-
5th September 2009, 07:15 PM
#551
Moderator
Diamond Hubber
சிங்கத் தமிழன் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலை வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை வசந்த் டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள்.
"சிங்கத் தமிழன் சிவாஜி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், சிவாஜியின் கலை வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை, அவருடன் பழகிய கலைத்துறை, பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரை இயக்குபவர் கே.ஜெயமணி. தயாரிப்பு: வசந்த் டி.வி. புதன்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
[html:42d1eaf959]<div align="center">[/html:42d1eaf959]
நன்றி: தினதந்தி
-
5th September 2009 07:15 PM
# ADS
Circuit advertisement
-
5th September 2009, 07:15 PM
#552
Moderator
Diamond Hubber
நாகமங்கை
ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், நாகமங்கை.
தன் தாய் தந்தையரின் இறப்புக்கான கயவர்களை பழிவாங்க இச்சாதாரி நாகமான நாக மங்கை துடிக்கிறாள். அதற்கு நாக மாணிக்கம் மிகவும் அவசியமாகிறது. நாக மங்கை கயவர்களை அடையாளம் கண்டு நாக மாணிக்கத்தை கண்டெடுத்தாளா? அவர்களை பழிவாங்கினாளா? அதற்கான அவளின் துணிச்சலான முயற்சிகள் என்னென்ன என்பதே திரைக் கதை.
மாயாஜால காட்சிகள் நிறைந்த தொடர் இது.
நன்றி: தினதந்தி
-
5th September 2009, 07:17 PM
#553
Moderator
Diamond Hubber
தில்... தில்... மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது "தில்... தில்... மனதில்'' நிகழ்ச்சி. 45 எபிசோடுகளை கடந்த இந்நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் நாதன் இயக்கி தொகுத்து வழங்குகிறார்.
இந்த வார நிகழ்ச்சியில், விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த சிறுவன் ஜனார்த்தனன், வாயால் வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
5th September 2009, 07:17 PM
#554
Moderator
Diamond Hubber
ஏலேலங்கடி ஏலேலோ
மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ஏலேலங்கடி ஏலேலோ'
தமிழ் இசை உலகில் செவ்வியல் சார்ந்த பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள் என்று ஏராளமான வடிவங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட இசை வடிவத்துடன் வருவதுதான் இந்த நிகழ்ச்சி.
சித்தர்களின் பாடல்கள் தொடங்கி இசை வடிவம் காணாத பாமரர்கள் எழுதிய பாடல்களுக்கு புதிய பாணியிலான இசை வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ஆதித்யனின் இசையில் நவீன இசைக்கருவிகளின் துணையோடு தேர்ச்சி பெற்ற பாடகர்களால் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
நன்றி: தினதந்தி
-
5th September 2009, 07:18 PM
#555
Moderator
Diamond Hubber
குறள் பேசும் குரல்
மக்கள் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிரமாண்டமான யதார்த்த நிகழ்ச்சி, `குறள் பேசும் குரல்'.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடுவில் நடத்தப்படும் இந்த குறள் பேச்சுப் போட்டி, திருக்குறளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி.
ஸ்ரீராம் இலக்கியக்கழகம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சுப்போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் மக்கள் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்துகிறது.
சென்னை, வேலூர், கோவை, சேலம், திருநெல்வேலி, புதுவை, திருச்சி ஆகிய 7 இடங்களில் தேர்வு சுற்றும் கால் இறுதி சுற்றும் நடந்தது.
அரை இறுதி சுற்றும் இறுதி சுற்றும் சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.
இடைநிலை பிரிவு, உயர்நிலை பிரிவு, மேல் நிலை பிரிவு, கல்லூரி பிரிவு என தனித்தனியே மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
5th September 2009, 07:22 PM
#556
Moderator
Diamond Hubber
குமரனின் காதல் நிறைவேறுமா?
சன் டிவியில் திங்கள்முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் `திருப்பாவை'.தொடரில் இப்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் கதை பற்றி தொடரின் இயக்குனர் ஜே.கே. கூறுகிறார்:
தேசிகாச்சாரியும் ராஜபாண்டியும் உயிருக்குயிரான நண்பர்கள். இருவரும் பால்ய சிநேகிதர்கள் என்றாலும் இவர் வழி வேறு. அவர் வழி வேறு. தேசிகாச்சாரி தன் சொந்த மைத்துனருடன் விரோதம் பாராட்டுவதில் ராஜபாண்டிக்கு உள்ளூர வருத்தம். இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக இணைக்கும் நோக்கில் அதற்கான சூழ்நிலைக்கு காத்திருக்கிறார், ராஜபாண்டி.
ராஜபாண்டியின் மகன் குமரன் அப்பா சொல்லைத் தட்டாதவன். அவனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார், ராஜபாண்டி. அப்பாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு திருமண விஷயத்தில் அமைதி காத்து விடுகிறான் குமரன்.
அதற்குக் காரணம் அவனுக்குள் இருந்த புவனா. மனநிலை சரியில்லாத புவனா என்ற பெண்ணை சந்தித்து அவளிடம் அன்பு காட்டத் தொடங்கிய நிலையில் எதிர்பாராமல் அந்தப் பெண் குணமாகிறாள்.அதன்பிறகு அவள் நிஜமாகவே குமரனை தீவிரமாக காதலிக்கத் தொடங்கி விடுகிறாள்.
ஆனால் அந்தக்காதலை குமரன் ஏற்கவில்லை. நம் இருவர் குடும்பத்து பழக்க வழக்கங்களும் வேறுவேறு. அதனால் நமக்குள் சரிவராது. மறந்து விடு என்கிறான், முடிவாக. அவளோ முடிவைத் தேடி விஷமருந்தி விடுகிறாள். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் குணமாகிறாள்.
தனக்காக மரணப்படுக்கை வரை போகத்துணிந்த புவனாவை சந்திக்கும் குமரன், இனி என்ன நடந்தாலும் நீ தான் என் மனைவி என்று உறுதி கூறுகிறான்.
இத்தனை நடந்தபிறகும் இதுபற்றி எதுவும் தெரியாத அப்பா ராஜபாண்டி, மகனுக்கு பெண் பார்க்கிறார். அவனும் சரி சொல்கிறான். எப்படியாவது நம் காதலை அப்பாவிடம் சொல்லி , தன்னை விரும்பியவளை மணந்து கொள்ளும் வாய்ப்புக்காக அவன் காத்திருக்கிறான்.
அவன் காதல் நிறைவேறியதா என்பது திருப்பமான காட்சிகள் என்கிறார், தொடரை இயக்கும் ஜே.கே. தொடரின் தயாரிப்பாளரும் இவரே.
[html:3c23982ea4]<div align ="center">[/html:3c23982ea4]
நன்றி: தினதந்தி
-
12th September 2009, 04:13 AM
#557
Moderator
Diamond Hubber
Nambinal Nambungal
(Zee Tamizh, Monday to Thursday, 8.30 p.m.)
This programme deals with paranormal incidents. This week focussus on three villages. In one, a deity Pandi Muni is believed to protect wealth, which is hidden under a rock. The rock has an inscription and anyone who tries to read it is said to become mentally unstable.
There’s a village in Tamil Nadu where one can get treated for fractures, just like in Puttur. In another village, the residents do not give or take dowry. What’s more, they do not consume alcohol so there are no bars there. Model villages, these!
நன்றி: Hindu
-
12th September 2009, 04:13 AM
#558
Moderator
Diamond Hubber
Anjaraipetti Zee Thamizh, Monday-Saturday, 1.30 p.m.
Anjaraipetti
(Zee Tamizh, Monday to Saturday, 1.30 p.m.)
The Anjaraipetti wagon, while touring places across Tamil Nadu, makes a halt at Kumbakkonam and Mayiladuthurai to explore the cuisines in the famous temple cities. The team tastes delicious home-made avakka pickle and vazhakkai meen masala curry in Kumbakkonam. In Mayiladuthurai, the team visits some of our viewers’ houses and savours unheard of dishes such as kara karunai gola and doubled cone.
The Anjaraipetti wagon then heads to Theni, a popular outdoor shooting spot. Here the team gets to taste dishes such as fish pollichadhu, karandi omlette and aatukudal gravy.
நன்றி: Hindu
-
12th September 2009, 04:14 AM
#559
Moderator
Diamond Hubber
Sarchai Singaram Saloon
(Jaya TV, Thursdays, 6.30 p.m.)
The local saloon is always a meeting point where visitors discuss subjects ranging from politics to cinema. Sarchai Singaram Saloon follows this concept with Balaji as the saloon owner and movie-crazy Prabhakar his assistant. Humour is the common thread. Film clips add colour to the show.
நன்றி: Hindu
-
12th September 2009, 04:14 AM
#560
Moderator
Diamond Hubber
Thik...Thik... Thodarum Marmangal
(Jaya TV, Sundays, 9 p.m.)
Despite advances in science and technology, people often witness incidents that have a supernatural twist. This new programme brings to light some true stories which have occurred in different parts of Tamil Nadu and other States. If you love the supernatural, mystery and adventure, then this one is for you!
நன்றி: Hindu
Bookmarks