-
25th May 2009, 05:47 PM
#551
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
May 22nd
________
இன்றைய தொடரில் எழுத முக்கியமான விஷயம் ஏதுமில்லை. .
(வளரும்)
SP
-
25th May 2009 05:47 PM
# ADS
Circuit advertisement
-
25th May 2009, 05:50 PM
#552
Moderator
Diamond Hubber
May 21-2009
thanks to IsaiTamil.net - Prabhu
[html:a395ead261] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13588386&vid=5127720&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9012/85974775.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13588386&vid=5127720&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9012/85974775.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:a395ead261]
-
25th May 2009, 05:50 PM
#553
Moderator
Diamond Hubber
Friday May 22, 2009
thanks to IsaiTamilNet - Prahu
[html:6c099e1a57]
<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13607642&vid=5136648&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9031/86046882.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13607642&vid=5136648&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9031/86046882.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6c099e1a57]
-
25th May 2009, 06:51 PM
#554
Senior Member
Veteran Hubber

Originally Posted by
aanaa
மூஷிக வாகனம்
பெருச்சாளி எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்ளும். குண்டலினி யோகத்திலும், மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாகவே மூஷிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷப வாகனம்.
காளை மாடுகள் வயல் வெளிகளில் ஓயாது உழைத்து உற்பத்தியான தானியங்களின் பயனை நமக்கு அளித்துவிட்டு,
நாம் ஒதுக்கும் உமி, தவிடு, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தன் உணவாகக் கொண்டு மகிழ்கிறது.
உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் அத்யந்த விருப்பம். இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் காளை வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்
மயில் வாகனம்.
மயில் தோகை விரித்தாடும் போது’ஓம்’கார வடிவில்
காட்சி தரும். தான் பிரணவத்தின் வடிவானவன் என்பதை
உணர்த்தவும் முருகன் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டிருக்கிறான்.
ஆட்டுக்கிடா வாகனம்
ஆடு, அறியாமையின் சின்னமாகும். கடவுள் திருமுன்னர் அறியாமை அடங்குகிறது என்பதே இவ்வாகனத்தின் உட்கருத்து. ஆட்டுக்கிடா வாகனம் முருகனுக்கே உரிய சிறப்பு வாகனம்.
நாக வாகனம் (சேஷ வாகனம்)
மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி,
சுருண்டு மண்டலமிட்டுப் படுத்திருக்கும் பாம்பு போலத் தோன்றும். குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே வாகனமாகவும் ஆகிறது.
ஹம்ஸ வாகனம்.
கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ‘ஹம்ஸம்’ என்பர்.அன்னப் பறவை ,
நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது.
அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.
கருட வாகனம்
அத்தகைய ஆற்றல் மிக்க கருடனை, காக்கும் கடவுளாகிய திருமால் தமது ஊர்தியாகக் கொண்டுள்ளார்.
குதிரை வாகனம்
எண்ணற்ற ஆசைகளே குதிரைப்படையாகும். அவற்றை நன்னெறிப் படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப் படைத் தலைவி.
காமதேனு வாகனம்.
காமதேனுவின் உடலில் அனைத்து தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வகுணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. அடியார்களின் விருப்பங்களை அவள் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை உணர்த்தவே அம்பிகை, காமதேனுவையும் ஊர்தியாகக் கொண்டிருக்கிறாள்.
கஜவாகனம்
மயில் போன்று, யானையும் தன் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினவுபடுத்துகிறது.
காக்கை வாகனம்.
காக்கையிடம் ஒற்றுமைக் குணம் உண்டு. அது பேதம் பார்ப்பதில்லை. அதே போல், அதன் செயல்களுக்காக அதனை விரும்புவோரும் உண்டு. வெறுப்பவறும் உண்டு.
போற்றலும் தூற்றலும் இரண்டுமே காகத்திற்கு உண்டு.
சனி பகவானுக்கும் அப்படித்தான்.
சிம்ம வாகனம்.
தனது கர்ஜனையினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமையும், கம்பீரமும், யாரும் எளிதில் அண்ட முடியாத வீரமும் உடையது சிம்மம். அதே நேரத்தில் தருமம் தவறாதது.
பசியில்லாத வேளையில் வீணாக வேட்டையாடி பிற உயிர்களை மாய்க்காது. அம்பிகை, தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்திடவே சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.
புலி வாகனம்.
ஐம்புலன்களும் சீறிப்பாயும் அடங்காத புலியைப் போன்றவை.
பிரம்மச்சாரியான ஐயப்பன், புலி வாகனத்தில் ஏறிவந்து அடங்காப் புலன்களை அடக்கும் நெறியினை உணர்த்தினார்.
தெரியாத பல விஷயங்கள் தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களின் தமிழ் வன்மை வியக்க வைக்கிறது
-
26th May 2009, 03:27 AM
#555
Moderator
Diamond Hubber
[quote="Shakthiprabha"]

Originally Posted by
aanaa
தெரியாத பல விஷயங்கள் தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களின் தமிழ் வன்மை வியக்க வைக்கிறது

தமிழின் மீது உள்ள பற்றுதலினால்தான் "அ" என கை ஒப்பமிடுகின்றேன்.
தமிழ் எனது தாய் மொழி
பல ஆண்டுகளாக -தமிழ் அனுபவம்.
-
26th May 2009, 04:27 PM
#556
Senior Member
Veteran Hubber
may 25th
உமாவின் மனதில் தீப்பொறியாய் இருந்த ஆசையை கொழுந்துவிட்டெரியும் நெருப்பாக மாற்றியது பெற்றோர்களின் பொறுப்பு எனச் சாடுகிறான் அஷோக். ஆசைகளின் வித்து சிறியதாய் முளைக்கும் போதே கிள்ளி எறிந்து விடுதல் எளிது. வளர்ந்து விருக்ஷமாகிய பின், அதனை தகர்த்தெறிதல் பிரயத்தனத்திற்குறிய விஷயம். கேடு கெட்ட ஆசைகளோ தவறான எண்ணங்களோ முளையிலே கிள்ளி விடுவது நலம். இதையொத்த பழமொழி தான் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" . ஆசைகளின் வீர்யம் அதிகரிக்க அதனை அடைந்து விடும் எண்ணம் மேலிடும். அடையாமற் போகும் போது ரௌத்திரம், வருத்தம் அதிகரிக்கும். அதே ரௌத்திரம் தான் உமாவின் போக்கிலும் நேற்றைய தொடரில் காணப்பட்டது.
மனம் என்பது அடி காணமுடியாத மந்திரப்பை. குப்பைகளை நிரப்ப நிரப்ப அத்தனையும் விழுங்கி, அடியில் பத்திரமாய்ப் புதைத்து, புதிய குப்பைக்கு தயாராகி விடும். ஆனாலும் குப்பைகளால் நிரப்பப்படும் வரையில் மனம் அழுக்கு நிரம்பியதாகவே இருக்கும். எண்ணங்களே குப்பை என்றால் எண்ணங்களற்ற நிலையே அறிவு நிலை. எண்ணங்கள் ஆக்கபூர்வமாகவும் நல்லனவாகவும் இருப்பின், குப்பைகளை களைய பயன்படும். ஊறு விளைவிக்காது. மற்றபடி நல்ல எண்ணங்களைக்கும் அப்பாற்பட்டு மனம் என்ற இயந்திரமே இல்லாமல் போகும் நிலையே அறிவு நிலை என்பது விளக்கம். தன்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றி அஷோக் தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை. இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறேன்? என்கிறான். குப்பைகளை மேலும் சேர்ப்பதில் மட்டுமே இந்த தகவல்கள் பயன்படும் என்னும் வேதாந்த கருத்து. இக்கருத்தின் ஆழம் அனைவருக்கும் புரிந்து விடுவதில்லை.
பால்ய விவாஹம் பற்றிய பலர் கூறக்கேட்கும் ஒரே காரணம், பருவமடையாத சிறு வயதில் விவாஹம் நடை பெறும் போது, புதிய வீட்டுப் பழக்க வழக்கங்கள் எளிதில் பதிந்து விடும். அது மட்டுமன்றி, இவளே(இவனே) தன் இல்லறத்துணை என்று தெரிந்து இருப்பதால், வேறு இடங்களில் மனதை அலைபாய விடும் நேரமும் முயற்சியும் மிச்சம். பள்ளித் தோழி தோழனாக பழகி வருவதால், அன்பும் காதலும் ஆழமாக பிறக்கும் வாய்ப்பு அதிகம், இப்படியெல்லாம் பல வாதங்கள் செய்தாலும், பால்ய விவாஹத்தின் நல்ல நோக்கங்களை எடுத்து முன் வைத்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு பால்ய விவாஹம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இதனால் விளைந்த கேடுகளும் அதிகம். நேற்று பேசப்பட்ட விஷயம் இது. இதைப் பற்றிய விவாதமோ விளக்கமோ கூட தேவையற்றது என்பது என் எண்ணம்.
(கதையின் சுவாரஸ்யத்திற்கு ஆனா இடும் சுட்டியை சொடுக்குங்கள்)
(வளரும்)
//mods, I wish therez a "justify" function for articles
//
-
26th May 2009, 05:17 PM
#557
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
may 25th
(கதையின் சுவாரஸ்யத்திற்கு ஆனா இடும் சுட்டியை சொடுக்குங்கள்)
(வளரும்)
//mods, I wish therez a "justify" function for articles

//
-
26th May 2009, 05:22 PM
#558
Moderator
Diamond Hubber
May 25, 2009
thanks - IsaiTamilNet - Prabhu
[html:78d03af843] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13652994&vid=5160160&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9083/86226990.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13652994&vid=5160160&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9083/86226990.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:78d03af843]
-
27th May 2009, 04:13 PM
#559
Senior Member
Veteran Hubber
may 26th
விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமை நாமெல்லோரும் அறிந்ததே. ஜகத் பிரபுவாம் அந்த பரப்பிரம்மனே நாரணயனாய் நம்மை காத்து ரக்ஷிக்கிறான். அவனை எத்தனை துதி பாடினாலும் போதுமானதாகாது. அவன் ரூபத்தை நிலையை குணங்களை எத்தனை கூறினாலும் பக்தர்களுக்கு அலுப்பதில்லை. அவனை நாமாக்களால் கட்டுப் படுத்த முடியாது. அவன் குணங்கள் அபரீமிதமானவை. அலாதி. எண்ணில் அடங்காதவை. அவற்றை தொகுத்து குறைந்தபட்ச சஹஸ்ரத்தில் அடக்கியது தான் விஷ்ணு சஹஸ்ரநாமம். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். அவனைப் ஆயிரம் நாமாவைக் கொண்டு துதிப்பதே விஷ்ணு சஹஸ்ர நாமம்.
பீஷ்மர் முட்படுக்கையில் இருந்த போது எல்லாம் அறிந்த அந்த மஹானிடம் சாஸ்த்ரங்கள் கேட்டறிந்தாராம் தர்மபுத்திரர். சகல சௌபாக்கியங்களும் தரக்கூடியதான ஒரு விஷயத்தை சொல்லுங்கள். வாழ்வின் அல்லல் நீங்கி நல்லது நடக்க, சகல சௌபாக்கியங்களும் தர வல்லது எதுவோ அதைப் பற்றி கூறுங்கள் என்று யுதிஷ்டிரர் கேட்ட போது பீஷ்மர் நாரணனே காக்கவல்லான். அவனின் ஆயிரம் நாமாக்களே
அத்தனை சம்பத்துக்களையும் தர வல்லது என்று உபதேசித்தது தான் விஷ்ணு சஹஸ்ர நாமம். இதை தமிழிலும் பல ஆழ்வார்கள் பின்னாளில் உபதேசித்தருளினார்கள். இது யாராலும் இயற்றப்படவில்லை. வியாசர் உணர்ந்து கண்டெடுத்து கூறியதாக சொல்லப்படுகிறது. ஆதிஷங்கரரும் ஸ்ரீபராசர பட்டரும் மேலும் பலரும் சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதியுள்ளார்கள்.
ஒவ்வொரு நாமாக்களையும் நாம் மேலோட்டமாய் படித்து எளிதில் எடைபொட்டு விட முடியாது. ஆழ்ந்த அர்த்தம் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் புதைந்திருக்கிறது.
அவனை "அப்ரமேயன்" என்ற நாமத்தால் விளக்குகிறோம். அப்ரமேயா என்றால் சொற்களால் விளங்கிக்கொள்ள முடியாதவன் (முடியாத வஸ்து). வருணைனைக்கும் சொற்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் அனுபவம் அவன். என்ற பொருளில் வரும். ஒவ்வொரு நாமத்திற்கும் அர்த்தம் பண்ணிக்கொண்டு வந்தால், வேத வித்தான பிரம்மத்தை விளக்க முற்பட்டிருப்பதைக் இருப்பதைக் காணலாம்.
எங்கள் வீடுகளிலெல்லாம் ஒரு காரியம் நடைபெறும் முன்போ, குறிப்பாக பிரயாணம் மேற்கொள்ளும் போதோ அல்லது தினம் வெளியே கிளம்பும் போதும்
வநமாலீ கதீசார்ங்கீ சங்கீ சக்ரி சநந்தகீ
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோபிரக்ஷது...
என்ற ஸ்லோகம் சொல்லச் சொல்வார்கள்.
மேலும் பார்வதி சிவனிடம், எந்த நாமாவைச் சொன்னால் அனைத்து நாமாக்களைச் சொன்ன பலன் கிட்டும்? என்று கேட்கிறாளாம், அதற்கு சிவன்,
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே
என்கிறார். நாமங்களிலெல்லாம் உயர்ந்தது ராமநாமம். அதை ஜபிப்பது சஹஸ்ரத்தையும் ஜபித்ததற்கு ஒப்பாகும் என்று பொருள். நாம உச்சாடனங்களும், ஜபங்களும் கடமைக்காக உச்சரிகாமல் பக்தியும் அன்பும் மேலிட ஜபிப்பதால் பலன் அதிகம் கிட்டும்.
அதன் பிறகு "வேறு ஏதேனும் உண்டா" என்று யுதிஷ்டிரன் கேட்க, பீஷ்மர் இன்னொரு மந்திரம் சொன்னாராம். இது அதிகம் பயன்பாட்டில் இல்லாத ஒன்று என்றும் பாகவதத்தில் இந்த ஸ்லோகம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சோ கூறினார். இம்மந்திரத்தில் பகவானைத் தவிர ரிஷிகள் சித்தர்கள் என பலருக்கும் வந்தனம் செலுத்துகிறோம்
( I couldn't find the mantra online
I tried to post the mantra as much as I can follow, however I do remember certain ppl do say this as an end note after reciting sahasra naama)
நம வசிஷ்டாய மஹாவ்ரதாய
பராசரம் வேதநிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து சித்தேதி இஹ க்ஷேப்யஹ
நமோஸ்து ரிஷிப்ய பரமம் பரேஷாம்
தேவேஷு தேவம் நமசிவாய
சஹஸ்ர நாமய ஜனார்தனாய
என்று வருமாம்.
கிரியின் தந்தை வழி சொந்தங்களை கதையில் புகுத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆத்ம நண்பராய் வைஷ்ணவ வேடத்தில் சார்யார் என்ற கதாபாத்திரம் ஏற்று டெல்லி கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார். சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஜாதிக் கட்டுப்பாட்டை மீறுவது பற்றி கிரியின் பெரியப்பாவான நடேச முதலியாரின் அதிருப்தியும், அதை சாரியார் மறுத்து எடுத்துக்கூறுவது போல் சம்பாஷணை இருந்தது. நேற்று புகுத்தப்பட்ட கதாபாத்திரங்களில் மனம் இன்னும் லயிக்கவில்லை. இத்தனைக்கும் டெல்லி கணேஷ் போன்ற நல்ல கலைஞர்கள்! "சாந்தா காரம், சாரதா ஸ்வீட், சரசா காபி" பழைஈஈய தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடரில் (சோவின் நாடகம்) நாம் கேட்டு விட்ட படியால், ரசிக்க முடியவில்லை. உமாவின் பிடிவாதத்தை தளர்த்த அஷோக் உதவியை நீலகண்டன் நாடுகிறார் அதை மறுத்து விடுகின்றனர் வசுமதி-நாதன் தம்பதியர்
(வளரும்)
-
28th May 2009, 02:28 AM
#560
Moderator
Diamond Hubber
Bookmarks