-
தமிழ்-மறை திருவாய்மொழி - 40
கம்பன் இழைத்த சொற்பிழையோ.?
Originally Posted by
P_R
மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை. நன்றி
Originally Posted by
சுதாமா
ஆரியர்க்காக ஏகி
அது "ஆருயிர் காக்க ஏகி" அல்லவா ?
நியாயமான கேள்வி… தற்காலத்தோர் எவருக்குமே தோன்றக்-கூடிய இயல்பான சந்தேகம்.
நான் எதிர்பார்த்த கேள்வியும் கூட.!
இதில் ஓர் விந்தை-!... தற்கால பாட-புத்தகங்கள் சிலவற்றில்--- "ஆருயிர் காக்க" என்றும்---
---வேறு சிலவற்றில்--- "ஆருயிர்க்காக" என்றும் பதிக்கப்பட்டுள்ளது தான் !
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்த ஹப் மன்றத்தின் கம்ப-ராமாயணம் இழையிலேயே இக்கேள்வி எழுந்தது. அப்போதே இது-பற்றி நான் விளக்கமாக ஆய்ந்து விளக்கி--- இச்சந்தேகத்திற்கு விடை வழங்கியுள்ளேன் ஏனையோரும் ஒப்புக்கொண்டனர்.
தற்போது மீண்டும் விளக்கம் இதோ---
கவிச்-சக்கரவர்த்தி கம்பர்-பெருமான் இப்பாட்டில் பயன் படுத்தியுள்ள சொற்றொடர்---
“ஆரியர்க்காக ஏகி” என்பதே.!
ஆம்.--- தொன்மை வழுவாத முற்கால கம்பராமாயண காப்பிய புத்தகங்களிலும் இவ்வுண்மையை காணலாம்-- தஞ்சை சரஸ்வதி-மகால் நூலகத்தின் ஏட்டுச்-சுவடிகளிலும் கூட-!.
1967-ஆம் ஆண்டுக்கு முன்வரை பள்ளிகளில் பயின்ற என் போன்ற மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட்ட அசல் பாடமும்
“ஆரியர்க்காக”--- என்பதே.!
மேலும் ஓர் ஆதாரம்- 2 ---
அன்றிலிருந்து இன்று வரை ஈடும் எடுப்பும் இல்லா தமிழ்-பேரறிஞர்கள் என்று அங்கீகாரம் (Authenticity) பெற்ற பண்டிதர்கள் கம்ப-ராமாயண உரையாசிரியர்களான தமிழ்-தாத்தா திரு உ.வெ.சாமிநாத ஐயர், வை.மு.கோ போன்றோரின் விளக்கவுரையை கண்டால் இவ்வுண்மை புலப்படும்.
ஆம். 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்து எந்தவொரு கம்ப-ராமாயண மூல-பாடத்திலோ அல்லது உரையிலோ--- மேற்கண்ட “ஆரியர்” சொல்லை தவிர்த்த வேறு சொல் இல்லை… என்பதை ஐயம் திரிபற, திட்டவட்டமாக நாம் அறிய இயலும்.
இன்னும் ஓர் ஆதாரம்- 3--
கம்ப-ராமாயண காப்பியத்திற்கே சிறப்பான உரை-ஆசிரியர் என முதன்மையானதாக பெரிதும் மதிக்கப்படும் திரு வை-மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்----
---“ஆரியர்க்காக ஏகி” என்னும் கம்பனின் வாக்கான இச்சொற்றொடருக்கு என்ன பொருள் கூறுகிறார்.?
ஆரியர் = உத்தம மாந்தர்— தலையாய மானிடப்-பிறவியர்
எனவே உத்தம-மாந்தனுக்கு இலக்கணம் காட்டவே அவதரித்த இராம-பிரானை குறிக்கும் சொல்லே “ஆரியர்” என்பதாம்.
ஆம். கம்ப-ராமாயணம் ஓர் வழி நூல்… மூல-காப்பிய நூலான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி வரையப்பட்ட தமிழ்-கருவூலம்.
அத்தகைய வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ஓர் உண்மை இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.
வால்மீகி ராமாயணம் எங்கிலும் சீதா-தேவி தனது நாதனை நோக்கி விளித்த சொல்--- “ஆர்யா” என்பதே--- அதாவது “ஏ உத்தம மாந்தனே” என்ற பொருளிலே-
எனவே “ஆரியர்க்காக” என்னும் சொல்--- “ராம-பிரானுக்காக” என்றே பொருள்-படும்—என்பதே வை-மு-கோவின் அறுதி கருத்து.
[இங்கு ஒர் எடுத்துக்-காட்டு--- மகாத்மா காந்தி என்னும் பெயர்கொண்ட ஒரு மாமனிதரை--- “மகாத்மா” என்று அடைமொழியால் மட்டுமே மக்கள் குறிப்பிடுவதும் மரபு அன்றோ.?-
அவ்வாறே
“ஆரியர் ராம-பிரான்” என்னும் சொற்றொடரின் பகுதி அடை-மொழியான “ஆரியர்” என மட்டுமே விளிப்பது அதே ராம-பிரானை குறிப்பிட தகும்-]
இனிமேலும் ஓர் ஆதாரம்- 4-
ஒரு வாதத்திற்காக மறுபுறமும் நோக்கலாமே-!
“இவ்விடத்தில் ஆரியர் என்னும் சொல்லே தவறு- சிறிதும் பொருந்தாதது- “ஆருயிர்க்காக” என வழங்குவதே பொருந்தும்” என எவரேனும் வாதிட்டால்--- அதற்கு விடை என்ன-?
அனுமன் ஒரு தூதன் ராம-பிரானுக்கு---. எனவே “ராம-பிரானுக்காக ஏகி”—என்னும் கருத்தே பொருந்தும் அல்லவோ-?
“ஆருயிர்க்காக” என்றால்--- யாருடைய ஆருயிர்-? அச்சொல்லால் ராம-பிரான் என்னும் பொருள் கொள்ளத்-தகுமா-?
ஒருவேளை “ஆருயிர்” என்னும் சொல்--- சீதா-தேவியை குறிக்குமோ-?--- ஆயின் யாருடைய ஆருயிர்-? ராம-பிரானுக்கு மட்டுமே ஆருயிர் சீதா-தேவி---
எனவே “ஆருயிர்க்காக” என்றோ--- "ஆருயிர் காக்க" என்றோ, குறிப்பிடும் சொற்-பிரயோகங்கள் சீதா-தேவிக்கு இழி-பொருளே அன்றோ-?.
எனவே வேறு எவர்க்கும் கூட பொருந்தும் வகையிலே இருபொருள் கருத்திலேயோ---
---இழிபொருள் தோற்றத்தக்க இரட்டுற-மொழிதலாகவோ கம்பர்-பெருமான் எங்கிலுமே மொழிவது இல்லை... அந்த கவிச்சக்கரவர்த்தியின் மரபு வழக்கமும் அன்று.---
மாறாக எக்கருத்தையும் இருபசையற தெள்ளத்தெளிவாகவும்--- சொற்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் அறுதியிட்டுச் சொல்லும் பண்பாளரே கவிச்சக்கரவர்த்தி.
எவ்வாறாயினும் “ஆரியர்க்காக” என்னும் மூல-பாடச்சொல் பிற்காலத்தில் “ஆருயிர்க்காக” என்று திருத்தப்பட்ட உண்மையை எவரும் மறுக்கவொண்ணாது.
இருப்பினும் அத்தகைய தகையாளர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு வகையில் நன்றி கூற கடமைப்பட்டு-உள்ளது்---
---இதே போல---
ஆரிய-நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு-ஓங்குக…. என்றும்,
---
ஆரியரும் நர வீரியரும் சொல்லும் சீரிய வாசகம் வந்தேமாதரம்--- என்றும் பாரதி மொழிந்த அசலான மூலச்- சொற்களையும்
ஆருயிர் நாட்டினர்--- என்றும்---
ஆருயிரும் நர வீரியரும்--- என திருத்தாது விட்டனரே-!--- அந்த நற்செயலுக்கே நம் நன்றி-
ஆயின் 1967-ஆம் ஆண்டுக்குப்பின் பாடப்புத்தகங்களிலும் கருத்தரங்கங்களிலும்--- கம்ப-ராமாயணத்தில் மட்டுமே--- “ஆரியரை” “ஆருயிராக”--- திருத்தப்-பட்டதன் காரணம் என்ன-?.
ராம-பிரானை ஆரியனாகவும்--- ராவணனை திராவிடராகவும் கருதிய ஒரு கூட்டத்தினர் தமிழ்-மேதையர் நமக்கு வழங்கியுள்ள அரும் தமிழ்-இலக்கிய நயமாய்---
---இரட்டுற மொழிதல் கருத்தோ-?--- அல்லது------இடக்கரடக்கலோ-?--- யாம் அறியோம் பராபரமே-!
ஆயினும் இக்கேள்விக்கு தற்கால தமிழ்-பண்டிதர்கள் கூறும் விடை---
“ஆரியர்” என்னும் சொல்லையே அடியோடு வெறுக்கும் அரசியல் கட்சியினர் 1967-ஆம் ஆண்டு தமிழ்-நாட்டின் அரசியல்-பீடம் ஏறியதால் தான் --- என்பதே-
---ஆம்- இது ஒரு “திராவிட-மாயை” என்று முணுமுணுக்கின்றனர் தமிழ்-நாட்டு தமிழ்-பண்டிதர்கள்---
….வெளியே சொல்லவும் முடியாது--- விழுங்கவும் இயலாது-!
ஹூஊஊஊம்ம்ம்ம்ம்--- கம்பர்-பெருமானே அவதரித்து--- தமிழ்நாட்டு அரசியலார் கண்காண நேரில் வந்து தான் இக்குழப்பத்தை தீர்க்க இயலுமோ-?
.ஏ-! ராம-பிரானே, ஆரியா-!---
---ஏ-! கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானே-!
---எங்களது குழப்பத்தை போக்க வேண்டுகிறோம்-!!!
தங்கள் அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்)
Bookmarks