-
11th October 2020, 06:00 AM
#471
Senior Member
Devoted Hubber
1969 ல் நடந்த ஒரு விடயத்தை இன்றையகாலகட்டத்தில்(1969ற்கு பின்னர் சீர்திருத்த எழுத்து வந்தபின் ) எழுதும்பொழுது
புதிய சீர்திருத்த எழுத்தில்தான் எழுதமுடியும்.அதிபுத்திசாலிக்கு ஏனோ மூளை வேலை செய்யவில்லைபோலும்
சிவந்த மண் டிக்கட் விபரம் எழுதியவர் இப்போது வெளிவரும் எந்த ஒரு படமும் 100 ரூபாய் டிக்கட்டை 3000 ரூபாய்க்கு விற்றால்தான்
சிவந்தமண் டிக்கட் விற்ற சாதனையை முறியடிக்கமுடியும் என்ற சாரப்பட எழுதியிருக்கிறார்.
இதன்மூலம் சிவந்தமண் டிக்கற் விபரத்தை எழுதியவர் படங்களின் டிக்கற் விலை 100 ரூபாய் விற்ற காலத்தில் எழுதியுள்ளார்
என்பது தெரிகிறது. அதாவது அந்த காலகட்டத்தில் சீர்திருத்த எழுத்து நடைமுறைக்கு வந்துவிட்டது.
எனவே அதி புத்திசாலிகள் முழுவதையும் உள்வாங்காமல் எங்கே குற்றம் காணலாம் என அலைகிறார்கள்போலும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020 06:00 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2020, 06:01 AM
#472
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020, 06:14 AM
#473
Senior Member
Devoted Hubber
# 469 ம் பதிவிற்கான பின்னூட்டங்கள் சில
.................................................. ........
Rai vel பெங்களூரு லட்சணம் தெரியுமா உங்களுக்கு உங்கள் ஆக்டர் படம் இரண்டு வாரங்கள் தான் ஆனால் சிவாஜியின் படங்கள் பல படங்கள் 100 நாட்களை கடந்துள்ளன பெங்களுரில் மட்டும் இல்லாமல் மைசூர்லும் பல படங்கள் 100 நாட்கள் சிவாஜியின் படங்கள் கடந்து வெற்றி வாகை சூடி உள்ளது (narasimhan)
................................................
கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டரில் நம் நாடு படம் 70 நாட்களுக்குப் பின் ஒரு ஷோவுக்கு 15 பேர், 20 பேர் வைத்து ஓட்டப்பட்டது. பட்டுக்கோட்டை முருகையாவிலும் இதே நிலைதான். 100 நாட்கள் இழுக்க முடியாமல் தூக்கினர்.(M T)
.......................................
கும்பகோணம் வசூல் பற்றிய புள்ளி விவரங்களுடன் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் மொட்டையாக கும்பகோணத்தில் நம் படம் தான் அதிக வசூல் என போகிற போக்கில் சொல்லி விடுகின்றனர்,(S P )
..................................
கணக்குல படுவீக்கானவனக் கொண்டு கட்சியின் பொருளாளராப் போட்டு கட்சி மாநாட்டுக்கணக்க கேக்கப்போய் கட்சில இருந்தே தூக்கி வீசப்பட்டவனிடம் போய் நாம கணக்கக் கொடுத்தா அவன் மண்டைக்கு என்னிக்கு ஏறும்?( S N )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020, 06:18 AM
#474
Senior Member
Devoted Hubber
# 469 ம் பதிவிற்கான பின்னூட்டங்கள் சில
உலகம் சுற்றும் வாலிபன் சுமார் 6 மணி 30 நிமிடங்கள் ஓடககூடிய படமாக எடுக்க பட்டுள்ளது என்ற பெருமை சிறப்பை அவர்கள் பதிவாகிய படம் எடுக்கப் பட்டு கதையில் உள்ளது . மிகவும் பல இன்னல்களை சந்தித்து தான் தயாரித்து வெளியிட்ட படம் என்று அவர்கள் கதையில் உள்ளது. சுமார் 2பட தயாரிப்பு செலவு செய்யப்பட்ட படம். எங்கப்பன் குதிறுக்குள் இல்லை என்பது போல் உள்ளது. ஒரு பட முதல் வசூல் திணறும் போது 2 பட அளவில் எடுக்கப்பட்டு edit செய்பட்டு வெளியிடப்பட்ட படத்தின் நஷ்ட கணக்கை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்நிய செலாவணி பிரச்சனை கதை வேறு. அவர்கள் கதையே பல உண்மை சொல்லி உள்ளது .புதிய பதிவில் நீங்கள் சொல்வது போல் மறைமுக தோல்வி உறுதி ஆகிறது. நன்றி.(S Radhakrishnan)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020, 06:44 AM
#475
Senior Member
Devoted Hubber
டக்கென்று இப்படி கேட்டுட்டீங்களே சார்?
அவங்க ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் உதார் விட்டு வருபவர்கள்,
இத்தனைக்கும் அவர் உரிமைக்குரல் மாதழ் இதழ் வேறு நடத்தி வருபவர், அவரிடமே ஆதாரம் இல்லாத போது என்ன செய்ய முடியும்?
அப்போ எல்லாம் அவர்களால் எந்தப் பொய்த் தகவல்களையும் எளிமையாக பிரச்சாரம் செய்து கொள்ள வசதி இருந்தது,
ஆனால் இப்போது டிஜிட்டல் யுகம் ஆதாரங்கள் வேண்டுமே,
இப்படி எல்லாம் கேட்டா பதிவை நீக்குவது தானே ஒரே வழி,
Thanks Sekar P
..............................
பின்னூட்டங்கள் சில
சேகர் சார்.. வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க.. இவ்வளவு கிடுக்கிப்பிடி போடுவீங்கன்னு அவர் எதிர்பார்க்கவில்லை.. ஸோ.. Great Escape...( J H )
..........................
! உண்மை தான் சார்
வெச்சுகிட்டா வன்ஞனை செய்யப் போறாங்க?
(S P )
............................
டிஜிட்டல் யுகம் என்பதைவிட இது சத்தியயுகம். இனிமேல் இங்கு பொய்மைகளுக்கு வேலை இருக்காது! (V v)
...........................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020, 06:30 PM
#476
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் நடித்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் பல படங்களுக்கு விழா கொண்டாடப்பட்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விட பல படங்களுக்கு (100 நாட்களுக்கு மேல் ஓடியும்) விழா கொண்டாடப்படவில்லை. பரிசுக் கேடயங்களும் வழங்கப்படவில்லை. இதை இங்கே பதியக் காரணம், 'அங்கே' சிற்றரசர்குழுவில் அவங்க ஆட்கள் சில விழாக்களை ரத்து செய்து விட்டதாகவும், நடிகர் திலகம் ஒன்றிரண்டு தியேட்டர்களில் படம் ஓடியிருந்தாலும் விழாவில் ஓடி ஓடி கலந்து கொள்வதாகவும் எழுதியுள்ளனர். நடிகர் திலகம் நடித்த பாதிக்கு மேற்பட்ட படங்களுக்கு விழாவே நடக்கவில்லை. இது ரசிகர்களுக்கும் , அதைவிட படக்கலைஞர்களுக்கும் ஏமாற்றமே.
பீம்சிங் இயக்கிய பாவமன்னிப்பு, பாசமலர் படங்களுக்கு விழா நடந்தது. ஆனால் பத்து அரங்குகளில் 100 நாட்கள் கண்ட பாலும் பழமும் படத்துக்கும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் விழா நடத்தவில்லை.
ஏ.பி.நாகராஜனின் நவராத்திரி, திருவிளையாடல் படங்களுக்கு விழா நடந்தது. ஆனால் சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள் படங்களுக்கு விழாவும் இல்லை, விருதுகளும் இல்லை.
பாலாஜி எங்கிருந்தோ வந்தாளுக்கு மட்டும் விழா எடுத்தார். ராஜா, தீபம், தியாகம் படங்களுக்கு விழா நடத்தவில்லை. இவரிடம் ஒரு நல்ல பழக்கம், விழா நடத்தாவிட்டாலும் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களுக்கு ஷீல்டு செய்து கொடுத்து விடுவார்.(தியாகம் படத்துக்கு அதுவும் தரப்படவில்லை).
ராஜேந்திர பிரசாத் தனது எங்கள் தங்கராஜா ஒன்பது அரங்குகளில் ஓடியும் விழா நடத்தவில்லை. (விழா நடத்தி விருது வழங்குவது கலைஞர்களுக்கு செய்யும் கெளரவம் என்பது ஏனோ சில தயாரிப்பாளர்களுக்கு புரிவது இல்லை). ஆங்...., கெளரவம், பாபு, இரு மலர்கள், தவப்புதல்வன், அவன்தான் மனிதன் படங்களுக்கும் 100வது நாள் விழா நடக்கவில்லை. இவை ஒருபானை சோத்துக்கு சில சோறுகள்.
நடிகர் திலகம் விரும்பியிருந்தால் இவற்றுக்கு விழா நடத்தச் சொல்லி ஓடிப்போய் கலந்து கொண்டிருக்க மாட்டாரா?.
(நான் மேற்சொன்ன அத்தனை படங்களின் 100-வது நாள் விளம்பரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஆதாரத்தோடுதானே பேசுவோம்)
Thanks M.Thameem
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020, 06:58 PM
#477
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2020, 07:58 AM
#478
Senior Member
Devoted Hubber
ஒரேயொரு படத்திற்காக சிங்கப்பூர் பாராளுமன்றம் ஒரு நடிகரைப் பாராட்டி தீர்மானமே நிறைவேற்றியது. அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள். அந்த நடிகர் சிவாஜி.
நயாகரா நகரத்தின் ஒரு நாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டு, அந்த மாநகரத்தின் தங்கச்சாவி பெற்ற ஒரே நடிகர் சிவாஜி. கமல்ஹாசன், அமிதாப் எல்லோரும் கௌரவ குடிமகன் விருதை மட்டுமே பெற்றார்கள்.”கௌரவ மேயர்” அந்தஸ்து பெற்ற ஒரே நடிகர் சிவாஜி.
அவரது நாடக நடிப்பைப் பார்த்து விட்டு பெரியார் “சிவாஜி” பட்டம் கொடுத்தார் என்றால், பெரியாரின் அரசியல் எதிரியான ராஜாஜி, கணேசனின் நடிப்பைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுந்தார்.
எத்தனை கதாபாத்திரங்கள்!
எத்தனை உணர்ச்சிகள்!
எத்தனை கலைக் கோலங்கள்!
கை தட்டி மகிழவா –
கண்ணீர் சிந்திக் குலுங்கவா –
கட்டிப் பிடித்து பாராட்டவா –
கண்களில் ஒற்றிக் கொள்ளவா –
தமிழ் மக்கள் அந்த மகா கலைஞனின் கலைத் துடிப்பிலே மயங்கிப் போனார்கள்.
இன்று வரை எல்லா நடிகர்களுக்கும் ஒரே பாடப் புத்தகம் அவர்தான்.
வாயால் வசனம் பேசுவதிலா –
வயிற்றிலிருந்து கர்ஜிப்பதிலா-
விழியால் கதை சொல்வதிலா –
விரலசைவில் விளக்குவதிலா –
எதில் குறை வைத்தார் அந்த
இமயமலைக் கலைஞன்?
கண்ணீர் நடிப்பா –
காமெடி நடிப்பா –
கம்பீர நடிப்பா –
கன கச்சித நடிப்பா –
கிழவனா – குமரனா –
அப்பாவியா – அரசனா –
எந்த கேரக்டரை விட்டு வைத்தார் அந்த நடிப்பு வள்ளல்?
இந்தியாவிலிருந்து முதன் முதலில் ஆஸ்கர் அவார்டுக்கு அனுப்பப்பட்ட படம் அவரது “தெய்வமகன்”!
“என்னை அமெரிக்காவின் சிவாஜி கணேசன் என்று அழையுங்கள்” என்று கூறி மார்லன் பிராண்டோ அவர்களே
மதித்த நடிகர் சிவாஜி.
“தம்பி சிவாஜியை நடிப்பில் வெல்ல யாராலும் முடியாது. மார்லன் பிராண்டோ நினைத்தால் சிவாஜியைப் போல் நடிக்க முயற்சிக்கலாம்” என்று ஒரு முறை கூறிய அறிஞர் அண்ணா, தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்து விட்டு “மார்லன் பிராண்டோ என்ன, அவன் அப்பனே வந்தாலும் சிவாஜியின் கால் விரல் நகத்தைக் கூடப் பிடிக்க முடியாது” என்று முழங்கினார்.
“சிவாஜி என் வாழ்நாளில் நான் கண்ட அற்புதம்” என்றார் கலைஞர் கருணாநிதி.
“இந்த உலகத்தில் ஒரேயொரு நடிகன்தான் இருக்கிறான். என் அன்புத் தம்பி சிவாஜிதான் அந்த ஒரே நடிகன்” என்றார் எம்ஜிஆர்.
உலக வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் அதாவது கிமு, கிபி என்று பிரிப்பதைப் போல, திரையுலக வரலாற்றை சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின், அதாவது சி.மு., சி.பி. என்று பிரிக்க வேண்டும்.
Thanks Ganesh Pandian
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2020, 08:38 AM
#479
Senior Member
Devoted Hubber
மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தபடம் பாபு.
18-10-1971 ஆம் ஆண்டு திரைக்கு வந்து 100 நாட்களுக்குமேல் ஓடி இதனுடன் போட்டிக்கு வந்த
மா கோ ராவின் ரசிகர்களால் பெரிதும் விதந்து பேசப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
வாத்தியின் இரட்டைவேட வண்ணப்படமான நீரும் நெருப்பு படத்தை மண்கவ்வ வைத்த படம் பாபு.
பாபு படத்தின் சென்னை வசூல் 10 11 523.40
இலங்கையில் 16-12-1972 ல் திரையிடப்பட்டது.
கொழும்பு.....................ஸெயின்ஸ்தான்......... ....................112 நாட்கள்
கொழும்பு.....................ஈரோஸ்................ ..............................042 நாட்கள்
யாழ்நகர்......................ராஜா................ ...................................105 நாட்கள்
திருமலை ....................சரஸ்வதி....................... ......................065 நாட்கள்
யாழ் ராஜாவில் .பாபு.............................வசூல்.....94.... .....நாளில் ..................2 36 000.00
யாழ் ராஜாவில்..நீரும் நெருப்பும்......வசூல்.......67.......நாள்(ஓடிமுடிய ).....1 36 337.00
(யாழ் ராஜா m g r ரசிகர்களின் கோட்டை ஆனால் அக்கோட்டையில் பறப்பது
எங்களது கொடி..) யாழ் ராஜா m g r அபிமானியின் தியேட்டர்
பாபு இந்தியாவிலும் சாதனை இலங்கையிலும் சாதனை
பாபுவுடன் போட்டிக்கு வந்த படம் இந்தியாவிலும் தோல்வி
இலங்கையிலும் தோல்வி. பாவம் சீடர்கள் கற்பனையில் சாதனை எழுதி
சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
Last edited by sivaa; 15th October 2020 at 04:28 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2020, 08:39 AM
#480
Senior Member
Devoted Hubber
நடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு;
ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள்.
‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
சிவாஜி அப்படித்தான். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன்.
நன்றி : Hindu talkies
Thanks Raja Lakshmi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks