Page 8 of 18 FirstFirst ... 678910 ... LastLast
Results 71 to 80 of 174

Thread: SUN TV yin - ThiruviLaiyaadaL

  1. #71
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    SP mam,

    on reading last two paras, we afraid you soon become a 'saamiyaarini'. (kaavi dress kattikittu maraththadiyil pOy utkaaraamal irundhaal sari).

    If anybody want to go to SP mam's home on Sundays, please think twice before you go.

    just kidding........

    your writing is really superb and touching, and it brings the effect of physically watching the episode.

    keep up your writing as long as the serial goes.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    I just saw a scene in this.

    அன்னை சரஸ்வதி : அவன் என்னுடைய பிள்ளை அல்லவா ?
    பிரம்மா : ம்ம்.... நம்முடைய பிள்ளை ! (He grins)

    Dialogue writer Oru masala serial paartha effect antha scene la. Konjam chinnapullathanaama irukku ithu

    Anyway, haven't seen any of the episodes fully. The sets are good and cool. Let me see any one episode fully and comment on this.
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  4. #73
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    karthik,



    selva,

    Quote Originally Posted by selvakumar

    Dialogue writer Oru masala serial paartha effect antha scene la. Konjam chinnapullathanaama irukku ithu
    நான் முன்பு கூறியதைப் போல், பலதரப்பட்ட மக்களை தொடரைக் காணச் செய்வதற்கு இது போன்ற அரிய நகைச்சுவையும், வசனங்களும் இணைத்திருக்கிறார்கள் (அள்ளி இறைத்திருக்கிறார்கள்) என்று எண்ணுகிறேன். இத்தகைய நகைச்சுவை நமக்கு நகையை வரவழைக்காத பக்ஷத்தில் நாம் கண்டும் காணாமலும் போவதே உத்தமம்

    தொடரின் அடித்தளமாய் நிற்கும் சொல்லப்படாத கருத்துக்களும், மெல்லியதாய் இழையோடும் பாடங்களும் மட்டுமே ஏற்பது நன்று.


  5. #74
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    தக்ஷனைப் பற்றி பல வரலாற்றுக் கதைகள் உண்டு. தக்ஷன் பிரம்மாவின் வலது கட்டைவிரலிலிருந்து உருவானவன் என்றும் தக்ஷனின் மனைவியோ பிரம்மாவின் இடது கட்டைவிரலிலிருந்து உருவானவள் என்றும் கூறுவதுண்டு. சிலர் தக்ஷன் பஞ்சஜனியை மண்ந்தார் என்றும் கூறுவர். இவருக்கு புராணக் கதைகளின் வழக்குப் படி பல புதல்விகள் உண்டு. திருவிளையாடலில் தக்ஷன் "ப்ரசுத்தியை" மணந்ததாகக் கொண்டு கதையை கூறுகின்றனர். பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
    நன்றி இடைசெருகல்களுக்கும்..

    Quote Originally Posted by Shakthiprabha
    இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், ....
    இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.
    டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
    விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
    கல்யாணம்
    பூப்புனித நீராட்டு
    வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
    சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

    ஓய்வே இல்லை.

    இப்பொழுது
    ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
    ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...


    தொடருங்கள் உங்கள் பாணியில்


    Quote Originally Posted by mr_karthik
    SP mam, ...

  6. #75
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தாட்சாயினி யாக - சுஜிதா ஸ்ரீ
    கணவருக்காக நாடகதின் கதாநாயகி்
    காற்றுக்கென்ன வேலி யின் கதாநாயகியு்மான இவர்
    பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் குழந்தை நட்சத்திரமுமாவார்.

    எல்லா நாடகங்களிலும் ஏதாவதொரு வேடத்தில் தலைகாட்டும் 'பிரியங்காவும்"
    இங்கும் ஒரு நடத்திரம் ( 27 ல் 1, அஸ்வினி =?)

  7. #76
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa

    டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
    விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
    கல்யாணம்
    பூப்புனித நீராட்டு
    வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
    சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

    ஓய்வே இல்லை.

    இப்பொழுது
    ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
    ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...


    தொடருங்கள் உங்கள் பாணியில்
    உலகெங்கும் உள்ள பொதுநடப்பு

    பொதுவாய் ஞாயிற்றுக்கிழமை சடங்குகள், கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டால் விடுப்பு எடுக்க நேராமல் ஆஜாராவது எளிது என்று பலர் கருதிகிறார்கள்

    Quote Originally Posted by mr_karthik
    SP mam, ...
    :thinking:

    __

    பி.கு: நடிகர்களின் பெயர் அறிவிப்புகளுக்கு நன்றி. எனக்குப் பொதுவாய் சீரியலில் நடிப்பவர்கள் பெயர்கள் தெரிவதில்லை. தெரிந்த சிலதும் நினைவில் நிற்பதில்லை.

  8. #77
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    "யாமனறி பிறிதொன்றும் உண்டோ" (இங்கு சிவம் எனப்படும் தத்துவத்தை விருப்பமுள்ளவர்கள் "சத் -சித் -ஆனந்தம்" (சச்சிதானந்தம்) ஆன பரம்பொருள் என்று பொருள் கொள்ளலாம்)

    "கதிரவன் எழுவதும் விழுவதும், காற்றும், ஒளியும், நீரும் பஞ்ச பூதங்களுமாய் திகழ்வது யாம். எல்லாம் எமக்குள் அடக்கம்" (எல்லாமே நானாகிப் போகிறேன்) என்று இறைவன் கர்ஜிக்க
    இன்னும் ஒரு மாத்திரை ஷ்ருதியை ஏற்றி, "ஆனால் நீரோ எமக்குள் அடக்கம்" என்கிறாள் ஷக்தி.

    (ஷக்தி எனப்படுவது, எங்கும் இயக்கமாய் இயங்கும் ஆற்றல், அருட்பேராற்றல்)

    இறுதியில் கோபமுற்ற சிவன், ருத்ர மூர்த்தியாய் பேருருவெடுக்கிறார். அண்டமெங்கும் அதையும் தாண்டியும், முடிவுறாத பரப்ப்ரம்மமாய் எல்லைகள் கடந்து எல்லைகளற்று எங்கும் நீக்கமற வியாபித்து நிற்கிறார். சிவன் இயக்கமற்று (ஷக்தியின்றி தனித்து) நின்றவுடன், எங்கும் இயக்கங்கள் நின்று போகின்றன. கடலும் காற்றும் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. இகத்திலும் பரத்திலும் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்கிறது. (இதனை பேரழிவின் நிலைக்கு ஒப்பாகக் கொள்ளலாம். பொதுவாக ஆக்கல் அல்லது உயிர்களின் தோன்றலின் போது, ஒன்றாய் திகழ்ந்திருக்கும் உயிர்சக்தி, பல்வேறு துகளாய் சிதறி வெவ்வேறு ரூபங்கள் கொள்கிறன. மீண்டும் அவை அந்த ஆதியான ஒன்றுடன் (சிவம்) கூடுவதை நாம் பேரழிவு என்கிறோம். (அஃதாவது ஆறுகள் கடலுடன் கலப்பது போல்.)

    சிவன், மட்டுமே இயக்கநிலையில் அல்லாது தனித்து நிற்கும் போது, எங்கும் சொச்சமாக நிற்பது வெறும் "இருப்பு" மட்டுமே.

    சராசரமெங்கும் நிறைந்து நிற்கும், காலநேரமற்ற சிவனின் இருப்பை கண்ட ஷக்திக்கு, உடல் நடுங்குகிறது. மெய் துவள்கிறது. தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்கிறாள். சிவம் என்பதே இல்லாத போது ஷக்தி எனும் இயக்கநிலைக்கு ஏது அர்த்தம்? சிவனும் ஷக்தியும் இணைதலில் தான் பிரபஞ்சத்தின் செயல்பாடு நிகழ்கிறது. மீண்டும் கல்வியா/செல்வமா/வீரமா தர்க்கத்தை போல், ஒன்றை ஒன்று சார்புடையது. (dependant). இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது? எது சார்ந்தது எது சாராதது? இதற்கு பதில் தேடுவதே அனர்த்தம்.

    உடல் நடுங்க, பயத்திடன், பவ்யத்துடன், தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஷக்தி சிவனிடம் மன்னிப்பு வேண்டுகிறாள். சிவன் சற்றே சாந்தமடைந்ததும், "வீண்தர்க்கம் செய்த பலனாய் பூமியில் பிறப்பெடுத்து கர்மத்தை நீயே கழித்துவிட்டுத் திரும்பு" என்று சொல்ல, உமையவள் உடன் பூமியில் அவதரிக்கிறாள்.

    அழகிய இளஞ்சிவப்புத் தாமரை மலரில் சங்கின் வடிவம் கொண்டு ஆற்றிலே மிதந்து தக்ஷனின் கைக்கு வந்து சேருகிறாள். தக்ஷன் சங்கினைத் தொட்டதும் சங்கு அழகிய குழந்தையாய் உருவெடுக்கிறது. தக்ஷனும் பெருமகிழ்ச்சிக் கொள்கிறான். அவன் மனைவி ( புராணத்தின் படி பாஞ்சஜனி, பிரசுத்தி, அசுக்லி என்ற மனைவியர் தான் கேள்வி பட்டதுண்டு. நம் திருவிளையாடலில் தக்ஷன் மனைவியின் பெயர் வேதவல்லியாக்கபட்டிருக்கிறது) வேதவல்லியிடம் தம் அருமை மகளை வளர்க்கும் படி கூறிகிறான். தக்ஷனின் மகள் என்பதால் "தாக்ஷாயணி" என்று பெயர் சூட்டி செல்லமாய் வளர்க்கபடுகிறாள்.

    தாக்ஷாயணி சிறு வயது முதல் சிவபூஜையில் ஈடுபடுவதும், சிவனைத் துதிப்பதுமாய் இருக்கிறாள். தக்ஷனுக்கும் உமையவளே தாக்ஷாயணியாய் உருவெடுத்திருப்பது புரிகிறது. காலங்கள் மிக வேகமாய் உருண்டோட,

    (..............புராணத் தொடர்களில் ராமந்த் சாகரின் ராமாயணம், மஹாபாரதம், மற்றும் தற்போது ஞாயிறன்று தமிழ்ப் படுத்தபட்டு ஒளிபரப்பாகும் ராமாயணமும் பார்த்ததன் விளைவு, குழந்தைகள் பெரியவர்களாய் வளர குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் (பகுதிகள்) என்று மனதுள் வாங்கிப் பழகி விட்டது. சிறு குழந்தையாய் இரு நிமிடம் சிவனுக்கு பூஜை செய்த தாக்ஷாயணி, அடுத்த வினாடி, இளங்குமரியாய் பருவப்பெண்ணாய் மாறிவிடுகிறாள். பழைய தமிழ் திரைப்படங்களில் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே, பந்து விளையாடிக்கொண்டே இரு வினாடியில் வளர்ந்துவிடும் சிறுவர்களைப் போல்.......)

    நம் தாக்ஷாயணியும் வளர்ந்து விடுகிறாள்.

    (மீண்டும் நாளை)

    சிவன் உயர்ந்தோங்கி வியாபித்திருக்க, எங்கும் இருள் சூழ்ந்திருப்பதை புரியவைக்க சில பாத்திரங்களைப் பேசச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சரஸ்வதி பிரம்மா, லக்ஷ்மி விஷ்ணுவும் உண்டு. எல்லா இடமும் இருட்டாய் இருக்க, இவர்கள் முகத்தைச் சுற்றி, டார்ச் அடிப்பது போல் 'ஸ்பாட் லைட்'. ஒருவேளை அவர்களின் ஞான ஒளிவட்டமாய் இருக்கலாம். நம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டால், அங்கு விளங்கும் சூழ்நிலைக்கு ஒப்பாய் இருந்தது.

    இந்தப் பாத்திரங்கள் "பெண் கோபம் கொண்டால் எப்பேர்பட்ட நஷ்டம்' என்று படையப்பா ரஜினியைப் போல் வசனம் பேசினர். கோபம் என்பது பொதுவான ஒரு உணர்ச்சி. அது ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழிவை உண்டு பண்ணும். இங்கே ஏன் பாகுபாடு?

    போதாத குறைக்கு "கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டாம், எனினும் ஒரு பெண் அடக்கமாய் இருப்பது அவசியம்" என்று திருமால் திருவாயால் திருவருளினார்.

    "ஷக்தியாகவே இருந்தாலும் பெண்புத்தி பின்புத்திதான், அவசரப்பட்டு நானும் பெண் என்று நிரூபித்து விட்டேன்" என்று இறைவி தேவையற்ற வசனங்களை உதிர்க்கிறார்.

    இருபத்தியோராம் நூற்றாண்டில் சமத்துவம் பேசிக்கொண்டு, இத்தொடரை பார்த்துக்கொண்டிருக்கும் சாமான்யர்களுக்கு இவர்கள் சொல்லவரும் செய்தி என்ன?

    நம் மதத்தில் சொல்லப்பட்ட சமத்துவக் கருத்துக்கள் ஏராளம்.
    ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சமநிலை நோக்கை கொண்டுள்ள மதம் என்ற பெருமை நமக்கு உண்டு.

    நம் புராணங்களில், மதத்தில் வழங்கப்பெற்றுவரும் அறிவுரைகளை, கருத்துக்களை, உவமைகளை, தர்க்கத்திற்குரியவைகளாக ஆக்கவேண்டாமே.


    வீண்வாதம் செய்வதும், தர்க்கம் செய்வதும், கோபம் கொள்வதும், ஆணவம் கொள்வதும் தவறு, அது 'ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி'

    ஜனரஞ்சகமாக வழங்குகிறேன் பேர்வழி என்று இப்படிப்பட்ட வசனங்களை இணைத்து எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.

  9. #78
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
    those kadavuLs and saints married too many wives, but preaching thaththuvam as "oruvanukku oruththi" only for us.

    they should follw it first.

    Quote Originally Posted by aanaa
    Quote Originally Posted by Shakthiprabha
    இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், ....
    இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.
    டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
    விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
    கல்யாணம்
    பூப்புனித நீராட்டு
    வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
    சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

    ஓய்வே இல்லை.

    இப்பொழுது
    ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
    ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...
    if these functions arranged in working days, who will come?. thatswhy they are choosing holidays.

    aanaa, if you go to north pole there will be very very less population and you will get complete rest.

  10. #79
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik
    Quote Originally Posted by Shakthiprabha
    பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
    those kadavuLs and saints married too many wives, but preaching thaththuvam as "oruvanukku oruththi" only for us.

    they should follw it first.
    காத்திக், நம் மதத்தில் கடவுளை (இயற்கையை) உருவ வழிபாட்டிற்காக (நம் வசதிக்காக) உருவமேற்கச் செய்துள்ளனர். (nature is personified)

    இருபத்தேழு பெண்களும் இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவர்களின் கணவராய் சொல்லபடுபவன் சந்திரன் (moon)

    எல்லாம் நம் புரிதலில் உள்ளது.

    உங்கள் வசதிக்குத் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' தத்துவம். விலைவாசி இருக்கும் நிலையில் இதற்கு மேல் தாங்காது

  11. #80
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik
    aanaa, if you go to north pole there will be very very less population and you will get complete rest.



    (விழுந்து விழுந்து சிரித்தேன்)

    மனமும் - உடம்பும்

    எங்கிருந்தாலும் தனித்திருக்கலாம்

Page 8 of 18 FirstFirst ... 678910 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •