-
8th December 2009, 11:46 PM
#1131
Senior Member
Regular Hubber
RPO's Wikipedia site has no mention of IR... hmmm..!
-
8th December 2009 11:46 PM
# ADS
Circuit advertisement
-
8th December 2009, 11:58 PM
#1132
Senior Member
Veteran Hubber
sari vidungappA, album veli vara IR veetu munnadi oru dharna pOrattam nadathuvOm
-
9th December 2009, 07:58 PM
#1133
Senior Member
Senior Hubber
What are the upcoming albums by IR in 2010?
Just 7 notes behold a beauty of life...
-
10th December 2009, 08:42 AM
#1134
Senior Member
Veteran Hubber
25 Titbits about Ilaiyaraaja
Courtesy of Orkut IR Comm - HeartA
Originally Posted by
இளையராஜா 25
- நா.கதிர்வேலன்
தாய்ப்பாலைப் போல சுரக்கும் ராஜாவின் இசையே தமிழனின் கண்ணீரும், புன்னகையும். இயற்கையின் மெளனத்தையும் இறைவனின் தரிசனத்தையும் இசையாக்கிய ராகதேவன். நூற்றாண்டின் கலைஞன் இளையராஜாவின் பர்சனல் பக்கங்கள் இதோ...
* இளையராஜாவின் பிறந்தநாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ அன்றும் மற்றுமொரு நாளே !
* திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரசிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்.
* மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் 2 ருத்ராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டு கிடக்கும்.
* ராஜாவின் எளிய உணவு காலையில் 2 இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம், இரவு 2 சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா !
* குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே !
* இளையராஜா எப்போது எங்கே புறப்பட்டுப் போனாலும் காரின் பின் சீட்டில், ஆர்மேனியப் பெட்டியும் கேமராவும் தவறாமல் இடம் பிடிக்கும்!
* இளையராஜா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் கார்த்திக் ராஜா, யுவன், பவதாரிணி எல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்துச் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார். வேடிக்கை விளையாட்டும், குழந்தைகளின் குதூகலமும், ராஜாவின் சிரிப்பும் வாசலைத் தாண்டி வெளியே கேட்கும் !
* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெ ஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!
* மாதம் ஒரு தடவை பெளர்ணமிக்கு திருவண்னாமலை செல்வார். கிரிவலம் செல்லும் போது யாரும் அதிகம் பயன்படுத்தாத உள்பாதையத் தேர்ந்தெடுப்பார். மெளனமே துணை!
* இளையராஜா எப்போதும் வெள்ளைச் செருப்புகள்தான் அணிவார். அவ்வளவு நேர்த்தியான செருப்புகள் கடைகளில் கிடைக்காது. அது அவருக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை!
* தன் சகோதரியின் மகள் ஜீவாவைத்தான் மணந்திருக்கிறார். எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் அவர், இளையராஜாவை 'மாமா' எனக் கூப்பிடும் குரலில் பண்ணைபுரத்துத் தமிழ் மணக்கும்!
* அறக்கட்டளை ஒன்றை அமைத்து வருடாவருடம் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கிக் கெளரவப்படுத்துகிறார். பரிசுகள் பெற்றவர்களில் வண்ணதாசன், ஜெயமோகனும் அடக்கம்!
* முல்லையாற்றின் கரையில் லோயர் காம்ப்பில் இருக்கிற அம்மா சின்னத் தாயின் சமாதியில் அடிக்கடி போய் வழிபடுவார். எங்கும் அமைதியின் பூரணம் வழியும் அந்த இடத்தை அதிகம் விரும்புவார். சமாதியைத் தூய்மைப் படுத்தும் பணியை அவரே மேற்கொள்கிற பாங்கில் அழகு துளிர் விடும்!
* ராஜாவின் மீது ஏறி விளையாடுகிற ஒரே செல்லப் பேரன் யதீஸ்வர். கார்த்திக் ராஜாவின் மகன். யதீஸ் சொல்வதற்கு எல்லாம் ராஜாவின் தலையாட்டலும், சிரிப்பும், பணிவும் பார்க்கிறவர்களை ஆச்சர்யப்படவைக்கும்!
* ஜெயாகாந்தனின் மிகவும் நெருங்கிய நண்பர். அவரைப் பெருமைப்படுத்துவதற்காகவே கவிஞர் ரவிசுப்ரமணியத்தைக்கொண்டு ஓர் ஆவணப்படம் தயாரித்து இருக்கிறார்!
* ராஜாவின் செல்போன் காலர் டியூன் என்னவாக இருக்கும். ம்ஹூம்.... சாதாரண டிரிங் டிரிங்தான் !
* இசை வரலாற்றில் புரட்சி செய்து, சிம்பொனி, கீர்த்தனைகள் எழுதி, இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிற இளையரஜாவுக்கு மத்திய அரசு இதுவரை விருதுகள் வழங்கிக் கெளரவித்தது இல்லை !
* ஏ.ஆர்.ரஹ்மான், ராஜாவிடம் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். "என் இசைவாழ்வின் முக்கியமான காலம் அது" என நினைவுகூர்கிறார் ரஹ்மான்!
* இல்லமே கோயில் போல இருக்கும். அம்மா சின்னத்தாயின் படம் பெரிய அளவில் இருக்கும். பூக்களை அம்மாவின் காலடியில் இட்டு, கண்கள் பணிக்க வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாள் தொடங்கும்.
* வார நாட்களில் பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் இளையராஜாவின் கார் அமைதியாக நுழையும்போது நம் கடிகாரத்தைக் காலை 7 மணி என நிச்சயமாகத் திருத்திக்கொள்ளலாம்!
* இளையராஜா தன் சுயசரிதையை எழுதத் தொடங்கி 150 பக்கங்களுடன் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படி உரை நடை பார்த்தறியாதது எனப் படித்தவர்கள் சொல்கிறார்கள்!
* ஹிந்திப் பாடகர் முமது ரபியின் பாடல்களை லகுவான் நேரங்களில் மெல்லிய குரல் எடுத்துப் பாடுவார் இளையராஜா. மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் கிடைக்கிற அபூர்வ நேரம் இது !
* அண்ணன் பாவலர் வரதராஜனின் பாடல்கள் மொத்தத்தையும் தொகுத்து வருகிறார் ராஜா. தமிழ் இலக்கியத்துக்கு மிகச்சிறந்த பங்களிப்பாக இருக்கும் இந்த முயற்சி!
* நாகஸ்வரம் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பது இளையராஜாவின் கனவு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் !
* வெண்பாக்கள் எழுதுவதில் இளையராஜா மிகவும் கை தேர்ந்தவர். அவரது வெண்பாக்களை செம்மங்குடி பெரிதாகப் பாராடியிருக்கிறார். செம்மங்குடியின் படுக்கை அறையில் இருந்த ஒரே புகைப்படம் ராஜாவுடையதுதான்! .
நன்றி: ஆனந்த விகடன், 16.12.2009
-
10th December 2009, 09:20 AM
#1135
Senior Member
Devoted Hubber
-
10th December 2009, 10:27 AM
#1136
Senior Member
Veteran Hubber
60 Lakhs if it is big budget, but a reduced fee for those who cant afford and sometimes does films for free. Sadly alot of media articles always make him sound money minded.
-
10th December 2009, 11:00 AM
#1137
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Hulkster
* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெ ஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!
A couple of years back, during Navarathri, a student of my wife's grand father played the violin for Raaja's vocals at his residence. This aspect of encouraging upcoming artists is not widely known through the media i guess....
"Yeah, well, you know, that's just, like, your opinion, man"
-
10th December 2009, 01:36 PM
#1138
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Bala (Karthik)
A couple of years back, during Navarathri, a student of my wife's grand father played the violin for Raaja's vocals at his residence. This aspect of encouraging upcoming artists is not widely known through the media i guess....
I think that is where media plays their "influence". Before i came to hub, my image of thalaivar externally was a miserly and arrogant person thanks to all the old media articles. After going through more i realise he has done more dharmam than anyone else in TFM.
-
10th December 2009, 03:07 PM
#1139
Senior Member
Senior Hubber
>>>>>
IR charges 60 lakhs/movie ???
<<<<<
ivvaLo kammiyA kuduththA, nAn ezhudhara software kooda thAn inspired aaga irukkAdhu
Yuvan charges a crore, I heard !!
-
10th December 2009, 07:53 PM
#1140
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Shankar
>>>>>
IR charges 60 lakhs/movie ???
<<<<<
ivvaLo kammiyA kuduththA, nAn ezhudhara software kooda thAn inspired aaga irukkAdhu
Yuvan charges a crore, I heard !!
shankar - appadi podu podu podu!
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
Bookmarks