-
25th October 2009, 10:46 AM
#11
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களை , பேசும் படம் சினிமா மாத இதழ் , தனது பிப்ரவரி 1965 இதழில் , இம்மாத நக்ஷத்திரமாக கெளரவப்படுத்தியது. அதிலிருந்து :
"சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள 'இரவும் பகலும்' படத்தில் புதுமுகம் ஜெய்சங்கர் அறிமுகமாகியிருக்கிறார். 1965 - ம் ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர். 'இரவும் பகலும்' இவரது முதல் படமாயினும் அந்தப் பண்பட்ட நடிப்பை இவரிடம் நாம் காண முடிகிறது.
இவருடன் பிரதம பாகத்தில் நடித்திருக்கும் நடிகை ஒரு புதுமுகமாக இருந்தாலும் , அதையும் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு காதல் காட்சிகளில் குழைந்து நடித்து சபாஷ் பெற்று விடுகிறார் ஜெய்சங்கர்.
காதல் காட்சிகளில் மட்டுமல்ல ; சண்டைக் காட்சிகளிலும் கூட இவர் கைகளில் காணப்படும் வேகத்தை இவரது உடலின் நெளிவுகளிலும் காண முடிகிறது. பந்தைப் போல் தாவிக் குதித்து , இவர் போடும் சண்டைக் காட்சிகள் , எதிர்காலத்தில் மக்கள் இதயத்தில் இவருக்கு நிரந்தரமான இடம் இருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது.
சோகக் காட்சிகளிலும் ஜெய்சங்கர் சோடை போகாமல் நடித்திருக்கிறார்.
புதுமுகம் ஜெய்சங்கரை அவரது நடிப்புக்காக 'இம்மாத நக்ஷத்திரம்' என்று கெளரவித்து வரவேற்கிறோம்."
என்னே ஒரு தீர்க்க தரிசனமான கணிப்பு !
அன்புடன்,
பம்மலார்.
-
25th October 2009 10:46 AM
# ADS
Circuit advertisement
Bookmarks