பாசமிகு மாமியார் - மருமகள் கதை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `இதயம்.'
மாமியார் அம்மா ஸ்தானத்திலும் மருமகள் மகள் ஸ்தானத்திலும் இருந்து தங்கள்அன்பால் குடும்பங்களை வென்ற கதை. மாமியாராக நடிகை சீதாவும் மருமகளாக நித்யாதாசும் நடிக்கிறார்கள்.
நித்யாதாஸ் தமிழில் `மனதோடு மழைக்காலம்' என்ற சினிமாவில் நாயகியாக நடித்தவர். தொடர்ந்து மலையாளப் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர், இப்போது இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
கைராசியான மகப்பேறு மருத்துவர் கல்யாணி என்ற கேரக்டரில் சீதாவும் அவரது கணவர் தேவராஜாக சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார்கள். கணவர் தொழில் அதிபர். ரூபாய் நோட்டை வெறும் காகிதமாக கருதும் அளவுக்கு வசதி படைத்த குடும்பம்.
இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் பாஸ்கர் அப்பாவழியில் தொழில் அதிபர். இளைய மகன் சங்கர் சாப்ட்வேர் என்ஜினீயர். மகள் பவித்ரா கல்லூரி மாணவி.
மூத்தமகனுக்கு பணக்கார இடத்து சம்பந்தம் அமைந்தது. மருமகள் சகுந்தலா பணத்திமிரில் மாமியாரை மதிக்காமல் போக, அடுத்த மகனுக்காவது நடுத்தர குடும்பத்தில் பண்பான அன்பான பெண்ணாகப் பார்க்கலாம் என்று முயற்சிக்கிறார்கள்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோபாலின் தங்கை சுமதியை சங்கருக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் சங்கருக்கோ கோபாலின் மனைவி ஜெயாவின் தங்கை நந்தினியை பிடித்துப் போகிறது. நந்தினி டாக்டர் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாகிறாள்.மாமியார்-மருமகள் இருவரும் ஒருவரை மற்றவர் அப்படி நேசிக்கிறார்கள். உன்னதமான அந்த தாயன்புக்கு குடும்பத்தில் இருந்தே சோதனை தொடங்குகிறது. சோதனையை தொடங்கி வைப்பது குடும்பத்தின் மூத்த மருமகள் சகுந்தலா.
இதற்கிடையே சங்கர் தன்னை நிராகரித்ததால் கோபாலின் தங்கை சுமதி என்ன முடிவெடுத்தாள்? குடும்ப சோதனைகளில் இருந்து அன்பான மாமியார்-மருமகள் எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் பரபரப்பு அம்சங்கள்.
கதை-திரைக்கதை: தேவிபாலா. வசனம்: திருஞான சுந்தர். பாடல்: யுகபாரதி. இசை: சீனிவாஸ். ஒளிப்பதிவு: சரவணபாண்டியன். இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம்.
நட்சத்திரங்கள்: சீதா, நளினி, `கருத்தம்மா' ராஜஸ்ரீ, நித்யாதாஸ், டிபி.கஜேந்திரன், ஸ்ரீ, நிர்மல், சித்ரா லட்சுமணன்.
[html:609531a8d9]<div align="center">
[/html:609531a8d9]
Bookmarks