-
20th May 2010, 11:16 AM
#1
Senior Member
Seasoned Hubber
Jayalalitha - legend in Tamil Cinema
டி.பி. ராஜலட்சுமி காலந் தொட்டு இன்றைய தமன்னா வரை, தமிழ்த்திரையுலகம் எண்ணற்ற நடிகையரைக் கண்டிருக்கிறது. இவர்களில் பல்லாண்டுகள் கோலோச்சியவர்கள் உண்டு. இதில் டி.ஆர். ராஜகுமாரி, பி.பானுமதி, ராஜ சுலோச்சனா, அஞ்சலி தேவி, ஜமுனா சாவித்திரி, சரோஜா தேவி, பின்னர் கே.ஆர். விஜயா, மஞ்சுளா, லதா, வாணிஸ்ரீ, என ஏராளமானோர் உள்ளனர்.
ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி தமிழ்த்திரையுலகில் ஒரு நடிகை நிலைத்து நின்று அரசியலிலும் வெற்றி கண்டிருக்கிறார் என்றால் அவர் ஜெயலலிதா அவர்கள் தான். அவருடைய அரசியல் ஒரு புறமிருக்க அவருடைய திரையுலக சாதனைகள் பிரமிக்கத் தக்கவை. அவருடைய திரைப்படங்களைப் பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் உள்பட தமிழ்ததிரையுலகிற்கு அவருடைய பங்களிப்பு பற்றி அலசுவதே இத்திரியின் நோக்கம். ஏற்கெனவே அவருக்கு நம்முடைய ஹப்பில் திரி இருந்தால் தொகுப்பாளர்கள் அதைச் சுட்டினால் அங்கேயே தொடரலாம். அப்படி இல்லையென்றால் இதில் தொடரலாம்.
கன்னடப் படம் மூலம் திரையலகில் நுழைந்த ஜெயலலிதா அவர்களின் நடிப்பில் வெளிவந்த படங்களில் என் மனம் கவர்ந்த பல படங்களை நான் குறிப்பிட வேண்டும். அவருடைய உன்னத நடிப்பில் வெளிவந்த திருமாங்கல்யம், தங்க கோபுரம் உள்பட பல படங்களைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th May 2010 11:16 AM
# ADS
Circuit advertisement
-
20th May 2010, 12:34 PM
#2
அற்புதம் ராகவேந்திர சார் அவர்களே
நேற்று இரவு எங்கிருந்தோ வந்தாள் பார்த்தவுடன் கலை செல்வி ஜெயலலிதா பற்றி திரி எதுவம் வந்ததாக நினவு இல்லை ஏன் இதை suggest செய்யகூடாது என்று நினைத்தேன் இன்று நீங்கள் ஆரம்பித்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்தாள் படத்தில் அவரின் நடிப்பு மிக்க சூப்பர்
gk
-
20th May 2010, 05:11 PM
#3
கலை செல்வி இன் 'முத்துசிப்பி ' படம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா கலை செல்வி இன் மிக சிறந்த நடிப்புக்கு எடுத்துகாட்டு இந்த படம்
-
20th May 2010, 05:36 PM
#4
Senior Member
Seasoned Hubber
டியர் கிருஷ்ணாஜி,
தங்களைப் போலத் தான் நானும் எண்ணினேன். நேற்றிரவு எங்கிருந்தோ வந்தாள் உச்சக் கட்டக் காட்சியைப் பார்த்த வுடன் அவருடைய நடிப்பு நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது. அப்போது தான் தோன்றியது, நமது ஹப்பில் அவருடைய நடிப்புத் திறமையைப் பற்றி விவாதித்தோமா என எண்ணினேன். அப்படித் தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இத்திரி.
முத்துச் சிப்பியும் அவருடைய சிறந்த படங்களில் ஒன்றாகும். எண்ணிலா படங்கள். சூரிய காந்தி, சவாலே சமாளி, கண்ணன் என் காதலன், எத்தனையோ படங்கள் உள்ளன.
ஒரு நினைவூட்டலாக, எனக்கு நினைவிலுள்ள வரை அவர் நடித்த படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். இப்பட்டியல் ஆங்கில அகர வரிசையில் அமைக்கப் பட்டுள்ளது. ஏதேனும் விட்டுப் போயிருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆதி பராசக்தி
ஆயிரத்தில் ஒருவன்
அடிமைப் பெண்
அனாதை ஆனந்தன்
அன்பைத் தேடி
அன்புத் தங்கை
அன்று கண்ட முகம்
அன்னை வேளாங்கண்ணி
அன்னமிட்ட கை
அரச கட்டளை
அவன் தான் மனிதன்
பாக்தாத் பேரழகி
பொம்மலாட்டம்
புத்திசாலிகள்
சந்திரோதயம்
சித்ரா பௌர்ணமி
தெய்வ மகன்
தர்மம் எங்கே
என் அண்ணன்
எங்க மாமா
எங்க ஊர் ராஜா
எங்கள் தங்கம்
எங்கிருந்தோ வந்தாள்
கலாட்டா கல்யாணம்
கங்கா கௌரி
குருதட்சணை
ஜீஸஸ்
கணவன்
கந்தன் கருணை
கண்ணன் என் காதலன்
கன்னித் தாய்
காதல் வாகனம்
காவல் காரன்
குடியிருந்த கோயில்
குமரிக் கோட்டம்
குமரிப் பெண்
லாரி டிரைவர்
மாடி வீட்டு மாப்பிள்ளை
மகராசி
மேஜர் சந்திரகாந்த்
மணி மகுடம்
மாட்டுக்கார வேலன்
மூன்றெழுத்து
மோட்டார் சுந்தரம் பிள்ளை
முகராசி
முத்துச் சிப்பி
நான்
நம் நாடு
நதியைத் தேடி வந்த கடல்
நீ
நீரும் நெருப்பும்
நீதி
ஒளி விளக்கு
ஒரு தாய் மக்கள்
பாதுகாப்பு
பட்டிக்காடா பட்டணமா
பட்டிக்காட்டு பொன்னையா
பாட்டும் பரதமும்
புதிய பூமி
ராஜா வீட்டுப் பிள்ளை
ரகசிய போலீஸ் 115
ராஜா
ராமன் தேடிய சீதை
சவாலே சமாளி
சக்தி லீலை
ஸ்ரீ கிருஷ்ண லீலா
சுமதி என் சுநதரி
சூரிய காந்தி
தாய்
தாய்க்குத் தலை மகன்
தங்க கோபுரம்
தனிப் பிறவி
தேர்த் திருவிழா
தேடி வந்த மாப்பிள்ளை
திக்குத் தெரியாத காட்டில்
திருமாங்கல்யம்
உண்மையே உன் விலை என்ன
உன்னைச் சுற்றும் உலகம்
வைரம்
வந்தாளே மகராசி
வெண்ணிற ஆடை
யார் நீ
யாருக்கும் வெட்கமில்லை
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st May 2010, 11:23 AM
#5
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்தர்...
பொருத்தமான ஒருவருக்கு பொருத்தமான ஒருவரால் துவங்கப்பட்ட பொருத்தமான ஒரு திரி. ஜெயலலிதாவின் பெயரை நீக்கி விட்டு தமிழ்த்திரையுலக வரலாற்றை மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது என்ற அளவுக்கு முத்திரை பதித்த ஒரு தங்கத்தாரகை, தைரியலட்சுமி.
அவருக்காக நீங்கள் துவங்கியுள்ள இந்த திரி பெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கலைச்செல்வியின் திரையுலகப்பயணத்தில் பிரதான மைல்கல்லான, நடிகர்திலகத்தின் "எங்கிருந்தோ வந்தாள்" படத்துக்கான எனது விமர்சனம் (இதுவரை படித்திராதவர்களுக்காக) இந்த இணைப்பில்...
பாகம் 1, 2
http://forumhub.mayyam.com/hub/viewt...9cb3bd#1250952
பாகம் 3, 4
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1140
-
21st May 2010, 11:28 AM
#6
Senior Member
Veteran Hubber
Jayalalitha - Always i like her Hair style and the costumes.
I like her Saree's colors.
Engirndho vandhal - 4th or 5th std ... apo partha padam..
ana - Manadhil ninradhu - Avangaloda saree colors dhan.
Sumathi en Sundari - idhuvum dhan........
Hair style - romba nalla irukum.
Saree's colors - ellam romba nalla irukum.......
-
21st May 2010, 12:25 PM
#7
Senior Member
Veteran Hubber
-
21st May 2010, 12:30 PM
#8
Senior Member
Diamond Hubber
மிகத் திறமையான நடிகை ஜெயலலிதா.
தனித்துவமான நடிப்பும் ,நடனமும் அவரின் சிறப்பு.
-
21st May 2010, 12:56 PM
#9
Senior Member
Veteran Hubber
கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது பட சர்ச்சையும், அதையொட்டிய நிகழ்வுகளும் பற்றிய எனது மற்றும் ராகவேந்தர் அவர்களின் பதிவு.... (மற்றும் பாக்தாத் பேரழகி விமர்சனம்)...
http://www.mayyam.com/hub/viewtopic....r=asc&start=30
-
21st May 2010, 01:03 PM
#10
Senior Member
Veteran Hubber
"ஆயிரத்தில் ஒருவன்" (1)
தமிழ்ப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப்படங்களில் புராணப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப்படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக்கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இதுவரையாகட்டும், கடற்கொள்ளையர்களை கதைக்கருவாகக்கொண்டு வெளிவந்த ஒரே படம் 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டுமே. கதை, வசன்ம், காட்சியமைப்பு கள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக்களங்கள் என, ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
இப்படத்தின் கதாநாயனான 'மக்கள் திலகம்' எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கைதேர்ந்த தையற்கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவதுபோல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச்சணடைக்காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச்சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப் பாகிக்கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் BANDHULU மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுவரை (பானுமதிக்குப்பின்) சரோஜாதேவிதான் எல்லாப்படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக)போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருந்தார்.
'பருவம் எனது பாடல்' என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மணடபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம்போல "வெற்றி... வெற்றி..." என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித்தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும்போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இள்வரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக்கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக்காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக 'கடற்கொள்ளையனாக' சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப்போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்... இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டுமப்டியாக இருக்கும்.
கத்திச்சண்டைக்காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (MGR & ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச்சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப்பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள்சண்டை (நம்பியார்: "இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் த்லைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்"), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர்.(வழக்கம்போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப்போகும் மூன்று கத்திச்சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித்தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அதுவரை தமிழ்த்திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகி விட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா... இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1) பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
"பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்"
பல்லவியைபாடிமுடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ‘HUMMING’ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ்ஸ்தாயி வரையில் கொண்டுவர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
"இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்"
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2) 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை'
வழக்கம்போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
"ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே"
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3) 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ'
இந்தப் பாடலைப்பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப்பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப்பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4) 'உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்'
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
"பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்"
அடுத்து வ*ரும் இசை 'பிட்'டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கருப்பு நிற உடையில் அழகுப்பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
Bookmarks