-
9th October 2020, 02:58 AM
#451
Senior Member
Devoted Hubber
நடிக சிற்றரசர் எம்ஜிஆர் என்ற குழுவில் உத்தம புத்திரன் திரைப்படத்தை விட நாடோடி மன்னன் பெரிய வெற்றி பெற்றதாக அளந்து விட்டிருந்தனர், உத்தம புத்திரன் சிறிய வெற்றி பெற்றதாக உளரிக் கொட்டியும் இருந்தனர்,
நாங்கள் நாடோடி மன்னன் திரைப்பட வெற்றியை பற்றி குறைத்து சொல்லுவதுமில்லை, நடிகர் திலகம் ரசிகர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இல்லை,
அவர்களது தகவல் என்பது அறியாமையின் வெளிப்பாடு,
உத்தம புத்திரன் 07 பிப்ரவரி 1958
நாடோடி மன்னன்- 22 ஆகஸ்ட் 1958
ஏறக்குறைய ஆறு மாத கால உத்தம புத்திரன் இரட்டை வேட வெற்றி விளம்பர பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு தான் நாடோடி மன்னன் வந்தது,
குறிப்பாக உத்தம புத்திரன் திரைப்படத்தை மக்கள் எவ்வாறு ரசிக்கின்றனர் என்பதை காண சென்னை காஸினோ திரையரங்கிற்கு எம்ஜிஆர் நேரிடையாக சென்றார் என்பது நடந்த வரலாறு,
நாடோ மன்னன் வெற்றியை உறுதி செய்ய உத்தம புத்திரன் படத்தை போலவே காட்சிகள் மீண்டும் உருவாக்கப்பட்டது,
உத்தம புத்திரன் திரைப்படத்தைக் காட்டிலும் நாடோடி மன்னன் பெரிய வெற்றி பெற்றது என சொல்வது என்பது எதுபோல என்றால்
ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தை அஜித் நடிக்க "ரீ மேக் பில்லா" வெற்றி பெற்றது போலத் தான்,
அச்சாரம், ஆணி வேர், பென்ச் மார்க் என்பது தான் முக்கியம்,
புரிந்து கொள்ளவும் நடிக சிற்றரசர் குழுக்காரரே,
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020 02:58 AM
# ADS
Circuit advertisement
-
9th October 2020, 02:59 AM
#452
Senior Member
Devoted Hubber
(மேற்படி பதிவிற்கான சில பின்னூட்டங்கள்)
இதற்க்கு நான் ஒரு உதாரணம் காட்ட வேண்டும் உத்தம புத்திரன் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதை விட்டு தள்ளுங்கள் அண்டை மாநிலமான கர்நாடகவில் பெங்களூரு மற்றும் மைசூர் ராஜ் கமல் திரையரங்கில் 102 நாட்கள் ஓடியது அவர்கள் படமோ வெறும் 6 வாரங்கள் மட்டும் என்ன வித்தியாசம் இப்பொழுது கூறட்டும் எது வெற்றி பெற்ற படம் எது தோல்வி படம் என்று(n r )
Last edited by sivaa; 9th October 2020 at 03:01 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 03:01 AM
#453
Senior Member
Devoted Hubber
அது மட்டுமல்ல. அடுத்து வந்த சொந்தப் படம் July ஆகஸ்ட் 15 தீபாவளி கிறிஸ்மஸ் பொங்கல் தமிழ் வருட பிறப்பு என்று ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் காத்திருக்க இறுதியில் மே 1 அன்று தான் ரிலீஸாகிறது. அதற்குப்பின் ஆறு மாதத்திற்கு மேல் தான் நடித்த எந்தப் படத்தையும் release ஆகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ரிலீசுக்கு முன்னும் அப்படியே. அப்படியும் படத்தை ஓட்டு ஓட்டு ஒட்டப்பட்டது தான். இருந்தும் மொத்தத்தில் தோல்வி படம்தான் என்பது தன் சுய தொடரில் சொல்லப்பட்ட செய்தி வந்ததுண்டு. இது போன்ற படங்களை போட்டி படங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படியும் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் சாதனை யில போட்டியில் தோல்வி தான். குழந்தைகள் பிடிக்கும் அம்புலிமாமா பத்திரிக்கை வரை அதிக அளவில் விளம்பரம் கொடுத்து ரசிகர்களின் காக்க வைத்து போன்ற உத்திகளால் நம்ம வரை வெல்ல முடியு வில்லை. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை சாக்கடைக்குதான் விளம்பரம் என்று சிவந்த மண் படம் வெளிவருவதற்கு முன் கொடுக்கப்பட்ட செய்தி நினைவிருக்கா லாம்.(S R)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 03:02 AM
#454
Senior Member
Devoted Hubber
அடிமைப்பெண் 1969. ஆறு மாதங்கள் கழித்து நம்நாடு.
உலகம் சுற்றும் வாலிபன் 1973. ஆறு மாதங்கள் கழித்து பட்டிக்காட்டுப் பொன்னையா.( j j)
இதில வேற ஜம்பம் பேசுவார்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 03:26 AM
#455
Senior Member
Devoted Hubber
திரை உலக முடிசூடா மன்னன் சிவாஜியை(ஏதேனும் ஒரு பாத்திரத்தில்) பின்பற்றி நடிக்காத நடிகர் எவருமில்லை. இதில் எம்ஜிஆர் மட்டும் என்ன விதிவிலக்கு?
(l-u k )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 05:23 AM
#456
Senior Member
Devoted Hubber
நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள்.
எந்த பாண்டியனும் சோழனும் இப்படி மினிஸ்கர்ட் அணிந்து நின்றான்? எந்த தமிழ் மன்னன் குட்டை பாவாடையினை அணிந்திருந்தான்?
தமிழ் அரசர்கள் வேட்டி அணிந்து நெற்றியில் நீறு பூசி , கொண்டையிட்டு தலையிலும் கழுத்திலும் மாலை சூடி, மார்பெல்லாம் சந்தணம் பூசி வலம் வந்தனர்
அந்த காட்சிகளை அப்படியே வைத்தால் தமிழன் ஒரு இந்து என்பதை மக்களிடம் ஒப்புகொண்டதாகிவிடும் என அஞ்சிய திராவிட கும்பல் ஏதோ கான்வென்ட் குழந்தையின் ஸ்கர்ட்டை மாட்டி கொண்டு நடிக்க வந்துவிட்டது
முதுகில் தொங்க வண்ணாந்துறையில் எடுத்து வந்த ஒரு ஜமுக்காளம் வேறு
அதை கைதட்டியும் ரசித்தான் தமிழன், அவனின் அறிவும் தன் இனமான வரலாறும் அப்படி இருந்திருக்கின்றது
Thanks S.Rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 05:24 AM
#457
Senior Member
Devoted Hubber
தமிழ் சினிமாவில் சின்னப்பதேவருக்கு இருந்தது போலவே ஒரு வரலாறு பி.ஆர் பந்தலு என்பவருக்கும் உண்டு
இருவரும் ஒன்றுமே இல்லாமல் வந்து தயாரிப்பாளராக உயர்ந்து அழியா படங்களை கொடுத்தவர்கள்
இன்று அந்த பந்தலுவின் நினைவு நாள்
வீரபாண்டிய கட்டம்பொம்மன் போன்ற மிக சிறந்த படங்களை அவர்தான் அன்றே பெரும் பொருட்செலவில் தயாரித்து தந்தார், அதை மறக்க முடியாது
அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார்
ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது
கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை
சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு
அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற காவிய படங்கள் எல்லாம் வந்தன, இயக்கி தயாரித்தவர் பந்துலு
பராசக்திக்கு பின் சிவாஜி கடும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார் அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கணேசன் தான் எல்லா தயாரிப்பாளர் படத்திலும் நடிக்குது என புலம்பிகொண்டிருந்தார் ராமசந்திரன் எனும் நடிகர்
சிவாஜிக்கு நடிக்க தெரியுமே தவிர அரசியல் தெரியாது, ஆனால் ராமசந்திரனுக்கு நடிக்க தெரியாதே தவிர யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் , எப்பொழுது விரட்ட வேண்டும் , எதை எப்படி பிரிக்க வேண்டும் என்ற அரசியல் அத்துபடி
ஒருவரை கணித்துவிடுவதில் ராமசந்திரன் கெட்டிக்காரர்
அப்படித்தான் சின்னப்பா தேவரை கடைசி வரை சிவாஜியினை நெருங்கமுடியாமல் கட்டுபடுத்தி வைத்திருந்தார் ராமசந்திரன், இருவரும் ஒரே சாதி என்றாலும் சிவாஜி பக்கம் தேவரால் செல்ல முடியவில்லை
அப்படிபட்ட ராமசந்திரன் பந்துலுவிற்கும் ஸ்கெட்ச் போட்டார், எப்படி?
ஏதோ வருத்ததில் பந்துலுவும் சிவாஜியும் இருந்தபொழுது ராமசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது
அது முரடன் முத்து தொடர்பான சர்ச்சை, சிவாஜிக்கு 100ம் படம் என அவர் சொல்லிகொண்டிருக்க, சிவாஜிக்கு முரடன் முத்துதான் 100ம் படம் , நடிகனுக்கு தன் பட கணக்கு தெரியாதா என பந்துலு சொல்லிவிட இருவரும் பிரிந்தனர்
கிட்டதட்ட இளையராஜா வைரமுத்து பிரிந்தது போன்ற நிலை அது
அந்த கட்டத்தில் ராமசந்திரன் புகுந்தார், யாரிடமும் வலிய செல்லாத ராமசந்திரன் பந்துலுவினை கட்டி பிடித்து அண்ணா என அலறினார்
இதில் சிவாஜி பந்துலு நட்பு முறிந்தது
ராமசந்திரனின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வர ஆரம்பித்தன, ராமசந்திரனின் கணக்கு தப்பவில்லை, ராமசந்திரன் வெற்றிபடிகளில் வேகமாக ஏறினார்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை பந்துலு இயக்கிகொண்டிருந்த பொழுது மரணம் அடைந்தார், அதற்கு ராமசந்திரனின் மேக் அப் காரணமாக இருக்கலாம்
அந்த படத்தை பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும், அதைவிட கொடுமை ராம்சந்தரின் வசனம்
அந்த முகத்தை படம்பிடித்த அதிர்ச்சியில் பந்துலு உயிர் துறந்திருக்கலாம்
காரணம் இல்லாமல் இல்லை,
சிவாஜியினை கட்டபொம்மனாக, வஉசியாக அச்சு அசலாக காட்டிய பந்துலு, ராமசந்திரனை சுந்தரபாண்டியனாக காட்ட முடியாமல் உயிர்விட்டிருக்கலாம்
"அடேய் ராமசந்திரா இது உனக்கு சரிவராத வேடம், சிவாஜிக்கு பொருந்த கூடிய வேடம் சண்டாளா.." என சொல்லமுடியா நிலையில் அவர் இதயம் மாரடைப்பால் நின்றிருக்கலாம்
எதை எல்லாமோ கெடுத்த ராமசந்திரன் பந்துலுவினையும் கெடுக்க தவறவில்லை
Thanks S.Rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2020, 11:58 PM
#458
Senior Member
Devoted Hubber
நாம சிவந்த மண் வசூல் விவரத்தை வெளியிட்டால்
எதிர்கோஷ்டியான உலக சிற்றரசு எம்ஜியார் குழு வசதியா அடிமைப்பெண் வசூலை எடுத்து வருகிறது
போட்டியாக வந்த நம் நாடு போனியாகவில்லைப் போல??
Thanks Sekar .P
..........................
பின்னூட்டம்
அது போல சென்னை தேவி பாரடைஸில் ராஜா, நீதி படங்களின் வசூலை ஒப்பிட ரிக்ஷாக்காரன் வசூல் விளம்பரத்தை தான் தூக்கி வருகிறார்களே தவிர, ரிக்ஷா வுக்கும் ராஜா வுக்கும் இடையே வந்த அவர்களது பிரம்மாண்ட, இரட்டை வேட , வண்ணப் படமான 'நீரும் நெருப்பும்' படத்தைப் பற்றி மூச்சு விட மாட்டேங்கிறார்கள். ஏனென்றால் அது டப்பாவாகி போன படம் என்பது தெரிந்ததே. (M.T)
9
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2020, 12:00 AM
#459
Senior Member
Devoted Hubber
பின்னூட்டம்
நீங்கள் குறிப்பிட்டது போல எதற்கெடுத்தாலும் உ.சு.வா, உ.குரல், அ.பெண், மா.வேலன், எ.வீ.பிள்ளை மட்டுமே
மற்ற படங்கள் எல்லாம் வசூலில் போனியாகாதவை என்று உறுதிப் படுத்திக் கொள்கின்றனர்(s.p)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2020, 12:06 AM
#460
Senior Member
Devoted Hubber
மேற்படி பதிவில் வாத்தி சீடர் ஒருவர் ரிக்*ஷாகாரன் வசூல் முறியடிக்கவில்லை என
எழுதியதற்கான ஒருபின்னூட்டம்
அதெல்லாம் நீங்களாக பரப்பி விட்ட வெறும் மாயை,
உண்மையில் ரிக்ஷாக்காரன் வசூலை பட்டிக்காடா பட்டணமா படம் முறியடித்து விட்டது. அதை விட வசந்த மாளிகை வசூல் அதிகம். வசந்த மாளிகையை விட தங்கப் பதக்கம் வசூல் அதிகம். எனவே எம்.ஜி.ஆர். பட உலகில் இருக்கும் போதே ரிக்ஷாக்காரன் மூன்று படங்களால் முறியடிக்கப்பட்டு விட்டது.(m. T)
முதலில் ரிக்ஷாக்காரன் என்றீர்கள். அது முறியடிக்கப்பட்டு விட்ட விவரம் சொன்னதும் உடனே உலகம் சுற்றும் வாலிபனுக்கு தாவி விட்டீர்கள்.
விக்கிபீடியா ஒன்றும் வேத புத்தகம் அல்ல. அதிலும் பல தப்பும் தவறுகளும் உள்ளன.(M T )
உ சு வாலிபன் வசூலை தங்கப்பதக்கம் பந்தாடிவிட்டது
Last edited by sivaa; 10th October 2020 at 12:10 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks