-
30th March 2010, 08:04 AM
#351
Senior Member
Seasoned Hubber
பட்டாசு, கூட்டம், கட்அவுட் என பம்மலாரின் புகைப்பட காட்சிகள் நம்மை அரங்கிற்கே அழைத்துச் சென்று விட்டன என்றால் மிகையில்லை.
தங்கள் பார்வைக்காக மேலும் சில படங்கள்
http://sivajiweek.blogspot.com/
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th March 2010 08:04 AM
# ADS
Circuit advertisement
-
30th March 2010, 08:31 AM
#352
Senior Member
Devoted Hubber
murali/pammalar/raghavendra,
video இருந்தால் போஸ்ட் செய்யுங்க ப்ளீஸ். கலை உலக சக்கரவர்த்தி, சிம்ம குரலோன், நடிகர் திலகம், எங்கள் தங்க ராஜாவின் புகழ் வாழ்க!
Next time, you guys have good luck with NT's one and only Raaja!!
regards
-
30th March 2010, 09:01 AM
#353
Senior Member
Diamond Hubber
ஆகா ! கலக்கிபுட்டீங்க மக்கா ..கலக்கிபுட்டீங்க
-
30th March 2010, 03:58 PM
#354
Senior Member
Veteran Hubber
சிவாஜி நியூஸ்
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (30.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஐந்தாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பாரத விலாஸ் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2010, 04:32 PM
#355
Senior Member
Regular Hubber
Originally Posted by
Murali Srinivas
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்
நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.
இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.
பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.
குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].
அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.
அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.
அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.
நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.
ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.
பைரவ அமர்க்களம் நாளை.
அன்புடன்
முரளி சார் , நான் இரு நண்பர்களுடன் மதிய காட்சி பார்த்துவிட்டேன். பிறகு வெளியே வந்து 5 மனிக்கு மேல் நடந்த ஆரவாரங்ளை வேடிக்கை பார்த்தோம். திரையரங்கம் இருந்தது போக்குவரத்து அதிகமுள்ள சாலை என்பதால் ட்ராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு ஓரே பரபரப்பு. பேருந்துகளிலும் வாகனங்களிலும் செல்பவர்கள் வேடிக்கை பார்த்ததால். இதுவே நமக்கு நல்ல விளம்பரம். படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறேன் - DVD யில் வராததால். சிறு வயதில் நான் மிக விரும்பிப் பார்த்த படம் - சூப்பர் ஹிட் பாடல்கள் -.ஆப்பக்கார பாட்டி பேசும் வசனம், மேஜரின் கிரீடம் டயலாக், அபிமான தலைவரின் படம் மாட்டப்பட்ட மருத்துவமனை, வல்லவரை எதிர்ப்பேன் - ஜெயிப்பேன் பாடல் போன்ற பல பாடல் வரிகள், இவற்றை பார்க்கும்போது நடிகர் திலகம் நடித்த எம்.ஜி.ஆர் படம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். எங்கள் பகுதியில் நெல்லை - பார்வதி, நாகர்கோவில் - ராஜேஷ் என இரண்டு சென்டர்களில் நூறு நாட்கள் ஓடியது குறிப்பிடத் தக்கது . அதனால் வசந்த மாளிகை, ப்ட்டிக்காடா பட்டணமா போன்றவற்றை விடவும் அங்கே பெரு வெற்றிப் படம் என்றே சொல்ல வேண்டும்.
-
30th March 2010, 04:50 PM
#356
Senior Member
Veteran Hubber
The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight - More Pictures
Everyone's eyes should view the following link to have a real feel of the divine power of THE GOD OF THE CELLULOID WORLD:
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8588985
A Very Very Happy Viewing,
Pammalar.
-
30th March 2010, 05:16 PM
#357
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நல்லிதயம், எமது நண்பர் திரு.கே.மகேஷ் அவர்களை நமது நடிகர் திலகத்தின் திரிக்கு "வருக! வருக!" என மிகுந்த அன்புடன் வரவேற்கிறேன். பார்வையாளராக இருந்த தாங்கள் பதிவாளராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தங்களது அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்களுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!
"வந்தவர் (திரு.கே.மகேஷ்) வாழ்க! மற்றவர்கள் வருக!"
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2010, 10:33 PM
#358
Senior Member
Platinum Hubber
"நான் தன்னந்தனிக்காட்டு ராஜா (எங்க மாமா)"வைத்தழுவி அமைந்த ஜேஸன் ம்ரோஸின் பாடல் :
("I'm yours", very popular in the west for the last couple of years)
-
30th March 2010, 11:23 PM
#359
Senior Member
Veteran Hubber
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)
27.3.2010 - சனி - கௌரவம்
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 6,000/- (ரூபாய் ஆறாயிரம்)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்) (ஹவுஸ்ஃபுல்)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2010, 11:57 PM
#360
Senior Member
Veteran Hubber
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)
29.3.2010 - திங்கள் (பங்குனி உத்திரத் திருநாள்) - திருவருட்செல்வர்
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 5,100/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒருநூறு)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks