-
7th October 2007, 08:52 AM
#1
Senior Member
Devoted Hubber
TAMILAR' GOD RAMA
[tscii]தமிழர் திருமகன் இராமன் ஜடாயு
இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே, மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள் என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.
இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில் மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?
ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, புலிநகக் கொன்றை ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் பயனியர் இதழில் எழுதியுள்ள Karunanidhi wrong, Ram an ancient Tamil icon என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி என்ற பதிவில் [3] கடுந்தெறல் இராமன், வெல்போர் இராமன் என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.
மணிமேகலையில் இராமாயணம்:
கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)
காயசண்டிகை கூறினாள் - நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது.
இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.
இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்? என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!
"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"
(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
இந்த வரிகளில் மாட்சி இல் இராவணன் என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.
சைவத் திருமுறைகளில் இராமாயணம்:
சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.
திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் -
"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)
திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -
"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே
[சிலையினான் - வில்லை உடைய இராமன்]
வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"
(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)
தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை
[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]
(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)
இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.
இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)
என்றே சம்பந்தர் பாடுவார்.
மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.
சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.
திருப்புகழில் ராமாயணம்:
முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா’வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
(தொந்தி சரிய என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)
இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள் என்று அழகாகக் குறிப்பிடுவார்.
இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை திருட்டு ராக்கதன் என்றே குறிப்பிடுகிறார்.
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னா’திரு ...... மருமகப் பா’வோனே
(பழிப்பர் வாழ்த்துவர் எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)
இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.
கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று ராம லாலா என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.
தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -
குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்
(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)
ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் பெருமாள் என்பது தான்!
தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என
-
7th October 2007 08:52 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2007, 08:58 AM
#2
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
CONTD
தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.
கலைகள் போற்றும் காகுத்தன்:
10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.
தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.
தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.
எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.
தமிழர் திருமகன் இராமன்:
திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]
..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, ama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.
திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.
எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம் என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை அரக்கன், திருட்டு ராக்கதன் என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.
'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!
(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).
http://jataayu.blogspot.com/
சுட்டிகள்:
[1]http://timesofindia.indiatimes.com/Opinion/LEADER_ARTICLE_We_Do_Things_Differently/articleshow/2395923.cms
[2] http://www.dailypioneer.com/columnis...mp;validit=yes
[3] http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html
[4] http://arvindneela.blogspot.com/2007...dards-and.html
[5] http://www.infitt.org/tscii/archives/msg00310.html
--------------------------------------------------------------------------------
jataayu.b@gmail.com
திண்ணையில் ஜடாயு
-
18th October 2007, 09:45 PM
#3
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
வால்மீகி ராமாயணம் கூறுவது என்ன ? சோ
"ஜூனியர் விகடன்' பத்திரிகை 30.9.2007 தேதியிட்ட இதழில், ராமாயணம் பற்றி அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் கூறியுள்ள, சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ தாத்தாச்சாரியார், வயதில் மட்டுமல்ல, அறிவிலும் மிகப் பெரியவர்; ஸம்ஸ்க்ருத புலமை மிகுந்தவர்; வேதங்களை அறிந்தவர்; ஹிந்து மத சித்தாந்தங்களை நன்கு கற்றவர். இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத நான், அவருடன் மாறுபடுகிற கருத்துக்களைச் சொல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. அவர் கூறியுள்ளவையும், அவற்றுக்கு என் மறுப்பும் இங்கே இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...போர் முடிந்து ராமர் திரும்புகையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்து விட்டதாகவும், வால்மீகி ராமாயணத்தில் வருகிறது...
மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,
இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ! அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' என்று கூறுகிறார்.
அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான்
இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர் பெற்று,மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ..."ராமர் பாலம்' என்று சொல்வதே தவறு. "ராமர் அணை' என்று வேண்டுமானால் சொல்லலாம்... "சேது' என்ற சொல்லுக்கு "கடந்து செல்வது' என்று பொருள். ராமர் கடலைக் கடந்து சென்ற நிகழ்வுக்குப் பெயர்தான் சேது. இது ஒரு வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல...
மறுப்பு : ஸம்ஸ்க்ருத அகராதிகளில் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அவ்வாறே அதற்குப் பொருளும் கூறப்பட்டிருக்கிறது.
"ஸேது' என்பதற்கு "அணை' என்ற பொருள்; மற்றும் "பாலம்' என்கிற பொருள்; மேலும் சில அர்த்தங்கள் அகராதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் "கடப்பது' என்ற அர்த்தம் கூறப்படவில்லை.
தவிர, வால்மீகி ராமாயணத்தில் "ஸேது:' (ஸேதுஹு என்று படிக்க வேண்டும்) என்று வருகிறது. வினைச்சொல் "ஸேது:' என்று வராது. ஆகையால் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லே. (ஸாம வேதத்தில், அது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கூற என்னால் முடியவில்லை.)
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...மணல் மற்றும் கற்களைப் போட்டு, அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தரப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக, வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான்
"சேது பாலம்' என கதைகட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்....
மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் "தடுப்புகள்' ஏற்படுத்தப்பட்டன என்றோ, அவற்றை வானர சேனை தாண்டித் தாண்டி சென்றன என்றோ கூறப்படவில்லை.
அணை பாலம் கட்டப்பட்டதையும், கடலை, வானர சேனை கடந்ததையும் வால்மீகி ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது :
"பல்லாயிரக்கணக்கான வானரர்கள், பாறைகளைப் பெயர்த்து, மரங்களைப் பிடுங்கி, கடற்கரைக்கு கொண்டு வந்தனர். (மரங்களின் பெயர்களும் தரப்பட்டிருக்கின்றன). பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டன... பாறைகளை சமுத்திரத்தில் போட்டு, (அவை நேராக இருக்க) கயிறுகள் பயன்படுத்தப்பட்டன... (ஒவ்வொரு தினமும் எவ்வளவு தூரம் பாலம் கட்டப்பட்டது என்பது விளக்கப்படுகிறது)... இவ்வாறு, வானத்தில் தெரிகின்ற நக்ஷத்திர மண்டலம் போல், அந்த சமுத்திரத்தின் நடுவே
காட்சியளித்த, அந்த உன்னதமான பாலத்தை (அணையை), நளன் கட்டினான். வானத்திலிருந்து சித்தர்களும், ரிஷிகளும் இந்த அதிசயத்தைப் பார்வையிட்டனர். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உடைய அந்தப் பாலத்தைக் கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் பிரமித்தனர். நன்கு கட்டப்பட்ட, மிகச் சிறப்பான, ஸ்திரமான அந்த அணை, வகிடு எடுக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கேசம் போல காட்சியளித்தது...!
இவ்வாறு, வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிற அணையை, அல்லது பாலத்தை "மண்ணையும் கல்லையும் போட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது' என்று கூறுவது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது.
வால்மீகி ராமாயணத்தில் மேலும் "...ஸுக்ரீவனுடன், ராமர் வானர ஸேனைக்கு தலைமை வகித்து முன் சென்றார் (ஹனுமார் அவரைத் தாங்கிச் செல்ல வேண்டுமென்று ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டான்) சில வானரர்கள், பாலத்தின் நடுவில் நடந்தனர்;
சிலர் பாலத்தின் இருபுறங்களில் நடந்தனர்; சிலர் தண்ணீரிலியே கூட நீந்தினர்... கடலின் மறு கரையிலிருந்து, நளன் கட்டிய பாலத்தின் மூலம் இலங்கையை அடைந்த வானர ஸேனைகள் அங்கே முகாமிட ஸுக்ரீவன் ஆணையிட்டான்...'
இவ்வாறு வால்மீகி கூறியுள்ளபோது, ஏதோ மணல் "திட்டுகளை தாண்டித் தாண்டி' மறு கரை அடையப்பட்டது என்று சொல்வதும், வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானதே.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது. ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார் : "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்' அதாவது "நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்' என ராமர் தன் உரையில் சொல்வதாக, வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது....
மறுப்பு : இந்த மேற்கோள் அரைகுறையாகவும், தவறாகவும் இருக்கிறது. ஸீதை அக்னி பிரவேசம் செய்கிறபோது, தேவர்கள் ராமர் முன்தோன்றி, "தெய்வங்களில் முதன்மை படைத்தவன் நீ, என்பதை நீ உணராமற் போவது எப்படி? படைப்பின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், இருக்கிறவனல்லவா நீ? மனிதன் போல நடந்துகொண்டு ஸீதையை அலட்சியம் செய்கிறாயே?' என்று கேட்கின்றனர்.
அதற்கு ராமர் கூறுகிற பதிலில் பாதியை மேற்கோள் காட்டி, அர்த்தம் கூறுகையில், கொஞ்சம் தானாக சேர்த்துக் கூறியிருக்கிறார் பெரியவர். அந்த ஸ்லோகம் இவ்வாறு அமைந்திருக்கிறது:
ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம்/
ஸோஹம் யஸ்ச யாதஸ்ச
பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே//
இதன் பொருள் : தசரதனின் மகன், ராமன் என்கிற மனிதன், என்றே என்னை நான் கருதுகிறேன். மேன்மை வாய்ந்த பகவான் (பிரம்மதேவன்) நான் யார், எங்கிருந்து வந்தவன் என்பதைக் கூறுவாராக'...
அதாவது, "என்னைப் போற்றாதீர்கள்' என்றும் ராமர் கூறவில்லை; "நான் தெய்வமெல்லாம் கிடையாது' என்றும் கூறவில்லை. "நான் யார் என்பதை பிரம்மதேவன் விளக்குவாராக' என்றுதான் சொல்கிறார். அப்போது பிரம்மதேவன், பலவித போற்றுதல்களைக் கூறுகிறார். "நீயே நாராயணன். நீயே கார்த்திகேயன். அறிவு, பலம், பொறுமை, அனைத்தும் நீயே. எல்லாவற்றின் தொடக்கமும் நீயே. முடிவும் நீயே. நீயே விஷ்ணு. நீ, மஹாவிஷ்ணு; ஸீதை, மஹா லக்ஷ்மி...' பிரம்மதேவன் கூறுகிற துதி நீண்டது; அது புகழ்பெற்ற துதி.
இவ்வாறு பிரம்மதேவன் கூறுவதை ராமர் மறுத்து, "என்னைப் போற்றாதீர்கள்' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது. இந்த துதிக்குப் பின்னால்தான், ஸீதையை ஏந்தி அக்னிதேவன் தோன்றினான்.
இதைத் தவிர, விஷ்ணுவே, ராமராக அவதரித்தார் என்பதும், வால்மீகி ராமாயணத்திலேயே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ராமர் தெய்வமல்ல என்பது, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்து.
ராமாவதாரம், மனித அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து, தனது அவதார காலத்தை முடிப்பதே விஷ்ணுவின் நோக்கம். அதனால்தான், ராமர் "நானே தெய்வம்' என்று கூறிக்கொள்ளவில்லை.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர், "நான் ஒரு சாதாரண தொண்டன்' என்று சொல்லிக் கொண்டாலும், அவரை தொண்டனாக நடத்தாமல், தலைவனாகவே நடத்துகிற "பண்பு' உள்ள தேசத்தில் "ராமர் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?' என்ற கேள்வி, அநாவசியமானது.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் அக்கரை போவதற்காகத்தானே கட்டினார்.
வணங்குவதற்காகவா கட்டினார்?....
மறுப்பு : இப்படி எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அது ஒன்றும் பெரிய காரியமல்ல. "சாவதற்காகத்தானே ஏசுவை சிலுவையில் அரைந்தார்கள். சிலுவையைக் கும்பிடுவதற்காகவா?' என்று கேட்கலாம். ஏசு பிரானின் தெய்வீகத் தன்மையை ஏற்காதவர்கள், இப்படிப் பேசலாம்.
"நபிகள் தலையில் முடி வைத்துக் கொண்டது, வழக்கப்படியானதுதானே?
வணங்குவதற்காகவா முடி வைத்துக் கொண்டார்?' என்றும் கேட்கலாம். இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அலட்சியமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்!
ராமர் கடலைக் கடப்பதற்கு சமுத்திரத்தில் பாலம் அமைத்த அரிய சாதனையை, தேவர்களே புகழ்ந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த உணர்வை வணங்குவதற்கு மேல், பக்தியுடையவர்கள் செய்யக் கூடியது என்ன?
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...(ஸ்ரீராமர்) திரும்புகிறபோது, விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை ராமர் இலங்கைக்குப் போவதற்கும், ஏதாவது விமானம் இருந்திருந்தால், இந்தப் பிரச்சனையே வந்திருக்காது....
மறுப்பு : ஏன்? ராவணன் ஸீதையை அபகரித்துச் செல்லாமல் இருந்திருந்தாலும், இந்தப் பாலம் பற்றிய பிரச்சனையே வந்திருக்காதே? அதைக் குறிப்பிட்டால், ராவணனின் தீய குணத்தை நியாயப்படுத்துவது போல இருக்கும் என்று அதுவிடப்பட்டு, அதற்குப் பதிலாக "ராமருக்கு இலங்கை செல்ல விமானம் இருந்திருந்தால்...' என்பது மட்டும் குறிப்பிடப்படுகிறதா?
"ராமரே அழிக்க முடிவு பண்ணியதை, நாம் வீண் நம்பிக்கையில் போற்றி...' என்றும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சார்யர், தனது கருத்துக்களின் முடிவாகக் கூறியிருக்கிறார்.
நாமும் முடிவாகச் சொல்கிறோம் ராமர், ஸேதுவை அணையை பாலத்தை அழிக்க நினைக்கவும் இல்லை, முடிவுசெய்யவும் இல்லை, முனையவும் இல்லை. அதற்கு மாறாக ஸீதையிடம் அந்த பாலத்தைக் காட்டி, அதன்மூலம் ஸமுத்திரத்தைக் கடந்ததையும் கூறி மகிழ்கிறார். அந்த இடத்தில் சமுத்திரக் கரையையும் கூட, புனிதமானது என்றும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் திகழும் என்றும் ராமர் கூறுகிறார். இது வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்டிருப்பது.
ஆக, ராமர் பற்றி ஸ்ரீ தாத்தாச்சார்யர் கூறியுள்ளவை, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்துக்களே ஒழிய, அதை ஒட்டிய கருத்துக்கள் அல்ல.
(நன்றி: துக்ளக் )
நன்றி:http://idlyvadai.blogspot.com
-
18th October 2007, 09:51 PM
#4
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!
(Where the past comes alive...)
என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரை
வெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.
தவிர,
""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர்
தாங்கி நிற்கிறது;
...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''
என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.
இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.
ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.
ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.
http://idlyvadai.blogspot.com/
Thanks-Thuglak
-
18th October 2007, 09:55 PM
#5
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!
(Where the past comes alive...)
என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரை
வெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.
தவிர,
""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர்
தாங்கி நிற்கிறது;
...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''
என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.
இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.
ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.
ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.
http://idlyvadai.blogspot.com/
Thanks-Thuglak
-
18th October 2007, 10:02 PM
#6
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
[tscii]துவேஷம் தொடர்கிறது !
"ராமன் குடிகாரன் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்' இது தமிழக முதல்வரின், ஹிந்து மத துவேஷப் பேச்சுக்களின் சமீபத்திய வெளியீடு.
ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை அவருக்கு யார் சுட்டிக்காட்டினார்களோ, தெரியாது; டெலிவிஷன் சேனல்களினால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு விட்ட இந்த அட்டூழியமான பேச்சை, கொஞ்சம் மாற்றி, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில், "ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' என்று மட்டுமே முதல்வர் கூறியதாக, அவருடைய
பேச்சு "திருத்தி' அமைக்கப்பட்டது.
இந்த திருத்தமும், பிதற்றலே. வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்திலும் ராமர் ஸோமபானம் அருந்துகிறவர் என்று எழுதப்படவில்லை.
ஸோமபானமும் அருந்தவில்லை !
ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.
ஸோம என்பது ஒரு கொடி ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.
ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.
ஆனால், மேலே கூறியுள்ளபடி, "ராமர் ஸோமபானம் அருந்தினார்' என்று கூட, வால்மீகி தனது இராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
அதாவது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி கூறியிருக்கிறார்' என்ற முதல்வரின் பேச்சும் பிதற்றல்; "ராமர் ஸோமபானம் என்கிற மதுபானம் அருந்துகிறவர்' என்று வால்மீகி எழுதியிருப்பதாக, முதல்வர் கூறியிருப்பதும் அபத்தம்.
சரி, ஏன் இப்படி முதல்வர், தப்பும் தவறுமாக பேசியிருக்கிறார்? "பட்டாபிஷேகத்திற்கு வஸிஷ்டர் குறித்த தினம் மட்டமான தினமாகி விட்டது, ஏன்?' என்றும்; "ஸீதை மீது ராமர் மரவுரியை கட்டாயமாகத் திணித்தார்' என்றும் ஏற்கெனவே கலைஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. அந்தத் தவறுகளை அப்போதே நாம் சுட்டிக்காட்டினோம். ராமாயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, பிதற்றியே தீருவது என்று, அவருக்கு என்ன வைராக்கியமோ தெரியவில்லை இப்போது மீண்டும் அந்த வேலையைச் செய்திருக்கிறார்.
இருந்தாலும் கூட, முதல்வர் ஆயிற்றே! அதனால், அவருடைய பதவியை நினைத்தாவது அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, கொஞ்சமாவது நாம் முனைய வேண்டாமா?
"மது' என்றால் "குடி'தானா ?
திரைப்பட காமெடி சீன்களில், காமெடியன் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, "கெக்கே... புக்கே... மக்ர டொக்கே... ஜிக்ல மக்கோ... திங்கன கும்பாரே... அஜாகினி பஜோகினி...' என்று ஏதாவது பேசுவார்; அவர் பக்கத்தில் இருப்பவர், இந்த உளறலுக்கு ஒரு அர்த்தம் சொல்வார். அந்த மாதிரி, முதல்வரின் பேச்சுக்கு, நாம் ஒரு பொருள் காண்போம்.
ராமாயணத்திலிருந்து, ராமர் "மது' உண்டதாக தெரிய வருகிறது என்று யாரோ முதல்வரிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு, "ஆஹா! மது! மதுபானம்! சாராயம்!' என்று அவர் முடிவுகட்டி விட்டார் போலிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன.
"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது.
ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது.
குடிப்பழக்கத்திற்கு, ராமர் கண்டனம் !
இன்னமும் சொல்லப்போனால், போதை தருகிற பானங்களை அருந்துவதை ராமர் வெறுத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வாலி வதத்திற்குப் பிறகு, ஸுக்ரீவன், தான் ராமருக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்; இப்படி யுத்த முஸ்தீபுகள் செய்யப்படாமல், இருப்பதைப் பார்த்த ராமர் கோபம் அடைகிறார். ஸுக்ரீவன் கேளிக்கைகளிலும், போதை பானங்கள் அருந்துவதிலும் நேரம் கழித்துக் கொண்டிருப்பதை சாடி, அவர் லக்ஷ்மணனிடம் பேசுகிறார்.
