-
20th July 2009, 01:09 AM
#51
Senior Member
Seasoned Hubber
(ஹுலூலே (Hulule) விமானநிலையம், மாலத்தீவு)
பேரிரைச்சலோடு தரையில் குறியிட்ட இடத்திற்க்கு வந்து நின்ற அந்த எமிரேட்ஸ்(Emirates) விமானத்திலிருந்து இறங்கிய ராகவனுக்கு எல்லாமே இன்னும் கனவு போல் இருந்தது. அலி பேயுடன் பேசிய பிறகு தனது ஓட்டல் அறையிலிருந்து இரவு முழுவதும் அட்மிரலுடன் பேசியதன் விளைவு மறு நாள் காலை அவர் டாக்டர் செரியனாக ஷார்ஜாவிற்க்கு சென்றது. அங்கு இருந்து ஒரு வாகனத்தில் துபாய் வந்த அவர் அகமத் காலித் என்ற பெயரில் மாலத்தீவு பாஸ்போர்ட்டில் அன்றிரவே மாலே செல்லும் 658 விமானத்தில் ஏறி விட்டார்.
டெர்மினலில் திவைஹி ராஜ்யாமிஹா (Maldive citizens) என்று போட்டிருந்த வரிசையில் நின்று பாஸ்போர்ட் சோதனையை கடந்து வெளியே வந்த அவர் அந்த டாக்குமென்டுகளை தயார் செய்த தேசிகனை மனதுக்குள் பாராட்டினார். டெர்மினலுக்கு வெளியே வ்ந்து படகுத்துறையில் தலைநகர் மாலே செல்லும் ஒரு தோணியில் ஏறி அமர்ந்தார். இந்த 15 வருடங்களில் மாலே நிறைய மாறிவிட்டது. மாலே நகரை சுற்றி கடலில் ஆழமில்லாத பகுதிகளில் மணலை போட்டு நிரப்பி நிலமாக்கி அவ்விடங்களில் வீடுகளை கட்டி மாலேவின் பரப்பளவையே பெரிதாக்கிவிட்டனர். ஆனால் அதே சமயம் இயற்கை அரண்களை அழிப்பதன் மூலம் கடல் கொந்தளிப்பினால் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரிக்கும் ஜியாலாஜிஸ்டுகளின் (geologist) வார்த்தைகள் இதுவரை சம்பந்தபட்ட காதுகளை இன்னும் எட்டவில்லை போல் தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------
(மாலே, மாலத்தீவு)
மரைன்ட்ரைவில் ஸ்டேட்பாங்க் முன் இருக்கும் ஜெட்டியில் இறங்கிய ராகவன் அங்கு நிற்கும் டாக்ஸிகளை புறக்கனித்து சாந்தனி மாகு(சாலை, தெரு) நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாந்தனி மாகுவில் அந்த உள்ளடங்கிய வீட்டின் 3வது மாடியிலுள்ள அந்த ஃப்ளாட்டை அடைந்து கதவை தட்டி உள்ளே நுழைந்தவரை புன்சிரிப்புடன் வரவேற்றார் அலி பே.
"ராகவன், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களுக்கு இன்னோரு விஷயம் சொல்லனும், அலிஃபுஷிய நாங்க கவனமா கண்கானிச்சுட்டு வரோம். நான் சொன்னா நீங்க கண்டிப்பா நம்ப மாட்டீங்க, ஹோசியார் கான் இப்போ இருக்கறது அலிஃபுஷில. எப்படி வந்தான், எப்போ வந்தான், யார் அவன அழைச்சிட்டு வந்தாங்கனு இன்னும் சரியா தெரியல. கிருஸ்துமஸ் லீவுக்காக இப்போ இங்க நிறையா டூரிஸ்டுங்க வராங்க. அதே மாதிரி எல்லா தீவுங்களுக்கும் சரக்கு ஏத்திட்டு வர தோணிகளும் ஜாஸ்தி. இதுல ஏதொ ஒண்ணுல யாரோ அவன ஏத்தி அலிஃபுஷில கொண்டு விட்டு இருக்கணும். உங்க வேலை இப்போ இவங்க ரெண்டு பேரையும் மூணாம் பேருக்கு தெரியாம நசுக்கணும்."
"அலிபே, நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. நான் ஒன்னும் ஜேம்ஸ் பாண்ட் இல்ல. என்னால அப்படி நிறையா பேரோட சண்டை எல்லாம் போட முடியாது. ரகஸ்யமா காதும் காதும் வச்சா மாதிரி காரியம் முடிக்கிறது தான் என்னால முடிஞ்ச விஷயம். இவங்க என்ன தனியா இருப்பாங்கனு நினைச்சீங்களா? இதுக்கு நீங்க உங்க என்.எஸ்.எஸ் (N.S.S.) காரங்களை அனுப்பி அவங்கள பிடிக்கலாம்" என்று சற்று உஷ்ணமாக பேசினார் ராகவன்.
"நீங்க சொன்ன மாதிரி அவங்கள சுத்தி வளைச்சு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த சுத்து வட்டாரத்திலேயே எங்க நாடு தான் சின்ன நாடு. எல்லாத்துக்கும் அண்டை நாடுகளை எதிர் பாக்குற நாடு. நாட்டு வளமே இங்க வர டூரிஸ்ட நம்பித்தான் இருக்கு. அதுவும் இன்னும் 3 நாளுல கிருஸ்துமஸ் வருது. இப்பத்தான் இங்க பீக் சீசன், இப்போ நாங்க எதாவது பண்ணா ஒரு பய இனிமே இங்க வர மாட்டான். அமெரிக்காவ உதவி கேட்டா அவன் ஒரு பெரிய படையவே அனுப்புவான் ஆனா அவ்வளவு சீக்கிரமா திரும்பி போக மாட்டான். ஆஃப்கானிஸ்தான் மாதிரி இங்கேயே இருப்பான். இதனால அண்டை அசல்ல இருக்குற எங்களுக்கு நிறைய உதவி பண்ணற இஸ்லாமிய நாடுகளோட வீண் சண்டை வரும். இதை எல்லாம் யோசிச்சு தான் நான் உங்க அரசாங்கத்தோட உதவிய நாடினேன். ரா க்கு துப்பு கொடுத்தது யார்ன்னு நினைக்கறீங்க".
இதை கேட்டு யோசனையில் ஆழ்ந்த ராகவன்," சரி அலி பே இப்படி செய்யலாம், ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் ஆள் பலம் தேவை. இது தான் என்னோட ப்ளான்" என்றார். அதை கேட்டு அகமும் முகமும் மலர்ந்த அலி பே ராகவனை கட்டிக்கொண்டார்.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
20th July 2009 01:09 AM
# ADS
Circuit advertisement
-
20th July 2009, 03:41 AM
#52
Senior Member
Seasoned Hubber
(23 டிசம்பர், மாலே, மாலத்தீவு)
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவரை ராகவனுக்கு உடனே அடையாளம் தெரிந்து விட்டது. அன்றைய காப்டன் சலீம் இன்று மேஜர் சலீமாகி விட்டார். 1988 பார்த்த போது இருந்த அந்த இரும்பு உடல் இன்றும் கட்டு குலையாமல் இருந்தது. அந்த ஆபத்தான சூழ்நிலையிலும் அவரை விட்டு அகலாத புன்னகை இன்று இன்னும் பெரிதாக இருந்தது. ராகவனை கண்டு கை குலுக்கிய சலீம் தன்னுடன் வந்த சில பேரை அறிமுக படுத்தினார். துடிப்பான அந்த 4 இளைஞர்களை பார்த்ததுமே ராகவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அனைவரையும் பார்த்த ராகவன்," ப்ரெண்ட்ஸ், உங்க உதவி இல்லாம இந்த காரியம் கண்டிப்பா நடக்காது. மேஜர் சலீம் இந்த மிஷன் பத்தி உங்களுக்கு ப்ரீஃப் பண்ணி இருப்பாரு. இந்த மேப்ப பார்த்தீங்கன்னா, இது தான் அலிஃபுஷி, இதுக்கு பக்கத்துல இருக்குற சின்ன தீவுக்கு பேரு எத்திங்கிலி, இதுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குறது பொடுஃபுஷி. இன்னும் சில நாள்ல ஒரு டூரிஸ்ட் ரிஸார்டா மாற போகுது. அதுக்கான வேலை எல்லாம் மும்முரமா நடந்து கிட்டு இருக்குது. தினசரி தோணிலயும், ஸ்பீட் போட்லயும் சாமான்களும் ஆளுங்களும் வந்து இறங்கிகிட்டே இருக்காங்க. அங்க விழற குப்பைய எடுத்துகிட்டு போற போட் க்ரூ ஆளுங்க மாதிரி நாம அங்க போறோம். ஹெவி வெப்பன்ஸ் எதுவும் வேண்டாம். இது டர்க்கி தயார் பண்ற யாவுஸ் 16 வகை பிஸ்டல். இத செலெக்ட் பண்ண காரணம் என்னன்னா, இந்த டைப் பிஸ்டல் தான் இப்போ சுத்து வட்டார நாடுகள்ல அதிகமா உபயோகத்துல இருக்கு. ட்ரேஸ் பண்றது ரொம்ப கஷ்டம். வெயிட்டும் கம்மி தான், அதனால 14 புல்லட் கொண்ட க்ளிப் போடறது ரொம்ப சுலபம். இந்த பிஸ்டல தவிர நாம எடுத்துட்டு போக போற இன்னோரு வெப்பன் ஒரு புது விதமானது. பொதுவா இத தண்ணிக்குள்ள அண்டர் வாட்டர் வெப்பனா யூஸ் பண்ணுவாங்க. இத கொஞ்சம் மாத்தி நாம வெளிய யூஸ் பண்ண போறோம். இதுக்கு புல்லட்ஸ் கிடையாது. சின்ன சின்ன டார்ட்ஸ்(அம்புகள்)தான். இந்த டார்ட்ஸ்ல விஷம் தடவி இருக்கும். ஆள கொல்ற அளவு இருக்காது ஆன கண்டிப்பா அடுத்த 1 மணி நேரத்துக்கு அவங்களால எதுவும் செய்ய முடியாது. இதுல இருக்குற விஷம் உடனே நரம்பு மண்டலத்தை தாக்கி அவங்களை செயலிழக்க செஞ்சுடும். டோஸேஜ் கம்மியா இருக்கறதால உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்ற ராகவனை புரியாமல் பார்த்தார் சலீம்.
"சலீம், உங்க கேள்வி எனக்கு புரியுது. என்னோட ஆசை என்னன்னா, ஆபத்தா இருந்தாலும் எப்படியாவது அவங்கள உயிரோடு புடிச்சா, நிறையா விஷயங்கள் வெளிய வரக்கூடிய வாய்ப்புகள் ஜாஸ்தி. எனக்கு இப்போ தெரிய வேண்டியது, அவங்கள பத்தின கரென்ட் இன்ஃபோர்மேஷன். அவங்க எத்தன பேர், அவங்க யூஸ் பண்ற வெப்பன்ஸ், அவங்களுக்கு எங்க இருந்து சாப்பாடு போகுது, அவங்க என்ன மாதிரி போட் வச்சு இருக்காங்க, அவங்க கான்டாக்ட் யாரு இத்தனையும் ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சாகனும்".
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
20th July 2009, 05:37 AM
#53
Senior Member
Seasoned Hubber
(24 டிசம்பர், 15.00 மணி, அம்பரி தோணி)
பொடுஃபுஷிக்கு சாமன்களை ஏற்றி செல்லும் படகின் காப்டனான ஹசனுக்கு வயது 120 என்றாலும் சுலபமாக நம்பி விடலாம். காலை 4 மணிக்கு மாலேவில் இருந்து இது நேரம் வரை படகை ஓட்டி வரும் ஹசனுக்கு வாழ்க்கையே அந்த கடலும் அவனது படகு அம்பரியும் தான். மாலத்தீவின் தென் கோடியிலுள்ள ஃபுவமுலக்கூவில் இருந்து வரும் ஹசனுக்கு மாலே பாஷை அவ்வளவாக பிடிக்காது. பாஷை என்ன மாலே காரர்களையும் அவ்வளவாக பிடிக்காது. என்னவோ அவர்களுக்கு மட்டும் தான் நாகரீகம் தெரியும் மற்றவர்கள் எல்லாம் காட்டுவாசிகள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்று மற்றவகள் நினைப்பதால் பொதுவாக மாலேகாரர்களை மற்ற தீவுவாசிகள் நம்ப மாட்டார்கள். இதனால் ஹசனும் தேவை பட்டால் ஒழிய மற்ற நேரங்களில் தனது தீவு பாஷையே பேசுவான்.
மூட்டை முடிசுகளோடு அதிகாலையில் படகில் ஏறிய அறுவரும் சுருண்டு படுத்து இருந்தனர். அவர்களையும், அவர்களின் உடைகளையும் பார்த்தால் யாரும் அவர்களை இரண்டாம் முறை திரும்பி பார்க்க மாட்டார்கள். படகில் ஏறியதிலிருந்து திவேஹி மட்டும் பேசிய அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் கூடி கூடி சன்ன குரலில் பேசி கொண்டார்கள். சலீம் சேகரித்த விஷயத்தில் இருந்து குறைந்த பட்சம் 20 முதல் 30 பேர் வரை அலிஃபுஷியில் இருக்க வேண்டும் என தெரிந்தது. அவர்களுக்கு உணவு சற்று தொலைவில் இருக்கும் பெரிய தீவான மாஃபுஷியிலிருந்து போவதும் அவர்கள் 2 பெரிய சக்தி வாய்ந்த ஸ்பீட் போட்களை வைத்து இருப்பதும் தெரிந்தது. மணி நேரத்துக்கு 40 கி.மீ வேகத்தில் நீரை கிழித்து செல்லும் படகுகள் அவை எனவும் தெரிய வந்தது. படகுகள் ஒரு காலத்தில் மாலத்தீவின் அதிபராகவும், பிறகு ஊழல், கடத்தல் பிரச்சனையில் மாட்டியதால் பதவி இறக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு துரத்த பட்ட ரன்னாகே அப்துல் சத்தார் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்தது. 1988 ஆண்டில் நடந்த ஆயுத புரட்சிக்கு வித்திட்டது இவர் தான் என்று கைகளும் இவரை நோக்கி காட்டியது. அன்றைய மாலத்தீவின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அன்றைய இந்திய பிரதமர் உடனடியாக இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். அந்த ஆப்பரேஷன் காக்டஸ் சம்பந்தமாகத்தான் ராகவனும் முதன் முதலில் மாலத்தீவு வந்தது. அன்று ஓடிய சத்தார் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் பதவிக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்த வண்ணம் இருந்தார். இப்போது அவர் இந்த தீவிரவாதி கும்பலோடு கை கோர்த்து இருப்பது, மாலத்தீவினிற்க்கு இதனால் வரப்போகும் ஆபத்தினை தெளிவாக காட்டியது.
படகின் பின்புறம் ஹசனிடம் ஏதோ கேட்டுவிட்டு திரும்பி வந்த சலீம் ராகவனிடம், "பொடுஃபுஷிக்கு இன்னும் 3 மணிநேரம் இருக்கு, இன்னி ராத்திரி நாம கொஞ்சம் குப்பைய எதுதுகிட்டு அலிஃபுஷி பக்கமா போய் பார்ப்போம் ராத்திரில எப்படி அவங்க செக்யூரிட்டி இருக்குன்னு. ஹசனுக்கு இந்த ஏரியா ராத்திரில கூட நல்லா தெரியுமாம்".
-----------------------------------------------------------
(25 டிசம்பர், 22.00 மணி, எத்திங்கிலி தீவு)
குப்பை படகை வேகு கவனமாக பவழ பாறைகளின் நடுவே ஓட்டி வந்த ஹசன் ஒரு வாகான இடம் பார்த்து படகை நிறுத்தினான். பக்கத்தில் அலிஃபுஷி தீவில் பாட்டும் கும்மாளமும் நடப்பது இங்கே கேட்டது. முதல் நாளிரவு அலிஃபுஷி போக பார்த்த ராகவன் அலைகளின் வேகத்தாலும், கடலின் சீற்றத்தாலும் தனது முயற்ச்சியை கை விட நேர்ந்தது. அதற்கு பதில் எத்திங்கிலி வந்தவர்கள் அந்த தீவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்கள். அலிஃபுஷியின் நேர் பின்னால் இருப்பதால் இய்ற்கையின் சீற்றம் இங்கு அதிகமாக இல்லை. மேலும் அவர்கள் கவனித்த ஒரு விஷயம் இரவில் அலிஃபுஷியில் நடக்கும் கூத்தும் கும்மாளமும். கிருஸ்துமஸுக்காக அவர்கள் சில பெண்களை வரவழைத்து பெரிய பார்ட்டியாக கொண்டாடி கொண்டி இருந்தனர். குடிப்பதற்க்கும் கும்மாளம் போடுவதற்க்கும் கிருஸ்துமஸ் ஒரு சாக்காக போயிற்று.
குளிருக்கு அடக்கமாக ஒரு போர்வையை போர்த்தி கொண்டிருந்த ராகவனும் சலீமும் பக்கத்து தீவில் நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். மெதுவாக ஆட்டமும் பாட்டமும் குறைய ஆரம்பித்து கடைசியில் மௌனம் நிலவும் போது சரியாக மணி 4.00.
------------------------------------------------------------
(26 டிசம்பர், 07.45 மணி, அலிஃபுஷி தீவு)
கைகளில் பிஸ்டலுடன் மெதுவாக அடி மேல் அடி எடுத்து முன்னேறி வந்த ராகவன் கண்களில் தெரிந்தது 1 பெரிய கூடாரமும் 3 நடுத்தரமான ஆனால் மிகுந்த வசதியுடன் கூடிய கூடாரங்களும் தெரிந்தன. காவலுக்கு கூட ஒருவரையும் வைக்காமல் அவர்கள் உறங்கி கொண்டிருந்தனர். சைகையாலேயே பெரிய கூடாரத்துக்கு மூவரை அனுப்பி, மீதியுள்ள கூடாரத்தை நோக்கி மெதுவாக நகரும் போது, ஹசன் ஏதோ கத்துவது காதில் கேட்டது. மற்றவர்களை மறைந்து கொள்ள சொல்லி, ராகவன் வேகமாக ஹசன் இருக்கும் இடத்தை நோக்கி சென்ற போது பொடு மஸ்ஸல, பொடு மஸ்ஸல(Big problem) என்று கத்தியவாறே ஹசன் படகை நோக்கி ஓடுவது தெரிந்தது. அதிர்ச்சியுடன் பார்த்த ராகவனின் கண்களில் கடல் பின் வாங்குவது தெரிந்தது. பவழ பாறைகளின் நடுவில் ஆயிரக்கணக்கான மீன்கள் நீரின்றி உயிருக்கு ஊசலாடுவது தெரிந்தது.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
20th July 2009, 06:08 AM
#54
Senior Member
Seasoned Hubber
(ஜனவரி 29, 2005, நங்கநல்லூர், சென்னை)
மாடியில் தனது அறையில் படுத்து இருந்த ராகவனுக்கு கீழே மைதிலி யாரிடமோ பேசுவது லேசாக கேட்டது.
"வாங்கோ மாமி, இன்னிக்கு எங்க சுந்து வரான். இன்னும் கொஞ்ச நேரத்துல சென்ட்ட்ரல் போய் அவன அழைச்சிண்டு வரணும். இவரானா இன்னும் எழுந்துக்கவே இல்ல. எப்போ எழுந்து எப்போ கிளம்பி எப்போ போறதுன்னு ஒண்ணும் புரியல. வேண்டாம், வேண்டாம்ன்னு தலைல அடிச்சிண்டேன், போயே ஆவேன்னு இந்த பாழா போற ட்ராமா போட டெல்லி போனார். போன இடத்துல என்ன சாப்டாரோ என்ன குடிச்சாரோ உடம்பு வந்து 3 வாரம் ஆஸ்பத்திரில இருந்தாராம். சொல்ல கூட இல்ல. சொன்னா அநாவசியம்மா கவலபடுவேன்னு சொல்லலியாம். ஆத்துக்கு வந்து 10 நாள் ஆச்சு, சுருண்டு சுருண்டு படுத்துக்கறாரே தவிர வேற ஒண்ணும் செய்யறதில்ல. எனக்கு என்னவோ பயம்மா இருக்கு மாமி".
இதை கேட்டபடியே படுத்திருந்த ராகவனின் கண்களில் சூனாமியின் சீற்றமும், சலீமின் உதவியோடு அங்கிருந்த பெரிய படகில் ஏறி பதுங்கியதையும். பின்னர் குற்றுயிரும் குலை உயிருமாகி இருந்த இப்ராஹீம் தாவூத்தை ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து சென்றதும், பாறைகளில் நசுங்கி உருகுலைந்து போய் இருந்த ஹோஷியார் கானும்,அவருடன் வந்து இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியாத 3 வீரர்களும், கால் உடைந்த போதிலும் அவரை காப்பாற்றிய சலீமும், படகை நோக்கி ஓடி பின் என்ன ஆனான் என்று தெரியாத ஹசனும் அவர் கண் முன் திரும்ப திரும்ப வந்து போனார்கள். படகிலுருந்து இறங்கி அதன் பின் நடந்ததை எழுதினால் அதுவே ஒரு தனி கதையாகி விடும்.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
19th August 2009, 01:56 AM
#55
Senior Member
Veteran Hubber
viru viru nnu odi poyiduthe class !!! sivan anna
-
20th August 2009, 11:29 AM
#56
Senior Member
Seasoned Hubber
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
3rd July 2010, 01:39 AM
#57
Senior Member
Veteran Hubber
Sivan annaaaaaaaaaaaaaaaaaaaaa ???????? enga poiteengaaaaaaaaaaaaaa???????????
-
3rd July 2010, 07:26 AM
#58
Senior Member
Veteran Hubber
hello nga sivan k........nalama?
innum ezhuthunga plz....kangalukum manathirkum virunthu/marunthu....
-
6th July 2010, 07:07 PM
#59
Senior Member
Seasoned Hubber
Hi Vasanth, Suvai. Ippollaam romba velai jaasthi adhaan adikkadi vara mudiyala. Inime adikkadi vara paakuren. Thanks
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
Bookmarks