-
18th February 2008, 02:58 PM
#11
Senior Member
Seasoned Hubber
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ``முல்லா'' நஸ்ரூதீன் நகைச்சுவைக் கதைகள் சின்னத் திரையில் இடம் பிடிக்கிறது.
ஸ்ரீவாரி கம்பென்ஸ் நிறுவனத்தின் சார்பில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சோமநாதன், ஏ.பத்மராஜ் இணைந்து தயாரிக்கும் புதிய தொடர், ``ஆச்சி சொல்லைத் தட்டாதே''.
நடிகை மனோரமா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் முதல் முறையாக பிரபல காமெடி நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், சின்னத்திரைக்கு வருகிறார். மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வையாபுரி, பாலாஜி, சிவபாலாஜி, போண்டாமணி, குள்ளமணி, நடிகைகள் வடிவுக்கரசி, சுமித்ரா, நளினி, ஜெயலட்சுமி, தேவிப்பிரியா, எம்.ஆர்.கே. காளிதாஸ், மும்தாஸ் என தொடரில் நட்சத்திரப் பட்டியல் அதிகம்.
திரைக்கதையை கே.பி.அறிவானந்தம் எழுத, வசனம் ஜி.கே. பாடல்கள்: கவிஞர் பூவை செங்குட்டுவன். இசை: சசி, கேமரா: லோகு- ஸ்ரீதர்.
இயக்கம்: ஏ.பத்மராஜ்- எஸ்.ஏ.ஜானகிராமன்.
இந்த நகைச்சுவைத் தொடர் அடுத்த மாதம் முதல் ஜெயா ப்ளஸ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.
-
18th February 2008 02:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks