-
16th November 2010, 06:31 PM
#11
Senior Member
Veteran Hubber
-
16th November 2010 06:31 PM
# ADS
Circuit advertisement
-
17th November 2010, 04:46 AM
#12
Senior Member
Seasoned Hubber
எல்லாம் நன்று.
தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.
இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?
அன்புடன்
-
17th November 2010, 06:58 PM
#13
Senior Member
Veteran Hubber
.
Originally Posted by
bis_mala
எல்லாம் நன்று.
தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.
இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?
அன்புடன்
மிக்க நன்றி சிவமாலா அன்பரே,
வெகு ஆவலுடன் நான் எதிர்பார்த்திருந்த கேள்வி இது.
உங்களது ஆர்வம் பாராட்டத்-தக்கது.
ஆனால் உங்களது கேள்விக்கு நான் மட்டும் விடை அளித்து-விட்டால் அதில் என்ன பெரும் சுவை.? சுவாரசியம்.?
ஏனைய அன்பர்களின் சிந்தனை கண்ணோட்ட விருந்துகளையும் நாம் கூடி அனுபவிப்பது அன்றோ இந்த பொது-அரங்க மேடையின் நோக்கம்.! அரும் சுவை.!!
எனவே உங்களது அறிவார்ந்த நல்வினாவுக்கு பிற அன்பர்களின் மறுமொழி-விடைகளை ஆவலுடன் எதிர்பார்த்து மேலும் சில நாட்கள் பொறுத்திருக்கிறேன்.
பின்னர் இறுதியாக விடை கூறுகிறேன்.
ஏனைய அன்பர்களே, தமிழ்-கூறும் நல் உலகோரே,
அன்பர் சிவமாலாவின் உரிய கேள்விக்கு விடையாக உங்களுக்குத் தோன்றுவது என்ன.?
….உங்களது சிந்தனைக்-குதிரைகளையும் ஓட விட்டு, அவரவர் நோக்கிலே….
…. எங்களுக்கு பல்சுவை கருத்து-விருந்து வழங்க ஆவலுடன் அழைக்கிறேன். வருக.
அன்புடன் – சுதாமா.
================================================== =====================
தாழ்-பிறவி மந்தியரே நாங்கள்.!!...
…கேவலம் வாயில்லாப்-பிராணி மிருகமே.!
உயர்-பிறவி மாந்தரே,
....உம்மிலும் சிறப்பாக வாழ்கிறோமே.! எப்படி.?
[html:5315797c61]
[/html:5315797c61]
1.
வாழப்-பிறந்தோம் வையத்து மந்தியாக காட்டு-வாழ்க்கையே நம்-உலகம் இதுவே
சூழல் இவ்வாறே சுற்றுப்புறம் இன்னதே இப்படித்-தான் என எம் ஆதி-முன்னோர்
தோழர் பகை எவர்-எவர் பிற-மிருகம் ஏனையவையும் வலிந்து கவனித்துத் தாமே
ஆழக்-கற்ற அனுபவக்-கல்வியே எங்கள் வாழ்க்கைப்-பாடம் சந்ததி வழி-வழியே.!
2.
வழி-வழி வந்த அனுபவக்-கல்வி, முன்னோடியர் தந்த எழுத்தில்லா சாத்திர-விதி
கொழி-சுவர்க்கம், சுய-நெறியால் பிறர்-சாரா வாழத்-தெரிந்தோரே புவி வாழ-வலர்
பழி பிறர்-மீது சுமத்தா தன்-நெறி தானே வகுத்து முன்னெச்சரிக்கை ஜாக்கிரதை,
மொழி மா-அறிவரே தெரிந்தீர் செயல்-படுத்துகிறீரா.? கவனப்-பிசகு ஆபத்து வாழ
3.
வாழ நன்முறை விழைவோர் எப்போதும் மறவாது கொள்ள வேண்டிய நியதியாம்
வேழமே எனினும் கேவலம் ஓர் சிறு எறும்பும் கூட, மறைந்து தாக்கி மாய்க்குமே
தோழனே ஆயினும் முன்னெச்சரிக்கை முற்றிலும் சுயச்-சார்போடு கவனம் தேவை
சூழலைக் கணமும் நினைந்து உற்றுக்-கவனிப்பதே எமது சுபாவம் வாழ-விழித்தே.
4.