அந்த இடத்தில் ராமர் கண்டிக்கிற பழக்கம் "பானம் அருந்துவது'; "பானமேவோபஸேவதே' "பானம் அருந்துவதிலேயே குறியாக இருக்கிறான்' என்று ராமர் கூறுகிறார். அந்தப் பழக்கத்தைக் கண்டிக்கிறார். ஆனால், குடிப் பழக்கத்தை, "மது அருந்துவது என்றோ, ஸோமபானம் அருந்துவது' என்றோ சொல்லவில்லை;
லக்ஷ்மணன் சுக்ரீவனை சந்திக்கச் செல்கிறான்; முதலில் தாரை (வாலியின் மனைவியாக இருந்தவள்; பின்னர் சுக்ரீவனோடு இணைந்தவள்) வந்து வரவேற்கிறாள். "பானம் அருந்தியதால் லஜ்ஜை விலகியவளாக' என்று அவள் வர்ணிக்கப் படுகிறாள். "பானயோகாச்ச நிவ்ருத்தலஜ்ஜா' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது; "மது அருந்தியதால் வெட்கத்தை விட்டாள்' என்றோ, "ஸோமபானம் அருந்தியதால் லஜ்ஜையை விட்டாள்' என்றோ, சொல்லப்படவில்லை.
ராமர் சுக்ரீவனுக்கு விடுத்த எச்சரிக்கையையும், அவர் கூறியதையும் தாரையிடம் எடுத்துரைக்கிற லக்ஷ்மணன், "வாழ்வில் நலம் பெறவும், தர்ம நெறிப்படி நடக்கவும் விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி குடிப்பது தகாது; அறம் பொருள் இன்பம்
மூன்றையும் குடி அழிக்க வல்லது' என்கிறான். அதாவது ராமரும், அவர் சொல்படி பேசிய லக்ஷ்மணனும் குடியை நிந்தித்தனர். இந்த இடத்திலும் குடிப்பழக்கம் "மது அருந்துவது' என்று குறிப்பிடப்படவில்லை. "பானம்' என்றுதான் கூறப்படுகிறது.
மீண்டும், ஸுக்ரீவனை சந்திக்கிறபோது, பசுவதை செய்பவன், திருடன், விரதத்தை மீறுபவன், ஆகியோருக்கு இணையாக குடிப்பவனைப் பேசுகிறான் லக்ஷ்மணன். அப்போதும் "மது, ஸோமபானம்' என்றெல்லாம் சொல்லவில்லை. "கோக்னே சைவ ஸுராபேச சௌரே பக்னவ்ரதே ததா' என்று சொல்லி, குடிப் பழக்கத்தை "ஸுராபே' ஸுராபானம் அருந்துவது, என்றுதான் லக்ஷ்மணன் கூறுகிறான்.
ராமரும், லக்ஷ்மணனும், குடிப்பழக்கத்தை இவ்வாறு கண்டனம் செய்திருக்க, ராமர் குடிகாரர் என்றோ, குடிப்பழக்கம் உடையவர் என்றோ கருத வால்மீகி ராமாயணத்தில் இடமே இல்லை.
மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்வது தகும் என்பதால், "ஸோமபானம் என்பது போதை தருகிற பானம் அல்ல' என்பதையும், அதையும் ராமர் அருந்தியதாக வால்மீகி கூறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
நேருஜி தவறான விலாசம் !
"நேரு சொன்னார், சொன்னார்...' என்று மீண்டும் மீண்டும் முதல்வர் பேசி வருகிறார். மேலைநாட்டு விமர்சனங்களை அப்படியே ஏற்ற நேருஜியின் கருத்துகளைப் படித்து, ஹிந்து மதம் பற்றி தெளிவுபெற முடியாது. பார்லிமென்டின் நடைமுறைகள், சோஷலிஸ நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் பற்றி
தெரிந்துகொள்ள, நேருவின் கருத்துகளும் உதவும். ஆன்மீகம் பற்றியோ, தெய்வ நம்பிக்கை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமானால், அனந்தராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்; அல்லது தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஆகியோரை அணுக வேண்டும். முதல்வர் விலாசம் தெரியாமல், நேருவிடம் போனது அவருடைய தவறு. உதாரணமாக ரம்ஜான் நோன்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதல்வரிடம் போனால், அந்த நோன்பு பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றி விவரம் இல்லாவிட்டாலும் "குல்லாய் அணிவது, கஞ்சி குடிப்பது' என்ற விவரங்களாவது தெரியவரும். ஆனால் விநாயகர் சதுர்த்தி பற்றி கேட்டால், "கொழுக்கட்டையை வாயில் திணிப்பேன்' என்பார். கிருத்திகை விரதம் பற்றி அவரிடம் கேட்பதில் என்ன பயன் இருக்கும்? "அன்று நான் நிறைய சாப்பிடுவேன்' என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்கு மேல் அவருக்குத் தெரியாது.
ஆகையால் விலாசம் தவறி அவரிடம் போய் இந்த மாதிரி விஷயங்கள் பற்றி கேட்டால், அது நம் தவறு. இவ்விஷயத்தில், நேருஜி சமாச்சாரமும் அப்படித்தான். இருந்தாலும், அவர் மனித நாகரிகத்தை மதித்தவர் என்பதால், "கொழுக்கட்டை திணிப்பேன்' என்றெல்லாம் சொல்லாமல், "எனக்கு அது பற்றியெல்லாம் நம்பிக்கையும் இல்லை; தெரியவும் தெரியாது' என்று சொல்லியிருப்பார்.
இதையெல்லாம், முதல்வரின் கவனத்திற்காக நாம் சொல்லவில்லை. கலைஞர் "ராமன் குடிகாரன்... ஸோம பானம் அருந்தும் பழக்கமுடையவர்' என்றெல்லாம் பேசியதற்கு மறுதினமே, திரு. சரத்குமார், திரு.குருமூர்த்தி ஆகியோர் என்னிடம் இதுபற்றி அபிப்ராயம் கேட்டபோது, வால்மீகி ராமாயணத்தில் உள்ள மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். அவர்களைப் போல நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறினால், ஓரளவாவது உண்மைகள் பலரிடையே பரவும்; கலைஞர் போல துவேஷ மனம் கொண்டவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று என்ன பயன்? துவேஷத்தில் மூழ்கியிருக்கிற அவரால், உண்மையை கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமற் போய்விட்டது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், வாசகர்களில் யாராவது, முதல்வரின் பேச்சைப் பற்றிய செய்தியைப் படித்து, சற்று மனம் குழம்பியிருந்தால், அவர்கள் "தெளிவுபெற வேண்டும்' என்கிற எண்ணத்தில்தான், இவ்வளவு விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அரசியல் சட்டம் !
"ராமர் பற்றி பேசக்கூடாது என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்று ரொம்ப புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டிருக்கிறார். "ஹிந்து மதம் நீங்கலாக மற்ற மதத்தவர்கள் வழிபடுகிற தெய்வங்கள் பற்றியோ, இறைத் தூதர்கள் பற்றியோ எதுவும் பேசக் கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? அப்போது அவை பற்றியெல்லாம், யாராவது தாறுமாறாகப் பேசினால், அதில் தவறு இல்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமா? அதுதான் முதல்வரின் வாதமா? அதை விடுவோம்.
"அரசு மேற்கொள்ளும் திட்டம் பற்றி யாரும் எதுவும் பேசினால் அது சதி' என்று அரசியல் சட்டம் சொல்கிறதா? இல்லையே! பின் ஏன், சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகிறவர்கள் செய்வது சதி என்று முதல்வர் சாடுகிறார்? சில ஆண்டுகளுக்கு முன்பு "என்னை கருணாநிதி' என்று குறிப்பிடுகிறார்களே? தமிழக அரசியல் அவ்வளவு தாழ்ந்துவிட்டது!' என்று முதல்வர் வேதனைப்பட்டாரே? ஏன்? அரசியல் சட்டத்தில் "கருணாநிதியை, கருணாநிதி என்று சொல்லக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறதா? சமீபத்தில், "என் குடும்பத்தினர் பற்றி விமர்சனம் செய்கிறார்களே' என்று வருத்தப்பட்டாரே "கருணாநிதி குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா?
அரசியல் சட்டம், எல்லா மதத்தினருக்கும் இடர்பாடு, குறுக்கீடு இன்றி தங்கள் நம்பிக்கையைத் தொடர்கிற உரிமையைத் தந்திருக்கிறது; வழிபாட்டு உரிமை உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதை மதிக்காமல் ஒரு ஆட்சியாளர் பேசுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே!
கிரிமினல் குற்றம் !
இது ஒருபுறமிருக்க முதல்வர் தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் மனம் புண்படுகிறபடியும், ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்தும் பேசி வருவது அரசியல் சட்டம் கூறுகிற மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல; இந்திய தண்டனைச் சட்டம் (இந்தியன் பீனல் கோட்) பிரிவுகள் 295ஏ, 298 ஆகியவற்றின்படி கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு, அந்த இருபிரிவுகளில், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை' என்று முதல்வர் கூறலாம்.
ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது.
இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வī
-
18th October 2007, 10:03 PM
#7
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
contd
ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது.
இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வருகிறவர், ஆட்சியில் எப்படி தொடரலாம்? ஒரு மதத்தினர் தொழும் தெய்வங்களை நான் இகழ்ந்தே தீருவேன் என்று செயல்படுகிறவர் மதச்சார்பின்மையின்படி ஆட்சி நடத்துபவரும் அல்ல; அப்படிப்பட்டவர் பதவியில் தொடர்வது, அரசியல் சட்டத்திற்குப் பெருமையும் அல்ல.
(நன்றி: துக்ளக் )
நன்றி:http://idlyvadai.blogspot.com
-
18th October 2007, 10:04 PM
#8
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
ராமாயணத்திலிருந்து என்ன கற்கலாம்?
ராமன்
தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.
சீதை
வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்
பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.
லக்ஷமணன்
சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.
பரதன்
தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.
கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.
கூனி-மந்தரை
யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது
சூர்பனகை
திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது
ராவணன்
இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.
மண்டோதரி
கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.
கும்பகர்ணன்
தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.
விபீஷணன்
தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.
வாலி
தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.
சுக்ரீவன்
அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.
அனுமான்
தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.
புஷ்பகவிமானம்
இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.
நன்றி.
-
18th October 2007, 10:08 PM
#9
Senior Member
Devoted Hubber
RAMA THE GREAT GOD
இப்போது கலித்தொகை கூறும் ராமாயண கதை காண்போம்.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: கலித்தொகை 38:1-8
புலவர் கபிலர் யானை தன் கொம்புகள் வேன்கை மரத்தில் குத்தியதை பின் எடுக்க முடியாமல் தவித்ததை - இமயமலையை வில்லாக வளைத்து (முப்புரம் எரித்த) சடையுடைய சிவபெருமான் தன் மனைவி உமையோடு அமர்ந்து இருந்தபோது 10 தலை கொண்ட இராவணன் இமயமலை கீழ் கையிட்டு தூக்கிடமுயல சிவன் அழுத்த அல்லல் உற்றாதற்கு உவமையாக தந்துள்ளார்.
தமிழ் மக்களிடம் இராமாயணம் மிகுதியாக பரவிஉள்ளதைக் காட்டும்.
-
27th October 2007, 07:33 AM
#10
Senior Member
Devoted Hubber
MODERN RAVANAS
தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!!
தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!
இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:
"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்
இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!
முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்???
அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!
இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!
ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை.
குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!
அன்புடன்
ஹரிஹரன் http://harimakesh.blogspot.com/2007/10/179.html
Bookmarks