-
24th July 2020, 02:43 PM
#331
Junior Member
Diamond Hubber
"ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
எத்தனை முறை பார்த்தாலும் இன்னெரு சொர்க்கம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.
எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.
தூத்துக்குடியில்
தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.
"ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.
சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.
சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
"சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.
அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
"விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.
நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.
எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.
"ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறேன்..........
-
24th July 2020 02:43 PM
# ADS
Circuit advertisement
-
24th July 2020, 02:50 PM
#332
Junior Member
Diamond Hubber
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!
by thoothukudileaks on 01:21 in News, thoothukudinews
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த
ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
2020 July 24 இன்று அந்த நாணயங்களைதூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ 5 நாணயங்களை தீவிர ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.thoothukudileaks
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அவரது உருவம் பொறித்த நாணயம் வழங்க மத்திய அரசை வற்புறுத்திவந்தது. அது போல் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடவும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். மத்திய அரசு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட நிதி அமைச்சகம்தான் முடிவு எடுக்க முடியும் என்று அறிவித்தது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் தொடர்ந்து நிதி அமைச்சகத்தை வற்புறுத்தி கோரிக்கை மனு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கையை இந்திய ரிசர்வ வங்கி ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ5 நாணயங்கள் பெற ரூ 3055 கட்டணம் நிர்ணயம் செய்தது.
தமிழக முழுவதும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் ரிசர்வ் வங்கிக்கு கட்டணம் அனுப்பிவைத்தனர்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றத்தினர் பணம் செலுத்தினர்
இதற்காக முதற்கட்டமாக 25 பேருக்கு இந்திய ரிசர்வ் வங்கி எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் அனுப்பிவைத்தது.
நாணயத்தில் வெள்ளி, காப்பர், நிக்கல், சினிக் போன்ற உலோகங்கள் கலந்து உள்ளது.
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வழங்கும் விழா
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி எம்.ஜி.ஆர் சிலை க்கு மன்றத்தினர்
மாலை அணிவித்து அதன்அருகே நடத்தினர். முன்னாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ100, ரூ 5 உருவநாணயங்களை தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.மோகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் துணை தலைவர் ரத்னம், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் எஸ்.சாமுவேல், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன், மின்சார வாரிய முன்னாள் அலுவலர் பால்ராஜ், முன்னாள் கோஆப்டெக்ஸ் அலுவலர் அய்யம்பெருமாள், கருங்குளம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சேரந்தையன், ஆசைத்தம்பி, உட்பட பலர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ்.மோகன், எஸ்.சாமுவேல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
thoothukudileaks
thoothukudileaks
Date 24.07 - 2020
time 1.30 pm
Tags # News # thoothukudinews
Author Image
About thoothukudileaks
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
YOU MAY ALSO LIKE:.........
-
24th July 2020, 08:46 PM
#333
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*03/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு திசைகளில் தகவல்களை பரவச்செய்து ,நம்மை பரவசம் அடைய செய்வதில் பெருமகிழ்ச்சி . பல அரிய தகவல்களோடு, பல*நண்பர்கள்* மற்றும் தொலைகாட்சி தொழில்நுட்பம் மூலமாகவும், பல்வேறு குறுஞ்செய்திகள் மூலமாகவும்* தகவல்கள் தந்த வண்ணம் இருக்கிறார்கள் .இந்த மாற்றத்திற்கு* உரியவர்**நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் மக்கள் திலகமாக* நிறைந்து இருப்பதே.அந்த விளைவுக்கு பெரும் காரணம் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீதுள்ள நேசம் , இன்னும் தீராத பாசமாக , பாச பெருவெள்ளமாக ஓடிக் கொண்டே இருக்கிறது*என்பதற்கு சகாப்தம் நிகழ்ச்சி நாம் வாழும் காலத்தில் சரித்திர* சாதனையாக விளங்கி வருகிறது .
விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து* சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட* 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .
ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட*மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக்* கொண்டு* திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் .* எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை*கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு*பேட்டியில்* கூறியிருக்கிறார் .
நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர்.*இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த* பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .
காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன்*. திடீரென விழுந்து வணங்கி* எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய்* சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும்* *பழகி இருக்கிறோம்* என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .
எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய*காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை* சொல்லியும்* உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை.*நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .*
பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின்*நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு* மிகவும்**பிடித்தமான விஷயம் .
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அன்னை தெரசா முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது . பல முக்கிய விருந்தினர்கள்* பல்வேறு தலைவர்கள்*கலந்து கொண்டனர் சுமார் 3 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது .. நிகழ்ச்சி நடக்கும்போது* இடையே சிலர் எழுந்து செல்வது ,வருவது என்று இருந்தார்கள் . ஆனால் அந்த 3 மணி நேரமும் எம்.ஜி.ஆர். மட்டும் தான் உட்கார்ந்த இடத்தில இருந்து நகரவே இல்லை .நிகழ்ச்சி முடிந்ததும் ,அன்னை தெரசா, எம்.ஜி.ஆரின் கைகளை பற்றிக் கொண்டு, எப்படி நீங்கள் மட்டும் இருக்கையை விட்டு நகராமல் எல்லோருடைய பேச்சையும் கேட்டீர்கள்,எல்லோருக்கும் பதில் சொன்னீர்கள் ,எப்படி நீங்கள் ஒருவர் மட்டும்* பொறுமை காத்தீர்கள் என்று கேட்டார் . பதிலுக்கு எம்.ஜி.ஆர். எல்லாமே,உங்களை போன்ற சேவை மனப்பான்மை உடைய தலைவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் . நான் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறேன் , நானே தவறு செய்தால், விழாவிற்கு வந்துள்ள பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் , நீங்கள் என்ன நினைப்பீர்கள், விழா குழுவினரோ , கூட்டத்தில் கலந்து கொண்டவர்களோ* இனிவரும் நிகழ்ச்சிகளிலாவது இப்படி*ஒழுங்கீனமாக நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக த்தான்* ஒழுக்கத்தை கடைபிடித்து இருக்கையில் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்தேன் என்று சொன்னார் .*
எம்.ஜி.ஆர். என்கிற அரிய மாமனிதரின் ,வரலாற்றை, அரிய* வாழ்க்கையை ,ஏழை எளியவரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவரின் பல்வேறு வகையான வாழ்க்கை எடுத்துக் காட்டுக்களை தொடர்ந்து மக்களுடன்* அடுத்த*அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்வோம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
-------------------------------------------------------------------------------
1.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*
2.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*
3.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது - சந்திரோதயம்*
4.பார்க்க பார்க்க சிரிப்பு வருது - நீதிக்கு தலைவணங்கு*
5.மேடையில் எம்.ஜி.ஆர் .- தேர்த்திருவிழா*
6. நான் யார் நான் யார் நீ யார் -குடியிருந்த கோயில்*
7.கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*
8.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா -லதா உரையாடல் - நேற்று இன்று நாளை*
9.இன்னொரு வானம் , இன்னொரு நிலவு - நேற்று இன்று நாளை*
10.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - இதயவீணை*
11.நாடு அதை நாடு - நாடோடி*
*
-
25th July 2020, 01:25 PM
#334
Junior Member
Diamond Hubber
#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்
மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.
வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.
படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.
ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.
அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!
உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!.................
-
25th July 2020, 01:26 PM
#335
Junior Member
Diamond Hubber
விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .
ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் . எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .
நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர். இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .
காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன் . திடீரென விழுந்து வணங்கி எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய் சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும் பழகி இருக்கிறோம் என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .
எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை சொல்லியும் உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை. நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .
பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின் நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ..........
-
25th July 2020, 01:33 PM
#336
Junior Member
Diamond Hubber
#எம்ஜிஆர்_ரசிகர்களுக்கு_மதிப்பளித்து_மகிழ்ச்சிப்பட ுத்தியவர்!
M.g.r. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.
படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.
ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!
எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.
ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!
திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.
ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!
எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!
‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...
‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,
நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’......
