சகோதரி சாரதா,

உலக அதிசயங்கள் ஏழு! எட்டாவது அதிசயமாகத் திகழும் நடிப்புலக ஏஞ்சலின் அத்தியாய அதிசயங்களும் தற்பொழுது ஏழு!

ஏழு அதிசயங்களைப் போல், நமது ராகவேந்திரன் சார் கோடிட்டுக் காட்டிய ஏழு ஸ்வரங்களைப் போல், வியத்தகு பெருமைகளைக் கொண்ட எண்ணாம் ஏழு - அமையப் பெற்ற ஏழாவது அத்தியாயத்தை(பாகத்தை) தாங்கள் எழுச்சியோடு, தங்களது திருக்கரங்களால் வெள்ளிக்கிழமையான இன்று (6.8.2010) மிக மிக மங்களகரமாகத் தொடங்கி வைத்துள்ளமைக்கு பல கோடி நன்றிகள்!!

எழுபதாவது பாகம் என்ன, எழுநூறாவது பாகத்தையும் தாங்களே துவங்கி வைக்க, எல்லா வல்ல இறைவனும், இதயதெய்வமான கலையுலக இறைவனும் தங்களுக்கு என்றென்றும் துணையிருப்பார்கள்!!!

[நமது நடிகர் திலகத்தை, எட்டாவது அதிசயம் என்று இங்கே நான் எழுத்துநடைக்காகக் குறிப்பிட்டாலும், அவர் நமக்கெல்லாம் ஏழு அதிசயங்களையும் விஞ்சிய முதன்மையான ஒரே அதிசயமல்லவா!]


பாசத்துடன்,
பம்மலார்.