-
17th January 2008, 04:23 PM
#51
Senior Member
Diamond Hubber
Sibi is a Vijay fan. If he is taking that route, it's up to him.
Anyway, RR, thanks for the contribution. I have difficulty reading them for two reasons, 1) time, 2) font. But read them I shall in due time.
I saw Sathyaraj in 9 Rooba Noottu, and finally saw the actor he is supposed to be. Even his performance in Periyar was a bit uneven, no thanks to the inconsistent script.
Here, he gave his all...really brave and dedicated performance.
Of course, credit is due to Tangkar Bachan who made it happen.
Funny enough, I thought the story was wholly unoriginal. NT and Visu did many films with the same story back in the eighties. I guess they did one too many, that some really stunk.
Here, Tangkhar did a nice update to the classic tale and drew some good performance.
Negative points? Archana tend to get a bit overboard sometimes. There seemed to be some comedy scene in the bus....but I was like, huh?
I must have teared couple of times, and believe me, I would not have done so if it was not Sathyaraj.
The man finally delivered the goods. He finally did and I am proud to say that I am his fan. I have always been....
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
17th January 2008 04:23 PM
# ADS
Circuit advertisement
-
25th January 2008, 07:33 PM
#52
Senior Member
Veteran Hubber
சத்யராஜின் டயலாக் டெலிவரி, வில்லன் வேடத்துக்கே ஒரு மெருகு கூட்டியது. உதாரணத்துக்கு ஒன்று...
காக்கிச்சட்டை படத்தில், ஓட்டல் அறையில் சத்யராஜின் கள்ளக்கடத்தல் கூட்டாளி ராஜீவை, மாதவி துப்பாக்கியால் சுட்டு சாகடிக்க, அப்போது உள்ளே வரும் சத்யராஜிடம் மாதவி "விக்கி, உன் பார்டனரை நான் கொன்னுட்டேன்" என்று சொல்லி அழ, அதற்கு சத்யராஜ்... அவருக்கே உரித்தான நக்கல் நடையில்...
"இப்போ என்ன, புத்தரா போயிட்டாரு?. பொறுக்கிப்பயதானே போயிட்டான். விட்டுத்தள்ளு".
(இந்த த்ரெட், பக்கத்தின் கடைசியில் இருந்தது. அடுத்த பக்கம் போகாமல் இருக்க, ஒரு போஸ்ட் போட்டு முதல் பக்கத்தில் தக்க வைத்து விட்டேன்).
-
25th January 2008, 08:33 PM
#53
Senior Member
Seasoned Hubber
-
25th January 2008, 08:33 PM
#54
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
saradhaa_sn
(இந்த த்ரெட், பக்கத்தின் கடைசியில் இருந்தது. அடுத்த பக்கம் போகாமல் இருக்க, ஒரு போஸ்ட் போட்டு முதல் பக்கத்தில் தக்க வைத்து விட்டேன்).
நன்றி! என் வேலையை நீங்கள் செய்ததற்கு!!!
-
27th January 2008, 12:24 PM
#55
Senior Member
Seasoned Hubber
-
27th January 2008, 12:25 PM
#56
Senior Member
Seasoned Hubber
Gounder: adangappa... ulaga nadippuda sami
- Maman magal
-
27th January 2008, 12:30 PM
#57
Senior Member
Seasoned Hubber
Amaidhipadai - Amavasai introduction
satyaraj: Anna.. kuninju thenga porukkuradhale latchiyam illainu nenajudadheenga.. enakkum latchiyam irukkudhunga
manivannan: ivalo vevarama pesurae... appuram nai karanduna madhiri baniyan poturukkae
satyaraj: nai dhanunga karundhuchu

awesome intro ...
manivanna dialogue
-
27th January 2008, 12:39 PM
#58
Senior Member
Seasoned Hubber
Nadigan -
manam mariyatha, soodu soolayudham, vekkam velayutham scene
-
4th February 2008, 09:16 AM
#59
Senior Member
Seasoned Hubber
ரொம்ப நாளைக்குப் பிறகு கவுண்டமணி-சத்யராஜ் கூட்டணியில் வந்திருக்கும் படம். சும்மா சொல்லக் கூடாது, இன்னும் எத்தனை புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், கவுண்டர் கவுண்டர்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம் தங்கம்.
அடடா... இந்த மாதிரி திரையரங்கம் சிரிப்பலையில் குலுங்குவதைப் பார்த்து எத்தனை நாளாச்சு!
தங்கம் படத்தின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை. தொன்னூறுகளில் நீங்கள் பார்த்த பல சத்யராஜ், சரத்குமார் பாணி கிராமத்து அண்ணன்-தங்கை பாசக் கதைதான்.
தங்கை கல்லூரி சென்று வருவதற்காக தனி பஸ்ஸையே வாங்கி விடும் அளவுக்கு மகா பாசக்கார அண்ணன் சத்யராஜ் (முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் தனது மகள் படிப்பதற்காக கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தனி ரயிலே விட்டார் என்பார்கள்).
பெரிய மனிதர் டெல்லி குமாரின் ஒரே மகன் சத்யராஜ். அவரது தாய்மாமன் கவுண்டமணி. (இந்த மாதிரி படங்களில் ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் இருப்பார்கள். முதலில் நண்பர்களாக இருந்து பின்னர் பகைவர்களாகிவிடுவார்கள்.... போன்ற வழக்கமான சங்கதிகளை அப்படியே மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்)
திருட்டு மணல் அள்ளும் இன்னொரு பெரிய மனிதரின் மகன் சண்முகராஜனுடன் சத்யராஜூக்கு ஏற்படுகிற பகை, கல்யாணத்தில் முடிகிறது. அதாவது சத்யராஜின் தங்கையை சண்முகராஜன் கெடுத்துவிட, வேறு வழியின்றி அவருக்கே கல்யாணம் செய்து வைக்கிறார்.
முகூர்த்த நேரத்தில் சண்முகராஜனின் சின்ன வீடு வந்து கலாட்டா செய்ய, அவரைக் கொன்று விடுகிறார் சண்முகராஜன் (நட்புக்காக பாணியில்). வேறு வழியின்றி தங்கைக்காக அந்தக் கொலைப் பழியை ஏற்று சிறைக்குப் போகிறார் சத்யராஜ். விடுதலையாகி வந்து பார்த்தால் தங்கை பிணமாகிக் கிடக்கிறார்.
தன் தங்கையின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொன்று சத்யராஜ் பழி தீர்ப்பதுதான் மீதிக் கதை என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா...!
சத்யராஜ் - கவுண்டமணி கூட்டணியின் நக்கல், நையாண்டி, டகால்டி, டகாய்ச்சி, ரவுசு அறிந்து அதற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் கதை என்பதைப் புரிந்து கொண்டு படம் பார்க்க உட்கார்ந்தால் ரொம்ப சீக்கிரம் படத்துக்குள் ஐக்கியமாகி விடுவீர்கள்.
கவுண்டமணியின் அட்டகாச காமெடி தர்பாரில் சத்யராஜே பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். அதிலும் நேரம் பார்த்து காலை வாரும் நகைச்சுவைக் காட்சிகளில் கவுண்டரை மிஞ்ச ஆளில்லை.
இந்தப் படத்தின் சிறப்பு கவுண்டர் என்பதால் சத்யராஜ் தன்னையும் ஒரு ரசிகராக பாவித்து பல காட்சிகளில் வேடிக்கைப் பார்த்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. பல காட்சிகளில் பழைய 'தாய்மாமன்' சத்யராஜைப் பார்க்க முடிகிறது (உருவத்தில்).
சத்யராஜூக்கு ஜோடி மேகா நாயர். புடவை சுற்றிய பழைய கள்ளுப் பானை மாதிரி போதையேற்றுகிறார். இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், கிளாமர் நாயகியாக கலக்கலாம். சத்யராஜின் தங்கையாக வரும் ஜெயஸ்ரீ நன்றாக நடித்திருக்கிறார்.
டெல்லிகுமார், இளவரசு, சண்முகராஜன், பாலாசிங், மகாதேவன், சூர்யகாந்த் என அனைவருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சுஜாவின் முறுக்கேற்றும் குமுக் ஆட்டமும் உண்டு.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கோட்கும்படி உள்ளன. ஆனால் எங்கேயோ கேட்ட ட்யூன்களாகவும் உள்ளன. 'அப்பா'வுக்கு தப்பாத பிள்ளை!
பொள்ளாச்சியின் அழகை கண்முன் நிறுத்துகிறது டி.சங்கரின் ஒளிப்பதிவு.
படத்தின் மிகப் பெரிய குறை, எடிட்டரின் கத்தரிக்கு அடங்காமல் நீண்டு கொண்டே செல்லும் காட்சிகள். ஓரிரு பாடல் காட்சிகள், தேவையற்ற கோர்ட் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸூக்கு முந்தைய கோயில் காட்சிகள் போன்றவற்றை நீக்கியிருந்தால் படம் பக்கா கிராமத்து மசாலாவாக வந்திருக்கும். அதனாலென்ன, நம்ம ஊர் திரையரங்குகளின் ஆபரேட்டர்கள் இந்த வேலையைக் கச்சிதமாக செய்துவிடப் போகிறார்கள்!
சென்னையில் வெளியாகியுள்ள திரையரங்குகள்: பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ், பால அபிராமி, சந்திரன், எம்.எம். தியேட்டர், ரோகிணி, மாயாஜால், நங்கநல்லூர் வேலன், குரோம்பேட்டை வெற்றி, பூந்தமல்லி சுந்தர், அம்பத்தூர் ராக்கி (எங்கும் 4 காட்சிகள்).
http://thatstamil.oneindia.in/movies...lm-review.html
-
11th February 2008, 07:54 PM
#60
Senior Member
Seasoned Hubber
மணிவண்ணன் சாருக்கு சத்யராஜ் நெருங்கிய நண்பர். இவர் சொல்வதை அவர் தட்டமாட்டார்.
சத்யராஜ் கால்ஷீட் கிடைத்து விட்டால், டைரக்டர் ஆகிவிடமுடியும் என்று நினைத்தேன். எனவே, டைரக்டர் ஆகவேண்டும் என்ற என் விருப்பத்தை மணிவண்ணன் சாரிடம் கூறியதுடன், சத்யராஜின் கால்ஷீட் வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
அதற்கு மணிவண்ணன் சார் சொன்ன பதில் நான் எதிர்பாராதது. "நாங்க இரண்டு பேரும் நல்ல பழக்கம்தான். நல்ல நண்பர்கள்தான். எனக்காகக் கேட்பது வேறு. உனக்காகக் கேட்பது வேறு. என்னால் இது முடியாது!'' என்று சொல்லிவிட்டார்! இது எனக்குப் பெரிய ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
அவரிடமிருந்து பிரிந்து தனியே போய் படம் பண்ண இருப்பதால் வந்த எரிச்சலாக இருக்குமோ என்றுகூட நினைத்தேன். சொல்லிக்கொள்ளாமல், ஓட நினைக்காமல், முறையாகச் சொன்னது தவறா என்று குழம்பினேன்.
அப்போது அவர் சொன்னது என்ன தெரியுமா? "இப்படி பிரிந்துபோய் தனியாகப் படம் பண்ணப் போகிறவர்கள், யாரும் சொல்லிக்கொண்டு போகமாட்டார்கள்! நான்கூட சொல்லிவிட்டு வரவில்லை. நீதான் சொல்லிவிட்டு போகிற முதல் ஆள்!'' என்றார்.
எனக்கு அப்போதுதான் புரிந்தது, சினிமா உலகின் நடைமுறைகள்! மணிவண்ணன், எனக்கு சத்யராஜிடம் சிபாரிசு செய்யாத வருத்தம் பிறகு மறைந்துவிட்டது. ஏனெனில், இதுமாதிரி அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட அவர் விரும்புவதில்லை. இது, பிறகுதான் புரிந்தது.
:RK SELVAMANI's Flashback:
http://www.dailythanthi.com/article....date=2/11/2008
Bookmarks