விழித்தே கூர்ந்து-கவனித்தால் தீ, மழை, புயல், பூகம்பம் முன்-அறிவிக்கும் சூழலே
சுழித்து-ஓடு நதி-அழகில் மயங்கிக்-குதித்தால் அதோ-கதி, மலைப்-பாம்பு மரக்-கொடி
குழி-சேறு மூடி புல்-தரை பூ-விரிப்போ புதைக்கும்; குளிர்-போக்கி சமை தீப்பொறியே
அழிக்கும் தீ, மயங்காதே பொழில்-எனினும் தழுவவோ மாயம் காட்டு இயற்கையே
5.
இயற்கையே நம் அன்னை நமக்கு ஊண் நீர் மூச்சு வாழ்-நிலம், தீ, வான் கூரையும்
மயக்கம்-உறு மாயா-ஜால உலகு ஆட்டிச் சுற்றி சுழற்றி இரவு-பகல் பருவ-மாற்றம்
வயல்-பயிர் தாவரம் பற்பல கனி, நதி அருவி கடல், தேன், மலர் மணம் பொழிலே
அயரா உழைத்தே நம்மைக்-காக்கும் தாயை நன்கு புரிந்து புரிகிறோம் பிரதி-கடமை
6.
பிரதி-கடமை உணர்வே உயர்-மாந்தரே வியந்து மந்தி-எம்மையே மதிக்க மன்னராய்
நரக-புவியிலும் சுவர்க்கம் காண்-பிறவி, பிற மிருகங்களினின்றும் உயரியரோம் தூய
தரம் மிகு மாண்-தகையராய் தலை-நிமிர்ந்து வாழ வகை செய்வனவே எம் சுய-நெறி,
பிறர்-நிலையில் நம்மை கற்பனை நினைந்து, வலிந்து அவரவர்க்குப் பணி நம் கடன்.
7.
கடனே வாழ்க்கை, இயற்கை ஓயாது ஒழியாது பணியாற்றி நம்மை வாழ-வைக்கும்
உடன் வாழ் தாய் நம்மைக் கேட்கவில்லை நாடவில்லை நமது பிரதி கடன் கடமை
ஜடம், மிருகம் பூச்சி அனைய தாழ்-படைப்புக்களோ வீண்.? புவி உயர்-பிறவியர் நாம்
அடர்-பொன் அறிவு-அலர் அருள்-உளம் வித்தியாசம் இலையோ பண்புறு சுய-நெறி?
8.
நெறி-பட வாழ்ந்து-பார் மாந்தே மந்தி நாங்கள் கண்ட அனுபவ-இலக்கணம் பிறரது
உரிமை நீரே வலிந்து முன்வந்து தந்தால், நற்பயன் உம்மைத் தாமே நாடித் தேடி
மரியாதை பெருமை அன்பு துணை உதவி சமுதாயம் தாமே தரும் பண்பு ஆதரவு
பெரிதும் பிறர் போற்ற தலை-நிமிர் மன்னர் ஆக்கும் இல்லையேல் போராட்டமே.
9.
போராட்ட வாழ்க்கை தாழ்-பிறவி பேதைமை மிருக-நெறி நாம் பின்பற்றத்-தக்கதோ
கோராத பிறர் உரிமை-என்றே, நாம் பட்ட பிரதி-கடனை வலிந்து வழங்காவிட்டால்
மாறாவார் பிறர் எதிரி-ஆகி தம்-உரிமை பிடுங்கிக்-கொள்வர், பேராசை, பொறாமை
ஏராளம் வாய்ப்பு புவி-சுவர்க்கம் தாழ்த்தவோ தீரா-நரகம் தாமே ஆக்கவோ மாந்தர்
10.
மாந்தரே வாழ்க்கை ஓர் உரிமையா கடமையா எனும் கேள்விக்கு விடை கடமை
ஆந்தனையும் பிறர்-நலமும் தன்னலம்-போல், நேர்மை வழுவா பந்தக்-கடன் நாடி
பாந்தம் அன்பு பந்தம் ஓர்-குடும்ப உணர்வு பண்பு ஒற்றுமை கூடி-ஓங்கு நோக்கம்
வேந்தராய் புவி சுவர்க்கம் வாழ-வைக்கும் உண்மை மந்தி எம்மைப் பார் புரிவீரா.?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>
அரும் சொற்-பொருள்:
[பாந்தம் = நெருக்கம்; ---- ஆந்தனையும் = இயன்ற-அளவு; ---- பந்தக்-கடன் = Commitment; --- பந்தம் = Binding.]
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<
-- தொடரும்
.
Bookmarks