-
25th July 2020, 11:07 PM
#337
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 04/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உள்ளங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இதய தெய்வமாக கொண்டாடுகிற கோடிக்கணக்கானவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ , அங்கெல்லாம்அவர்களது மரியாதைக்குரிய தலைவராக அவர்களது நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர்.* நிறைந்து இருக்கிறார் . அவர்களது இதயங்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும் ,முருகனுக்குமான** முருக பக்தி எப்படி தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாதோ ,அதே போல எம்.ஜி.ஆருக்கும் முருக கடவுள் மீது பக்தி எப்படி இருந்தது என்று இன்றைக்கு பார்க்கலாம் .மோசமான காட்சிகளாக இருந்தாலும் , துயரமான காட்சிகளாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். தன்* வாயில் இருந்து* தன்னிலை அறியாமல் முருகா என்று சொல்வது வழக்கம் . குறிப்பாக தேவர் பிலிம்ஸ் படங்களில் பணியாற்றும்போது எம்.ஜி.ஆர். தேவரை முருகா என்று அழைப்பது, தேவர் எம்.ஜி.ஆரை முருகா என்றும் அழைப்பது வழக்கம் .
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி இருந்தபோது, அவர் மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு* எம்.என்.நம்பியாரை அழைத்து , முருக பக்தர் கிருபானந்த வாரியாரை அழைத்து வர சொல்லி, அவரை கந்த சஷ்டி கவசம் பாடும்படி கேட்டுக் கொண்டார் கிருபானந்த வாரியார் வரி வரியாக கந்த* சஷ்டி கவசத்தை ,நம்பியார், எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி முன்னிலையில் மனம் உருக பாடும்போது கண்களில் கண்ணீர் மல்க எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் கேட்டார் .
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆரின் பெயர் முருகன் . , தமிழக, இந்திய , உலக வரலாற்றிலேயே*விஞ்ஞானிக்கு தமிழ் கடவுள் முருகன் பெயர் முதன் முதலாக வைக்கப்பட்டது .அதற்கு பின்னால் பல்வேறு விதமான நுண் அரசியல் இருக்கிறது .இந்த அரசியல்களை எல்லாம் தெரிந்து கொண்டேதான் அந்த விஞ்ஞானி பாத்திரத்திற்கு முருகன் என்று பெயர் வைத்தார் .தாலி பாக்கியம் என்ற படத்தில்*முருகன் என்ற பெயர் கொண்ட வேடத்தில் நடித்தார் .மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன் என்கிற கதாபாத்திரத்திலும், மீனவ நண்பனில் குமரன் என்ற*பெயரிலும் நடித்தார் சங்கே முழங்கு ,. இன்று போல் என்றும் வாழ்க படங்களில்* முருகன் என்ற பெயர் கொண்ட வேடம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் பைந்தமிழ் குமரன் என்ற முருகனின் அழகு சொல்லின் பெயரில் நடித்தார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது ஈர்ப்பு உண்டு .
விவசாயி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போத கோவையில் படப்பிடிப்பு நடந்தது .அப்போது முருக பக்தரான , பட தயாரிப்பாளர் தேவர் மருதமலை கோவில் செல்லும் பாதையில் மின் விளக்குகள் அமைத்து , அதை எம்.ஜி.ஆரை வைத்து திறந்து வைக்க முடிவு செய்தார் .தேவரின் வேண்டுகோளை ஏற்கும்* பொருட்டு, எம்.ஜி.ஆர். ,தி.மு.க. வில் இருந்ததால், அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவிடம்* விஷயத்தை சொல்லி ,முன் அனுமதி கேட்டார் .கோயிலுக்கு செல்லும் பாதையில் மின்விளக்கு திறந்து வைக்கும் வைபவம்*நல்ல காரியம்தான் . இது கட்சிக்கு எதிரான கொள்கை அல்ல .ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதைக்கு வெளிச்சம் தருவது நல்ல விஷயம் . தாங்கள்*தாராளமாக சென்று அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று பேரறிஞர் அண்ணா* வாழ்த்தி அருளினார் . அதன்படி அந்த விளக்கேற்றும் வைபவத்தை**எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து தேவரின் வேண்டுகோளை நிறைவேற்றி வரலாறு படைத்தார் .
பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாள் அவர்களை எம்.ஜி.ஆர். தன் தாய்க்கு அடுத்த இடத்தில வைத்து மரியாதை கொடுத்து வந்தார் .திருமதி கே.பி.எஸ். அவர்கள் தன் சொந்த ஊரான கொடுமுடியில் ஒரு திரை அரங்கை கட்டி, திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் மூவரையும் அழைத்து இருந்தார் . எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லாதபோது தொலைபேசியில் நலம் விசாரித்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் இல்லத்திற்கு சென்று வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தியவர் எம்.ஜி.ஆர். திருமதி கே பி.எஸ். அவர்களின் முருகபக்தி மீது பலத்த ஈடுபாடு உண்டு .
தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனிப்பிறவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்.*முருக கடவுளாக* தோன்றினார் .* இன்றைக்கும் அந்த முருகன் வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். படம் ஒரு வழிபாட்டு தலமாக சென்னையில் இருந்து தென்கோடி குமரிமுனை வரையில் உள்ள பல்வேறு ரிக்ஷாக்களிலும் ,பலரது இல்லங்களிலும் பார்க்க கூடிய நிலை உள்ளது .சந்திரோதயம் படத்தில் ஓவர் கோட்டுடன் மலர் மாலையணிந்து,கையில் பூச்செண்டுடன் காட்சியளிக்கும் எம்.ஜி.ஆர். படம் வீட்டில் வைத்திருந்தால் பண தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை உதவி இயக்குனர்கள், திரைப்பட கலைஞர்கள்,தொழிலாளர்கள், நண்பர்கள் வீட்டிலும் இருக்கிறது .
முருகன் கோயில்களுக்கு புனரமைப்பு செய்வது, நிதி உதவி அளிப்பது* முருகன் வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்து பூஜைகளில் கலந்து கொள்வது ,சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது என்று முருகனுக்கென்றே தன்*வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த திரு.கிருபானந்த வாரியார் ,முருகன் கோயில்களுக்காக ,எப்போது கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதனால்* அவருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டம் வழங்கினார் .*
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*
2.நம் நாடு* படத்தில் எம்.ஜி.ஆர்.*
3.ஆண்டவனே உன் பாதங்களை- ஒளி விளக்கு*
4.பாரப்பா , பழனியப்பா பட்டணமாம் - பெரிய இடத்து பெண்*
5.விஞ்ஞானிகள் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.-உலகம் சுற்றும் வாலிபன்*
6.முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர். - தனிப்பிறவி*
7.உள்ளம் ஒரு கோயில் - தாலி பாக்கியம்*
8.எதிர்பாராமல் நடந்ததடி - தனிப்பிறவி*
9.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
10.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*
..**
-
25th July 2020, 11:08 PM
#338
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 05/07/20 அன்று திரு.துரை பாரதி*அவர்கள் அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன .யார் யாரை முன்வரிசையில் உட்கார வைப்பது, யார் யாரை பின்வரிசையில் உட்கார வைப்பது மற்ற இடங்களில் யார் யாரை அமர வைப்பது, கூட்டத்தின் கடைசி பகுதியில் யார் யாரை அமர வைப்பது என்று சில திட்டங்கள் அமைத்து அதை கடைபிடிப்பார்கள் .சிலரை அழைத்து இருப்பார்கள் ,ஆனால் விழாவுக்கு வந்த பின்னர் கண்டுகொள்ளவே மாட்டார்கள் .இப்படியெல்லாம் நடக்கும் . ஒரு நிறுவனம் நடத்தும் விழா என்றால் ,அந்த நிறுவன ஊழியர்களுக்கே சமயத்தில் நல்ல வரவேற்பு இருக்காது ,அந்த விழா மண்டப காவலாளியை விட கேவலமாக நடத்துவார்கள் .இப்படியெல்லாம் காட்சிகள் அரங்கேறி உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர். தன் பட விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை அவர்களது குடும்பத்துடன்* முன்வரிசையில் அமரவைப்பார் .விழாவுக்கு வருகைதரும் முக்கிய விருந்தினர்களுக்கு பின்வரிசைதான் .அப்படி தன் படத்திற்காக உழைத்த தொழிலாளர்களை எம்.ஜி.ஆர். ஒருபோதும் விட்டு கொடுக்கவில்லை விழாவின் முடிவில்*.அந்த தொழிலாளர்களுக்கு ,அவர்களது குடும்பத்தினருக்கு*மதிய உணவு,அல்லது மாலை சிற்றுண்டி தேனீர் என்று வேளைக்கு தகுந்தாற்போல தகுந்த நபர்களை வைத்து உபசரிப்பார்* இப்படி .உழைக்கும் தொழிலாளர்களை மதிக்கும் பண்பாளராக திகழ்ந்தார்* எம்.ஜி.ஆர். .
திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுக காட்சிக்கு முன்னுரிமையும், அதிக முக்கியத்துவமும்* எம்.ஜி.ஆர். அளித்திருந்தார் . அந்த காட்சியில் ரசிகர்கள் /பக்தர்கள் ஆரவாரம் ,அலப்பரை* அதிகமாக இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாயத்தில், தயாரிப்பாளரும், இயக்குனரும் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள் .ஏ.வி.எம்.தயாரித்த அன்பே வா படத்திற்காக விமான நிலையத்தில் முன் அனுமதி வாங்கி, விமானத்தை வாடகைக்கு எடுத்து ,அதற்கான செலவினங்களை செய்து , வெளிநாட்டில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னைக்கு வந்து இறங்கும் அறிமுக காட்சி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது .ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள்,ஆரவாரங்கள் நெடுநேரம் நீடித்தது .கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்று அந்த காலத்தில் சொல்வதுண்டு .அந்த மாலைகளை தாங்கிய வண்ணம் பேட்டி அளித்துக் கொண்டே இருப்பார் . ,அதே சமயத்தில் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றும்போது , மாலைகள் மீண்டும், மீண்டும் விழுந்த வண்ணம் இருக்கும் . அப்போது அரங்கத்தில் ஒரே பரபரப்பாக* கூச்சல், கும்மாளம் கூட்டமுமாக இருக்கும் .இந்த மாதிரியான அறிமுக காட்சிகளுக்கு , ரசிகர்களும், பொதுமக்களும் நல்ல வரவேற்பை தருகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். பின்வரும் படங்களில் தயாரிப்பாளர் ,இயக்குனர்களுடன் கலந்து ஆலோசித்து* காட்சிகளை அமைப்பதில் கவனம் செலுத்தினார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு பேசும்போது ,தன்னுடைய ஆட்சியில் நீதி, நேர்மை, நியாயம் இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளித்தார் .அதை செய்தும் காட்டினார் .* ஒரு நாள் கோட்டைக்கு செல்வதற்காக எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து புறப்பட தயாராகிறார் . அப்போது முதியவர் ஒருவர் ,ஐயா ,என்று எம்.ஜி.ஆர். காலில் விழுந்த வண்ணம் உங்கள் உதவியாளர் ஒருவர் கல்லூரியில் பொறியாளர் சீட் வாங்கி தருகிறேன் என்று சொல்லி ரூ.45,000/- வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் என்று அழுதுகொண்டே சொன்னார் . எம்.ஜி.ஆர். உடனே அவரிடம் அந்த நபர் இங்கு இருக்கிறாரா ,யார் சொல்லுங்கள் என்று கேட்க, ஒருவர் அங்கே கூடியிருந்த கூட்டத்தில் இருந்து நழுவ பார்த்தார் .உடனே அந்த முதியவர் அவரை சுட்டிக்காட்டியதும் , எம்.ஜி.ஆர். அவரை அழைத்து* கன்னத்தில் ஒரு அறைவிட்டார் .அந்த முதியவரின் ,முகவரி,எந்த கல்லூரியில்*இடம் வேண்டும் என்கிற விவரங்களை* தன் உதவியாளரை வைத்து குறிப்பு எடுத்துக் கொண்டு ,நீங்கள் வீடு போய் சேருங்கள், உங்கள் பணம் வந்து சேரும்* .உங்களுக்கு தகுந்த தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்று முதியவரை ஆசுவாசப்படுத்தி அனுப்பினார் .பின்பு கோட்டைக்கு தன்* உதவியாளர் செய்த செயலை எண்ணி வருத்தத்துடன்* செல்கிறார் .*
மறுநாள் சட்டப்பேரவையில் ,எதிர்கட்சி தலைவர் கருணாநிதி ,முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர் ஒரு முதியவர் மகனுக்கு கல்லூரியில் பொறியாளர்* சீட் வாங்கி தருவதாக உறுதியளித்து பணம் வாங்கி ஏமாற்றிவிட்டாராமே என்று பேசினார் .* பதிலுக்கு எம்.ஜி.ஆர். உண்மைதான்,எனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த உதவியாளரை பணி நீக்கம் செய்துவிட்டேன் .பணம் கொடுத்தவருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துவிட்டேன் .என்றார் .* மாலையில் எம்.ஜி.ஆரை சந்தித்த மற்ற உதவியாளர்கள் இது எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்று கேட்டனர் .ஏன்,எப்படி,எதற்காக,யார் மூலமாக* அவருக்கு தெரிந்தது என்று கேட்பதைவிட , அந்த விஷயத்தின் உண்மை தன்மையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்வதோ,நீதி, நியாயம் வழங்குவதுதான் முறை. தவறு நடந்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் . அவர் கேட்ட கேள்வியில் தவறு ஒன்றுமில்லை .அதற்கான பதிலையும் நான் அளித்துவிட்டேன் .அது என் கடமையும் கூட. ஆனால் மற்ற அரசியல்வாதிகளாக இருந்தால் எப்படி நினைப்பார்கள் என்றால் நம் வீட்டில் நடந்த விஷயம் எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்றுதான் யோசிப்பார்கள் தன் உதவியாளர்கள், உடன் இருந்தவர்களை சந்தேகப்பட்டு ,அந்த விஷயத்தில் உள்ள நியாயத்தை விட்டு விடுவார்கள் .எனவே, நியாயத்திற்கு உட்பட்டு எந்த விஷயமாக இருந்தாலும்*தீர்க்கமான முடிவு எடுத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்றார் எம்.ஜி.ஆர். இங்கேதான் உயர்ந்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர்.தன்* வீட்டில்* விசேஷமாகவும்,சிறப்பாகவும் பொங்கல் விழாவை கொண்டாடுவார் . பொங்கல் திருநாளன்று நடிகர், நடிகைகள், பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்* ,பல முக்கிய விருந்தினர்கள் பலரும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு விஜயம் செய்வது வழக்கம் . அத்துடன் ,ஏராளமான ரசிகர்கள், பக்தர்கள், கட்சி தொண்டர்கள், தாய்மார்கள் பெருந்திரளாக வந்திருந்து எம்.ஜி.ஆரை சந்தித்து, வாழ்த்துக்கள் பெறுவது ,வழக்கமாக இருந்தது அனைவருக்கும் பொங்கல் விருந்தாக காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுவதும் வழக்கம் ..ஒரு முறை பொங்கல் விழாவிற்கு அரசு அதிகாரிகள் அதிகம் பேர் வந்திருந்தனர் . அப்போது காவல்துறை ஆணையராக இருந்த திரு.ஸ்ரீபால் வருவதாக இருந்தது .அவர் வந்ததும் காலை 9.30க்கு அனைவரும் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஸ்ரீபால் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது .இருந்தாலும் ,அவர் வருகைக்காக காத்திருந்து ,பின்னர் அவர் வந்ததும் தன்னுடன் உட்கார வைத்து ,அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோருடன் காலை சிற்றுண்டி அருந்தினார் . இப்படி உயர் அதிகாரிகளுக்கு*உகந்த மரியாதை அளித்து மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். .
மேலும் விஷயங்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.தொட்டு விட தொட்டு விட தொடரும் -தர்மம் தலை காக்கும்*
2.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே -தனிப்பிறவி*
3.என்னம்மா ராணி, பொன்னான மேனி - குமரிக்கோட்டம்*
4.இது நாட்டை காக்கும் காய் - இன்றுபோல் என்றும் வாழ்க*
5.அறிமுக காட்சியில் எம்.ஜி.ஆர். - அன்பே வா*
6.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - ரிக்ஷாக்காரன்*
7.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
8.கட்டோடு குழலாட ஆட* ,கண்ணென்ற மீனாட ஆட -பெரிய இடத்து பெண்*
9.அன்னமிட்டகை பாடல் காட்சி - அன்னமிட்டகை*
*.*
-
25th July 2020, 11:09 PM
#339
Junior Member
Platinum Hubber
தனியார் டிவிக்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
19/07/20* *-சன் லைப் -* மாலை 4 மணி -* தாழம்பூ*
20/07/20* -மெகா 24 -* காலை 8.30 மணி* - குடும்ப தலைவன்*
* * * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி* - அன்பே வா*
* * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * ஜெயா டிவி -* இரவு 9 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*
21/07/20 -மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி -* விவசாயி*
* * * * * * * *சன்* லைஃப் - மாலை 4 மணி* - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - இதய வீணை*
22/07/20 -வேந்தர் டிவி - காலை 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * *சன் லைஃப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * *புதுயுகம்* *-* இரவு* 7 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - குமரிக்கோட்டம்*
* * * * * * * மெகா 24* - இரவு 9 மணி* - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி* - ராமன் தேடிய சீதை*
* * * * * * * பாலிமர் டிவி - இரவு 11* மணி - நவரத்தினம்*
23/07/20 =சன் லைஃப் - மாலை 4 மணி - மகாதேவி*
* * * * * * * *ஜெயா டிவி - இரவு 9 மணி - ஊருக்கு உழைப்பவன்*
24/07/20* - வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - பரிசு*
* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - மீனவ நண்பன்*
* * * * * * * *சன் டிவி* * - இரவு* 9.45 மணி* - ரிக்ஷாக்காரன்*
25/07/20 - தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - மந்திரி குமாரி*
* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*
* * * * * * * *சன் லைஃப்* - மாலை 4 மணி - மந்திரி குமாரி*
** * **
-
26th July 2020, 08:46 PM
#340
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 06/07/20 அன்று திரு.துரை பாரதி அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் செய்திகள் நிறைந்த தொடருக்கு எட்டு திக்கிலும் நல்ல வரவேற்பை தந்து வருகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் காலை சிற்றுண்டிக்கு பின்னர்* மதிய உணவிற்கு முன்பாக காரட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வார் .இரவு படுக்கைக்கு முன்பு ஒரு டம்ளர் ஓவல் குடித்துவிட்டு, வாழைப்பழங்கள் 2 சாப்பிடுவது வழக்கம் .அவ்வப்போது வெளியே ஒரு கனம்* சென்றால் மதியம் வடித்த சோறை , அந்த பழையதை ,வத்த குழம்புடன் கலந்து சாப்பிடுவார் .காரணம் கேட்டால் ,கடுமையான உடற்பயிற்சி, வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்பார் .எம்.ஜி.ஆர். காரில் பயணிக்கும்போது ஒரு மூட்டை அளவு சாத்துக்குடி பழங்கள் எப்போதும் இருப்பு இருக்கும் .சாத்துக்குடி ஜூஸ் அருந்தினால் உடல் சூட்டை தணிக்கும், ரத்தம் சுத்திகரிக்க உதவும் என்பது அவரின் கணிப்பு. எனவே தானும், தன்னுடைய உதவியாளர்கள்* அருந்தும் வகையில்**பழங்கள் காரில் வைத்திருப்பார் .எம்.ஜி.ஆர். தன் உடலை வருத்தி, எல்லாவிதமான உடற்பயிற்சி கருவிகள் கொண்டு கடுமையான பயிற்சி எடுத்து , அதற்கான உணவுகளை வேண்டியபோதெல்லாம், தேவைக்கேற்றார் போல அருந்தி உடலை பாதுகாத்தார் ஒரு நடிகனுக்கு உடல்நலம், உடல் அமைப்பு, தோற்றம், பொலிவு* ஆகியன இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்ததால்* உடல்நலம், உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் .
சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில்* மதிய நேரத்தில் வந்து இளைப்பாறுவது வழக்கம் . அந்த இடைவேளை நேரத்தில் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் சிலரை சந்திப்பது வழக்கம். அது மட்டுமின்றி பல பேர் உதவிகள் கேட்டு அவரை பார்க்க வருவதுண்டு .ஒருமுறை நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆரை பார்க்க அங்குள்ள உதவியாளரை அணுகி அனுமதி கேட்கிறார் .எம்.ஜி.ஆர். சாவித்திரியின் அலங்கோல நிலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்து ,உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார் .அதை கேட்டதும் சாவித்திரி கண் கலங்குகிறார் .மீண்டும் எம்.ஜி.ஆர். நான் என்ன செய்ய வேண்டும் என்ன உங்கள் பிரச்னை என்று கேட்கிறார் . நான் தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லை..சொத்து, பணம், சுகம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் . தாங்கள்தான் ஏதாவது உதவி செய்ய வேண்*டும் என்கிறார் சாவித்திரி .அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., வீட்டு வசதி வாரிய தலைவர் மணிமாறனுடன் தொடர்பு* கொண்டு நேரில் வரவழைத்த பின்னர்***நடிகை சாவித்திரிக்கு அண்ணா நகரில் வீடு ஒன்று ஒதுக்கி தரும்படி உத்தரவிடுகிறார் .பின்னர் ஒரு அறைக்கு சென்று ஒரு பையில் ஒரு லட்சம் பணம் வைத்து , சாவித்திரிக்கு அளித்து ,**இதை உங்கள் மருத்துவ செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் . எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை*பலரிடம் சொல்லி மகிழ்ந்துள்ளார் நடிகை சாவித்திரி . நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆருடன் மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார் .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் காலத்தில் வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒற்றைவாடை தியேட்டர் அருகில் மாதம்*15 ருபாய் வாடகைக்கு குடியிருந்தார் . அப்போது அந்த பகுதியில் குடியிருந்த*ஒரு ஜப்பானிய குடும்பத்தினருக்கு சமையல்காரராக ராமன் நாயர் என்பவர் இருந்தார் . போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்த எம்.ஜி.ஆருக்கு ராமன் நாயர் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை**அவ்வப்போது உதவி வந்தார் .ஒருமுறை ஸ்டுடியோவிற்கு அவரசமாக புறப்பட வேண்டிய நேரத்தில்*பேருந்தில் செல்வதற்கு பணம் இல்லாததால், உதவி வேண்டி ராமன் நாயரை அணுகியபோது, ராமன் நாயர் 5 ருபாய் கொடுத்து உதவியுள்ளார் .அப்போது அது மிக பெரிய தொகை .
1970ல் ஜப்பானில் நடைபெற்ற உலக பொருட்காட்சியான எக்ஸ்போ 70யை படமாக்க உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தன் குழுவினருடன் ஜப்பான் சென்றார் .டோக்கியோவில் ஒரு இடத்தில ஜப்பானிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் நாயர் டீ ஸ்டால் என்று ஒரு கடையை பார்த்து அதன் உரிமையாளர்* முகவரியை வாங்கி கொண்டு காரில் சென்று பார்த்தார் .தன்னை தேடி வந்து உதவியவர்களை ,தானே தேடி போய் உதவுவது எம்.ஜி.ஆரின் வழக்கம் .
ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் .டி.எம்.எக்ஸ் 4777 என்கிற காரில், கோட்டைக்கு செல்லும் வழியில்* அண்ணா சாலையில் செல்கிறார் .* அப்போது இப்போது இருப்பது போல போக்குவரத்து நெருக்கடி அவ்வளவாக இல்லாத நேரம் .காவலர்கள் ஆங்காங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி முதல்வர் காருக்கு வழி விடுகிறார்கள் .அதையும் மீறி ஒரு ஆட்டோக்காரர் ,தேனாம்பேட்டை சிக்னல் அருகில்* முதல்வர் காரின்மீது மோதிவிடுகிறார் . உடனே அருகில் இருந்த காவலர்கள் ஓடிவந்து ,அந்த ஆட்டோவை ஓரமாக நிறுத்தி, ஆட்டோ டிரைவரை திட்டி தீர்க்கிறார்கள் . எம்.ஜி.ஆர். உடனே காரை நிறுத்த சொல்லி , ஆட்டோ டிரைவரை தன்னருகில் அழைத்து*, ஏன் வேகமாக வண்டி ஒட்டுகிறீர்கள், ஏன் மோதிவிட்டீர்கள் , என்ன ஆயிற்று என்று கேட்கிறார் . பதட்டத்தில் இருந்த ஆட்டோ டிரைவர் ,மன்னிக்க வேண்டும் ஐயா, வண்டியில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை .பிரேக் பழுதுபார்க்க என்னிடம் தற்சமயம் பணமில்லை என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். வண்டியில் எப்போதும் பிரேக் சரியாக இருக்க வேண்டும் . இல்லையென்றால் இப்படித்தான் விபத்துக்களை சந்திக்க நேரிடும் . உயிருக்கு ஆபத்து ஏற்படும் . மேலும் பல பிரச்னைகள் வரும் .என்று சொல்லி , 1500 ருபாய் கொடுத்து உதவினார் .**
மேலும் பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.விழியே. விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*
2.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி - எங்க வீட்டு பிள்ளை*
3.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உரையாடல் - நம் நாடு*
4.பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*
5.எண்ண* எண்ண* இனிக்குது ,ஏதேதோ நினைக்குது - பரிசு*
6.வேட்டையாடு விளையாடு, விருப்பம் போல உறவாடு -அரச கட்டளை*
7.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் - உலகம் சுற்றும் வாலிபன்*
8.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி -உலகம் சுற்றும் வாலிபன்*
9.ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*
10. எம்.ஜி.ஆர். லதா -தேங்காய் ஸ்ரீனிவாசன்* - நினைத்ததை முடிப்பவன்*
Bookmarks