சாரதா,

மக்கள் கலைஞர் ஜெய் அவர்களைப் பற்றிய திரிக்கும் செய்திகளுக்கும் நன்றி. பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏராளமான ஜெய் படங்கள் நினைவிற்கு வருகின்றன.

சினிமாவில் எல்லோரையும் எல்லோரும் அண்ணே என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததை மாற்றி ஹாய் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது ஜெய்தான் என்று சொல்லுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் + ஜெய்சங்கர் என்ற காம்பினேஷன் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன என்றால் மிகையில்லை. அது போல் நகைச்சுவை படங்கள், action படங்கள், துப்பறியும் படங்கள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்தார்.

டி.எம்.எஸ்.குரல் நிச்சயமாக இவருக்கும் பொருந்தியது. நீங்கள் சொன்னது போல் முதல் படத்திலேயே அது செட் ஆகி விட்டது. நலம் நலம்தானா முல்லை மலரே ஆகட்டும், காட்டு புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் ஆகட்டும், உன் கருங்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார் ஆகட்டும், தொட்டு தொட்டு பாடவா ஆகட்டும், பார்த்து கொஞ்சம் பேச வந்தாள் எத்தனை கோபம், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் 1970 -ம் வருடம் வானொலியில் அதிக நேயர்களால் விரும்பி கேட்ட பாடலாக அமைந்தது. நீங்கள் குறிப்பிட்ட அத்தையா மாமியா படத்தில் கூட விலைவாசி மாறி போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வரிகளில் ஜெய் தான் தெரிவார், டி.எம்.எஸ். தெரிய மாட்டார்.

நமது நடிகர் திலகத்துடன் கூட முதலில் அவர் நடித்த இரண்டு படங்களான அன்பளிப்பு மற்றும் குலமா குணமா இரண்டும் குறிப்பிட தக்கவை.

தொடருங்கள்

அன்புடன்