-
19th March 2008, 05:44 PM
#161
Moderator
Platinum Hubber
பல நாட்களாக எழுத நினைத்தது....
பெரிய தேவர்
பகுதி 1
மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.
இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.
இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.
இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.
(தொடரும்)
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th March 2008 05:44 PM
# ADS
Circuit advertisement
-
19th March 2008, 05:55 PM
#162
Moderator
Platinum Hubber
Originally Posted by
Murali Srinivas
He was active on the stage till May 1974. After VV, it was Thangapathakkam which was staged under Sivaji Nataka Mandram. Even while it was getting filmed the play was getting staged and when the movie got released on June 1st 1974, it was stopped. In fact if my memory serves me right the play was supposed to be held on 1st June in our Madurai. But later it got cancelled. He had badly wanted to do Tippu Sultan but it never materialised.
After this no plays were staged except for some shows which he did for cyclone relief fund in Dec 1977- Jan 1978.
Regards
Oh ok. Thank You.
PS: I really like the way you write "our" Madurai
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th March 2008, 06:41 PM
#163
Moderator
Platinum Hubber
பெரிய தேவர் - 2
நடிப்பு என்பது என்ன ?
ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:
'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).
இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.
ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது
இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.
இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.
இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )
இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.
காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.
அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)
கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.
(தொடரும்)
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th March 2008, 09:44 PM
#164
-
19th March 2008, 10:04 PM
#165
Senior Member
Seasoned Hubber
Great effort Prabu. Please keep going. You have a very natural way of writing.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
20th March 2008, 01:26 AM
#166
Junior Member
Junior Hubber
அனைவருக்கும் வணக்கம்
நடிகர் திலகத்தின் கெளரவம் படம் பலருடைய Top Favourite லிஸ்டில் இருப்பதை கண்டு மிக்க சந்தோஷம் அடைந்தேன்.
சிவாஜியின் மிக சிறப்பான நடிப்பை வழங்கிய படம்.
தினத்தந்தியில் வந்த தகவல் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த படம் ரொம்ப பிடித்துவிட்டது. இந்த படத்தின் பாதிப்பால் சினிமாவிககாக தன் பெயரை ரஜினிகாந்த் என்று வைத்து கொண்டார்.
அன்புடன்
சரவணன்
-
20th March 2008, 01:53 AM
#167
Junior Member
Junior Hubber
கௌரவதிருக்கு அடுத்தப்படியாக 'வியட்னாம் வீடு' எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் மிகவும் சிறப்பாக்க நடிப்பை வழங்கி இருப்பார் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
இந்த இரண்டு படங்கள் தான் 23 வருடங்கள் தீவர கமல் ரசிகனாக இருந்த என்னை சிவாஜி பக்கம் வர வைத்தது. சிவாஜி பற்றி ஆராய்யச்சி செய்ய தோன்றியது (இன்றும் சிவாஜிக்கு அடுத்தப்படியாக தீவர கமல் ரசிகனாக தான் இருக்கிரேன்)
அன்புடன்
சரவணன்
-
20th March 2008, 09:21 AM
#168
Senior Member
Seasoned Hubber
Excellent write-up PR. Pls continue
As u said, Brando,deNiro, Hoffman, Pacino etc are all method actors. Maybe, we could include our own Kamal in the list. Guess Mammooty & Mohanlal also fall in the same category.
But first our NT. Most of us watch & enjoy NT films but are not able to express our views about his skills in detail. But only few people in this thread do it in a professional way and definitely you are one among them.
Would like to know more about NT's acting skills - inch by inch
All the best.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
20th March 2008, 09:37 AM
#169
Senior Member
Seasoned Hubber
Welcome Saravanan
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
20th March 2008, 09:43 AM
#170
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Prabhu Ram
பல நாட்களாக எழுத நினைத்தது....
பெரிய தேவர்
பகுதி 1
மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.
இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.
இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.
இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.
(தொடரும்)
சிவாஜி சாரின் மைந்தரின் பெயர்களை கொண்ட அண்ணனே.....
நடிப்பு என்பதற்கு இத்தனை பொருளா?
இதில் நமது செவாலியரின் நடிப்பை எதில் சேர்ப்பது....?
நடிப்பு என்றால் reacting என்று.... ஒரு பேட்டியில் பாலுமகேந்த்ரா அவர்கள் கூறினார்......
தங்களின் கருத்து என்னவோ?
Seven social sins:
1.Politics without principles
2.Wealth without work
3.Pleasure without conscience
4.Knowledge without character
5.Commerce without morality
6.Science without humanity
7.Worship without sacrifice
Bookmarks