் வருபவர்களும் சரி , பயணிக்கும்போது, மிகவும், கவனமாக, எச்சரிக்கையாக*இருக்கவேண்டும் . பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நாம் விளைவிக்காமல்**பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார் .பிறர் மீது அவர் கொண்ட*அக்கறைதான் இன்றும் அவரை இந்த உன்னதமான, உயரமான இடத்தில நிலை*நிறுத்தி வைத்துள்ளது .அதுதான் எம்.ஜி.ஆர்.*
இனி மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலிபரப்பான* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ - அடிமைப்பெண்*
3.எம்.ஜி.ஆர்.- நம்பியார் உரையாடல் - தொழிலாளி*
4.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
5.நான் யார் தெரியுமா* - கொடுத்து வைத்தவள்*
6.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
7.நம்நாடு படத்தில் எம்.ஜி.ஆர்.*
8.செல்லக்கிளியே மெல்ல பேசு -பெற்றால்தான் பிள்ளையா*
9.எம்.ஜி.ஆர்.-சிவாஜி கணேசன் உரையாடல் -கூண்டுக்கிளி*
-
19th July 2020, 11:29 PM
#319
Junior Member
Platinum Hubber
இந்திய சினிமாவின் கலை*களஞ்சியம்*
-------------------------------------------------------------
உலக புகழ் பெற்ற* ஆக்ஸ்போர்டு* யுனிவர்சிட்டி பிரஸ் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டுடன்* இணைந்து வெளியிட்டுள்ள இந்திய* சினிமாவின்* *கலைக்களஞ்சியம்* என்ற நூலின் அட்டை முகப்பில் சத்யஜித்ரே , நர்கீஸ் , அமிதாப் பச்சன் , தேவ் ஆனந்த் ,ஷபனா* ஆஸ்மி , ஆகியோரோடு தென்னக கலைஞர்களில்*எம்.ஜி.ஆரின் படம் மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆயிரம் ருபாய்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st July 2020, 08:06 AM
#320
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் ஒருவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு
அவர் நடித்த படங்கள் எல்லாமே
"எம் ஜி ஆர் படம்"
என்பதே.
இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்றய நடிகர்கள் யார் நடித்தாலும் சில படங்கள் நடிகர் பெயரையும் சில படங்கள் நடிகையின் பெயரையும் சில படங்கள் இயக்குனர் பெயரையும் சில படங்கள் தயாரிப்பு நிறுவனம் பெயரையும் தான் சொல்லும் மக்களும் அப்படித்தான் சொல்வார்கள்.
ஆனால் மக்கள் திலகம் எந்த நிறுவனத் தயாரிப்பில் நடித்தாலும் யார் அதை இயக்கினாலும் யார் அவருடன் நடித்தாலும் அது
"எம் ஜி ஆர் படம்தான்".........
Bookmarks